சங்கச் சித்திரங்கள் [Sanga Chithirangal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சங்கச் சித்திரங்கள் [Sanga Chithirangal]

None

Author: Jeyamohan
4.53/5 · 81 ratings

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது ... எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் …

Reviews

user_12573

★ 5/5
சங்க இலக்கியங்களின் பொருளை, உணர்வுகளை சமகால அனுபவங்கள் மூலம் தான் உணர்ந்த தருணங்களை, இலையில் வைத்த இனிப்பைப் பிட்டு தன் மக்களின் இலைக்கு நகர்த்தும் தாயாய், ஓவியமாய் வரைந்து செல்கிறார் ஆசிரியர்.

user_12572

★ 5/5
வெகுநாட்களாகவே சங்க இலக்கியங்களை அதன் சுவையறிந்து வாசிப்பின்பம் அடைய வேண்டுமென்ற எண்ணமிருந்தது, நேரடியாகப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்வதைக் காட்டிலும் ஓர் அனுபவத்தின் வழி கவிதையின் இன்பத்தை அடைவது பேரின்பம். தயக்கத்துடனே "சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தை கையிலெடுத்தேன், மாலைப்பொழுதின் தாபத்தை ஓர் அழகான காலையில் வாசிக்கையில் தொடர்ந்து வாசிக்கும் உந்துதலை அளித்தது.

user_12571

★ 5/5
சங்கப் பாடல்களை அணுகுகையில் அவற்றை திரும்பத் திரும்ப வாசிப்பதால் அர்த்தம் விளங்கும் என்கிறார் ஜெயமோகன். பலமுறை வாசித்தும் என் மரமண்டைக்கு விளங்கவில்லை.இதில் இடம்பெற்ற சில சங்க்க் கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பை நான் படித்தவரையில் எந்த நவீன கவிதையும் எனக்கு இதுவரை ஏற்படுத்தவில்லை. சங்க கவிதைகள் வாசிக்க நினைப்பவர்க்கு அருமையான அறிமுக நூல்.ஜெயமோகனுக்கு நன்றி.

user_12570

★ 5/5
சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டவர்கள், தன் அன்றாட வாழ்வின் தளத்தில் நின்று அப்பாடலின் விரிவை அனுபவிக்கும் ஆவல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் “சங்கச் சித்திரங்கள்” http://www.omnibusonline.in/2020/06/b...

user_12569

★ 5/5
A collection of essays based on selected Tamil Sangha Kala writings. He starts with a few lines from some classic work and follows it up with a small story and then tries to relate the story with the former by translating the same lines into layman terms. For me this was a tough one to read, but enjoyed the story part and tried my best to understand the relation of the same with the classic poem or prose. This book is a collection of 40 essays & can be read as a coffee table book where one can plan to read one essay per day. I tried to read one in the morning & one before I go to sleep. This book should be a breeze for those who have studied Tamil as a language during their school days.

user_12568

★ 4/5
#Sangachitirangal 40 பாடல்கள் சங்கஇலக்கியங்களிலிருந்து… ஜெமோவின் பின்தொடரும் சில பக்கங்கள் இல்லாவிடில், “என்னத்தையா சொல்றானுங்க” தான். காமம், காதல், பரத்தைகள், ஓடிப்போவது என்று அன்று முதல் இன்று வரை நம் சந்திப்புகள் மாறவில்லை. பதப்படுத்தப்பட்ட காமமே காதலா? பண்படுத்தப்பட்ட வன்முறையே வீரமா? என்ற கொக்கி வேறு. இதில் என் மனதில் நின்றது நிறைத்தது -- வாயிலோயே வாயிலோயே என்ற ஒவ்வை பாடலும் அதை சார்ந்த ஜெயமோவின் வாழ்க்கை நிகழ்வும் -- வற்றா காதலோடு தன மனைவியுடன் ஒரு பேரூந்து பயணத்தில் அறிமுகமாகும் அந்த பாயிடம் பின்னர் விரியும் அந்த வற்றிய வைகை பாடலும் -- Marketடில் காணநேரும் “இந்நாள்” பரத்தை பாடலும் அதன் மூலம் ஜெயமோவின் ஆணாதிக்க ஊசிகளும் -- அட மறந்தே போனேனே.. அந்த கௌரி அக்காவும் 20 வருடம் கழித்து பவுடர் கரைய, அரை கிலோ நகைகளுடன், அகல ஜரிகை பட்டுடன், அகன்ற அதே அக்கா -- இறுதியில் ராதா என்ற உடன் பணிபுரியும் பெண்ணின் தாய் கொண்ட பசிதேனீரும் --நண்பன் ராதாகிருஷ்ணனின் மரணத்தின் மூலம் பித்தானாகி இயற்கை மூலம் எடுக்கும் மறுபிறப்பும் --- ஒரு நாளுக்கு ஒன்று வீதம் அருந்துங்கள் இந்த அமிர்தத்தை

user_12567

★ 3/5
சங்க இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த புத்தகம் நல்லதொரு அறிமுகமாக இருக்கும்.

user_12566

★ 4/5
என் மாமனார் இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாக வாசிக்க சொல்லிக் கொடுத்தார். ஜெயமோகனின் பெரிதாக அறியப்படாத நூலை கொடுத்திருக்கிறார், வாசிக்க பெரிதாக மனம் இல்லை. ஆனால், இவர் ஏற்கனவே எனக்கு கொடுத்த வேறு ஒரு நூலை வாசிக்காமல் தூசி தட்ட விட்ட குற்ற உணர்ச்சி உறுத்தியதால், தயக்கத்துடனே சங்கச் சித்திரங்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது ஒரு பொக்கிஷமே. சங்க இலக்கியத்தில் பொதிய அறிவோ, அறிமுகமோ இல்லாத நான், ஜெயமோகன் சங்க இலக்கியப் பாடலைத் தற்போதைய நடைக்கு மொழியாக்கம் செய்து, அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் இதை ஒப்பிட்டு எழுதியதில் என்னை இந்த நூல் மிகவும் ஈர்த்தது. காதல், காமம், சாதி, தாயின் பாசம், இயற்கை, அழகு, மரணம், பெண்மை, தத்துவம், இலக்கியம் என்ற வாழ்வின் முக்கிய விடயங்களை ஆழமாக ஆராய்கிறது. சில பாடல்களின் ஜெயமோகனின் விளக்கம், நான் வாழ்க்கை நெறிகளாக, தத்துவமாக வகுத்திருக்கும் அதையே சொல்வதன் மூலம், எனது நம்பிக்கை மீழூட்டப்படுகிறது. சில நெரிகள் என் சிந்தனைகளை கேள்விக்குள் ஆக்குகின்றன. மொத்தத்தில், நூலை வாசித்து முடிக்கையில், நிச்சயமாக சிறிது மேலும் ஞானமுற்றிருப்பீர்கள். கண்டிப்பாக சங்கச் சித்திரங்கள் ஜெயமோகனின் மறைத்த நிதியங்களில் ஒன்று.

user_12565

★ 3/5
சங்க இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் ஒரு தொடக்கமாக இந்த நூலை வசிக்கலாம். சங்கக் கவிதைகளை நவீன வாழ்வின் நிகழ்வோடு விவரிக்கிறார். உண்மையில் சங்க இலக்கியம் வாசிக்க வேண்டும் என்றால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தா . கோவேந்தன் நூல்கள் வாசிக்கலாம்...
Shelves
book Jeyamohan

More like this


குகை [Gugai]

Author: Jeyamohan

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இர…

4.53/5 · 81 ratings

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Author: Jeyamohan

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.53/5 · 81 ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.53/5 · 81 ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.53/5 · 81 ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.53/5 · 81 ratings

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இ…

4.53/5 · 81 ratings

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Author: Jeyamohan

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவ…

4.53/5 · 81 ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.53/5 · 81 ratings

ஆலம் [Aalam]

Author: Jeyamohan

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…

4.53/5 · 81 ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.53/5 · 81 ratings

கொற்றவை [Kotravai]

Author: Jeyamohan

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

4.53/5 · 81 ratings

குறும்படைப்பு: அறம் - சிறுகதை [Aram]

Author: Jeyamohan

வாசலில் நின்றிருந்தவர் ‘‘உள்ள வாங்கோ… இருக்கார்” என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘‘வணக்கம்” என்றபடி செருப்பைக் கழற்றினேன். அவர் செருப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டார். ‘‘வெ…

4.53/5 · 81 ratings