சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நாவல்கள்

24 books · Updated July 3, 2026

சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறந்த தமிழ் நாவல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தின் உன்னதமான படைப்புகளை இந்த பட்டியலில் காணலாம்.

Share:
நீர்வழிப் படூஉம் #1

நீர்வழிப் படூஉம்

தேவிபாரதி

இந்நாவல் கொங்கு வட்டாரத்தின் நொய்யல் நதிக்கரையில் வாழும் குடிநாசுவர் எனப்படும் எளிய சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வீழ்ச்சியையும், அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவையும் விரிவாகச் சித்தரிக்கிறது. குற்றம், மன்னிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ளல் ஆகிய உணர்வுகளை முதன்மையாகக் கொண்டு நகரும் இக்கதை, வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் மனிதர்களின் எளிய வாழ்வை …
காலா பாணி #2

காலா பாணி

மு. ராஜேந்திரன்

நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் …
செல்லாத பணம் #3

செல்லாத பணம்

இமையம்

இந்த நாவல் மனித உறவுகளின் சிக்கல்களையும் சமூகத்தின் யதார்த்தங்களையும் மிக நெருக்கமாகப் பேசுகிறது. ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாகக் கொண்டு நகரும் இக்கதை, உணர்ச்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடையிலான மெல்லிய கோட்டை மிகத் துல்லியமாகச் சித்தரிக்கிறது. வெறும் கற்பனையாக மட்டுமில்லாமல், ஒரு உண்மையான மனித அனுபவத்தின் முழுமையை வாசகர்களுக்குக் கடத்தும் ஒரு கருவியாக இந்த நூல் அமைகிறது. …
சூல் #4

சூல்

சோ. தர்மன்

சூல் "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார். எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் …
சஞ்சாரம் #5

சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணன்

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, …
அஞ்ஞாடி #6

அஞ்ஞாடி

பூமணி

வண்ணாக்குடி எனும் சிற்றூரில் ஆண்டியும் கருப்பியும் வளரும் காலத்தில் தொடங்கும் இக்கதை, சிவகாசி, கழுகுமலை, எட்டையபுரம் எனத் தென் தமிழ்நாட்டின் பல ஊர்களை உள்ளடக்கி இரு நூற்றாண்டுகால வரலாற்றை விரிக்கிறது. நாடார் சமூகத்தின் குடியேற்றம், கோயில் நுழைவுக்கான போராட்டம், கிருத்துவ மிஷனரிகளின் வருகையும் மதமாற்றமும், கட்டபொம்மன் — மருது சகோதரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், தாது வருடப் …
கொற்கை #7

கொற்கை

ஜோ டி'குரூஸ்

Sahitya Akademi Award(2013) Winning Novel காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் …
தோல் #8

தோல்

டி. செல்வராஜ்

டி. செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடமை இயகத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வை போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்ஸிம் கோர்க்கி முன்னெடுத்த சோசலிச யதார்த்தவாதம் தமிழ் நாவல் உலகில் …
காவல் கோட்டம் #9

காவல் கோட்டம்

சு. வெங்கடேசன்

மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சமூக மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்கிறது. குறிப்பாக, மதுரை மாநகரின் காவல் உரிமையைக் கொண்டிருந்த ஒரு இனக்குழுவின் வாழ்வியலையும், ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் இது …
மரம் #10

மரம்

ஜீ. முருகன்

ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்லஎன்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன.
கள்ளிக்காட்டு இதிகாசம் #11

கள்ளிக்காட்டு இதிகாசம்

வைரமுத்து

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து வெளியேற்றப்பட்ட மக்களின் ஆறாத துயரங்களை இந்த நாவல் மிக உருக்கமாகப் பதிவு செய்கிறது. நான்கு தசாப்த கால வலிகளையும், இழப்புகளையும் ஒரு காவியமாக உருமாற்றி, மண்ணின் மனிதர்களின் …
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் #12

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

சோ

சோ எழுதி, நடித்த, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற நாடகத்தை, "டிவி' வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலிசத்தையும், தேர்தலையும் அரசியல்வாதி அறிமுகப்படுத்தி, தெய்வங்களையே கலங்கடிப்பதாக அமைந்த, அரசியல் நையாண்டி நாடகம்.இந்நாடகத்தில், தற்போது, "டிவி' வரதராஜன் மற்றும் குழுவினர் நடிக்க உள்ளனர். மார்ச் 21ம் தேதி …