ஆலம் [Aalam]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஆலம் [Aalam]

None

Author: Jeyamohan
4.16/5 · 100+ ratings

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.

Reviews

user_13718

★ 4/5
Pick this up if you want to read something that is fast paced, raw and brutal. I picked it up yesterday and finished today.

user_13717

★ 4/5
It touches something that's acting as a sediment in human psychology which people never acknowledge, but still surfaces at many times around us. Humans are evil. Evil is Humane.

user_13716

★ 4/5
Best thriller in Tamil

user_13715

★ 2/5
மிகவும் சுமார். ஒரு சிறுகதையை சுற்றி சுற்றி இழுத்து நாவலாக தந்துள்ளார். மனதில் நிற்கவும் இல்லை மனதைத் தொடவும் இல்லை.

user_13714

★ 5/5
Extraordinary thriller story. You never drop the book while reading. Completed the book in a day.

user_13713

★ 2/5
ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களில் ஒரு சாதாரண புத்தகமாக தான் பார்க்கிறேன். திரில்லர் பிடித்தவர்களுக்கு இந்த புத்தகம் பிடிக்கலாம். தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் வன்மத்தினால் நடக்கும் பிரச்சனைகளே கரு. ஏன் கிரோதம் வன்மம் இருக்க கூடாது என்பதை உணர்த்தும்.

user_13712

★ 3/5
இது ஒரு murder mystery novel. பரபரப்பான கதைப் பின்னணி. கதையோட ஹீரோ ஒரு junior lawyer. அவரோட சீனியர் கோப்ராவோட பழைய கேஸ எடுக்குறதுல தான் கதை ஆரம்பிக்குது. தொடர்ந்து கொலைகள் நடந்துட்டு இருக்கு. ஒரு வம்சத்தையே அழிக்க முயற்சி பண்றாங்க. இதெல்லாம் யார் எதுக்காக பண்றாங்கன்றது தான் மீதி கதை. நாய்களுக்கு பரவுற பூஞ்சைத் தொற்றையும், மனுஷங்களுக்கு ஏற்படுற பழிவாங்குற குணத்தையும் அதுனால மனுஷங்க மொத்தமா அழியறதையும் ஒப்பிட்டு எழுதின விதம் நல்லா இருந்துச்சு. பங்காளி சண்டைல தான் கொலைகள் நடக்குதுனு நினைக்கும்போது அப்படியே twist பண்ணி personal revengeனு சொன்ன விதம் அருமை. பக்கத்துப் பக்கம் இரத்தம், பகை, அரிவாள், வெட்டுனு ஒரே கொலைவெறியோட இருக்கு. வருஷக் கணக்குல தீர்ப்பு வராம இருக்குறது, சாட்சிகளை வருஷ கணக்குல அலைக்கழிக்குறது, கொலை செய்தவங்களுக்கு உடனே ஜாமீன் கெடைக்குறதுனு உண்மை நிலைமையை புரிய வச்சு இருக்காரு ஆசிரியர். இந்தக் கதைல வர முக்கால்வாசி ஆண்கள் ரத்தவெறியிலயே இருக்காங்க. எல்லாப் பெண்களுமே hyper-depressionல இருக்காங்க. ஆண்கள் வெறியோட இருந்தா பெண்கள் நிலைமை இப்படித்தான் இருக்கும்னு ஒருவேளை ஆசிரியர் சொல்றாரு போல. Please don't read this book if you are sensitive, soft hearted and hates violence.

user_13711

★ 5/5
ஆலம் - ஜெயமோகன் எனக்குத் தெரிந்து தமிழில் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு நாவல்கள் எழுதப்படுவது மிக அரிது. நான் வாசித்த வரையில் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன் போன்ற மிகச்சிலரே ஓரளவு நல்ல பொழுதுபோக்குக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் குழந்தைகள் அல்லது பதின் பருவத்தினர் வாசிக்கக் கூடிய அளவில்தான் இருக்கின்றன. அவற்றைக் கடந்தால் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய ஜாம்பவான்களின் நூல்களே இங்கு கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை வாசித்து, சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் நாம் பல சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், திகில் கதைகள், அறிவியல் புனைவுகள் போன்றவற்றை வாசித்து, ஓரளவு திறந்த மனமும், பரந்த பார்வையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழில் அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு‌. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பலர் வாசிப்புப் பழக்கத்தை கைவிட இதுவே ஒரு முக்கியக் காரணம். அந்தக் குறையைத் தீர்ப்பதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக, இந்த 'ஆலம்' நாவல் இருக்கலாம். இலக்கியத்துக்கான சிறப்பம்சங்கள் எதுவுமே இல்லாத, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு நாவல். அதனை ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமை எழுதியிருப்பது பெரிய ஆச்சரியமே. கதை, திருநெல்வேலியில் நடக்கிறது. பல ஆண்டுகளாக நெல்லையில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறையே கருப்பொருள். தலைமுறை தலைமுறையாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே பழிக்குப் பழியாக பல உயிர்கள் கொல்லப்படுகின்றன. அவற்றை பெருமை எனக் கருதி அந்த இரண்டு குடும்பங்களும் போட்டி போட்டு கொலைகளை அரங்கேற்றுகின்றன. இந்த இரத்த வெறியாட்டத்தில் எதிர்பாராத வகையில் ஒரு அப்பாவியின் உயிர் தவறுதலாக பறிபோகிறது‌. அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அடுத்தடுத்த கொலைகளுக்கு நகர்கின்றன அக்குடும்பங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இரத்தவெறி பிடித்த அந்தக் கூட்டமே பயந்து அலறும் வகையில், அந்த அப்பாவியின் சாவுக்குக் காரணமான அத்தனை பேரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, ஒரு வம்சமே அழிக்கப்படுகறது. இதைச் செய்பவர் உண்மையில் வாழும் ஒரு மனிதனா, அல்லது பிசாசா, அல்லது கடவுளா எனத் தெரியாமல், மிச்சமிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற மன்றாடுகிறது அந்தக் கொலைகாரக் குடும்பம். இதிகாசக் கதை போன்ற தொனியைக் கொண்டிருந்தாலும், இன்றைய சூழலோடு இயல்பாகப் பொருந்துகிறது இந்தக் கதை. ஒரு பக்கம் இரத்தம் தெறிக்கும் வன்முறை, இன்னொரு புறம் விறுவிறுப்பான துப்பறியும் படலம், பரபரப்பான கதையோட்டம் என கடைசிப் பக்கம் வரை பறந்து செல்கிறது கதை. இடையிடையே வரும் பூஞ்சைகள் பற்றிய ஒப்பீடுகள் அட்டகாசம். பகைக்கு நடுவில் வாழும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் இல்லாமல், அதைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வழக்கறிஞரின் பார்வையில் கதையைச் சொல்லியிருப்பது கூடுதல் சுவாரசியம். கதைக்குத் தேவையில்லாத, தொடர்பற்ற ஒரு வாக்கியம் கூட இல்லாமல் இருப்பது தனிச்சிறப்பு. ஒரு பொழுதுபோக்கு நாவலில் இதெல்லாம் அடிப்படைத் தேவைதான் என்றாலும், தமிழில் இவ்வாறு எழுதப்படுவது மிக அரிது. இப்படிப்பட்ட கதைகளுக்கு சரியான முடிவை எழுதுவது மிக முக்கியம். கொஞ்சம் தவறினாலும் மொத்தக் கதையையும் அது கெடுத்துவிடும். ஆனால் இந்தக் கதையின் முடிவு மிகவும் கச்சிதமாக, எதிர்பாராத வகையில் இருந்தது. பெரிதாக ஒத்துப்போகாத திருநெல்வேலி வட்டார வழக்கு, கதை நிகழும் காலகட்டம் பற்றிய சிறிய குழப்பம்‌ போன்ற சிறு குறைகளும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்ற, அல்லது இதைவிடச் சிறப்பான பல பொழுதுபோக்கு நாவல்களைப் படித்திருந்தாலும், தமிழில் இப்படி ஒன்றை வாசிப்பது அலாதியான அனுபவமாக இருந்தது. இந்த நாவல், வெற்றிமாறன் - மிஷ்கின் - கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கவிருந்த ஒரு இணையத் தொடருக்காக எழுதப்பட்டது என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் என்னைக் கேட்டால் இதனை இயக்க இவர்கள் மூவருமே சரியான ஆட்கள் இல்லை. சசிக்குமார் அல்லது கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம். சரியான திரைக்கதை வசனங்களோடு இந்தக் கதையை உருமாற்றம் செய்தால், 8 - 10 எபிசோடுகளைக் கொண்ட ஒரு உலகத்தரமான தொடர் நமக்குக் கிடைக்கும். டாரண்டினோ படத்தை தமிழில் வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்நாவலை நான் பரிந்துரைக்கிறே��்.

user_13710

★ 4/5
படித்ததில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு.இந்த படைப்பில் எழுத்தாளர் வன்மத்தினை பூஞ்ஜைகளோடு ஒப்பிடுகிறார்.ஒரு தந்தை தன் மகன் மீது கொண்ட பாசம்,மகனை இழந்த தவிப்பு,அதனால் கொண்ட வன்மம்….அந்த வன்மத்தினால் 17 வருடங்களாக அவர் செய்யும் கொலைகள் என நம்மை அந்த உலகத்திற்கு அழைத்து செல்கிறார்.இறுதிவரை பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.

user_13709

★ 4/5
...revenge, like a fungal infection, spreads silently and pervasively, consuming everyone it touches. Jeyamohan has this knack for layering stories with profound metaphors, weaving a gripping narrative while embedding subtle commentary on human emotions and societal behavior. It’s fascinating how he intertwines something as raw as revenge with a biological phenomenon, showing how both can corrupt and spread uncontrollably. You feel the weight of it in every page. It seems like a perfect fit for a series—so much room to explore the nuances and the ripple effects of these themes.

user_13708

★ 5/5
வன்மம், கொலை வெறி, இரத்த வாடை, பகை, ஆற்றாமை, பயம் என இந்த நாவல் மனித மனங்கள கூறு போட்டு காட்டும் crime நாவல்.. சாமிக்கு ஒரு கருணை இருக்குன்னா, அதே சாமிக்கு கொடூரமும் இருக்கு.. மனுஷ வெறி fungus மாறி, நோய் போல அது பரவி பரவி காவு வாங்கிரும்.. கோவம், ஆற்றாமை, அழுகை இதெல்லாம் எந்த புள்ளியில் கொலையா மாறுது?

user_13707

★ 5/5
Check my review @ https://kalaikoodam.blogspot.com/2024... மிஷ்கின்-கௌதம்மேனன்-வெற்றிமாறன் கூட்டணியில் திட்டமிடப்பட்ட ஒரு தொடருக்கான கதை. அது எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லோராலும் வாசித்து ரசிக்க முடிந்த ஒரு கதை. கோபமும் பகையும் எதற்கும் தேர்வு அல்ல என்று அந்த இரண்டையும் வைத்தே சொல்லப் படும் ஒரு கதை. பகைமையும் ரத்த நெடியும் நிறைந்த ஓர் புதினம்.

user_13706

★ 5/5
wonderful suspense Wonderful suspicious crime scene with logical reasoning hunt with values of humanity and justice. There was lot gap in Judiciary system which facilitate crime and justice.

user_13705

★ 5/5
Almost straight forward and engaging novel.
Shelves
book Jeyamohan

More like this


இந்தியப் பயணம் [India Payanam]

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு…

4.16/5 · 100+ ratings

கொற்றவை [Kotravai]

Author: Jeyamohan

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

4.16/5 · 100+ ratings

ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

Author: Jeyamohan

ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்க…

4.16/5 · 100+ ratings

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

Author: Jeyamohan

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.16/5 · 100+ ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.16/5 · 100+ ratings

உலோகம்

Author: Jeyamohan

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.16/5 · 100+ ratings

குமரித்துறைவி

Author: Jeyamohan

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

4.16/5 · 100+ ratings

உடையாள் [Udaiyal]

Author: Jeyamohan

இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்…

4.16/5 · 100+ ratings

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

Author: Jeyamohan

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்…

4.16/5 · 100+ ratings

காடு [Kaadu]

Author: Jeyamohan

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.16/5 · 100+ ratings

எழுதுக

Author: Jeyamohan

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.16/5 · 100+ ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.16/5 · 100+ ratings