கானகன்

Kaanagan

4.05/5 · 100+ ratings
பக்கங்கள்
349
வடிவம்
Kindle Edition
பதிப்பகம்
Zero Degree Publishing
ISBN-13
9789387707795
ASIN
B07WG3B67W

புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடிந்தாலும் இந்த நாவல் உரத்துப் பேடுவது வேட்டையைப் பற்றி மட்டுமல்ல, அகமலைக் காட்டின் பளியக்குடி மக்களின் வாழ்வையும் இடப்பெயர்வையும் நுட்பமாக பேசுகிறது. 2016 ம் ஆண்டு சாகித்திய அகதெமியின் யுவபுரஸ்கார் விருதையும் நற்றிணை பதிப்பகத்தின் பா. சிங்காரம் நாவல் விருதையும் பெற்ற இந்த நாவல் வெளியானது முதல் இப்போது வரையிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Interested in this book? Check Price on Amazon

user_12481

★ 4/5

புலி வேட்டையில் தொடங்கும் கதை, புலி வேட்டையில் முடிகிறது. நாவல் நெடுக நிரம்பிக் கிடக்கும் மலையிலும் காட்டிலும் அதற்கே உரிய இயற்கையின் அமானுஷ்யம் ஊடாடுகிறது. பல தருணங்களில் இந்த நாவலை அமானுஷ்ய உணர்வோடே அணுக நேர்ந்தது.

மனிதர்களின் பேராசையும் வெற்றுச் சீற்றமும் ஒரு காட்டைத் துண்டுகளாக்க முயல, காடே திரண்டு மூர்க்கம் கொண்டு மீள முயல்கிறது.

user_12480

★ 5/5

லக்ஷ்மி சரவணகுமாரின் சிறந்த படைப்பு கானகன்தான். முதல் காட்சியும் இறுதி காட்சியும் சராசரியாக ஒரே நிகழ்வுதான், ஆனால் இரண்டுக்குமான உளவியல் வேறு. அதை விவரிப்பதுதான் இந்த நாவல் - மிக அற்புதமாக அதைச் செய்திருப்பார்.

user_12479

★ 4/5

அற்புதமான கதை. இந்தக் கதையை வாசிக்கும்போது காட்டில் பயணம் செய்வது போல உணர்ந்தேன். தங்கப்பன் மற்றும் வாசி ஆகிய கதாபாத்திரங்கள் காட்டில் பயணிக்கையில் விலங்குகளின் நடத்தை பற்றிய ஆழமான நுண்ணறிவுகளைத் தருகின்றனர். கானகன் - அருமையான தலைப்பு.

user_12478

★ 5/5

மிகவும் அற்புதமான நாவல். நேரடியாக காட்டில் பயணம் செய்த மாதிரி அனுபவம் கிடைத்தது. எதார்த்தமான வகையிலும் உண்மைக்கும் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

காடு எப்படி இருக்கும், அதனுள் வாழும் மனிதர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் எனப் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. கதையைப் பற்றி எதுவும் தெரியாமல் படிப்பது சுவாரசியமாக இருக்கும்.

user_12477

★ 2/5

காட்டின் ஒரு விலங்கோ தாவரமோ அழிந்தாலும் நமது உணவுச் சங்கிலி பாதிக்கப்படுமாயின், மாட்டை வேட்டையாடும் புலியைக் கொல்வது தர்மம்தானா என்ற கேள்வி எழுந்தது.

மாட்டின் எண்ணிக்கையும் புலியின் எண்ணிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது கதையில். புலியை வேட்டையாடிய தங்கப்பன் கடைசியில் புலியால் வேட்டையாடப்படுகிறான். மனிதனின் சாவைவிட மகத்தானதும் கொண்டாடப்பட வேண்டியதும் வேறெதுவுமில்லை.

Shelves
Fiction லக்ஷ்மி சரவணகுமார் வன விலங்குகள் Tamil Novel புனைகதை சூழலியல் சூழலியல் புனைகதை Lakshmi Saravanakumar பழங்குடியினர் Environmental Fiction மேற்குத் தொடர்ச்சி மலை தமிழ் நாவல் book புலி வேட்டை

More like this


பாலங்கள்

This story travels through three different generations and how the culture, habits of people has changed over time, from the girl's point of view.…

4.2/5 · 400+ ratings
Check Price

ரூஹ்

அலைச்சல்களின் வழியாக எப்போதும் தேடிக் கண்டடைய விரும்புவது கதைகளை மட்டுந்தான். ரூஹை நான் கண்டுகொண்டது சில வருடங்களுக்கு முன்பாக கடப்பா ஆமீன் பீர் தர்ஹாவில். காவியத்தலைவன் …

4.19/5 · 200+ ratings
Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.22/5 · 1K+ ratings
Check Price

வெக்கை

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

4.18/5 · 1K+ ratings
Check Price

மூன்றாம் உலகப் போர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…

4.11/5 · 1K+ ratings
Check Price

Current Show

Ill-paid and always tired, Sathi, a young soda-seller, finds relief from the tedium of the everyday in marijuana and his friends—-vulnerable, desp…

3.01/5 · 200+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…

4.64/5 · 5K+ ratings
Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்-1

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…

4.31/5 · 2K+ ratings
Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம்

தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…

4.15/5 · 2K+ ratings
Check Price

கருவாச்சி காவியம்

கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…

4.09/5 · 2K+ ratings
Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

4.18/5 · 1K+ ratings
Check Price

வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

4.63/5 · 1K+ ratings
Check Price