Select a cover image
Searching for images...
Saving cover image...
கோபல்ல கிராமம்
Gopalla Gramam
- பக்கங்கள்
- 199
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- காலச்சுவடு
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788189359461
- ASIN
- B07PXK7WV9
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் ச…
user_5233
★ 5/5கி.ராவின் கோபல்ல கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு நாயக்கரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர்கள். வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று என்னை நினைக்க வைத்த கதாபாத்திரம் அக்கையா தான்.
கி.ராவுக்கே உரிய வட்டார வழக்கில் கதை அழகாக நகர்கிறது.
user_5232
★ 5/5கட்டபொம்மன் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திராவிலிருந்து பல காரணங்களால் குடிகிளம்பி வந்து, தமிழ்நாட்டில் குருமலை சரிவுகளில் குடியேறிய கம்மவாரின் வரலாற்றை நாட்டு மக்களின் கண்ணோட்டத்தில் காண்பது இந்த நாவல்.
கதையின் தொடக்கத்தில் இளம் கர்ப்பிணியானவள், அவளின் நகைக்காகக் கள்வன் ஒருவனால் நீரில் அழுத்தப்பட்டு இறக்கிறாள். அவன் சிக்கிபிடிக்கப்பட்டு கழுவேற்றப்படுகிறான். இந்தச் சம்பவங்களுக்கு நடுவே தான் மங்கத்தாயார் என்னும் பூட்டி, அவர்கள் புலம்பெயர்ந்த கதையைக் கூறுகிறாள்.
ஆந்திர தேசத்துத் தெலுங்கு கம்மவார்கள், சுல்தான் ஒருவன் அவர்கள் வீட்டுப் பெண்ணை மணம் முடிக்க நினைத்ததால், அவனிடமிருந்து தப்பித்து தெற்குநோக்கிப் புறப்படுகிறார்கள். பசி, பஞ்சம், நோய், காடு, கள்வர்கள் தொல்லை எனப் பல இன்னல்களுக்கு இடையே பயணிக்கிறார்கள்.
ஒன்பது வயதுப் பெண் குழந்தையாக இருந்த மங்கம்மா, 137 வயது பூட்டியான பின் தனது சந்ததியினருக்குத் தங்களது வரலாற்றைக் கூறுகிறாள். கோவிந்தப்ப நாயக்கர், ஊர்குடும்பன் அக்கையா, மங்கத்தாயார் என முதன்மை கதாமாந்தர்கள் கதை நெடுகிலும் பரவலாகப் பயணிக்கின்றனர்.
நாட்டுப் பண்பாட்டை பரிபூரணமாக வெளிப்படுத்தும் சிறந்த படைப்பிலக்கியம் இந்நூல். புலம்பெயர்தல், நாட்டார் வழக்கு, வாழ்வியல் போன்ற அரிய தகவல்களை சுவாரசியமாகச் சொல்லியபடி செல்கிறது.
user_5231
★ 4/5காலத்தின் பின்னோக்கியப் பயணம். ஒரு கிராமத்தின் வரலாற்றை நாட்டுப்புறக் கதைசொல்லல் பாணியில் அழகாக அழைத்துச் செல்லும் நாவல்.
user_5230
★ 5/5நல்ல புத்தகம். கி.ராவின் கரிசல் இலக்கியப் படைப்புகளில் முக்கியமான ஒன்று. எளிமையான கிராம வாழ்க்கையை அழகாகச் சித்தரிக்கும் நாவல்.
user_5229
★ 5/5கோபல்ல கிராமம் — இது சாதாரண நாவல் அல்ல. படிக்கும்போதே காதல் வந்துவிட்டது. மாலை எட்டு மணிக்குப் படிக்கத் தொடங்கி, அவ்வளவு ஈர்க்கப்பட்டேன், இரவு பத்து மணிக்கு முடித்தேன், அப்புறம் தான் சாப்பிட்டேன். இது போன்ற கதைகள் கொண்ட நாவல்கள் அரிது.
Shelves
More like this
கோபல்லபுரத்து மக்கள்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
குற்றப் பரம்பரை
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்த கூட்டஞ்சோறு கதைகருவின் பலம் கருதி குற்ற பரம்பரை என மறு பெயரிடபடுகிறது வைரங்கலியோ சுரங்கத்திலிருந்துதான் வெட்டிதான் எடுக்க முடி…
வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.
வீரயுக நாயகன் வேள்பாரி
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
காவல் கோட்டம்
மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…