தண்ணீர்
Share:

தண்ணீர்

Thanneer

Check Price on Amazon
4.1/5 · 700+ ratings

தண்ணீர்

Thanneer

4.1/5 · 700+ ratings
Pages
136
Format
Paperback
Publisher
New Horizon Media Private Limited
Language
தமிழ் (Tamil)
ISBN-13
9789386820396
ASIN
B0DLT8L12P

ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக் கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக…

Interested in this book? Check Price on Amazon

user_5861

★ 3/5

அசோகமித்திரன் தண்ணீர் பிரச்சனையைப் பற்றி எழுதியிருக்கிறாரா? இல்லை — பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார். ஜமுனா, சாயா, டீச்சரம்மா என மூன்று பெண்களின் கதை.

சினிமா கனவுக்காக பலரின் வக்கிரங்களுக்கு ஆளாகும் ஜமுனா, கணவனையும் குழந்தையையும் பிரிந்து வாழும் சாயா, வீட்டுக்குள் கொட்டித் தீர்க்கப்படும் வன்மங்களைத் தாண்டி தன்னம்பிக்கையோடு மிளிரும் டீச்சரம்மா.

தண்ணீர் தட்டுப்பாட்டை மையமாக வைத்து — தவலைகளும் டப்பாக்களுமாக அலையும் மனிதர்கள், கடந்த காலத்தின் ஆவணமாகவும் எதிர்காலத்தின் நிழல்களாகவும் தெரிகிறார்கள்.

அசோகமித்திரனின் எழுத்து நடையும் காட்சிகளை நகர்த்தும் விதமும் நம் மனதில் எளிதாக நிறுத்திவிடுகின்றன. "செருப்புப் போட்டுக்கொண்டு போகிறவர்களின் உடையில் பின்புறம் அவர்கள் நடைக்கேற்பச் சேற்றுத் துளிகள் தெறித்து ஒட்டிக் கொண்டன" — இதுபோன்ற நுணுக்கமான விவரிப்புகள் பிரமிக்க வைக்கின்றன.

கடைசி அத்தியாயம் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், சென்னையைப் போலவே கதாபாத்திரங்களின் மனங்களும் வரண்டுபோனது காரணமாக இருக்கலாம். அடுத்தமுறை நடுநிசியில் தண்ணீர் பிடிக்க எழும்போது தண்ணீரின் மனிதர்களை நினைத்துக்கொள்வேன்.

user_5860

★ 5/5

அற்புதமான எழுத்தாளர். இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர்.

user_5859

★ 5/5

அசோகமித்திரனால் தோல்வியுற நாவல் எழுத முடியாது என்று நினைக்கிறேன். நுட்பமான, ஆழமான படைப்பு.

user_5858

★ 4/5

கதையின் தன்மை சற்றும் மாறாமல், சிறு சிறு நிகழ்வுகளால் தண்ணீர் தட்டுப்பாட்டின் கஷ்டத்தையும் பெண்களுக்கு நிகழும் துயரங்களையும் சொல்கிறார் அசோகமித்திரன்.

ஜமுனாவை மையமாக்கி கதை நகர்ந்தாலும், அவளை ஒரு கதாநாயகியாக எந்த நிகழ்விலும் காட்டவில்லை — சாதாரண கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறாள். டீச்சரம்மா சில அத்தியாயங்களில் மட்டும் வந்தாலும், வாழ்க்கையை நோக்கிய அவளின் பார்வை வியக்க வைக்கிறது. அவளும் ஜமுனாவும் பேசும் அத்தியாயம் கதையின் பின் பகுதி மாற்றங்களுக்கு தொடக்கப் புள்ளி.

கதையின் முடிவு தேடிப் படிப்போருக்கு ஏமாற்றம் தரலாம். ஆனால் நிதானத்துடன் ஒவ்வொரு பாத்திரத்தையும் உள்வாங்கிப் படிக்கும்போது — சோகம், வெறுமை, சுயநலம், புன்முறுவல் என மெல்லிய நீரோட்டம் போல கதை நகரும்.

user_5857

★ 3/5

புத்தகத்தின் மையக் கதாபாத்திரம் நல்ல குடிநீர். கடந்த காலத்தின் சித்தரிப்பாக இருந்தாலும், ஒவ்வொரு கோடையிலும் நம் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் அதே நிலைமை. அப்படிப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு இது உங்கள் கதை; இல்லையென்றால் உங்கள் அண்டை வீட்டாரின் கதையை அறிந்துகொள்ளலாம்.

தண்ணீர் மையப் பாத்திரமாக இருந்தாலும், மனிதர்களின் துன்பங்கள், நடத்தை, நம்பிக்கைகள், வெவ்வேறு குணங்கள் என அனைத்தையும் பேசுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் உண்மையானது — இதுவே நாவலின் மிகப்பெரிய பலம். கூர்மையான உரையாடல்களும் உளவியல் ஆழமும் கொண்ட நல்ல புத்தகம்.

கீழ் நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்க்கையை அறிய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டும்.

Shelves
நாவல் புனைகதை Classics Fiction Feminism பெண்ணியம் book இந்திய இலக்கியம் Novels Indian Literature செம்மொழி இலக்கியம் அசோகமித்திரன் Novella தண்ணீர் பிரச்சனை தமிழ் இலக்கியம் தமிழ் நாவல் குறுநாவல் Tamil Literature Ashokamitran

More like this


கரைந்த நிழல்கள்

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

4.09/5 · 400+ ratings
Check Price

வாடிவாசல்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…

4.28/5 · 1K+ ratings
Check Price

ஒரு புளியமரத்தின் கதை

'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…

4.05/5 · 1K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

சோலைமலை இளவரசி

இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…

3.9/5 · 900+ ratings
4.8/5
Check Price

காவல் கோட்டம்

மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…

4.28/5 · 600+ ratings
Check Price

சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்

அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…

4.48/5 · 400+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.7/5 · 10K+ ratings
Check Price

சிவகாமியின் சபதம்

ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…

4.43/5 · 4K+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

4.72/5 · 3K+ ratings
Check Price

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.08/5 · 3K+ ratings
Check Price