காவல் கோட்டம்
Share:

காவல் கோட்டம்

Kaval Kottam

Check Price on Amazon
4.28/5 · 600+ ratings

காவல் கோட்டம்

Kaval Kottam

4.28/5 · 600+ ratings
பக்கங்கள்
1054
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Tamizhini
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9788187641889
ASIN
8184765487

மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சமூக மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்கிறது. குறிப்பாக, மதுரை மாநகரின் காவல் உரிமையைக் கொண்டிருந்த ஒரு இனக்குழுவின் வாழ்வியலையும், ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் இது விரிவாகப் பேசுகிறது. 2011-ஆம் ஆண்டு சாகித்திய …

Interested in this book? Check Price on Amazon

user_5981

★ 2/5

களவுக் கோட்டம் என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். சாகித்திய அகாடமி விருது, அதுவும் முதல் படைப்பிற்கே கிடைத்தது.

ஆரம்ப பக்கங்கள் பொறுமைக்கு சோதனை — சுவையற்ற, கோர்வையற்ற வரிகள். ஆனால் தாது வருட பஞ்ச பக்கங்களில் வெப்பத்தையும் பட்டினியையும் நமக்கே வரவைக்கும் எழுத்து சிறப்பு.

அக்ரஹாரத்தில் காபி வந்த கதையும், மாட்டுத்தோல் பெல்ட் வந்த சரித்திரமும் நெற்றியடி. கிழவிகளின் ஏளனமும் மென்முறுவல் பூக்க வைக்கின்றன.

களவுக்குப் போன இடத்தில் கலவிக் காட்சி, பரந்த முதுகில் பூணூல் இல்லை என்பது — மதுரைக் குசும்பு.

இன்னும் நேர்த்தியாக, சுருக்கி, சுவையாகப் படைத்திருக்கலாமோ?

user_5980

★ 5/5

ஒரு தலைசிறந்த படைப்பு!

ஆசிரியரின் வேல்பாரி படித்த பின் இதை எடுத்தேன். எழுத்து நடை முற்றிலும் வேறுபட்டது. விவரிப்பு அசாதாரணமானது. ஒரு கதையோ, ஒரு கதாநாயகனோ, ஒரு உச்சகட்டமோ இல்லாமல் ஒரு முழுமையான, ஆழமான ஆவணப்படம் பார்ப்பது போல இருக்கிறது.

ஸ்பார்டன்கள் எப்படி வீரர்களாக உருவாக்கப்பட்டார்கள் என்று படித்தபோது, தென்னிந்தியாவில் இதற்கு இணையானவர்கள் இருந்தார்களா என்று எப்போதும் யோசித்தேன். தாதனூர் மக்களை ஆசிரியர் விவரிக்கும்போது என் கேள்விக்கு பதில் கிடைத்தது.

தமிழனாகப் பிறந்தவனுக்கு, பல நூற்றாண்டுகளாக கலாசாரங்கள் பின்னிப்பிணைந்திருப்பதைப் படிக்கும்போது — தமிழன் என்பதன் உண்மையான பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறது. கண்ணைத் திறக்கும் நூல்.

user_5979

★ 5/5

கிண்டிலில் படித்தேன் — 1830 பக்கங்கள். இரண்டு நாவல்கள் போல் இருக்கிறது. முதல் 600 பக்கங்கள் பல நூற்றாண்டு மதுரை வரலாறு — சில இடங்களில் மிக வேகம், சில இடங்களில் மிகவும் விரிவான விவரிப்பு. ஒரு ஆட்சியாளரின் முழுக் காலமும் இரண்டு பக்கங்களில் சொல்லப்படுவதும் உண்டு.

உண்மையான நாவல் 600 பக்கங்களுக்குப் பிறகுதான் தொடங்குகிறது. தாதனூர், மதுரை, கிழக்கிந்திய கம்பெனி, ஆங்கிலேய ஆட்சி — அனைத்தும் நன்றாக விவரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் உவமைகள் அற்புதமாக இருக்கின்றன.

களவை நியாயப்படுத்துவது போல் தோன்றுகிறது. ஆங்கிலேயர் தாதனூரைக் கட்டுப்படுத்த சோதனைச்சாவடி வைத்தது — ஆனால் மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நாவலின் முடிவு திடீரென வருகிறது.

user_5978

★ 5/5

இந்த நாவலின் கதையை எங்கே தொடங்குவது என்று தெரியவில்லை. படிக்கத் தூண்டிய காரணங்கள்: சாகித்திய அகாடமி விருது, அரவான் திரைப்படத்தின் மூலம்.

ஆனால் நாவலின் ஒரு சிறு பகுதி மட்டுமே அரவான் — கிட்டத்தட்ட 500 பக்கங்களுக்குப் பிறகு வரும் ஒரு கதை.

தாதனூர் மக்களுக்கு மதுரை நகர காவல் உரிமை கிடைக்கிறது. களவு செய்யும் ஆட்களே காவலும் செய்கிறார்கள். இந்த காவல் உரிமையைப் பற்றிச் சொல்ல, பல கால வரலாற்றைச் சொல்ல வேண்டியுள்ளது.

பிற்கால பாண்டியர்கள் முகலாயரிடம் மதுரையை இழப்பதில் இருந்து கதை துவங்குகிறது. விஜயநகரம் மீட்பு, நாயக்கர் ஆட்சி, 72 பாளையங்கள், கிழக்கிந்திய கம்பெனி, கட்டபொம்மன், ஊமைத்துரை — என வரலாறு நகர்கிறது.

கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு நகரம் விரிவடைகிறது. போலீஸ் முறை வருகிறது. காவல் முறை சட்டப்படி தடை செய்யப்படுகிறது. குற்றப்பரம்பரை சட்டத்தால் தாதனூர் மக்கள் வீழ்கின்றனர்.

தாதனூர் மக்களின் வாழ்க்கை முறை, திருமண வழக்கம், ஊரின் கட்டமைப்பு — சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய. இறுதி முடிவு பெரும் துயரத்தைக் கொடுக்கிறது.

user_5977

★ 5/5

வேல. ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை நாவல் விமர்சனங்களைப் படிக்கும்போது காவல் கோட்டம் பற்றி அறிந்தேன். விகடன் விருதும் சாகித்திய அகாடமி விருதும் வென்றது என்று தெரிந்ததும் படிக்காமல் விட்டால் பாவம் என்றே நினைத்தேன்.

எல்லா வழிகளிலும் தேடியும் கிடைக்காமல் போனது ஆர்வத்தைத் தூண்டியது.

கி.பி. 1310 முதல் 1910 வரையிலான 600 வருட மதுரை வரலாறு. ஒவ்வொரு பாகமும் குறிப்பெடுக்க வேண்டியவை — ஒவ்வொரு பக்கமும் வரலாறு. சிறு உரையாடலுக்குள் கூட வரலாற்றுக் குறிப்புகள் பொதிந்துள்ளன.

நாயக்கர் காலம் தொடங்கி, சுல்தான்கள் காலத்தைத் தொட்டு, ஆங்கிலேயர் காலத்திற்கு வந்து ஓர் ஊரின் கதையை ஆயிரம் பக்கம் தாண்டி படிக்க வைக்கும் சு.வெங்கடேசனுக்கு ஒரு சபாஷ்.

Shelves
வரலாற்றுப் புனைகதை Novels Su. Venkatesan வரலாற்று நாவல் இந்திய இலக்கியம் தமிழ் நாவல் நாவல் Historical Fiction Indian Literature Tamil Literature Fiction தமிழ் இலக்கியம் book மதுரை புனைகதை சாகித்திய அகாடமி

More like this


வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

4.79/5 · 700+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

4.54/5 · 600+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…

4.48/5 · 400+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings
Check Price

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings
Check Price

யாமம் [Yamam]

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price