காவல் கோட்டம்
Share:

காவல் கோட்டம்

Kaaval Kottam

Check Price on Amazon

காவல் கோட்டம்

Kaaval Kottam

பக்கங்கள்
1173
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Vikatan Publication
மொழி
தமிழ் (Tamil)
ISBN-10
8184765487

சாகித்ய அகடாமி விருது பெற்ற இந்த நாவல், மதுரையின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமாகப் பதிவு செய்கிறது. உழைக்கும் மக்கள் கூட்டம் ஒன்று காலப்போக்கில் எப்படி 'குற்றப் பரம்பரை' என்று முத்திரை குத்தப்பட்டது என்பதையும், அவர்களின் வீரமும் சோகமும் நிறைந்த வாழ்வியலையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. வெறும் காகித எழுத்துக்களாக இல்லாமல், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பண்பாட்டுப் பெட்டகமாக இது திக…

Interested in this book? Check Price on Amazon
Quotes

புதிய படகைத் தண்ணீரில் இறக்குவதைப்போல கிராமங்கள் ஒவ்வொன்றாய் பெரியாற்று நீரில் இறங்கின. நீரோடு வாழப்பழகுதல் எளிதன்று. நீர் அவர்களுக்குள் இறங்கிப் பாய்ந்து கசிந்தபடி இருந்தது. நீரின் குணம் படியப்படிய மனிதனுக்குள் விளைச்சல் ஆரம்பித்தது. சம்சாரித்தனத்தின் உயிரே நிலத்தில் பயிர் விளையும்பொழுது மனத்துக்குள்ளும் அது விளைவதுதான்; நிலத்தில் பயிர் வாடும்போது மனதுக்குள் உயிர்வாடுவதுதான். நிலத்தின் கண்ணாடியாக மனித உடல் மாறிவிடுகிறது. நிலம் போர்த்திய பேருடலுடன் அலையும் மனிதர்கள் பயிர்களின் வேர்களை நரம்புகளெனத் தங்களுக்குள் ஊடுருவ விட்டுவிடுகின்றனர். பச்சைப் பயிர் வளர்ந்து, பரிய ஆரம்பித்து, பால்பிடித்து, முத்துமுத்தாக விளைந்து வயலிலே சாய்ந்து படுத்துறங்கும் காலத்திற்குள் விதவிதமான மன உணர்வுகளால் உருமாறியபடியே இருக்கின்றனர். பாய்ச்சிய நீரில் விளையும் பயிர் நிலத்தில் மட்டும் விளைவதில்லை. வேளாண்மை எங்கு நடக்கிறது என்பது ஒரு மர்ம விளையாட்டாகவே இருக்கிறது. இயற்கையின் பேரதிசயங்களுக்குள் கால் நனைத்து சம்சாரி வயல்வெளியெங்கும் நடந்து திரிகிறான்.

எது களவு என்பதை அதிகாரமே தீர்மானிக்கிறது

வீழ்ச்சிக்குப்பின் எவ்வளவு காலம் நிலைத்திருந்தாலும் கோட்டை அதன் அர்த்தத்தை ஓரு சிறு கல்லில் கூட தக்கவைத்துக் கொள்வதில்லை. அது அதனது அர்த்தத்தையும் அவசியத்தையும் ஒருபோதும் தான் தீர்மானிப்பதும் இல்லை. எதிரிகளால் நாற்புறமும் சூழப்பட்ட நிலையில் உட்பகுதியில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் அது உணர்ந்ததுமில்லை. அவர்களின் பசியை அது அறியாது. முற்றுகையைக் கண்டு அது அஞ்சியதில்லை. வீழ்த்தப்பட்ட பின் சிதைந்துபோன நெடுங்கதவுகளின் வழியே வெட்டுண்ட தேகங்களை இழுத்துக்கொண்டு கரிய இரத்தம் வெளியேறும் போது அதைக் கண்டுகொண்டதுமில்லை. ஏதோ ஒரு மலைப்பகுதியில் இருந்து தன்னைச் செதில் செதிலாக வெட்டி எடுத்து வந்து இங்கே அடுக்கி வைத்தவர்களின் மீது அதற்குக் கோபம் இல்லை; ஆதரவு காட்டவும் தெரியாது. அது வெறும் கல் அவ்வளவுதான். மனிதன் தான் அதன் மீது கனவு காண்கிறான். கட்டியெழுப்புகிறான். ஏதேதோ செய்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். செதுக்கி வழிபடுகிறான். நம்பி வரம் பெற விழைகிறான்.

More Quotes...
Shelves
வரலாற்றுப் புனைகதை சாகித்திய அகாடமி நாவல் வரலாற்று நாவல் இந்திய இலக்கியம் தமிழ் நாவல் தமிழ் இலக்கியம் மதுரை Indian Literature Novel Tamil Literature Historical Novel Historical Fiction

More like this


வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

சங்க இலக்கியப் பாடல்களில் பயின்றுவரும் வரலாற்று நுண்குறிப்புகளைக் கொண்டு பறம்பு நாட்டின் அரசனான வேள்பாரியின் கதையும், அவனது இயற்கை சார்ந்த வாழ்வியலும் இந்த நாவலில் விரிவாக…

4.63/5 · 1K+ ratings

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…

4.48/5 · 400+ ratings

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings

சிவகாமியின் சபதம் பாகம் 1, 2

Sivakamiyin Sabadham’ is a historical Tamil novel set in 7th century South India. The struggle for supremacy between the Chalukya Emperor, Pulikes…

4.55/5 · 400+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், மாமன்னர் அருண்மொழிவர்மரின் வாழ்வியலையும் சோழ நாட்டின் அரசியல் நகர்வுகளையும் கண்முன்னே …

4.72/5 · 3K+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…

4.05/5 · 1K+ ratings

குற்றப் பரம்பரை

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…

4.15/5 · 1K+ ratings

கோபல்லபுரத்து மக்கள்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…

4.26/5 · 500+ ratings

வெள்ளையானை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…

4.37/5 · 300+ ratings

யாமம்

எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையி…

3.96/5 · 200+ ratings

என் இனிய இயந்திரா

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings

யவன ராணி, பாகம் 1

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…

4.17/5 · 1K+ ratings