வாடிவாசல்
Share:

வாடிவாசல்

Vaadivaasal

Check Price on Amazon
4.28/5 · 1K+ ratings

வாடிவாசல்

Vaadivaasal

4.28/5 · 1K+ ratings
பக்கங்கள்
87
பதிப்பகம்
காலச்சுவடு பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788187477525
ASIN
B0DTSDZ9WF

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை மட்டுமே களமாகக் கொண்டு, காளைக்கும் மனிதனுக்கும் இடையிலான வாழ்வா சாவா போராட்டத்தை இந்த நாவல் மிக நெருக்கமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. வெறும் எழுத்துக்களால் ஒரு வீர விளையாட்டின் சூழலை இவ்வளவு தத்ரூபமாக விவரிக்க முடியும் என…

Interested in this book? Check Price on Amazon

user_5263

★ 4/5

ஜல்லிக்கட்டினைச் சுற்றி நடைபெறும் குறுநாவல் இது. பல வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் குடலைக் கிழித்தெடுத்த காரிக் காளையை அடக்க வரும் மகன் பிச்சி, தனது மச்சான் மருதன் மற்றும் புதிதாய் நட்பு பெற்ற உள்ளூர்க் கிழவன் ஆகியவர்களின் உதவியையும் உரையாடல்களையும் வைத்து நடத்தும் போராட்டமே இந்தக் குறுநாவலின் கதைக் கூறு.

மதுரை சமூகத்தின் பண்பாட்டு இனிமைகளை பேச்சுவழக்கிலும், காளை போட்டிகளில் நடைபெறும் தனிப்பட்ட மனித அரசியல் போராட்டங்களையும், சாதிய ஆதிக்கங்களையும் கதை வடிவில் எளிமையாகச் சித்தரித்துள்ளார் ஆசிரியர்.

பண்பாட்டின் பொருட்டு வாழ்ந்து வரும் சில நடைமுறைகளை நம்மால் முழுமையாக ஆராய்ந்து பிரிக்க முயல்வது எப்போதும் எளிதான காரியம் அல்ல என்பதைப் புலப்படுத்துகிறது.

user_5262

★ 5/5

ஜல்லிக்கட்டு களத்தில் நடக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்குமான போட்டியை அடிப்படையாகக் கொண்ட குறுநாவல், மதுரை வட்டார வழக்கில் இயற்றப்பட்டு 1959-ல் வெளிவந்துள்ளது.

சங்க காலம் முதல் "ஏறு தழுவுதல்" என்ற வகையில் தமிழ்நிலத்தில் ஜல்லிக்கட்டு நடைமுறையில் இருந்துவந்துள்ளது. பிச்சி, மருதன், கிழவன், காரி/கொரா, ஜமீன்தார், முருகு, அம்புலி என குறைந்த கதைமாந்தர்களைக் கொண்டு அற்புதமான வர்ணனையின் மூலம், ஜல்லிக்கட்டை வாடிவாசல் பக்கத்தில் நம்மை நிற்கவைத்து தத்ரூபமாக விளங்கக் காட்டியிருக்கிறார் திரு சி.சு.செல்லப்பா.

"காரி" என்ற முரட்டு காளை மாட்டை "பிச்சி" அணையும் உக்கிரமான போட்டிப் பக்கங்கள், நிச்சயம் மயிர்கூச்சரியும் அனுபவத்தைத் தரவல்லது. இரத்தங்கள் சிந்தப்படும், மனிதக் குடல்கள் முதல் உயிர்கள் சரியும் களமான ஜல்லிக்கட்டினைப் பற்றிய நுட்பமான புரிதலைத் தரவல்ல ஆவணம் இப்படைப்பு. அதனாலேயே ஐந்து தசாப்த வருடங்கள் தாண்டியும் உயிர்ப்புடன் இருக்கிறது இக்கதை.

user_5261

★ 3/5

இந்தப் புத்தகம் வெள்ளித்திரையில் ஒரு பெரிய தருணத்திற்கு தகுதியானது. சினிமாவாக வர வேண்டிய படைப்பு.

user_5260

★ 5/5

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு நிஜமான ஜல்லிக்கட்டில் பங்கேற்பது போன்ற உணர்வு. அவ்வளவு யதார்த்தமான அனுபவம்!

user_5259

★ 4/5

"மனுஷனுக்கும் மாட்டுக்கும்தான் தம்பி இந்த சல்லி. விவகாரம் கொம்புக்கும் கைக்கும்தான். மறந்துராதே, ஆமா."

"மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு! மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"

இந்த இரண்டு வரிகளிலேயே வாடிவாசலின் முழு சாரமும் அடங்கிவிடுகிறது.

Quotes

"மனுஷனுக்கும் மாட்டுக்கும்தான் தம்பி இந்த சல்லி. விவகாரம் கொம்புக்கும் கைக்கும்தான். மறந்துராதே, ஆமா." "மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு ! மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"

More Quotes...
Shelves
குறுநாவல் Novel Indian Literature செம்மொழி இலக்கியம் Tamil Literature நாடகம் வட்டார இலக்கியம் விளையாட்டு Classics தமிழ் இலக்கியம் நாவல் Novella ஜல்லிக்கட்டு Sports தமிழ் குறுநாவல் Drama இந்திய இலக்கியம்

More like this


தண்ணீர்

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…

4.1/5 · 700+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

கடல் புறா 1

சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…

4.16/5 · 2K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

அம்மா வந்தாள்

சமூகம் கட்டமைத்துள்ள ஒழுக்க விதிகளையும், மனித மனதின் ஆழமான உணர்வுகளையும் நேருக்கு நேர் மோதச் செய்யும் ஒரு உன்னதமான படைப்பு இது. குடும்ப உறவுகளுக்குள் நிலவும் சிக்கல்களை…

4.09/5 · 1K+ ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings
Check Price

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…

4.48/5 · 400+ ratings
Check Price

கனவுத் தொழிற்சாலை [Kanavu Thozhirchalai]

Set in Kollywood, or the Tamil film industry, in the 1980s, Dream Factory is a fictional chronicle of the shenanigans and the rising and falling f…

3.84/5 · 400+ ratings
Check Price

யாருக்காக அழுதான்?

ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.

4.32/5 · 300+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

4.62/5 · 7K+ ratings
Check Price