Select a cover image
Searching for images...
Saving cover image...
ரூஹ்
Rooh
- பக்கங்கள்
- 189
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- எழுத்து பிரசுரம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789388860765
- ASIN
- B08171GZQK
அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரமது. தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட தோல்விகளால் கடுமையான தற்கொலை எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தேன். மாதக்கணக்கில் உறங்கமுடியாமல் தவித்ததோடு கடுமையான மன உளைச்சல்களால் மனநல மருத்துவரிடம் சிகிச்சைய…
user_11120
★ 4/5நாவல் தன்னிறைவான ஒரு படைப்பு. லஷ்மி சரவணகுமார் ஒரு அற்புதமான கதை சொல்லி — தனது நிஜ வாழ்க்கையிலிருந்தே எழுத்துக்கான மூலாதாரங்களைப் பெறுகிறார். அவரது நாவலில் வரும் கதாபாத்திரங்கள் உங்களிடம் பேசுகின்றன. நாவலின் களத்திற்குள் அறியாமலேயே நீங்கள் இடம்பெயர்ந்து விடுவீர்கள் — அதுவே ஆசிரியரின் வெற்றி, படைப்பின் முழுமை.
அன்பே மனிதகுலத்திற்கு அருளப்பட்ட மிக உயர்ந்த வரம் என்பதை இந்நாவல் உணரவைக்கிறது. கதை சொல்லும் பாணி வாசகரை ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது — இறுதியில் ஒரு பேரின்ப உணர்வை அனுபவிக்கலாம்.
user_11119
★ 4/5லஷ்மி சரவணகுமார் அவர்களுக்கு நன்றி — கதையோடு இறுதிவரை சுவாரஸ்யமாக வாசகனைக் கொண்டு சென்றதற்கு.
தொடக்கத்தில் சிறிது மெதுவாக நகர்ந்தாலும், பின்னர் ஜோதி மற்றும் ராபியாவின் ஆளுமை என்னை மிகவும் உத்வேகப்படுத்தியது. ஒருவரைப் பற்றி தெரிந்த பிறகும் நிபந்தனையின்றி அன்பு காட்டுவதை உடைத்தெறிந்தது ராபியாவின் பண்பு. ஜோதியின் மனமாற்றம் ஆண்களின் உண்மை மனசாட்சியைத் தூண்டியது.
இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு சூஃபி இசையின் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய கைபேசியின் இசைத் தொகுப்பில் அதுவும் ஒன்றாக இப்போது இருக்கிறது.
படித்த பின் கண்டிப்பாக மனதில் ஒரு வெறுமையை அகற்றி நல்ல எண்ணங்களை இந்தப் புத்தகம் நிரப்பியுள்ளது. நன்றி.
user_11118
★ 5/5அன்பைத் தவிர வேறெது புனிதமாகும்! இந்நாவலில் பக்கத்திற்குப் பக்கம் வார்த்தைகளால் பேரன்பைப் பேசுகிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னான கதையோடு நிகழ்கால கதை இணையும் அதிசயம் லஷ்மியின் எழுத்தாளுமைக்கு ஓர் சான்று.
ராபியா என்ற பெண்ணைத் தாயாக, காதலியாக, தோழியாக, சகோதரியாக என்று எல்லோரும் ஏதோவொரு தருணத்தில் கண்டிருப்போம். அவளின் அன்பையும் கருணையும் வாசிக்கும் போது மனம் இலகுவாகிறது.
ஜோதிலிங்கம் அவமானப்படும் போதெல்லாம் என்னை அறியாமல் மனம் நொந்தது. எல்லா கதாபாத்திரங்களையும் நம் அருகிலேயே பார்த்திருப்போம் — அந்த உணர்வு தான் நாவலை இறுதி வரை யதார்த்தத்தன்மையோடு அணுக முடிந்தது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த கதைக்கும் நிகழ்கால கதைக்கும் வரும் இணைப்பை வாசிக்கும் போது உண்டான உணர்வுக்கு நிச்சயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அத்தியாயத்தை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டாடினேன்.
அற்புதமான வாசிப்பு அனுபவத்தை உணர ரூஹ் நாவலை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்!
user_11117
★ 1/5மொக்கைக் கதைகளும் தகாத வார்த்தைகளும் திணிக்கப்பட்ட இது போன்ற கதைகள், தமிழ் எழுத்தாளர்களை ஆதரிக்க வேண்டுமென்கிற எண்ணத்தையே குறைக்கின்றன. காசு கொடுத்துப் பார்த்த திரைப்படம் படு மொக்கையாக இருந்தால் அந்த இயக்குனர் மீது வரும் அதே வெறுப்பு.
வித்தியாசமான பெயர்தான் இழுத்தது. இது பொது நாவல் — இதில் தகாத வார்த்தைகளுக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை.
சில வரலாற்றுப் பிழைகள் உள்ளன — இந்தியா என்ற நாடே இல்லாத காலகட்டத்தில் 'இந்தியா' என்று குறிப்பிடுவது, 'இந்து மன்னர்கள்' என்ற சொல்லாடல் போன்றவை. கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்ற குழப்பமும் இருந்தது.
user_11116
★ 5/5முதல் சில அத்தியாயங்கள் சரியாகப் பிடிபடவில்லை. ஏதோ மொழிபெயர்ப்பு நூலை வாசிப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. கதை எந்த வருடம், எந்த ஊரில், ஏதாவது அரேபியக் கதையா என்று குழப்பமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கதைமாந்தர்களும் கதை நடக்கும் சூழலும் நாவலோடு ஒரு பிணைப்பை ஏற்படுத்தினார்கள்.
அன்பை மட்டுமே வாரி வாரி வழங்கிடும் ராபியாவும், இச்சை-சுய கழிவிரக்கம்-வெறுப்பு-வன்மம் என பல்வேறு இன்னல்களுக்கு இடையில் சிக்கித்தவிக்கும் ஜோதி, சுகவாசியாய்ச் சுற்றித் திரிந்து பிறகு பொறுப்பான பிள்ளையாகவும் அன்பான கணவனாகவும் இருந்து ஏமாற்றம் தந்த வலியில் குடிக்கு அடிமையாகும் அன்வர் — கதைக்குள் வரும் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள்.
ராபியா குறித்தான வர்ணனைகள் அமைதியாக ஓடும் ஆறாக இருந்தால், ஜோதி குறித்தான அனைத்தும் கரைபுரண்டு ஓடும் காட்டாறாய் இருக்கிறது. அத்தனை உக்கிரமான எழுத்து. லஷ்மி சரவணகுமாரின் 'கானகன்', 'நீலப்படம்' இரண்டும் இதற்கு முன்பு வாசித்திருக்கிறேன். இப்படியான ஒரு உக்கிரமான எழுத்தை இரண்டிலும் வாசித்ததாக நினைவில்லை.
ஒவ்வொரு அத்தியாயத்தையும் அத்தனை ஆசையோடும் ஆர்வத்தோடும் படித்து முடித்தேன். ரூஹ் — ஒரு பேரனுபவம்.
Shelves
More like this
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
உடையார் - பாகம் 2
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.
வீரயுக நாயகன் வேள்பாரி
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.…
சேரமான் காதலி
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரால் படைக்கப்பட்ட இந்தச் வரலாற்று நாவல், சேர மன்னர்களின் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெற்ற…
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…
காவல் கோட்டம்
மதுரையின் அறுநூறு ஆண்டு கால வரலாற்றை மிகப்பிரம்மாண்டமான முறையில் விவரிக்கும் இந்த நாவல், மாலிக் காபூரின் வருகை முதல் நாயக்கர் ஆட்சி மற்றும் பிரிட்டிஷ் காலம் வரையிலான சம…
ரத்தம் ஒரே நிறம்-1
இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று அழைக்கப்படும் 1857-ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பக்கங்களில் உறைந்து க…