வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

None

Author: Jeyamohan
4.4/5 · 53 ratings

இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் கட்டுரைகள் இவை. உலக இலக்கியக் களத்தில் சென்ற இருநூறாண்டுகளில் நிறைய விவாதிக்கப்பட்ட அடிப்படைகள் இவை…

Reviews

user_15811

★ 5/5
வணிக வாசிப்பாளர்களுக்கு இந்த புத்தகம் பயனில்லை.இந்த புத்தகம் முதல் படி இலக்கிய வாசகர்களுக்கும், இலக்கியம் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும். Tolstoy, Dostoevsky போன்ற பல உலக இலக்கிய ஆளுமைகள் படிப்பதற்கு சில வாசிப்பு வழிகள் இருக்கிறது. அதை எப்பிடி அணுகுவது என்று மிக தெளிவாக எழுதி இருப்பார். இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

user_15810

★ 4/5
தமிழ் இலக்கியம் சார்ந்த ஆசிரியரின் கட்டுரைகள் மற்றும் வாசகர்கள் உடனான கேள்வி பதில்களின் தொகுப்பு. நவீன கவிதைகள் ஏன் பலருக்கு புரிவதில்லை, அதற்கான காரணங்கள் என்ன மற்றும் அவற்றை அணுகும் முறைகள். பொது வாசகர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களின் வாசிக்கும் பாங்கு, குணாதிசயங்கள் மற்றும் விமர்சன முறைகள். ஒரு எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதன் முக்கியத்துவம். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பாலகுமாரன், புதுமைப்பித்தன், மகாகவி பாரதியார் மற்றும் பல எழுத்தாளர்களைப் பற்றிய விவரிப்பு. இலக்கிய படைப்புகள் மற்றும் இலக்கியம் அல்லாத படைப்புகளைப் பிரித்தறியும் உத்திகள், இலக்கியப் படைப்புகளின் கூறுகள் மற்றும் வாசகர் ஆழ்ந்து அறிய வேண்டிய நுண் கருத்துகள். ருஷ்ய இலக்கியங்களை வாசிக்கும் போது ஏற்படும் தடைகள் மற்றும் அதைக் கடந்து வரும் வழிகள். இலக்கிய அபிப்ராயம் சொல்லும் முறைகள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஏற்படும் பூசல்களைப் பற்றிய விவரிப்பு. இவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம். ஒரு வாசகராக நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அதே சமயம் நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும். என்னை தீவிரமாக யோசிக்க வைத்த புத்தகம் இது. பல படிமங்களாக இருக்கும் ஆசிரியரின் பதில்கள் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாக்குகிறது. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்தப் புத்தகத்தை நான் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன். இலக்கிய வாசிப்பைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு அருமையான புத்தகம்.

user_15809

★ 4/5
புத்தகங்களை வாசிப்பவர்கள், கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஒரு சில இடங்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தது இருந்தும் இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக பல தெளிவுகள் பெறக்கூடும். புத்தகங்களை வாசிப்பதனால் நமக்கு எழும் சில சந்தேகங்களும் தடைகளும் குழப்பங்களுக்கு எல்லாம் இந்நூலை வாசிக்கும் ஒவ்வொரு கட்டுரையின் வாயிலாக ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கப்படும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பெரும்பாலானவை வாசகனிடத்தில் இருந்து வந்த கேள்விகளின் பதில்களாகத் தான் விளக்கியிருப்பார். இதில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் நம்முடைய மனதிலும் தோன்றி என்றைக்கோ மறைந்திருக்க கூடும் அதை இப்போது இதிலுள்ள கட்டுரைகளின் வாசிப்பில் தெளிவடையக்கூடும், அப்படித்தான் என்னுள் இருந்த குழப்பங்களும் தெளிவு கிடைத்தது. உதாரணமாக ஒரு படைப்பை நாம் வாசித்து முடித்து, நாம் அப்படைப்பு வேறு ஒரு படைப்பின் சாயலில் தான் இருக்கிறது (அந்த படத்தை மாதிரி தான் இந்த படமும் இருக்கிறது) என்று கூறுவது இயல்பு. அப்படி ஒரு இலக்கிய படைப்பை விமர்சனத்திற்கு பொத்தாம் பொதுவாக கூறுவதை விட இவ்விரு படைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிதல் தான் ஒரு தேர்ந்த வாசகனின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இங்கு நான் சரியாக விளக்கி உள்ளேனா என்று தெரியவில்லை ஆனால் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது தெளிவடைவீர்கள். பொதுவாக எழும் கேள்விகளான எது இலக்கியம், மற்றவருக்கு புரிவது எனக்கே என் புரிவதில்லை, எழுத்தானுக்கு வாசிப்பு தேவையா, ரஷ்ய இலக்கத்தை வாசிக்கும் போது இருக்கும் சிக்கல், ஒரே எழுத்தாளரை வாசித்தல், பொருள் மயக்கம், இலக்கியத்தில் ஏன் விவாதங்கள் நடக்கிறது என பல்வேறு கேள்விகளுக்குள்ளான கட்டுரை இந்நூலில் உள்ளது. இதில் உள்ள பெரும்பான்மை கட்டுரைகள் அவருடைய இணையதளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை தான். ஓரிரு கட்டுரைகள் இந்நூலிற்கு என்று தனியாக எழுதியிருந்தார் போலும். கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். தேடி வாசியுங்கள்.

user_15808

★ 4/5
இலக்கியம் சார்ந்த நண்பர்கள் வட்டம் இல்லாத அந்தரங்கமான வாசிப்பினை கொண்டவன் என்பதால் வாசிப்பு தொடர்பான பல கேள்விகள் எனக்குள் தேங்கியிருந்தது. அவற்றில் சிலவற்றை களைவதற்கும் சிலவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் இந்நூல் உதவியது. இருபத்தொரு கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஏற்கக்கூடியவையே.

user_15807

★ 3/5
Its mostly about how to read, what to read, its mostly about what is literature and how literature can be read.
Shelves
book Jeyamohan

More like this


குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

Author: Jeyamohan

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.4/5 · 53 ratings

சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து

Author: Jeyamohan

கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எந்த மதமும் அமைப்பாகி அரசியலாகி அந்த முதல் கண்ணீர்த்துளியில் இருந்து வெகுவாக வி…

4.4/5 · 53 ratings

வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்

Author: Jeyamohan

மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…

4.4/5 · 53 ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.4/5 · 53 ratings

ஏழாம் உலகம்

Author: Jeyamohan

நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…

4.4/5 · 53 ratings

உடையாள் [Udaiyal]

Author: Jeyamohan

இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்…

4.4/5 · 53 ratings

இந்தியப் பயணம் [India Payanam]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.4/5 · 53 ratings

கன்னியாகுமரி

Author: Jeyamohan

இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…

4.4/5 · 53 ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

4.4/5 · 53 ratings

வெண்முரசு – 04 – நூல் நான்கு – நீலம்

Author: Jeyamohan

வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையம…

4.4/5 · 53 ratings

கொற்றவை [Kotravai]

Author: Jeyamohan

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

4.4/5 · 53 ratings

இன்றைய காந்தி

Author: Jeyamohan

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.4/5 · 53 ratings