சஞ்சாரம்
Share:

சஞ்சாரம்

Sancharam

Check Price on Amazon
4.16/5 · 300+ ratings

சஞ்சாரம்

Sancharam

4.16/5 · 300+ ratings
பக்கங்கள்
376
வடிவம்
Hardcover
பதிப்பகம்
தேசாந்திரி பதிப்பகம்
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9789381975701
ASIN
B07BDKKKTG

சஞ்சாரம் நாவலின் பெயரிலேயே ஒரு சிறப்பு உள்ளது. சஞ்சாரம் என்றால் இசையை ஏற்றித் தாழ்த்தி வாசிப்பது (Modulation) என்பது மட்டுமல்ல, சஞ்சரித்தல் என்ற பொருளும் உண்டு. இந்த நாவல் நாதஸ்வக் கலைஞர்களுடைய கதையைச் சொல்லுவதால் சஞ்சாரம் என்ற பெயர் பொருந்துகிறது. அதேபோல் இந்த நாவலை எழுத அந்தக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசவும், இசை சம்பந்தமாக, அவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பல விவரங்களை சேகரிக்கவும், ஆய்வ…

Interested in this book? Check Price on Amazon

user_8894

★ 2/5

எஸ்.ராவின் சில புனைவல்லாத படைப்புகளைப் படித்திருந்ததால், சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாதஸ்வர கலைஞர்கள் பற்றிய நாவலை ஆர்வமாக எடுத்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

கிளைக்கதைகள் அளவுக்கு அதிகமாக இருந்தன — மையக்கதையிலிருந்து பெரிதும் விலகின. எல்லாமே சுவாரசியமாக இருக்கவில்லை. சில கதைகள் உண்மையிலேயே நன்றாக இருந்தன — எஸ்.ரா கரிசல் காட்டுப் புராணக் கதைகளின் தொகுப்பாக எழுதியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும்.

இருப்பினும், நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய கண் திறக்கும் நாவல். இனிமேல் அவர்களைப் பார்க்கும்போது அதிக மதிப்புடன் பார்ப்பேன்.

user_8893

★ 5/5

நம் வாழ்க்கைப் பயணத்தில் பலரைச் சந்தித்திருப்போம் — ஆனால் அவர்களின் வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் வலியை அறிந்திட வாய்ப்பில்லை. அப்படி நாம் அறிந்துகொள்ள முற்படாத, வலியையும் வேதனையையும் சுமந்துகொண்டிருப்பவர்கள் நாதஸ்வரக் கலைஞர்கள்.

கோவில்களில், திருமணங்களில் அவர்களைக் கண்டிருந்தாலும், இச்சமூகம் பெரிதாக அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. ஒரு நல்ல எழுத்தாளர் சமூகம் கண்டுகொள்ளாத இடங்களை எழுத்துகளின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் — அந்தப் பணியை செவ்வனே செய்திருக்கிறார் எஸ்.ரா.

பக்கிரி, தண்டபாணி, பழனி, ரத்தினம் இவர்களோடு நானும் நாதஸ்வரத்தைத் தூக்கிக்கொண்டு பயணம் போன அனுபவம். எல்லா கதாபாத்திரங்களும் மறக்க முடியாதவை — தனிப்பட்ட முறையில் என்னைப் பாதித்தவை தன்னாசியும் சரஸ்வதியும்.

இந்நாவல் பிடிக்கலாம் பிடிக்காமலும் போகலாம் — ஆனால் முடித்த பிறகு, எங்காவது நாதஸ்வர இசை கேட்டால் உங்களால் நின்று கேட்காமல் இருக்க முடியாது.

user_8892

★ 5/5

நாதஸ்வரம் வாசிப்பவர்களான பக்கிரி மற்றும் ரத்தினம், மூதூர் திருவிழாவுக்கு வாசிக்கச் சென்ற இடத்தில் கலவரம் ஏற்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். பக்கிரி பந்தலில் தீயிட்டுவிட்டு ஓடினான். காவலர்களிடமிருந்து தப்பிக்க ஊர் ஊராகப் பயணிக்கும்போது சந்தித்த மனிதர்கள், மக்கள், கரிசல் நிலங்களை அசைபோடுகிறார்கள்.

சோலையூர் தன்னாசி எனும் கதாபாத்திரம் குறிப்பிடத்தக்கது — ஒரு இழப்பினால் இயலாமையில் உருண்ட பார்வையற்ற மனிதர், பின் நாதஸ்வரம் பயின்று முற்றிலும் உருமாறுகிறார். ஆட்டு வியாபாரி மகாலிங்கத்தின் கதையும், திருச்சுழி ஊமை ஐயரின் இசை ரசனையும் மறக்க முடியாதவை.

நாதஸ்வர வாசிப்பவர்களின் ஏழ்மை நிலை, அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அவமானங்களை ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

user_8891

★ 5/5

இசைக்கலைஞர்கள் எல்லாக் காலத்திலும் எல்லோராலும் பாராட்டப்படுவதில்லை. நாட்டுப்புற இசைக்கலைஞர்களின் நிலைமை மிகவும் இழிநிலையே. நாதஸ்வர இசைக்கலைஞர்கள் குறித்து எழுதப்பட்ட சஞ்சாரம் ஒரு ஆவணமாக உள்ளது.

இசையை யார் வேண்டுமானாலும் கற்கலாம் என்ற நிலையிலிருந்து, ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கற்க வேண்டும் என்ற போக்கு இன்றும் உணரமுடியும்.

கரிசல் காட்டு நாதஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, வரலாற்று மூலம் தொடங்கி அவர்கள் எவ்வாறு வளர்ந்து வாழ்ந்தார்கள், அவர்களின் மதிப்பு சமூகத்தில் எவ்வாறு உயர்ந்திருந்தது, இன்று எவ்வாறு இந்த இழிநிலையை அடைந்தார்கள் என்பதை இந்நாவல் பதிவுசெய்கிறது.

user_8890

★ 4/5

2018க்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல். தமிழ் மரபு வாத்தியம், மங்கள இசை வாத்தியம் — நாதஸ்வரத்தை கருவாக்கி, கரிசல் மண்ணை களமாக்கி, நசுக்கப்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் படும் பாட்டை நான்-லீனியர் பாணியில் கிளைக்கதைகளாகச் சொல்கிறது.

எவ்வித தடுமாற்றமுமில்லாமல் கதை பயணிப்பதால், அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டத் தூண்டுகிறது. காவிரி கரையில் வாழும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் மரியாதையும் பொருளாதாரமும் கரிசலில் வாழும் சக மேதைகளுக்கு சாதியப் பாகுபாட்டாலும் அடக்குமுறையாலும் கிடைப்பதில்லை என்பதை பதிவு செய்துள்ளார் எஸ்.ரா.

நிகழ்கால கலைஞர்களின் வாழ்வின் வலிகளை ஓசையின்றி கடத்தும் ஓர் ஆழ் ஊசி இப்படைப்பு. இனிமேல் எங்காவது நாதஸ்வரம் இசைப்பதைக் கேட்டால் — இது கல்யாணியா, மல்லாரியா, பிலஹரியா, ரஞ்சனியா என்று மனம் என்னையறியாமல் ராகங்களில் சஞ்சரிக்கும்.

Shelves
நாதஸ்வரம் தமிழ் இலக்கியம் Social Novel வரலாற்றுப் புனைகதை கரிசல் காடு சாகித்ய அகாடமி விருது Novels நாவல் சமூக நாவல் Tamil Literature எஸ். ராமகிருஷ்ணன் S. Ramakrishnan சாதி ஒடுக்குமுறை Historical Fiction book நாட்டுப்புற கலை

More like this


உறுபசி-1

நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…

3.85/5 · 400+ ratings
Check Price

உறுபசி

நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு…

Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

குருதிப்புனல் [Kuruthi Punal]

Novel on social themes. மானுட குலத்தின் எக்காலத்துக்குமான ஆதாரப் பிரச்னைகள் சார்ந்து இது முன்வைக்கும் வினாக்கள் மிகவும் முக்கியமானவை. இந்நாவல் வெளியானபோது எழு…

3.94/5 · 500+ ratings
Check Price

சூல்

சூல் "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு…

4.06/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price

அலை ஓசை

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…

3.93/5 · 1K+ ratings
Check Price

உடையார் (பாகம் 3)

உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…

4.28/5 · 1K+ ratings
Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

3.9/5 · 1K+ ratings
Check Price

வேங்கையின் மைந்தன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…

4.02/5 · 1K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price