வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
Share:

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

Veerayuga Nayagan Velpari - Volume 2

Check Price on Amazon
4.79/5 · 700+ ratings

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

Veerayuga Nayagan Velpari - Volume 2

4.79/5 · 700+ ratings
பக்கங்கள்
800
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Vikatan Publications
பதிப்பு
6th
ISBN-13
9789388104173
ASIN
B0DT2D3WN1

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

நிலம், இயற்கை, பண்பாடு, நீதி, விழுமியங்கள் யாவும் விற்பனைப் பண்டமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு தாவரத்தைக் காட்டிலும் பெருந்தச்சர்கள் ஆக்கிய தேர் பெரிதில்லை என்பதறிந்த இயற்கையாளன் பாரி, மீளாக்கம் செய்யப்படுவது காலத்தினால் நிக…

Interested in this book? Check Price on Amazon

user_6516

★ 5/5

"அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும், எம் மக்களை ஆளட்டும், எம்மை ஆளட்டும்" — வேள்பாரி.

இயற்கையைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட மலைவாழ் மக்கள், பழங்குடியினர், காடுகளில் வசிப்போர் என பலரையும் வணிக நோக்கங்களுக்காக ஆக்கிரமிப்பு செய்து இடம்பெயர்க்கும் வேலைகள் உலகம் முழுதும் நடந்துவருகின்றன. அதை எதிர்ப்பவர்களுக்குத் தீவிரவாதி, தேசத்துரோகி என்று பெயரிடுவதும் வழக்கமே.

இன்றைய இந்த நிலையின் ஆதி வடிவமாக மூவேந்தர்கள் — பாரியின் புகழைச் சகிக்காமல் பறம்பு மலையின் வளத்தைத் தங்கள் வணிகத்திற்குப் பயன்படுத்த ஒன்றிணைந்து படையெடுக்க, பாரி அவர்களைச் சமதளத்திற்கு இறங்கி வந்து போர்புரிந்து தோற்கடித்த கதையே வீரயுக நாயகன் வேள்பாரி.

கிட்டத்தட்ட 2281 சங்க இலக்கியப் பாடல்களையும் பல்வேறு புத்தகங்களையும் ஆய்வு செய்து அருமையான நூலைத் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன். யானைகள் பற்றிய குறிப்பிற்காக கஜ சாஸ்திரம் என்ற நூலை மூன்று வருடங்களாகத் தேடிக் கண்டறிந்ததாகப் பகிர்ந்திருக்கிறார்.

பாரியின் மறைவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூவேந்தர்களால் கபிலர் பாரி பற்றி எழுதிய பல பாடல்கள் அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவையனைத்தும் தாண்டி காலம் காலமாக மக்களின் நினைவில் பாரி வாழ்ந்துகொண்டிருக்கிறான் — தமிழகத்தில் பாரி என்ற பெயரில் 3446 நபர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்.

பாணர்களுக்கும் கபிலருக்கும் பின் பாரியின் புகழை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பெரும்பணியைச் செவ்வனே செய்திருக்கும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள்.

user_6515

★ 5/5

தமிழ், அறம், போர், காதல் என அனைத்தையும் கொண்டு காலத்தை மீறும் காவியம்!

user_6514

★ 4/5

"பனையன் மகனே பனையன் மகனே, பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே, தினையின் அளவே பிறவுயிர் வாடினும் துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே"

இரண்டாம் தொகுதி சோமபானம் மற்றும் செருக்களம் எனும் இரு பாகங்களைக் கொண்டது.

இரண்டாம் தொகுதியின் சிறப்பு — பறம்பு மலையும் அதன் இயற்கைப் போர்த்திறனும், மருத்துவ முறையும், தற்காப்பு ஆயுதங்களும் வாசிக்கும்போதே மெய்சிலிர்க்கச் செய்தவை. இச்சி பிசின், செந்நாய்கள் — அனைத்தும் வியக்கவைக்கும்.

சோமபானம், பாழி நகர், ஆட்கொல்லி மரம், தட்டியங்காட்டுப் போர் — இவை மறக்க முடியாத அத்தியாயங்கள்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" — "அறங்காக்கும் தெய்வங்கள் எமது குலத்தை ஆளட்டும், எம் மக்களை ஆளட்டும், எம்மை ஆளட்டும்" என்ற வேள்பாரியின் வார்த்தைகள் உள்ளத்தில் நிற்கின்றன.

கதைக்களத்திற்கு ஏற்ப உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்த மணியம் செல்வம் கண்முன் கொண்டு வந்து மேலும் அழகூட்டுகிறார்.

அறத்தின் உச்சம் — அனைவரும் ஒருமுறையேனும் வேள்பாரியைச் சுவாசிக்க வேண்டும்.

user_6513

★ 5/5

வேள்பாரி பாகம் 2 — போரின் அதிரடி, அரசியலின் சூழ்ச்சி, மனித உணர்வுகளின் ஆழம்... ஒரு வரலாற்றுக் காவியம் உயிர் பெற்று நிற்கிறது!

போரின் சூடு, அரசியலின் குருதி, பாண்டியர்களின் சூழ்ச்சி — இவையெல்லாம் வாசகனை ஒரு நிமிடம் கூட சலிக்க விடாமல் இழுத்துச் செல்கின்றன. வேள்பாரியின் வீரமும், அவரைச் சுற்றிய மனிதர்களின் உறவுகளும் மிகக் கம்பீரமாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

சில இடங்களில் கண்ணீர் வரவைக்கும் உணர்ச்சி, சில இடங்களில் கைதட்ட வைக்கும் தைரியம். இது வெறும் வரலாறு அல்ல — உணர்ச்சிகளின் உச்சம்.

சு. வெங்கடேசனின் ஆராய்ச்சி ஆழமும் எழுத்தின் தீவிரமும் மனதைக் கொள்ளைகொள்ள வைக்கின்றன.

user_6512

★ 5/5

முதல் தொகுதியைப் படித்த ஆறு மாதங்களுக்குப் பின் இரண்டாம் தொகுதியைத் தொடங்கினேன் — அந்த வாசிப்பு அனுபவத்தை முழுமையாகச் சுவைக்க வேண்டும் என்ற உறுதியுடன்.

முதல் தொகுதியே நம்பமுடியாத அளவு பறம்பின் புவியியல், தாவரங்கள், விலங்கினங்கள், கலாசாரம் என அனைத்தையும் விரிவாகக் கட்டமைத்திருந்தது. ஆனால் இரண்டாம் தொகுதி இன்னும் அதிகமான விவரங்களுடன் என்னை ஆச்சரியப்படுத்தியது — போரின் சடங்குகள், நடைமுறைகள் என புதிய பரிமாணங்களையும் சேர்த்துக்கொண்டது.

மூவேந்தர்களின் பிரபலமான உன்னதமான, வீரமான உருவத்திற்கு முற்றிலும் மாறான சித்தரிப்பு இதில் உள்ளது — அவர்களின் பழிவாங்கும், பேராசை கொண்ட, துரோகமான இயல்புகளை அம்பலப்படுத்துகிறது.

இறுதி நூறு பக்கங்கள் கோபத்திலிருந்து துக்கம் வரை பல்வேறு உணர்ச்சிகளின் கலவையில் என்னை ஆழ்த்தின. மூவேந்தர்களின் சூழ்ச்சிகள் இருந்தும், இயற்கையிலிருந்து பெற்ற அறிவை ஆயுதமாகக் கொண்டு அறம் தவறாத மலைக்குடிகள் போராடும் காட்சி உற்சாகமளிக்கிறது.

ஆசிரியரின் ஆராய்ச்சி ஆழம் மலைப்பை ஏற்படுத்துகிறது. வேளிர் குலங்களின் மகத்துவத்தை வலியுறுத்தும் ஒப்பற்ற படைப்பு இது.

Shelves
Indian Literature War Politics Tamil Literature புனைகதை வரலாற்றுப் புனைகதை சங்க இலக்கியம் தமிழ் நாவல் Maniam Selvan Fiction அரசியல் தமிழ் இலக்கியம் வேளிர் குலம் நாவல் சு. வெங்கடேசன் வேள்பாரி வரலாற்றுப் புதினம் Sangam Literature போர் Novels Su. Venkatesan இந்திய இலக்கியம் Fantasy கற்பனை Historical Fiction book பறம்பு நாடு

More like this


வீரயுக நாயகன் வேள்பாரி

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…

4.54/5 · 600+ ratings
Check Price

காவல் கோட்டம்

மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…

4.28/5 · 600+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings
Check Price

கன்னி மாடம்

இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…

4.05/5 · 500+ ratings
Check Price

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings
Check Price

யாமம் [Yamam]

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings
Check Price