பாரிசுக்கு போ!
Parisukku Po
Select a cover image
Searching for images...
Saving cover image...
பாரிசுக்கு போ!
Parisukku Po
- பக்கங்கள்
- 332
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- மீனாட்சி புத்தக நிலையம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DLT6W29N
கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலேயே தாயை இழந்து, வெளிநாடுகளில் வளர்ந்த சாரங்கன், பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை திரும்புகிறான். மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற அவன், கர்நாடக இசையுடன் அதைப் பிணைத்து உலக இசை மொழியை உருவாக்க விரும்புகிறான். ஆனால் மேற்கத்திய இசையைக் காட்டுக் கத்தலாகக் கருதும் தந்தை சேஷையா அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். குடும்பமே நிராகரித்த நிலையில், விமான நிலையத்தில்…
Appears in following lists
user_19841
★ 1/5ஜெயகாந்தன் மிகப்பெரிய ஆளுமை — அதை மறுப்பதற்கு ஆர்வமில்லை. ஆனால் கதாபாத்திரங்கள் மூலம் தன் உலக அறிவையும் கருத்துகளையும் நீண்ட சொற்பொழிவாகக் கூறும்போது சலிக்கிறது.
அழுத்தமில்லாத கதாபாத்திரங்களின் உச்சித்திலகம் லலிதா — என்ன ஒரு கதாபாத்திரம்! புரட்சி என்பது ஒன்று, பைத்தியக்காரத்தனம் என்பது வேறு. ஏதோதோ சொல்ல வந்த ஜெயகாந்தன் எதையும் உருப்படியாகச் சொல்லவில்லை என்பதே உண்மை.
user_19840
★ 4/5ஜெயகாந்தனைப் போல் மனித மனங்களை அறிந்தவர் தமிழ் இலக்கிய உலகில் யாரும் இல்லை என்பதே என் கருத்து. பாமர மக்களின் உணர்வுகளை எழுத்தின் வழியாகப் புரட்சி செய்தவர்.
இந்த நாவலில் நவீன மற்றும் புராதன சங்கீதத்தை ஒப்பிட்டு எழுதியுள்ளார். சங்கீதம் பற்றி சரியாகத் தெரியாததால் முழுமையாக ரசிக்க இயலவில்லை. ஆனால் அதைச் சமூக சிந்தனையுடனும் உணர்வுகளுடனும் ஒப்பிட்டு எழுதிய விதம் வியக்க வைக்கிறது. 1960 காலகட்டத்தில் வெளிவந்து பெரும் புரட்சியை செய்தது — இன்றும் வாசிக்கையில் இக்காலச் சமுதாயத்திற்கும் சிறப்பாகப் பொருந்துகிறது. ஓரிரு கருத்துகளில் உடன்பாடு இல்லையென்றாலும், ஜெயகாந்தன் போற்றப்படத்தக்கவரே.
user_19839
★ 5/5மனித உணர்வுகளைச் சித்தரிப்பதில் ஜெயகாந்தனுக்கு நிகர் வேறு ஒருவர் இல்லை. கர்நாடக இசைக் குடும்பத்தில் பிறந்த சாரங்கன், சிறு வயதிலேயே தாயை இழந்து, தந்தையின் நண்பர் குடும்பத்தோடு வெளிநாடுகளில் வளர்ந்தவர். ஐரோப்பிய மேற்கத்திய இசை அவரைக் கவர, அதில் திறன்வாய்ந்த கலைஞனாக மிளிர்கிறார்.
கர்நாடக இசை இறைவனுக்குப் படைக்கும் அமிர்தம் எனக் கருதும் தந்தை சேஷையாவிற்கு மேற்கத்திய இசை காட்டுக் கத்தலாகத் தெரிகிறது. இதனால் தந்தை-மகன் இடைவெளி அதிகமாகி, பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்பற்றுப் போகிறது.
நடுத்தர வயதில் இந்தியா திரும்பும் சாரங்கனுக்குப் பல சவால்கள் — மேற்கத்திய இசையை கர்நாடக இசையுடன் சேர்த்து உலக இசை மொழியை உருவாக்கத் திட்டமிடுகிறார். ஆனால் குடும்பம் அவரை நிராகரித்திருப்பது தெளிவாகிறது. மகாலிங்கம்-லலிதா தம்பதியரின் நட்பு மட்டுமே உதவுகிறது. லலிதாவின் கடந்த கால வாழ்க்கையை அறிந்து அனுதாபம் காட்டும் சாரங்கன் முதன்முதலில் காதல் வயப்படுகிறார். நடுத்தர வயதினரின் காதல் — அதிலும் திருமணமான பெண்ணின் காதல் — எத்தனை சிக்கல்கள்!
மேற்கத்திய இசையும் கர்நாடக இசையும் சேர்ந்து உருவாகும் எளிய இசை என்பது சினிமாவில் காட்டப்படும் ஒலி அதிகமான பாடல்கள் அல்ல என்று தீர்க்கமாக வாதாடும் சாரங்கனின் லட்சியமும், மெல்லிய காதலும் எப்படி முடிகிறது என்பதை அழகாக விவரித்திருக்கிறார் ஜெயகாந்தன். 1960களில் வெளிவந்த இக்கதை இன்றும் முற்போக்கான சிந்தனைகளை விதைக்கிறது.
user_19838
★ 5/5அற்புதமான புத்தகம். கர்நாடக இசை, மேற்கத்திய இசை இடையேயான மோதல், தலைமுறை இடைவெளி, காதல் — அனைத்தையும் ஜெயகாந்தன் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். படித்து முடித்த பின்னும் சிந்திக்க வைக்கிறது.
user_19837
★ 5/5மிகவும் பிடித்தது. ஜெயகாந்தனின் கலை, இசை, காதல் பற்றிய ஆழமான சிந்தனைகள் மனதில் நீண்ட நேரம் நிற்கின்றன. கதையின் உணர்ச்சி ஓட்டம் அற்புதமாக இருக்கிறது.
Genres
Shelves
More like this
வெக்கை
சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
மூன்றாம் உலகப் போர்
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் த…
பிறகு
சுதந்திரத்திற்குப் பிறகான தென் தமிழகத்தின் கரிசல் கிராமம் மணலூத்துக்கு, வேலை தேடி வரும் செருப்புத் தொழிலாளி அழகிரி, காவக்காரர் கந்தையாவின் அரவணைப்பில் சக்கிலியக் குடியி…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
தமிழ் இலக்கிய உலகின் மகுடமாகத் திகழும் இந்த நாவல், கலையுலகின் பின்னணியில் ஒரு பெண்ணின் ஆளுமையையும் அவளது சுதந்திர வேட்கையையும் மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. சமூகத்தின்…
உன்னைப் போல் ஒருவன் [Unnai Pol Oruvan]
ஒரு ஆண் கல்யாணம் செய்து கொள்ளும்போது, தனக்காகவே செய்து கொள்வதாக நினைக்கிறான்; பெண்ணும் அப்படியே நினைக்கிறாள். தனக்காகச் செய்து கொள்கிற எந்தக் காரியமும் அதிருப்தியாய்த்தான் ம…
உறுபசி
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்க…