மூன்றாம் உலகப் போர்
Moondram Ulaga Por
Select a cover image
Searching for images...
Saving cover image...
மூன்றாம் உலகப் போர்
Moondram Ulaga Por
- பக்கங்கள்
- 400
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- Surya Literature Private Limited
- மொழி
- தமிழ் (Tamil)
- ASIN
- B0DSZYSJMP
சாகித்திய அகாதமி விருது பெற்ற புகழ்பெற்ற படைப்பாளரின் இந்த நாவல், நவீன உலகம் சந்தித்து வரும் மிக முக்கியமான அச்சுறுத்தல்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத ஆயுதங்களால் நிகழ்த்தப்படும் இந்தப் போர், நிலத்திற்கும் வானத்திற்கும் இடையிலான மோதலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை விவசாயத்தின் மீதும், இயற்கையின் மீதும் தொடுக்கும் கடுமையான தாக்குதல…
user_6486
★ 4/5எங்கோ இருக்கும் குமரிக்கண்டத்தில் கடவுள் இருந்தார், அவர் ஆட்சி செய்த ஊர் கடலில் மூழ்கிப்போனது எனப் பலர் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த நூலைப் படித்தபிறகுதான் — அவ்வளவு தூரம் ஏன் யோசிக்கனும்? உன் மாவட்டத்தில் ஒரு அங்கமாக இருந்த ஊர் இன்று அணைக்கட்டின் அடியில் மூழ்கிப்போச்சு தெரியுமா? கவிஞர் என்னைப் பார்த்துக் கேட்ட மாதிரி இருந்தது. வைரமுத்துவின் மிக முக்கியமான படைப்பு இந்த நூல். கட்டாயம் படியுங்கள்.
user_6485
★ 4/5சமுதாயப் பிரச்சினைகளை ஒரு கதை வடிவத்தில் கொடுத்துள்ளார் வைரமுத்து. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். வைரமுத்து தன் பெயருக்கு ஏற்றார் போல வைரத்தைப் போன்ற ஒரு புத்தகத்தை நமக்கு முத்தெடுத்துக் கொடுத்திருக்கிறார்.
user_6484
★ 3/5அட்டணம்பட்டி விவசாயி சீனிச்சாமி கடன் வாங்கி விவசாயம் செய்தார். கடன் கொடுத்தவன் ஒருநாள் தெருவில் அநாகரிகமான முறையில் கடனைத் திருப்பிக் கேட்டான். அவமானத்தில் மனம் நொந்தவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அதில் மகன்கள் சுழியனும் கருத்தமாயியும் தப்பிவிட்டார்கள். தாய், தந்தை, தங்கையின் மரணத்திற்குக் காரணமான கவட்டைக்காலனைக் கருத்தமாயி கொலை செய்துவிட்டுச் சிறை சென்று, தண்டனைக் காலம் முடிந்து திரும்பி அட்டணம்பட்டி வந்து தந்தையின் வழியில் விவசாயத்தைத் தொடர்கிறார்.
user_6483
★ 5/5காலத்திற்குத் தேவையான படைப்பு என்று எனது பார்வையில் தோன்றுகிறது. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தும் முக்கியமான படைப்பு. விவசாயிகளின் உழைப்பு, தோல்வி, வேதனை, வலி — இவற்றை நாம் பலர் அறிந்திருப்பது அரிது. அவர்கள் வாழ்வை வாழ்வதும் கொடிது என்று மனதில் ஆழமாக வேரூன்றுகிறது. ஊர் மாற்றம் கொள்ள என்ன தேவைகள் உள்ளது, பிரச்சினைகள் உள்ளது, மக்களின் ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்று உணர்த்துகிறார்.
user_6482
★ 4/5"அறியப்பட்ட இருபது லட்சம் உயிரினங்களில் ஒரு ஜீவராசிதான் மனிதன்" — அவ்வளவுதான்! பத்தில் ஒன்று கூட இல்லை, இருபது லட்சத்தில் ஒன்று! உலக வெப்பமாதல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல், காடழித்தல் போன்ற முக்கியமான விஷயங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதால் அர்த்தம் இழந்த சொற்றொடர்களாக மாறிவிட்டன. எவ்வளவு மகத்தான விஷயமாக இருந்தாலும் அதை உணர்த்த ஒரு சிறந்த கதை வேண்டும் — அதை வைரமுத்து செய்திருக்கிறார்.
Shelves
More like this
கருவாச்சி காவியம்
கிராமத்து மண்ணின் மணத்தையும், எளிய மக்களின் வாழ்வியலையும் தத்ரூபமாகச் சித்தரிக்கும் ஒரு உன்னதப் படைப்பு இது. ஒரு கிராமத்துப் பெண்ணின் போராட்ட குணத்தையும், சமூகம் அவளுக்கு இ…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
வெக்கை
சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…
கள்ளிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
வில்லோடு வா நிலவே
கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…
சாயாவனம்
சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளி…
சிகரங்களை நோக்கி
மகிழ்ச்சி : மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம. அற்புதம் : ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய். அபாரம் : ஒன்றை மட்…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
அலை ஓசை
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தையும், நாடு தழுவிய பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் இந்தப் புதினம் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது. உலக வரலாற்றின் மாபெரு…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …