காடு [Kaadu]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காடு [Kaadu]

None

Author: Jeyamohan
4.23/5 · 700+ ratings

அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்…

Reviews

user_6041

★ 5/5
காடு- ஓர் இலக்கிய அனுபவம்!

user_6040

★ 5/5
Thought it's going to be boring after first few pages....but I was wrong. It's a book that is going to stay in my memory for a long time. An experience that us city dwellers can never comprehend. Giri was blessed to have had the forest....neeli ...kuttappan

user_6039

★ 4/5
It's a classic novel , the characters Giri, Kuttapaan , Neeli arc is awesome . There is a lot good scenes , the first meet of Giri and neeli and giri's Frist time exploring forest and last tike visiting forest . And ending he come know that Love and Lust travels in diffrent route

user_6038

★ 4/5
நீலியை ஒரு மனுஷியாக என்னால் பார்க்க முடியவில்லை. நீலியையும் காடாகவே பார்க்கிறேன். நீலியின் மீது கிரி கொண்ட காதல் காட்டின் மீது ஏற்பட்டதன் இன்னொரு வெளிப்பாடாகவே பார்கிறேன். நீலியையும் காட்டையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை. இறுதியில் மனித உணர்ச்சிகளின் புரிந்துகொள்ள முடியாத் தன்மையை புதிர்போல சொல்லி முடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

user_6037

★ 5/5
“காடு” - ஆன்மாவைக் கிழிக்கும் ஒரு நாவல். உள்ளத்தை பிடித்து மறைந்துபோன மனிதத்தை கடத்திச் செல்லும் ஒரு சக்தி. ஜெயமோகன் காடைப் பற்றி எழுதவில்லை, காடே நம் முன் வந்து நிற்கிறது. அதன் நிசப்தம்,அதன் கொடுமை,அதன் சுத்தமான அன்பு என எதையும் அலங்கரித்து மிகைப்படுத்தாமல், நம் உள்ளத்தில் அச்சமூட்டும் அழகாய் பதிகிறது. பாத்திரங்கள் பேசுவதில்லை, அவைகளின் காயங்கள் தான் கதையைச் சொல்கின்றன. இந்த நாவல் காட்டைப் பற்றி அல்ல, காடாகிவிட்ட மனித இதயத்தைப் பற்றி. படித்துவிட்டால், சில புத்தகங்கள் மறந்து விடும். ஆனால் சில, ஒரு நிழலாய் ஒரு வாழ்நாளே தங்கும். நீலி, வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள் ! ♥️

user_6036

★ 4/5
இலக்கிய சுவை தளும்ப தளும்ப உங்கள் முன் இருக்கும் நூறு ஆண்டு பழமையான ஒயின் பாட்டில் இந்த நாவல். ஒரே மடக்காக குடித்து மட்டையாவதும், ருசித்து ருசித்து குடித்து இலக்கிய போதை ஏற்றிக்கொள்வதும் உங்கள் ரசனையை பொறுத்து இருக்கிறது. தன்னுடைய மூர்க்கத்தனமான காதல் நிச்சயம் தோல்வியில்தான் முடியும் என்று கிரிதரன் ஒருமுறை யோசிப்பான். ச்சே எவ்வளவு உண்மையான வலி நிறைந்த வார்த்தைகள். நாவலில் சுவாரஸ்யம் இல்லாத மனிதர்கள் என்று யாரும் இல்லை. குரிசு, சினேகம்மை, குட்டப்பன், ரெசாலம், அய்யர் மேரி, பாதிரி, இரட்டையர்கள் இன்னும் பிறர். ஒவ்வொருவருக்கும் தனெக்கென ஒரு சித்தாந்தத்துடன் உலாவுகின்றனர். கீறகாதனின் தலையை பாடம் செய்து ஹாலில் மாட்டியிருப்பதை பார்த்ததும் "வாட் த ஃபக்" என வருகிறது. இறந்து போன நீலியைத்தேடி இங்கும் அங்கும் அலையும் கிரிதரனை பார்த்து மனம் கனத்து விம்மி விம்மி அழுது முடிவில் "நீங்க குத்துங்க ஏமான் குத்துங்க" என்று கண்ணீரை துடைத்தபடி புத்தகத்தை மூடிவைக்க தோன்றும்.

user_6035

★ 5/5
கிரிதரனுடன் சேர்ந்து சில காலம் காட்டில் வாழ்ந்த உணர்வை நமக்கு கடத்துகிறது 'காடு' நாவல். அதுவரை ஊரில் வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு முதல் முறையாக காடு தரும் தனிமையும் அனுபவமும் காதலும் அவர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறையுமே நாவலின் பிரதான களம். அதன் பிறகான அவன் வாழ்க்கையும் இடையிடையே முன்னும்பின்னுமாக விரிகிறது. கிரி எங்கே சென்றாலும் எதைப் பார்த்தாலும் யாருடன் பேசினாலும் என்ன சிந்தித்தாலும் நாமும் அவனுடன் அதே அனுபவத்தை பெறுகிறோம். அபாரமான எழுத்துநடை . மிக மிக நுணுக்கமான, விரிவான அதே சமயம் சிறிதும் அலுப்புத்தட்டாத விவரிப்புகள். அந்த விவரிப்புகளின் காரணமாகத்தான் கிரியின் அனுபவம் நமக்கும்.. கதாநாயகனை விட குட்டப்பன், குரிசு, ரெசாலம் அய்யர் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்... ஆரம்பத்தில் சிரிக்க வைக்கும் குட்டப்பன் போகப்போக தன்னுடைய அறிவாற்றலால் ஆச்சரியப்பட வைக்கிறான் .. நாவலின் மற்றொரு சிறப்பு பல காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் முன்னும் பின்னுமாக மிக இயல்பாக சொல்லப்பட்டு முழுமை பெறுவது. நல்லதொரு அனுபவத்தை தரும் மிக அற்புதமான நாவல்.

user_6034

★ 5/5
ஜெயமோகனின் ‘காடு’ என்னும் புதினம் வெறும் வாசிப்பு அனுபவமாக மட்டுமின்றி, ஒரு ஆத்மார்த்தமான பயணமாகவும், மனதை உருக்கி உணர்வுகளைத் தட்டி எழுப்பும் மாற்றமாகவும் அமைந்துவிட்டது. இந்த நாவல் என்னை ஒரு காட்டுப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நினைத்து ஆரம்பித்தேன். ஆனால், அது என் எதிர்பார்ப்புகளைத் தாண்டி, இயற்கையின் ஆழமான தொடுதலையும், மனித வாழ்வின் நுட்பமான உணர்வுகளையும் உணர வைத்து, மனதைப் பிணைத்த ஒரு மாய அனுபவமாக மாறியது. கிரியின் பயணம் - நினைவுகளின் கவிதை நாவலின் மையப் பாத்திரமான கிரியின் வாழ்க்கைப் பயணம், நேர்க்கோட்டில் பயணிக்காமல், கனவுகளின் மெல்லிய திரை வழியே, நினைவுகளின் துண்டுகளாகவும், சுயநினைவின் அலைவுகளாகவும் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தப் பயணம் ஒரு திரைப்படத்தின் காட்சி அனுபவத்தைப் போலவே யதார்த்தமாக உள்ளது. ஆனால், எந்த இடத்திலும் குழப்பம் தோன்றவில்லை; மாறாக, கிரியின் அடுத்த கட்ட வாழ்க்கை என்னவாக இருக்கும் என்ற ஆவல் மனதை ஆட்கொள்கிறது. ஜெயமோகன், கிரியின் உள் உலகத்தை நுட்பமாகவும், தெளிவாகவும் விவரித்து, வாசகரை அவருடன் ஒரு உணர்வுப் பயணத்தில் இணைத்து விடுகிறார். குட்டப்பன் - இயற்கையின் குரல் குட்டப்பன் என்னும் கதாபாத்திரம் என் மனதில் ஆழமாகப் பதிந்தவன். அவனது இயற்கையோடு இணைந்த பார்வை, வாழ்க்கையை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அப்படியே ஏற்று அனுபவிக்கும் தன்மை, அவனது உரையாடல்கள் அனைத்தும் என் இதயத்தைத் தொட்டு, ஆன்மாவை அசைத்தன. அவன் பேசும் ஒவ்வொரு சொல்லும், மரங்களின் நறுமணம், மழையின் ஈரம், காட்டின் மூச்சு ஆகியவற்றுடன் கலந்து, நம்மை இயற்கையின் அணைப்புக்குள் அழைத்துச் செல்கிறது. குட்டப்பன் ஒரு பாத்திரம் மட்டுமல்ல; அவன் இயற்கையின் ஒரு குரல், வாழ்க்கையின் தூய்மையான வெளிப்பாடு. இந்த நாவலில் காடு வெறும் பின்னணியல்ல; அது ஒரு உயிர்ப்புள்ள, பேசும் பாத்திரம். காட்டுக்குள் நுழைவது, நாம் அதன் இருப்பை உணர்வது, மனித வாழ்வில் இயற்கையின் தாக்கம் எவ்வாறு ஆழமாகப் பதிகிறது என்பதை ஜெயமோகன் மிக நுணுக்கமாக, கவித்துவமாகத் தைத்திருக்கிறார். காட்டின் ஒவ்வொரு இலை, ஒவ்வொரு ஒலி, ஒவ்வொரு மணம்—இவை அனைத்தும் நாவலில் உயிரோட்டமாக வெளிப்படுகின்றன. இயற்கையும் மனிதர்களும் ஒருவரையொருவர் பிரதிபலிக்கும் விதம், இந்த நாவலின் தனித்துவமான அழகு. நீலி என்னும் பாத்திரம், அவளது “ஓ!” என்று ஒலிக்கும் குரல், கிரியுடனான உறவில் வெளிப்படும் காதல், காமம் இவை அனைத்தும் மிக இயல்பாகவும், நேர்த்தியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு செயற்கையான சுத்திகரிப்பும் இன்றி, வாழ்க்கையின் உண்மையான பாகமாகவே அவை நிகழ்கின்றன. குட்டப்பன் விவரிக்கும் ஒரு தொன்மக் கதையான நீலியின் கதை, என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அது வெறும் கதை அல்ல; அது ஒரு உணர்வின் பரிணாமம், ஒரு திகிலின் அழுத்தம், ஒரு மனதைத் திருத்தும் தருணம். அந்தக் காட்சி என் நினைவில் நிரந்தரமாக இடம்பெற்றுவிட்டது. ‘காடு’ என்பது வெறும் நூல் அல்ல; அது ஒரு காட்டுக்குள் நுழையும் கதவு. அந்தக் கதவைத் தாண்டி, நாம் இயற்கையை மட்டுமின்றி நம்மையே ஆழமாகக் காணும் வாய்ப்பை இந்த நாவல் வழங்குகிறது. ஒவ்வொரு வாசகரும் காட்டின் வாசலில் நின்று, அதன் உயிர்ப்பை உணர்ந்து, அந்த உலகில் சில கணங்கள் வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தை இந்தப் புத்தகம் தருகிறது. ‘காடு’ வாசிக்கப்பட வேண்டிய நூல் மட்டுமின்றி அனுபவிக்கப்பட வேண்டிய ஒரு கலைப் படைப்பு. ஜெயமோகனின் மொழி, காட்டின் மணத்தையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் ஒருசேர நமக்கு உணர்த்துகிறது. இந்த நாவல், ஒரு காட்டுப் பயணத்திற்கு அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல் நம்மை நாமே கண்டடையும் ஒரு ஆன்மீக அனுபவமாகவும் மாறுகிறது. இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள்; காடு உங்களை அழைக்கிறது!

user_6033

★ 5/5
காடு!

user_6032

★ 5/5
Amazing Really amazing writing, initial language. Understanding is different but amazing , but conclusion of story may add some more points

user_6031

★ 3/5
i want read

user_6030

★ 3/5
Beautiful at some parts and extremely irritating at others. Nevertheless, it's an exemplary literary achievement and one of the few 'complete' novels in Tamil. Requires some patience but is rewarding for sure.

user_6029

★ 4/5
காடு - சிறிய சொல். பெரிய நூல். காட்டின் ஊடே நம்மளை இழுத்து செல்கிறது புத்தகம். நான்கு மாதங்கள் ஆகிவிட்டது படித்து முடிப்பதற்கு. ஓரோர் சமயங்களில் கிரிதரனாக, குட்டப்பனாக, எஞ்சினியர் அய்யராக, நீலியாக என்று பல பாத்திரங்கள் வழியாக நாமும் காட்டுக்குள் வாழும் உணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் பல இடங்களில் மொழி புரியவில்லை. சற்றே சவாலாக இருக்கிறது.

user_6028

★ 5/5
"காடு"..நாம் வாசிக்கும் புத்தகங்களில் ஒரு சில, நம் தூக்கத்தை பதம் பார்த்து விடும் ஆற்றல் கொண்டிருக்கும்..நான் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த நாவல் "காடு" என்று சொல்லலாம்...காரிருள் சூழ்ந்த அடர்ந்த காட்டின் அழகு இரவிலும், மழையிலும், பெருவெள்ளத்திலும் எப்படி பன்முகங்கள் கொண்ட வனயக்ஷியாக தாண்டவமாடும் என்பது காட்டின் மீது தீரா மோகம் கொண்ட ஒருவரால் தான் உருவகம் கொடுத்து ரசிக்க முடியும்...காடு சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, மனித உறவுகளின் மத்தியில் இயங்கும் மௌன உணர்வுகள், காதல், காமம், கடந்த கால நினைவுகளின் வலி, யானையின் கர��� உடல், பலாமரம், மிளா மான், மலை தேன் என இந்த புத்தகம் நம்மை குறிஞ்சி, முல்லை திணைகளின் ஊடாக சங்க இலக்கியத்தின் சாராம்சத்தை உடன் இணைத்துக்கொண்டு பயணிக்கிறது..."காடு" உங்கள் நித்திரையின் பெரும்பகுதியை திருடிக்கொள்ளும்..அந்த உறக்கம் துலைத்த இரவுகளின் அழகிய பாரத்தை கொஞ்சம் சுமந்து தான் பாருங்களேன்.

user_6027

★ 5/5
வாழ்வில் என்றும் மறக்கவே முடியாத நினைவுகளை தந்து செல்வதுதான் முதல் காதல். அது கிரிதரனுக்கு காட்டில் நிகழ்கிறது அவன் நீலி என்ற மலையத்தியுடன் (மலை ஜாதிப்பெண்) கொண்ட காதலால் காட்டை அறிகிறான். அதன் மூலம் அவன் கண்டடையும் அனுபவங்களே "காடு" சில நேரங்களில் கதையின் நாயகன் கிரிதரனா அல்லது குட்டப்பனா என சந்தேகம் எழுகிறது. கதையில் சில மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் உண்டு அய்யர், மேஸ்திரி ரெசாலம், அவரின் குட்டி தேவாங்கு,சினேகம்மை,கீரக்காதன் எனும் யானை,கதையின் ஆரம்பத்தில் வரும் அந்த மிளா(ஒரு வகை மான்), இரட்டையர்கள்,காஞ்சிர மரத்து யட்சி,குரிசு அவரது பைபிள். காட்டில் கம்பீரமாக நடமாடிக்கொண்டிருந்த கீரக்காதனை பின்னாளில் ஒரு காண்ட்ராக்டர் வீட்டு வரவேற்பறையில் பாடம் செய்து மாட்டியிருக்கும் ஒரு காட்சி போதும் காட்டின் அழிவை நம் கண்முன்னே காண்பதற்கு. நீலிக்கும், கிரிதரனுக்கும் இடையேயான காதலை நம் அனைவராலும் உணர முடியும் அதுவே ஜெ.மோ வின் எழுத்துக்கு உண்டான வீரியம்.

user_6026

★ 5/5
இந்தக் காட்டை வணங்காமல் எந்த ஒரு தமிழ் இலக்கிய வாசகனின் தேடலும் முழுமை அடையாது.

user_6025

★ 5/5
காடும் காடு சார்ந்த இடமும் -குறிஞ்சி மனமும் மனம் சார்ந்த இடமும் -காடு!! மனிதனை மனிதனாக சற்று தொலைவில் இருந்து அறிந்தவர் எவரேனும் உண்டா ?புத்தக முடிவில் பதிலாக அறிய முடியாத நிறைந்த மௌனங்கள் -காடு

user_6024

★ 5/5
காதலும், காடும், காமமும் எவ்வளவு ஆழம் என்பதை அழகாக சொல்கிறார் ஜெயமோகன்....

user_6023

★ 5/5
Forest is one such book which kindles our childhood memories with the mother nature. The author symbolically portrayed the pessimistic approach of human society towards nature especially forest.... The protagonist Giri who juxtaposed himself between his urban life and rural love.. The illustration of kondrai flower, ayani tree made not only to read the lines but made me to inhale in between... Author wondered elephant and mila which bound ourselves with this novel for its reliability.... Throughout the novel I empathized Giri, the protagonist, which is the success of the Novel..

user_6022

★ 5/5
காடு - ஜெயமோகன் குட்டப்பன் செய்நேர்த்தி மன்னன். அவன் எது செய்தாலும் அது அத்தனை நேர்த்தியாக அமைகிறது. சமையல் செய்தாலும், பீடி பற்ற வைத்தாலும், வெறிகொண்ட மிருகத்தை மனிதர்களை பணிய வைத்தாலும், ஏன் காலில் இருக்கும் நகத்தைச் சுத்தம் செய்தாலும் கூட அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதுதான் குட்டப்பன். நீலியைக் காணாது தவிக்கும் போது குட்டப்பன் கூறும் ஆறுதலும், படியளக்கும் முதலாளி என்றபோதிலும் கிரியின் மீது கைவைப்பது பிடிக்காது திருப்பி அடிக்கும் போதிலும் சரி, சினேகம்மையைப் புணரும் நிர்வாணத்திலும் சரி குட்டப்பன் ஒரு தெரிந்த நீரோடையாகவே இருக்கிறான். குட்டபனுக்கும் குரிசுவிற்கும் இடையே வரும் வாய்த்தகறாறுகளை ஜெயமோகன் மிகவும் ரசித்து எழுதியிருப்பார் என நினைக்கிறன். குட்டப்பனே ரசனையின் உச்சம் தான். அதன்பின்தான் நீலியும் மற்றவர்களும்.

user_6021

★ 4/5
Check out my Detailed review in Tamil -> https://kalaikoodam.blogspot.com/2021... கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு புதினம். இயற்க்கையை அதனுடைய அழகை எந்த விதத்திலும் குறையாமல் துல்லியமாக தீட்டப்பட்டிருக்கும் ஒரு புதினம். கதை அடிக்கட்டி வரும் ஒரு சொல் 'காடுக்க விளி'. அதாவது காட்டில் இருந்து பழகி சிலருக்கு காட்டை விட்டு விலக முடியாத ஒரு பிணைப்பு ஏற்பட்டுகிறது. எனக்கும் அதே 'காட்டுக்கு விளி' கிடைக்கத்தான் செய்தது இப்புதினத்தின் வாயிலாக.

user_6020

★ 4/5
நாம் படிக்கும் மனநிலையும் தாண்டி ஒரு நாவெல் நம்மை இட்டு செல்கிறது , அதில் காடு அது விரியும் தளமும் , பசுமை நிறைந்த உலகம் , காடு ஒரு மொரடுதனமான சுகம் , காடுடன் காதலும் காமமும் கவிதையும் சேர்ந்து நம்மை ஒரு வழியாக்கிவிடும் . காடு கொந்தளிக்கும் , மனமும் கொந்தளிக்கும் , புராதன மனிதன் நம்முள் இன்னமும் இருக்கிறான் , அவன் காட்டுவாசி , அவனால் மட்டுமே காட்டை ரசிக்கமுடியும் , இந்த நாவல் நம்மில் மறைந்து கிடக்கும் அந்த கட்டுவாசிக்காக. கொந்தளிப்பு ஏற்படுத்திய நாவெல் .

user_6019

★ 5/5
கதை நாயகன் கிரிதரன் கண்களின் வழியாக விரியும் கதை. காடு அவனுக்கு இணையான கதாபாத்திரம். ஒரு வகையில் காடு உருவகம். காதல், காமம், யதார்த்தம் - இப்படி பல கோணங்களில் கதையை நோக்கினாலும், உண்மையில் இது மனிதனின் கண்ணீர் கதை. சினிமாவை போல வெறும் நிகழ்வுகளின் அவலம் அல்ல. யதார்த்த கட்டாயங்களினால் எடுக்கப்படும் கோழைத்தனமான முடிவுகள் வாழ்க்கையையே புரட்டி போட்டு அசிங்கப்படுத்தும் அடிப்படை அவலம். கள்ளம் கபடமற்ற இயற்கையின் ஓங்கார உச்சம் காடு. இயற்கை தெய்வங்கள். மாசற்ற மலையன்மார்கள். காட்டை சார்ந்து இருக்கும் சாதாரண மனிதர்கள் அதை அனுசரித்து கொண்டாடி வாழ்பவர்கள். காட்டின் அழகை ரசிக்க நாட்டு மனிதர்களுக்கு கவிதையும் பாட்டும் துணை. அந்த இயற்கை அழகை, மன நல்லியல்புகளை சின்னாபின்னமாக்கும் மனித சிறுமைத்தனங்கள். கிரிதரன் வாழ்க்கையை கட்டமைப்பவர்கள் பெண்கள். தான் இறக்கும் வரையில் அவன் சார்பில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் பண பசி மிக்க அம்மா. கண்மூடித்தனமான அன்பு பின்னர் வெறுப்பாக மாறி தற்கொலை வரை செல்லும் குணம் கொண்ட அழகற்ற மனைவி வேணி. பதினைந்தே நாட்கள் பழகியிருந்தாலும் வாழ்நாள் முழுக்க பரவச த��க்கத்தை ஏற்படுத்தும் அழகான மலைப்பெண் நீலி. முன்னும் பின்னும் கதையை நகர்த்தும் உத்தியில் ஜெமோ நம்மை வசப்படுத்துகிறார். வழக்கு நடை எழுத்து நம்மை கதைக்குள் அழைத்துச் செல்கிறது. டாக்டர் துரை, கன்னிகாஸ்திரி மேரி, வேலையாட்கள் ஸ்னேகம்மை, ராபி, ஆபேல், குரிசு முதலிய சிறிய கதாபாத்திரங்கள் ஆனாலும் சரி, கிரி, மாமா, குட்டப்பன், ரெசாலம், ஐயர் போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் ஆனாலும் சரி, ஜெமோ ஒவ்வொருவரையும் சிற்பி போல செதுக்கி இருக்கிறார். மிளாவும், கீறக்காதனும், தேவாங்கும் மனிதர்களுக்கு இணையான வருடல்கள். கடைசி ஐந்து அத்தியாயங்களின் திருப்பங்கள் நமக்கு பிரமிப்பூட்டுகின்றன. கதையில் சில இடங்கள் காட்டின் யானைகள் போல கம்பீரமாக நிற்கின்றன. மிஷன் ஆசுபத்திரி விஷ ஜுர தீவிரத்தில் தத்தளிக்கும் போது குட்டப்பனின் தைரியமும் உச்சகட்ட மனிதாபிமானமும் கிரிதரனின் கோழை மனதை வெளிப்படுத்துகிறது, அவனுக்கு சிறிது வெளிச்சமும் அளிக்கிறது. பாவகாரராக கதை முழுக்க சித்தரிக்கப்படும் மாமாவின் முன் கதை குன்றேறிய பெருமாள் நாடார் மூலம் வெளிப்படுவது நெகிழ்ச்சி. ஐயர் எடுக்கும் நேர்மையான வாழ்க்கை முடிவு, அதற்கு மாறான கிரிதரனின் கட்டாய முடிவுகள், அவர்கள் மலையில் சந்திக்கும் சமயம் செய்யும் உரையாடல் இவை முத்தாய்ப்பு. அநேகமாக எல்லா கதைகளும் நம்மை ஆட்கொள்கின்றன. ஆனால் சில கதைகளே நெஞ்சை ஊடுருவுகின்றன, பிசைகின்றன, நம் ஞாபகங்களின் நிழலாகின்றன. காடு இந்த சிலவற்றில் முக்கியமானது.

user_6018

★ 2/5
Choosing this after Ponniyin Selvan was a mistake I shouldn't have done i guess.. The central theme didn't appeal to me. I expected a description of nature and power of forest. Though it was thr It was basically abt human relationships, infidelity, abusive words and incomprehensible dialect. I am nt the target audience for this and I don't have d maturity for this book i guess. The story of a selfish loser is not what I want to read to improve my self confidence and motivation..

user_6017

★ 4/5
ஜெயமோகன் அறிமுகப்படுத்திய காட்டில் என் பயணம் கிரியுடன் துவங்கியது. காட்டின் உள்ளே செல்ல செல்ல மகிழ்ச்சியாகவும் குதுாகலமாகவும் இருந்தது. காட்டைப் பற்றியும் அங்கு வசிக்கும் பல மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது இப்பயணம். காடு அனைவருக்குமானது, அதை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது என்பதை உணர்த்தியது. காட்டின் பயணம் நிறைவு செய்து வெளியேறும் தருணத்தில் எல்லாம் மனம் கனத்ததாக உணர்கிறேன். அது ஜெயமோகன் அறிமுகம் செய்த காடாக இருந்தாலும் சரி, நக்கீரன் காண்பித்த காடாக இருந்தாலும் சரி. காட்டினுள் மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசை, வெறும் பார்வையாளராக அல்ல ஓர் காடோடியாக மாற்றம் பெற.💚

user_6016

★ 5/5
Mind blowing,more than a story a fiction this book transfers you a feel of jungle "kaadu" love, & lust. Will drag you entirely to the plot, I near went mad while reading this one. A must read for a tamilan.

user_6015

★ 4/5
காடும், நீலியும் என்னை ஆட்கொண்டனர். வாழ்வில் முதல் முறை வரும் பெருங்கணம்.. அப்பெருங்கணத்தின், வற்றாத நினைவுகளின் பேரனுபவம் காடு. மனிதர்களும், விலங்குகளும், தெய்வங்களும் பெருங்காமமும், கூடலும் கூடல் நிமித்தமுமாய் கொண்டாடித் தீர்க்கும் வரனுறல் அறியாச் சோலை - குறிஞ்சி.. நீலி - உண்மையில் அவள் அணங்கு டே...❤️

user_6014

★ 5/5
'காடு' - தற்செயலாக படித்து, அதன் ஆழத்தால் அதிர்ந்து போய், மனதில் ஒரு வடுவாக படிந்துவிட்ட புத்தகம். ஜெயமோகன் 'காட்டை' கதையாக கொண்டு செல்லவில்லை... வாழ்வின் நேரடி வர்ணனையாகவே கொடுத்துள்ளார். கதையில் வரும் மக்களின் இயல்பு மொழியிலும், சம்பவங்களிலும், இடங்களின் சித்தரிப்புகளிலும் பலகாலமாக என்னை யாரும் ஒன்றியிருக்க வைக்கவில்லை, ஆனால் ஜெயமோகன் அதற்கு விதிவிலக்கு. காட்டின் விவரிப்பை இந்த அளவிற்கு வேறு யாரும் சிறப்பாக செய்யவில்லை என்பது என் கருத்து. காட்டை விவரிக்கும் போது என்னை அங்கேயே கட்டிப்போட்டு, நகரத்தை விவரிக்கும் போது அங்கிருந்து எப்பொழுது வெளியில் செல்வோம் என்றாக்கி, முதல் பகுதியிலேயே ஏறத்தாழ என்னை விடுமுறை முடிந்து வேண்டாவெறுப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தையை போலாக்கிவிட்டார். காதலும், காமமும் இயல்பாகவே இருந்தாலும் ஒவ்வொரு கணமும் நீலியின் வரவை கிரிதரனை விட நான் எதிர்பார்த்தேன் என்பதே உண்மை. அந்த மிளாவும், கீரக்காதணும், தேவாங்கும் கூட என்னுடன் பலநாட்கள் பழகிய நண்பர்களை போலவே எண்ண வேண்டியுள்ளது. உண்மையை சொன்னால், குறைந்த வாசிப்பு பழக்கமே உள்ள என்னை 'பொன்னியின் செல்வன்'னில் கல்கிக்கு பிறகு தூங்க விடாமல் செய்த ஒரே புத்தகம் இது. - நீலிக்கு சமர்ப்பணம்.

user_6013

★ 5/5
காடு, தமிழிலக்கிய உலகின் ஒரு பிரம்மாண்டமான படைப்பு. ஒரு எழுத்தாளனால் எப்படி இதுபோன்ற படைப்புகளைத் தொடர்ந்து படைக்க முடிகிறது என்பதில் பிரமிப்பாகவுள்ளது. வாசிக்கும் போதும், முடிவிலும் நகரவாசியான எனக்கு ஓரிரு வாரங்கள் தனித்துக் காட்டில் விடப்பட்டது போன்றதொரு நிலையே இருந்தது. சிந்தனையை ஈர்த்து, முடிவற்ற நிலை நீள்கிறது. காடு இயற்கை. காடு அழகின் உறைவிடம். காடு தெய்வங்கள் மனிதர்களுடன் வாழுமிடம். காடு உள்மனதின் ஓர் ஒப்பு. நாட்டார் வழக்காடல், கபிலரின் வரிகள், சங்க இலக்கியப் பாடல்கள், காதல், காமம், அந்தரங்கம், குறிஞ்சித் திணை என்று இலக்கியம், வாழ்வியல் சார்ந்த தளங்களைக் கடத்திச் செல்கிறது இந்நாவல். முன்னுரையில் எம். வேதசகாயகுமார் அவர்கள் குறிப்பிட்டது போன்று, ஜெமோவின் படைப்புமொழி ஓர் எல்லையில் கவிதையின் செறிவை எட்டிவிடும்போது மற்றொரு எல்லையில் மிகவும் நெகிழ்வு கொண்டதாகவும் உள்ளது. நாவலின் கருவையடுத்து மிக முக்கியமானதாகக் கருதப்படுவது அதன் மொழிநடை. ஒரு பகுதி அல்லது இனக்குழு சார்ந்த படைப்புகளில் அவ்வினத்தாரின் இயல்பு மொழியின் வழக்காடல், நாவலின் செறிவைக் கூட்டி இயல்பு மாறாமல் இருக்க இன்றியமையாததாகிறது. அதற்கு நாட்டார் மரபுக்கூறுகள் மிகவும் அவசியம், அது ஜெமோவின் படைப்புகளில் இயல்பாகவே அமைந்துவிடுவது. இப்புத்தகத்தைப் பற்றிய எனது கருத்துகளை ஓரிரு பக்கத்தில் நிறைத்துவிட முடியுமென்று தோன்றவில்லை. ஒரு பெருஞ்சுழலில் சிக்கி, அதில் கரைந்தது போன்றதொரு உணர்வு. உள்வாங்கிய பொருளை அசைபோட்டு மெல்ல மெல்லப் பதிவிட எண்ணியுள்ளேன். தொடர்ந்து கதைப்போம்.

user_6012

★ 4/5
காடு ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் நாவல். அதை ஒரு வார இறுதியிலோ, தொடர் விடுமுறையிலோ அதிலேயே தோய்ந்து படிப்பதே நன்றாக இருக்கும். விட்டு விட்டு படிக்கக் கூடிய புத்தகம் அல்ல. நிஜமாகவே காட்டுக்குள் நுழைந்து வந்த அனுபவத்தைக் கொடுக்கும் அருமையான நாவல்.
Shelves
Nature Fiction Novels book Jeyamohan

More like this


சங்கச் சித்திரங்கள் [Sanga Chithirangal]

Author: Jeyamohan

சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி ய…

4.23/5 · 700+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

This story captures the complexities experienced by a society in transition. The integral connection between the tamarind tree (protagonist of the…

4.23/5 · 700+ ratings

ஆலம் [Aalam]

Author: Jeyamohan

ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேன…

4.23/5 · 700+ ratings

ஆயிரம் ஊற்றுகள் [Aayiram Utrugal]

Author: Jeyamohan

இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும்…

4.23/5 · 700+ ratings

கொற்றவை [Kotravai]

Author: Jeyamohan

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

4.23/5 · 700+ ratings

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

Author: Jeyamohan

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்…

4.23/5 · 700+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.23/5 · 700+ ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

4.23/5 · 700+ ratings

வெண்முரசு – 03 – நூல் மூன்று – வண்ணக்கடல்

Author: Jeyamohan

வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்…

4.23/5 · 700+ ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.23/5 · 700+ ratings

இரவு

Author: Jeyamohan

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…

4.23/5 · 700+ ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

4.23/5 · 700+ ratings