Select a cover image
Searching for images...
Saving cover image...
கோபல்லபுரத்து மக்கள்
Gopallapurathu Makkal
- பக்கங்கள்
- 272
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- அன்னம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- Eighth
- ISBN-10
- 8178478943
- ASIN
- B0DTRP42N1
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்' நாவலின் தொடர்ச்சியாக அமைந்த இந்நூல், ஆந்திராவிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தின் கரிசல் மண்ணில் குடியேறிய மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் சமூக மாற்றங்களை வரலாற்றுச் சம்பவங்களோடு இணைத்துக் கூறுகிறது. எளிய மனிதர்கள…
Appears in following lists
user_6251
★ 4/5புத்தகம் படிக்கும் ஒருவர் ஒரு பிறவியிலேயே ஆயிரம் முறை வாழ்வதாகச் சொல்வார்கள். கோபல்லபுரத்து மக்களில் ஒருவனாக வாழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோபல்ல கிராமத்தின் நீட்சியே கோபல்லபுரத்து மக்கள். கி.ரா-வின் எழுத்தில் கரிசல்காட்டு மணம்.
கடைசி சில அத்தியாயங்கள் கரிசல் காட்டை விட்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நிகழ்வைப் பற்றி விலாவாரியாக விவரிப்பது தடம் மாறியதைப் போல இருந்தது.
user_6250
★ 5/5கி.ரா-வின் தலைசிறந்த நாவல். ஆங்கிலேயர் இந்தியாவை ஆக்கிரமிப்பதிலிருந்து 1947 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. பேனா, கடிகாரம், டார்ச்லைட், துப்பாக்கி போன்ற புதிய கண்டுபிடிப்புகளை கிராம மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. மெதுவாக செய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, போஸ், பகத்சிங், வஞ்சிநாதன் போன்ற தலைவர்களின் அரசியலில் நுழைகிறார்கள். குறிப்பாக கடற்படை கிளர்ச்சிப் பகுதி மிகச் சிறப்பு!
user_6249
★ 5/5கோபல்ல கிராமத்தைப் படித்து முடித்த உடனே இதையும் சேர்ந்தாற்போல் படித்தால் அதன் சுவை கூடுதலாக இருக்கும் என்பது என் எண்ணம். ஆந்திர நாட்டிலிருந்து விரட்டப்பட்டுத் தெற்கு நோக்கி நகர்ந்து ஒரு கிராமத்தை நிறுவிய மக்கள் எவ்வாறு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டார்கள் என்பது கதைக் களமாக உள்ளது.
ஒரு கிராமத்தில் வாழும் பலரின் பெயர்கள் தக்க காரணப்பெயர்களுடன் இருப்பது மிகச் சிறப்பு. இன்றும் பல கிராமங்களில் காரணப்பெயர்களே கூப்பிடும் பெயராக உள்ளது கிராமத்தானுக்குத் தெரியும். அருமையான வாசிப்பு அனுபவம் கொடுத்த கி.ரா தாத்தாவை நன்றியுடன் வணங்குகிறேன்.
user_6248
★ 5/5மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு அழகிய கிராமப்புறக் கதை! கி.ராஜநாராயணன் எழுதிய இந்தப் புத்தகம் ஒரு அற்புதமான படைப்பு. முதல் புத்தகம் கோபல்ல கிராமம் ஒரு கிராமத்தின் உருவாக்கத்தைப் பற்றிப் பேசினால், இந்தத் தொடர்ப் புத்தகம் அந்தக் கிராமத்து மக்களின் வாழ்க்கையை, அவர்களின் பண்பாடுகளை, அழகான சம்பவங்களை நம்மோடு பகிர்கிறது.
கதையின் இரண்டாம் பாதி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் கிராமத்து மக்களின் அந்தக் காலத்து வாழ்க்கையைக் கலந்துரையாடுகிறது. கிராமத்தின் இயற்கை அழகு, மக்களின் அன்பும் துயரங்களும் கண்ணுக்குத் தெரியும்படி புனையப்பட்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய ஒரு மாஸ்டர்பீஸ்!
user_6247
★ 5/5புத்தகத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல கோபல்லபுர மக்களைப் பற்றிய கதை. முதல் பாகமான கோபல்ல கிராமம் புத்தகத்தில் கிராமம் உருவான கதை இருக்கும்.
இந்தப் புத்தகத்தில் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, நவீன வாழ்க்கை வர வர அது எப்படி மாற்றமடைகிறது — டார்ச்லைட்டிலிருந்து தொடங்கி டீ தூள் வரை கிராமத்திற்கு எல்லாம் எப்படி வருகிறது என்பதைப் பேசுகிறது.
இந்திய சுதந்திரப் போர் கிராம மக்களிடையே எப்படியான தாக்கத்தை உண்டாக்கியது என்பது கடைசி 100 பக்கங்களில் பேசப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த ராணுவப் புரட்சி இந்திய விடுதலைக்கு முக்கிய காரணம் என்பது புத்தகத்தைப் படிக்கும்போது தெரிந்தது. நல்ல புத்தகம்!
Shelves
More like this
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
குற்றப் பரம்பரை
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
கோபல்ல கிராமம்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…