Reviews for வாடிவாசல்
30 reviews total
user_5263
★ 4/5 Feb 02, 2026ஜல்லிக்கட்டினைச் சுற்றி நடைபெறும் குறுநாவல் இது. பல வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் குடலைக் கிழித்தெடுத்த காரிக் காளையை அடக்க வரும் மகன் பிச்சி, தனது மச்சான் மருதன் மற்றும் புதிதாய் நட்பு பெற்ற உள்ளூர்க் கிழவன் ஆகியவர்களின் உதவியையும் உரையாடல்களையும் வைத்து நடத்தும் போராட்டமே இந்தக் குறுநாவலின் கதைக் கூறு.
மதுரை சமூகத்தின் பண்பாட்டு இனிமைகளை பேச்சுவழக்கிலும், காளை போட்டிகளில் நடைபெறும் தனிப்பட்ட மனித அரசியல் போராட்டங்களையும், சாதிய ஆதிக்கங்களையும் கதை வடிவில் எளிமையாகச் சித்தரித்துள்ளார் ஆசிரியர்.
பண்பாட்டின் பொருட்டு வாழ்ந்து வரும் சில நடைமுறைகளை நம்மால் முழுமையாக ஆராய்ந்து பிரிக்க முயல்வது எப்போதும் எளிதான காரியம் அல்ல என்பதைப் புலப்படுத்துகிறது.
user_5262
★ 5/5 Feb 02, 2026ஜல்லிக்கட்டு களத்தில் நடக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்குமான போட்டியை அடிப்படையாகக் கொண்ட குறுநாவல், மதுரை வட்டார வழக்கில் இயற்றப்பட்டு 1959-ல் வெளிவந்துள்ளது.
சங்க காலம் முதல் "ஏறு தழுவுதல்" என்ற வகையில் தமிழ்நிலத்தில் ஜல்லிக்கட்டு நடைமுறையில் இருந்துவந்துள்ளது. பிச்சி, மருதன், கிழவன், காரி/கொரா, ஜமீன்தார், முருகு, அம்புலி என குறைந்த கதைமாந்தர்களைக் கொண்டு அற்புதமான வர்ணனையின் மூலம், ஜல்லிக்கட்டை வாடிவாசல் பக்கத்தில் நம்மை நிற்கவைத்து தத்ரூபமாக விளங்கக் காட்டியிருக்கிறார் திரு சி.சு.செல்லப்பா.
"காரி" என்ற முரட்டு காளை மாட்டை "பிச்சி" அணையும் உக்கிரமான போட்டிப் பக்கங்கள், நிச்சயம் மயிர்கூச்சரியும் அனுபவத்தைத் தரவல்லது. இரத்தங்கள் சிந்தப்படும், மனிதக் குடல்கள் முதல் உயிர்கள் சரியும் களமான ஜல்லிக்கட்டினைப் பற்றிய நுட்பமான புரிதலைத் தரவல்ல ஆவணம் இப்படைப்பு. அதனாலேயே ஐந்து தசாப்த வருடங்கள் தாண்டியும் உயிர்ப்புடன் இருக்கிறது இக்கதை.
user_5261
★ 3/5 Feb 02, 2026இந்தப் புத்தகம் வெள்ளித்திரையில் ஒரு பெரிய தருணத்திற்கு தகுதியானது. சினிமாவாக வர வேண்டிய படைப்பு.
user_5260
★ 5/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு நிஜமான ஜல்லிக்கட்டில் பங்கேற்பது போன்ற உணர்வு. அவ்வளவு யதார்த்தமான அனுபவம்!
user_5259
★ 4/5 Feb 02, 2026"மனுஷனுக்கும் மாட்டுக்கும்தான் தம்பி இந்த சல்லி. விவகாரம் கொம்புக்கும் கைக்கும்தான். மறந்துராதே, ஆமா."
"மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு! மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!"
இந்த இரண்டு வரிகளிலேயே வாடிவாசலின் முழு சாரமும் அடங்கிவிடுகிறது.
user_5258
★ 5/5 Feb 02, 2026ஜல்லிக்கட்டு களத்தை இயல்பாய் நம்முள் உணரவும் உறையவும் வைக்கிறது. வட்டார மொழி வழக்கோடு முன்னகர்த்தி நம் இதயத் துடிப்பை உணரச் செய்த நாவல்.
user_5257
★ 5/5 Feb 02, 2026வரிகளைப் படிக்கப் படிக்க மனதில் விரிகிறது காட்சி. மிகவும் சிறிய புத்தகமாதலால் ஒரே ஓட்டத்தில் முழுக் கதையையும் முடிக்க ஏதுவாக இருக்கிறது.
வாசிப்பில் புதிதாக நுழைபவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் புத்தகம். வட்டார வழக்காக இருந்தாலும் புரிந்துகொள்ள எந்தத் தடையும் இல்லை. "பாட்டையா" கதாபாத்திரம் இன்னும் மனதில் நிற்கிறது... என்றும் நிற்கும்.
user_5256
★ 3/5 Feb 02, 2026பொங்கலின் போது ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பெரும் உற்சாகத்துடன் ஒரே ஒரு முறை நேரிலும் கண்டிருக்கிறேன். வெறும் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதால் ஜல்லிக்கட்டைப் பற்றிய மேம்போக்கான செய்திகள் மட்டுமே அறிவேன்.
இப்புத்தகம் 50-களில் நடந்த ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகிறது. அதனால் பெரிய அளவில் இக்கதையுடன் ஒன்றிப் போக முடியவில்லை. ஜல்லிக்கட்டில் தகப்பனைக் கொன்ற காளையை, மகன் பிச்சி அடுத்து வரும் ஜல்லிக்கட்டில் வீழ்த்த நினைக்கிறான். அந்தக் காளையோ ஜமீன்தாருடையது. அதனால் சந்திக்கும் சிக்கல் என்ன? பிச்சி காளையை வீழ்த்தினானா இல்லையா? என்பதே கதை.
சில பத்திகளை இரண்டு மூன்று முறை படிக்க வேண்டியதாயிருந்தது. சில உரையாடல்கள் சமயங்களில் மிகைப்படுத்தப்பட்டது போல தோன்றியது. இதுவே இப்புத்தகத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படாமல் போனதற்கு காரணம் என நினைக்கிறேன்.
user_5255
★ 4/5 Feb 02, 2026"மிருகத்திற்கும் மனிதனுக்குமான போட்டி, மனிதனுக்கும் மனிதனுக்குமான போட்டியாகப் பரிணாமம் பெற்றுவிடுகிறது." — இந்த ஒரு வரியில் வாடிவாசலின் சாரம் அடங்கிவிடுகிறது.
user_5254
★ 4/5 Feb 02, 2026வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதால் தேடிப்படித்தது. செல்லாயி சாட்டு என்ற ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு, தன் தந்தையைக் குத்திக்கிழித்த காளையை அடக்க வரும் பிச்சி என்பவனைப் பற்றிய கதை.
ஜமீனின் காளை, பழி வாங்கத் துடிக்கும் மகன், எளிய கதைமாந்தர்கள் என ஒரே ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்த கதையையும் கோர்த்திருக்கிறார்.
இக்கதை 1950களில் எழுதப்பட்டது. 100 பக்கங்கள் கொண்ட சிறுகதை. புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு ஏற்ற புத்தகம்.