Select a cover image
Searching for images...
Saving cover image...
குற்றப் பரம்பரை
Kutrap Parambarai
- Pages
- 448
- Format
- Paperback
- Publisher
- Discovery book palace
- Language
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789384301040
- ASIN
- B077XVT9BW
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடியும் ஜூனியர் விகடன் ஆசிரியர் குழு வேலாவின் சுரங்கத்திலிருந்து வைரங்களை வெட்டி எடுத்து அழகு கொழிக்கும் மாலையாகி தந்துள்ளது இதற்காக ஜூ வி யை பாராட்டியே தீர வேண்டும்.
பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவை என் எழுத்துகள் ...! -வேல ராம மூர்த்தி
ந…
user_5742
★ 4/5வேல ராமமூர்த்தியின் அற்புதமான கதையும் கதாபாத்திர வடிவமைப்பும் தலை வணங்கச் செய்கின்றன. நாவலைப் படிக்கும்போது வேயன்னா கதாபாத்திரம் என் மனதில் உயிர்ப்போடு வாழ்ந்தது. கூழாணிக்கெழவி, வையத்துரை, துருவன், அன்னமயில், அங்கம்மா, திருவேட்டை, இருளாயி, வில்லயுதம், கிரைச்சாட்டி, ஏகாம்பரம், விசாக்குட்டை என ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
காலத்தி கதை - கன்னிப் பெண்கள் கேட்கக் கூடாத அந்தக் கதை, அந்தக் காலத்து மக்கள் எவ்வளவு மூடநம்பிக்கையுடன் வாழ்ந்தார்கள் என்பதை எண்ணச் செய்தது. 1900களில் ஆரம்பித்து 1920கள் வரை பயணிக்கும் கதையின் ஒவ்வொரு விவரமும் அருமை.
ரேகைச் சட்டம் எனப்படும் குற்றப்பரம்பரைச் சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்ததும், ஏற்கனவே களவுத் தொழிலை விட்டவர்களையும் அது எப்படிப் பாதிக்கிறது என்பதும்தான் கதையின் மையக்கருத்து. சேது கதாபாத்திரத்தில் இன்னும் உணர்வுகள் இருந்திருக்கலாம்.
பச்சைமுத்து கதாபாத்திரம் வரும்போதெல்லாம் அருவருப்பு ஏற்படுகிறது - அவ்வளவு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சாதி மற்றும் மதத்தைப் பற்றிப் பேசுபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
user_5741
★ 4/5ஊர் விட்டு ஊர் சென்று தங்களுக்கென்று களவைத் தொழிலாக்கி, அந்தத் தொழிலிலும் கண்ணியம் காத்து, கொடுத்த வாக்கை மீறாமல் உயிரை இழந்த வேயன்னா மனத்திற்குள் கனக்கிறார்.
user_5740
★ 5/5வேயன்னாவின் மரணத்தை வாசிக்கும் போதே கண்ணீர் பார்வையை மறைக்கிறது. வேல ராமமூர்த்தி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
user_5739
★ 5/5காட்ஃபாதர் கூட குற்றப் பரம்பரை முன் தலை வணங்கும். அந்தளவு சக்தி வாய்ந்த கதைசொல்லல்.
user_5738
★ 5/5நூறாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் சாதி குறித்த மனப்போக்கை தன்னுடைய சிறப்பான எழுத்துகளால் ஆசிரியர் வாசகர்களுக்குக் கடத்தியுள்ளார். படிக்க ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாமல் பக்கங்கள் புரள்கின்றன. ஆனாலும் நாகமுனி, வஜ்ராயினி, ஹசார் தினார் வரும் சில இடங்கள் கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.
Shelves
More like this
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
என் இனிய இயந்திரா-1
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…