பிஞ்சுகள் [Pinjukal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பிஞ்சுகள் [Pinjukal]

None

4.11/5 · 46 ratings

In 1979 this book won the 'Ilakkiya sinthanai' award.

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_16004

★ 5/5
சிறு வயது நினைவுகளை கிளர்த்திவிடும் பிஞ்சுகள்,

user_16003

★ 5/5
Wonderful book....must read one for all nature especially animal/bird lovers

user_16002

★ 4/5
#3rdBook #18Jan2024 #Madhu_ReadingChallenge2024 கி.ரா அவர்களின் எழுத்தை அவ்வளவு எளிதில் வெறும் நாவல், சிறுகதை என்று கடக்க முடியாது. கிராமத்து வாழ்வை அனுப்பவிக்காதவர்கள் கூட கி.ரா அவர்களின் எழுத்தின் மூலம் அதை உணர்ந்து கொள்ள முடியும். அது மாதிரி தான் இந்த புத்தகமும். சிறார்களுக்காக புத்தகம் என்று வகுப்பட்டாலும், பெரியவர்கள் படித்தாலும் கூட அவர்களின் சிறு வயது நினைவுகளை தூண்டக் கூடிய ஒன்று. இப்புத்தகம் அச்சு இதழ் ஆவதற்கு முன்பே 1978 இல் இலக்கிய சிந்தனை விருதை பெற்றது (புத்தகம் முன்னுரையில் இருந்து) 80 பக்கங்கள், நல்ல பெரிய எழுத்து அச்சு, ஒவ்வொரு பகுதி ஆரம்பிக்கும் போது ஒரு பறவை, விலங்கு என்று கதையுடன் ஒன்ற கூடிய சிறிய வண்ண ஓவியம் என்று புத்தகம் பார்க்க அழகாக உள்ளது. கதை வெங்கடேஷ் என்னும் ஒரு பள்ளி வயது சிறுவனை சுற்றியே நடை பெறுகிறது, அம்மா இல்லாமல் வாடும் ஒரு சிறுவன் எப்படி தன்னை அந்த சுழல்க்குள் அமைத்து கொள்கிறான். யாரும் இல்லா வரும் தனிமையை எப்படி பறவைகளின் வழியே போக்கி கொள்கிறான். அவனுடைய உலகில் அவன் பார்வையில் அவன் அப்பா, பக்கத்து வீட்டு அக்கா அண்ணா, மாமா என்று விரிகிறது கதை. கதை முழுவதும் பல பறவைகளின் விவரங்கள், கிராமத்து பக்கம் உள்ள நம்பிக்கையின் வழி உள்ளது. தேன்கொத்தி குருவி, காக்கா பிடிக்கும் முறை, வால் குருவி, ஆண்டகுருவி, விலாங்கு மீன் கோழியை திருடி செல்வது, மைனா பேசும் முறை என்று பல விசயங்கள் நமது சிறு வயதில் கேட்டு நம்பிய ஒன்றை நினைவுப்படுத்தக் கூடியது. #madhureadingchallenge #MadhuReads #TinkMadhuReads #readingchallenge #readingtime #bookstagram #bookrecommendations #bookdealsforbrokebibliophiles #bibliophiles #booklover #tamilnovels #reading #bookworm #bookstagrammer #read #bookish #bookaddict #booksofinstagram #bibliophile #bookaholic #booklove #tamilbooks #tamilreaders

user_16001

இந்த குறுநாவல் படிப்பவர்க்கு நிச்சயம் ஒரு பிரம்மிப்பை உருவாக்கும். அப்பப்பா... எதனை வகையான பறவைகள் அதன் குரல்கள் என்று அதிசயிக்க வைக்கும். ஏன் கதை அதற்குள் முடிந்தது என்று கூட வருந்தலாம். போகிறபோக்கில் சில நடைமுறை சொலவடைகளுக்கு விளக்கமளிக்கிறது இந்நூல்.

user_16000

★ 4/5
பிஞ்சுகள் ❤️ • கி.ரா வின் கரிசல் காட்டில் வினளந்ததுதான் இந்தப் பிஞ்சுகள் என்ற குறுநாவலும். இயற்கையோடும் ஊரோடும் உலாவித் திரிந்த சிறுபராய காலத்தின் விம்பமாய் மூன்று பிஞ்சைகளை மையமாகம் கொண்டு வாழ்வின் அழகியலை மொழியின் சுவையுடன் சிறுவர்களுக்கே உரிய வகையில் சொல்லிச் செல்கிறது கதை.

user_15999

★ 5/5
இனிய சிறுவயது நினைவுகளை 100 பக்கங்களில் அடக்கிய புத்தகம் ..!

user_15998

★ 3/5
பிஞ்சுகள்... வெங்கடேசு, செந்திவேல், அசோக் என மூன்று சிறுவர்களின் சின்ன வாழ்க்கை சூழலை வெங்கடேசு வாயிலாக கி.ரா. விவரிக்கிறார். கி.ரா கதைகளுக்கே உரிய ஆழமான ரசிக்கும் படியான கிராம வர்ணனைகள். பல விதமான பறவைகளின் குணாதியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
Genres
Shelves
book கி. ராஜநாராயணன் Fiction

More like this


ஆ!

'ஆ..!' 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான…

4.11/5 · 46 ratings
Check Price

பெண் கதைகள்

1988ல் ஆனந்தவிகடன் வார இதழில் கோபல்லபுரத்து மக்கள் தொடரினுள் இரண்டாம்பாகம் 6வது அத்தியாயத்தில், ஊரிலுள்ள ஆண்களிடத்தில் இந்த செவ்வாய்கிழமை விரதம் பற்றி என்ன கருத்துக்கள் இருந்த…

4.11/5 · 46 ratings
Check Price

பெண் கதை எனும் பெருங்கதை

இத் தொகுப்பில் எழுந்து நிற்கும் மகத்துவம் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் துணை நின்ற, அரவணைத்த, ஆறுதல் அளித்த ஒரு உலகம். 'பெண்ணுக்குப் பெண்ணே எதிரி' என்பதைப் பொய்யாக்கிய உலகம். ஆ…

4.11/5 · 46 ratings
Check Price

மீண்டும் ஜீனோ-1

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

4.11/5 · 46 ratings
Check Price

அன்புள்ள கி.ரா.வுக்கு (எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்)

தமிழில் ஒரு எழுத்தாளனுக்கு மற்ற எழுத்தாளர்கள் கடிதமும் எதுவார்களா! கேள்விப்பட்டதில்லையே. சண்டை போடுகிறது, மனஸ்தாபங்கொள்கிறது, முகத்தைத் திருப்பிக் கொள்கிறது, குழி தோண்டு…

4.11/5 · 46 ratings
Check Price

தாத்தா சொன்ன கதைகள்

இந்த 'தாத்தா சொன்ன கதைகள்' அனைத்தையும் - 'களவுக்கலை' என்ற தொடரையும் - 'தேவி' பத்திரிக்கைக்காரர்கள் என்னை எழுதத்தூண்டியதன் பேரில்தான் இவை எழுதி வெளிவந்தது...

4.11/5 · 46 ratings
Check Price

கரிசல் கதைகள் [Karisal Kathaikal]

கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது; 'பிரியமிருக்கிறது; பூமி வறண்டிருந்தாலும், மனசில் ஈரம் இருக்கிறது. வேட்டி கருப்பாக இருந்தாலும் 'மனசு வெள்ளையாக இருக்கிறது. 'உடம்…

4.11/5 · 46 ratings
Check Price

சோலைமலை இளவரசி [Solaimalai Ilavarasi]

சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…

4.11/5 · 46 ratings
Check Price

சிவகாமியின் சபதம்

Sivakamiyin Sabadham is a historical Tamil novel set in 7th century South India written by Kalki in 1944. Kalki Krishnamurthy, recipient of India'…

4.11/5 · 46 ratings
Check Price

உடையார் - பாகம் 6

About the Author Balakumaran, born in 1946, is a Tamil author and screenplay writer. He is the recipient of several prestigious literary awards su…

4.11/5 · 46 ratings
Check Price