ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜப்பான்: ஒரு கீற்றோவியம்

None

Author: Jeyamohan
4.24/5 · 21 ratings

ஐரோப்பா, அமெரிக்கா போலவே ஜப்பானும் விரிவாக எழுதப்பட்ட நிலம். நான் இளைஞனாக இருந்தபோதே தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’ என்னும் பயணக்கட்டுரையை படித்திருக்கிறேன். அதற்கு அப்பாலும் ஜப்பானைப்பற்றி என்ன சொல்லமுடியும் என்றே தோன்றியது. ஆனால் ஒவ்வொருவரின் அனுபவங்களும் வேறுவேறு. இதில் நம் பார்வைக்குச் சிக்குவதில் ‘கடவுள் அமைத்த’ ஓர் ஒழுங்கு அல்லது தற்செயல் உள்ளது. அது காட்…

Reviews

user_19118

★ 4/5
ஜப்பானின் மீதான ஒரு‌ தீரா மோகத்திற்க்கு, மேற்க்கொண்டு தீனி போட்டது போல் இருந்தது இந்த "ஜப்பான் ஒரு கீற்றோவியம்". ஷிண்டோவையும் பௌத்தத்தையும் பற்றிய என் மேலோட்டமான அறிவுக்கு ஆழ்ந்த சில ஆச்சரிய விளக்கங்களை அளித்திருக்கிறார் ஜெ.மோ.. சீனாவின் கலாச்சார தாக்கம், உலகப் போரின் நீட்சியும் மீட்சியும், சுய ஒழுங்கும் சுத்தமும், சாமுராய் முதல் அனிமே வரை ஊடுருவிய வன்முறை மீதான காதல் என பல தகவல்கள் தருவிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் இலக்கிய வரலாறும், பண்பாட்டு கலையும் தேய்ந்து போய் அமெரிக்கா மற்றும் மேல்நாட்டு கலாச்சாரம் மேலோங்கி இருப்பது, அந்த நாட்டுக்கு நேரடி தொடர்பே இல்லாத என்னையே ஏதோ ஒரு வகையில் கவலை கொள்ள செய்கிறது‌. மிஞ்சிய ஜப்பானை ஜப்பானாக இருக்கும் போதே ஒரு முறை சென்று பார்த்து விட வேண்டும். பயணக் குறிப்புக்களை விரும்பி படிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

user_19117

★ 4/5
ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தை ஒரு சாகசக் குறிப்பாய் மட்டும் தராமல், அந்நாட்டின் ஆழமான சிந்தனைக் களஞ்சியமாக இந்நூலை வழங்கியிருக்கிறார் ஜெயமோகன். ஏழு நாட்களே நீடித்த இந்தப் பயணம், பல ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுக்கான பலனை அளிக்கிறது என்றால் அது மிகையல்ல. பொதுவாக, நாம் ஓர் அயல்நாட்டுக்குச் செல்லும்போது, காட்சிகளைச் சுற்றிப் பார்ப்போம், புகைப்படங்கள் எடுப்போம், உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வோம். ஆனால், ஜெயமோகனின் அணுகுமுறை முற்றிலும் வேறானது. அவர் ஒவ்வொரு இடத்தையும் அதன் வரலாறு, அரசியல், புவியியல் அமைப்பு ஆகிய பின்னணிகளோடு இணைத்துப் பார்க்கிறார். அவர் கண்ட சிறு பகுதியைக் கொண்டே ஜப்பானின் முழுச் சித்திரத்தையும் ஒரு கீற்றோவியமாக வரைந்து காட்டுகிறார். ஒரு நாட்டின் நிலவியல் அமைப்பு எவ்வாறு அதன் ஆட்சியையும், அரசின் புரிதல் எவ்வாறு அதன் குடிமக்களின் பழக்கவழக்கங்களையும் வடிவமைக்கிறது என்பதை அவர் விளக்கும் பாங்கு வியப்பிற்குரியது. இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையை ஒரு குறுகிய பயணத்தில் ஒருவரால் நிகழ்த்த முடிவது என்பது உண்மையிலேயே ஆச்சரியத்தைத் தருகிறது. ஜப்பானைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நுண்ணிய கவனிப்பு மற்றும் சிந்தனைத் திறன் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டி. இது வெறும் பயண நூல் அல்ல; ஜப்பானின் ஆன்மாவைப் பதிவு செய்த ஓர் அரிய ஆவணம்.

user_19116

★ 4/5
Direct pass to japan✨️✨️bliss full... 15th part la.. Family ah pathi solliruparu... Do read carefully ❤

user_19115

★ 5/5
புத்தகம் : ஜப்பான் ஒரு கீற்றோவியம் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : கிழக்குப் பதிப்பகம் பக்கங்கள் : 151 நூலங்காடி : Flipkart 🔆“யானை டாக்டர் “ புத்தகத்தின் மூலமாக எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின . அதன் பின்னர் அவரின் “ அறம் “ படித்தேன். இன்னமும் அந்த தாக்கத்தில் இருந்து மீள முடியவில்லை . “ஜப்பான் – ஒரு கீற்றோவியம் , அவரது வரிகளில் வந்த பயணக் கட்டுரைகளின் தொகுப்பு . 🔆ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது நமக்கு தெரியும். அங்குள்ள மக்கள் எவ்வளவு ஒழுக்கமானவர்கள் என்பது கட்டுரைகள் மற்றும் திரைப்படங்களின் வாயிலாக நாம் அறிந்ததே. 🔆டோக்கியோ நகருக்கு முன்னோடியாக இருந்தது மூன்று நகரங்கள் கியோட்டோ , நாரா மற்றும் காமகுரா. இந்நகரங்களில் உள்ள ஜென் ஆலயங்களையும் புத்த ஆலயங்களையும் கண்ட அனுபவத்தைக் கூறியிருக்கிறார் . 🔆இந்த ஆலயங்களில் உள்ள தோட்டங்கள் மட்டும் இல்லாது , பொதுவாகவே ஜப்பான் மக்களுக்கு செடிகள் மற்றும் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம் . இதையே ஒரு தியானமாக அவர்கள் செய்வதுண்டு . 🔆ஜப்பான் என்றவுடன் நினைவுக்கு வரும் மற்றொரு விடயம் - ஹிரோஷிமா நாகசாகி தாக்குதல் . அந்த மக்கள் , அந்த பெரும் தாக்குதலை எதிர்க்கொண்டு எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தனர் என்பதைக் குறித்து பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வெளியாகியுள்ளன. 🔆ஜப்பானின் தேநீர் விருந்து என்பது ஒரு பிரார்த்தனை சடங்கும் கூட . நான் நேரடியாக ஜப்பானை எப்போ காண்பேன் என்று தெரியவில்லை . அவரின் எழுத்துகளின் உதவியால் மனக்கண்ணால் பார்த்து விட்டேன் . 🔆பயணம் சார்ந்த நூல்களை படிக்க விரும்புவோர் , வாசிக்க வேண்டிய புத்தகம் . புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி Subasreenee Muthupandi Happy reading

user_19114

★ 4/5
ஜெ வின் பயணக்குறிப்புகள் அனைத்துமே பெரும் தகவல் புதையல்கள். என்னதான் wiki பார்த்து தெரிந்துகொண்டாலும்வெப்படி ஒரு நிலத்தை அணுகுவது, எப்படி தயார்படுத்திக்கொள்வது, என்னென்ன விசயங்கள் அதில் முக்கியம் என்று ஒரு பெரும் சித்திரத்தை அளிப்பவை. இவரின் கதைகளைப்போலவே இவரின் பயணக்கட்டுரைகளும் வாசகனக்கு வெற்று படிப்பைத்தாண்டி ஒரு நிறைவை அளிக்கும். ஐரோப்பாவைப்பற்றி எழுதாமல் விட்டது பெரும் குறைதான்.
Shelves
book Jeyamohan

More like this


எழுதுக

Author: Jeyamohan

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.24/5 · 21 ratings

இரவு

Author: Jeyamohan

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.24/5 · 21 ratings

காடு [Kaadu]

Author: Jeyamohan

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…

4.24/5 · 21 ratings

இலக்கியத்தின் நுழைவாயிலில் [Ilakkiyathin Nuzhaivaayilil]

Author: Jeyamohan

இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொ…

4.24/5 · 21 ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

4.24/5 · 21 ratings

வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்

Author: Jeyamohan

மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…

4.24/5 · 21 ratings

ஊமைச்செந்நாய்

Author: Jeyamohan

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகி…

4.24/5 · 21 ratings

பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

Author: Jeyamohan

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.24/5 · 21 ratings

வெண்கடல்

Author: Jeyamohan

உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கு…

4.24/5 · 21 ratings

உலோகம்

Author: Jeyamohan

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…

4.24/5 · 21 ratings