Select a cover image
Searching for images...
Saving cover image...
வெக்கை
Vekkai
- பக்கங்கள்
- 175
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- காலச்சுவடு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- Kalachuvadu First Edition
- ISBN-13
- 9789381969298
- ASIN
- B07T4P56N2
சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி
சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப் பற்றியும…
user_5503
★ 4/5திரைப்படத்திலிருந்து (அசுரன்) சற்று வேறுபட்டது, இந்தப் பதிப்பையும் மிகவும் ரசித்தேன்! மொழி எனக்குப் புரிந்துகொள்ள சற்று கடினமாக இருந்தது, ஆனால் ஒட்டுமொத்தமாகக் கதை இறுதி வரை ஈர்த்துச் சென்றது.
நேர்கோட்டு அல்லாத கதைசொல்லல் சில நேரங்களில் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது, ஆனால் கதையின் தாக்கத்திற்கு வேறு வழி இருந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன். இங்கே முடிவு ஒரு க்ளிஃப்ஹேங்கராக இருக்கிறது — திரைப்படம் அப்படி இல்லாததில் மகிழ்ச்சி.
user_5502
★ 4/5வித்தியாசமான புத்தகம். உள்ளூர் சுவை கொண்ட ஏதாவது வாசிக்க விரும்பியதால் ஓரளவு ரசித்தேன். மிகவும் தேவையான மாற்றம் இது. கதையால் பிடித்துக்கொள்ளப்பட்ட உணர்வு ஒருபோதும் வரவில்லை. பரபரப்போ, துரத்தலோ, ஏதாவது மர்மமோ காத்திருப்பதாக இல்லை.
பூமணி ஒரு நெருக்கமான குடும்பம் எப்படி இருக்கும், ஒரு நூல் அறுந்தால் என்ன பிரச்சனைகள் வரும் என்பதை அழகாகச் சித்தரிக்கிறார். நல்ல புத்தகத் தோழன்.
user_5501
★ 4/5சாதிய அடையாளங்களைக் கடந்து எழுதியிருக்கும் வெக்கை — பூமணிக்கு வாழ்த்துகள். கதை ஒரு பழிதீர்த்தலும் அதன் பின் விளைவுகளின் நீட்சியுமாகச் செல்கிறது. பலமும் பலவீனமும் வட்டார மொழி வழக்கிலமைந்த நடை.
கதை நாயகனையும் அவரது தந்தையையுமே மையமாக வைத்து, அவர்களிருவரின் திட்டமிடல்களும் தப்பி ஒளியும் பாங்கும் த்ரில்லர் பாணியில் விரிவடைந்திருந்தாலும், கதை ஒரு சார்பிலமைந்து எதிரிகளுக்கான இடமில்லாமல் பயணிப்பது முரண்.
சாதீயத்தை நேரடியாகத் தொடவில்லை என்றாலும் அதிகார அரசியல், பணத்தால் மறுக்கப்படும் நீதி, சுரண்டல்கள், ஆதிக்க மக்களின் முகமும் பேராசையும், அதன் வழியே மண்ணின் மீதான போராட்டமும், அதை எதிர்த்துப் போராடும் தனிக்குடும்பமுமே கதையின் உயிர்நாடி. கதாமாந்தர்களின் உறவு வழி அன்பு மனம் நெகிழ வைக்கிறது.
குற்றம் எவர் செய்தாலும் குற்றமே. நீதியின் பக்கம் அநீதியே அதிகம் இருக்கிறது என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம். இருந்தும் மனசாட்சி குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.
user_5500
★ 5/5அதிகாரத்தை எதிர்க்கும் எளியவர்களின் கதை. அவர்களோடு நாமும் மலைகளையும் வயல்களையும் கிராமங்களையும் சாலைகளையும் கடப்பது போல் பிரமை தருகிறது. செலம்பரம் அடுத்து என்ன செய்தான் என்று அறிய ஆவலைத் தூண்டினாலும், அவர்களின் வாழ்வின் ஒரு பகுதியைக் கண்முன் நிறுத்திய அருமையான வார்த்தைகள்!
user_5499
★ 3/5எட்டு நாட்கள், எட்டு அத்தியாயம். நக்சல்பாரிகள். கிராமம் முழுவதும் ஒருவரின் பண்ணையாதல். சிறிய விஷயமாகப் பெரிய கொலைகள். இதுபோன்ற பெரிய விஷயங்களை சிறியதாகவும், கொலை செய்து பதுங்கி வாழும் எட்டு நாட்கள் எவ்வளவு பெரியது என்றும் சொல்லும் புத்தகமாதலால் ஏற்படும் வெக்கை — மனதில்.
கொலை செய்தது சிதம்பரம் எனும் சிறுவன். பதுங்கி அலைந்தது பூமணி. ஒளிந்து நின்று பார்ப்பவர்கள் வாசகர்கள்.
Shelves
More like this
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
கோபல்லபுரத்து மக்கள்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…
பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …