இரவு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இரவு

None

Author: Jeyamohan
4.05/5 · 300+ ratings

இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது.

பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட ப…

Reviews

user_9117

Mesmerizing!

user_9116

★ 2/5
The story started well . The curiosity he created gives a lot of expectation, but it failed to satisfy that.

user_9115

★ 3/5
a good starter into jeyamohan books

user_9114

★ 5/5
இரவு மனிதனின் இன்னொரு வகையான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது

user_9113

★ 4/5
இரவின் வர்ணனை.. இரவோடு உலாவ தூண்டும்.. ஆம் மனிதன் இரவில் இளகித்தான் போகிறான்.. ஆழ் மனதின் ஏக்கங்கள் செயல்களாக வெளிப்படும் ஒரு அழகிய கால நிலை இரவு..

user_9112

★ 5/5
இரவு மிதான நிண்ட வர்ணனைகளுடன் இரவு சமுகத்தைப்பற்றிய நாவல். காயல் பயணத்தின் முலம் உளவியல் ரீதியாக கூறுவது மறக்கமுடியாது. இரவவை பற்றிய பல்வேறு தருணங்களை மனதை சலனபடுத்தும்படி சொல்லப்பட்டுள்ளது.இரவு கண்ணுக்குள் தார்போல படிந்துஅகத்துக்குள் சென்றுவிடும்படியாக உணர்வு ஏற்படுத்தும் கதையாடல்,வாசித்து நெஞ்சில் நிலைத்துக்கொள்ளும்படியான படைப்பு.

user_9111

★ 4/5
இந்நாவலில் இரவில் வாழும் மனிதக்குழுக்களின் பார்வையைச்சொல்லுகிறது அவர்களுக்கிருக்கும் இயற்கை மற்றும் மனிதர்களின் பற்றிய பார்வை பற்றி இந்த நாவலில் ஜெயமோகன் விவரிக்கிறார் . . இதை படிக்கும் போது நான் இந்த நாவலை வேகமாக படித்து முடித்து விடக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் இருந்த கொண்டே இருந்தது . . இக்கதையில் sex , extensial crises , lust , spirituality , social structure , religion , god என்ற பல்வேறு விஷியங்களை உரையாடுகிறது . . நாவலை முடித்தவித்த விதம் Cliche வாக இருந்தாலும் நிறைவாக இருந்தது

user_9110

★ 3/5
பகலில் உறங்கி, இரவில் கண்விழித்து வாழும் ஒரு சமூகத்தின் கதை... கதையில் இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த ஆசிரியரின் வர்ணனை, மொழிநடை, நம்மை ஒரு கணம் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரே ஒரு விளக்கொளியில் நடந்துக் கொண்டே புத்தகத்தை படிக்கும் பொழுது, வெளிச்சம் வந்து வந்து போவது போல, இரவு வாழ்க்கை சாத்தியமா என்ற எண்ணம் வந்து வந்து சென்றது வாசிக்கும் பொழுது. கேரள மண் சார்ந்த வாழ்க்கை, உணவு, யட்சிகளின் கதைகள், மொழிகளின் வரலாறு, கொடுங்கநல்லூர் கோவிலின் சிறப்பு அம்சங்கள், ஏராளமான உளவியல் தகவல்கள் என்று கதையை தாண்டியும் அள்ளி அள்ளி கருத்துகளை கொடுக்கிறார் இந்நூலின் ஆசிரியர் ஜெயமோகன். சற்றே மாறுபட்ட கதைக்களம் என்று எண்ணி வாசித்துக்கொண்டு செல்கையில், பாதி கடந்த பின்பு, மற்ற சாதாரண கதைகள் போலவே ஓட்டம் எடுத்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றியது. இரவு வாழ்க்கை பற்றி ஒருவிதமான ஏக்கத்தை நமக்கு விட்டு செல்கிறது இந்த இரவு.

user_9109

★ 5/5
Iravu, a masterful novel by Jayamohan, is a profound exploration of lives shrouded in darkness—both literal and metaphorical. It delves into the raw, unfiltered emotions of those who inhabit the margins, painting a world where vulnerability coexists with unwavering strength. The characters are strikingly unique: individuals who exude absolute confidence, untouched by the guilt or moral hesitation that often defines ordinary existence. They stand apart from the mediocrity of conventional human frailty, embracing life with a clarity and conviction that feels almost elemental. Reading Iravu is an immersive experience—its narrative pulses with intensity, challenging perceptions of morality and identity. In their boldness and philosophical depth, these characters evoke comparisons to the towering figures in Ayn Rand’s works, embodying ideals that transcend societal norms. An extraordinary read that lingers long after the last page.

user_9108

★ 5/5
ஜெயமோகனின் 'இரவு' நாவல், இரவைப் பற்றியதும், இரவில் விழித்து பகல் முழுதும் உறங்கி ஒரு தலைகீழ் வாழ்க்கையை வாழும் ஒரு சிறு சமூக குழுவைப் பற்றியதுமான கவித்துவமான மொழிநடையில் எழுதப்பட்ட படைப்பு. மேலோட்டமாக நாவலின் கதை , பல்வேறு காரணங்களுக்காக இரவு வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சில மனிதர்களின் வாழ்வும், இதனுள் எதேச்சையாக நுழையும் ஒருவனுக்கு அந்த மனிதர்களுடன் ஏற்படும் உறவும் என கொண்டிருக்கிறது. ஆனால் நாவலின் உள்ளடுக்கில் நிகழும் பல பகுதிகளான இரவு குறித்து வரும் விவரணைகள், இரவு VS பகல் குறித்தான உரையாடல்கள், புது வாழ்வை தேர்ந்தெடுக்கும் பொது ஏற்படும் மனக்குழப்பங்கள், இரவு வாழ்க்கை ஒரு படிமமாக உருமாறுவது போன்றவை வாசகனுக்கு ஒரு புதிய வாசிப்பனுவத்தையும், ஒரு வித அக எழுச்சியையும் அளிக்கிறது. நம் மனத்தின் வழியே நாம் நம் உலகை உருவாக்குகிறோம், மனத்தின் நீட்சிதான் நாம் காணும் உலகம், நம் மனம் முடிவுறும்போது (இறக்கும் போது) நம்முடன் சேர்ந்து நம்முடைய உலகமும் முடிவுறுகிறது. இவ்வாறு மனத்திற்கு அப்பால் தொடர்ச்சியில்லாததை மாயை (Illusion) என்றும், உண்மை (reality) என்பது தனி நபரின் மனதை தாண்டிய தொடர்ச்சி கொண்டது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அனால் இந்நாவலில் வரும் பொது மாயை (Common Illusion) என்னும் சொல், உண்மையின் வரையறையை முழுவதுமாக கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மை பொதுவானதா அல்லது தனி மனித மனத்திற்குரியதா என்றொரு தத்துவ கேள்வியை முன்வைக்கிறது. ஆசிரியர் தன் மொழியாளுமையால் சொற்களால் விவரிக்க முடியாத உணர்வுகளை சொற்களின் வழியே கடத்திவிடுகிறார். கதை நிகழ்விடத்தை விவரிக்கும் மொழி உருவாக்கும் மனக்காட்சிகள், தத்துவ விசாரணைகள் மற்றும் உரையாடல்கள் தரும் மன எழுச்சி, முற்றிலும் புதிய சூழலை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தின் குழப்பங்கள் அளிக்கும் மன சஞ்சலங்கள், வழமையிருந்து விடுபட்டு புது வாழ்வை கோரும் உந்துதல், போலியிலுருந்து விலகி உண்மையை நோக்கி நகர விளையும் இலட்சியம் என இந்நாவல் பலவித உணர்வெழுச்சியையும், தனித்துவமான வாசிப்பனுவத்தையும் வாசகனுக்கு அளிக்கிறது. கனவின் வழி நிஜ வாழ்வில் பெரும் விடுதலை, இயல்பு மீறல்களின் சாதாரணத்தன்மை, அறியாமையின் ஒளி, அறிவின் இருள், இரவின் வெளிச்சம், பகலின் இருட்டு என்று இந்நூல் உணர்த்தும் முரண்கள், நாம் இதுகாறும் கொண்டிருந்த நம்பிக்கைகளை அசைத்து பார்த்து ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது.

user_9107

★ 4/5
Nice

user_9106

★ 4/5
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகபடுத்தியது. இரவு வாழ்க்கை பற்றி ஒரு விதமாந ஏக்கத்தை நமக்கு விட்டு செல்கிறார்.

user_9105

nothing

user_9104

★ 4/5
a magical journey... சில இடங்கள்ல (முக்கியமா முடிவு) 'காடு' ஞாபகம் வந்தது... இன்னொரு முறை நிதானமா படிக்கனும்.

user_9103

★ 3/5
இரவு, யட்சி, பிரக்ஞை, காயல், சமூகம், உக்கிரம் போன்ற சொற்கள் திரும்ப திரும்ப வருகின்றன, கான்செப்ட் செம, கதை கொஞ்சம் இழுவை போல தெரிகிறது எனக்கு.

user_9102

★ 5/5
Beautiful book describing beauty of night life. Anyone who reads this fiction will definitely fall in love with the "night" & "night-life". Author portrays the beauty of night in such a beautiful manner in each and every page of the book. I would like to recommend the book to anyone who's interested in fictional works.

user_9101

★ 4/5
ஒரு சில ஆசிரியர்களால் மட்டுமே படிப்பவரை க��ைக்களத்திற்க்கு கொண்டு செல்ல முடியும் . படிக்கும் போது கதையில் வரும் சுவாரசியத்தையும் படப்படப்பையும் வாசகர்களுக்கு ஏற்றுவதை அனைத்து ஆசிரியர்களாலும் செய்ய முடியாது, நீலிமா வை பார்க்கும் போதும் ஆசிரமத்திற்க்கு செல்லும் போதும் சரவணவிற்க்குள் ஏற்படும் அதிர்வு நமக்குள்ளும் ஏற்படும். வாசித்த அனைவருக்கும் கண்டிப்பாக ஒருநாளாவது அந்த இரவு வாழ்க்கையை வாழ்ந்துவிட ஆசை தோன்ற வைக்கும் நாவல். இரவை பற்றி புதிய பரிணாமம், வர்ணனை படிப்பவரை கவர்ந்து கட்டி போடக்கூடிய நாவல்👏👏👏

user_9100

★ 5/5
இரவுக்கு மட்டும் தான், என்னவோ; மனித மனம், பண்பு, குணாதிசயம் சற்று இளகியே கிடக்கும். தனிப்பட்ட முறையில், இரவில் தான் நான் ஆசைப்படும் எழுத்து வேலை; கவிதை, கதை என எழுதுவதுண்டு. அப்படிப்பட்ட, தனி சிறப்பு இரவு என்னும் சூழலுக்கு உண்டு. இதைப்பற்றி எழுதுகையில், உங்களுக்கு கூட இந்நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் மாதிரி தான் இருக்கும். " Night life is nothing but a Cheap Romanticism ". இருக்கட்டும். நான் இதனைப் படித்து இரவுத் தோழி என்ற ஒருத்திக்கு கவிதைகளென எழுதி திரியும் நானும் கூட ஒரு Cheap Romanticist தான். இதோ, எழுதிய கவிதைகள்; 1.இரவில் தான் நான் உலாவுகின்றேன், அறைகளுக்குள் அங்குமிங்கும். கூடவே தான் நூல்களும், எழுதுகோலும் சிந்தனையும், செதுக்கலும் என இன்னும் பல ஆக்கபூர்வமான ஓட்டங்களில் கழிக்கின்றேன். என்னுள் தனிமை குடியேற இரவு ஒரு தோழியாக எனக்கு போதிக்கிறது, நட்சத்திர கூட்டங்கள் நடுவிலிருக்கும் அதன் தனிமைப் பற்றி... நாங்கள் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டிருக்க... இப்படியே தான், யானும் யாசகனாகி போனேன் இரவும் சேர்ந்து யாசகம் கொள்கிறது. #சிவசங்கரன் 2. இரவென்னும் தோழி அவளோடு பாய்மரக்கப்பலில் ஒரு குறுகிய பயணம். இருபக்கமும் இருளின் கரிய ஒளிக்கு எங்களை சிதறி, நீந்திக் கிடந்த சருகுகளும், பளபளப்பான மீன்களும் பரவசமூட்டி ஓருடலாய் ஆக்கி நிலவென்ற ஒன்றை மறந்து முடிகோதும் காற்றை மட்டும் உண்ந்தவாறு ஓராயிரம் கண்களைக் கொண்டு அவளை பார்த்து அழைத்த போது, " அச்சமாய் இருக்கிறதா? " என வினவ காலம் கைநழுவிப் போக மெல்ல மெல்ல பிறையின் மெல்லிய ஒளியை ஆகங்களின் நடுவே சேர்த்து கைகளை விரித்தால் பஷ்பமாகி போனேன். நீ அழிக்கும் ' யட்சி 'யா என்றவாறு... #சிவசங்கரன் 3. இரவு தோழி அவளின் முன்னிறுத்திய கொடுங்கேள்விகள்; வெண் காகிதங்களில் நீல நிறம் பரப்பி, நிரப்புகிறேன் கவிதையோ, கதையோ அவளிடம் உறவாட? அவளோடு கொண்டாட? என அவளுடன் உம்மை சந்திக்க ஆசைபடுகிறேன். " அவளை என் முன் நிறுத்து " என்று வினவ படகோரம் இருந்த என்னை நுனிவிரல் நகங்களோடு கடலில் வீசிவிட்டாள். நடக்க முயன்ற, யானோ? மூழ்காது, உணர்ச்சிப்பெருக்கில் யானே கடலுக்கு ராஜா? யானே எழுத்துக்கும் உயிர்? என்றவாறு மிண்டும் அந்த கேள்வியை முன்னிறுத்தினேன். நீர்க்குமிழிகள் எண்ணிக்கையில் அதிகரிக்க உள்ளே இழுக்கப்பட்டேன். இரவுத் தோழியின் மங்கலான முகம் தென்பட ஒரு சில வரிகள் கேட்டதாய் உணர்ந்தேன்; ' ஆசை மட்டும் போதும் ' என...... #சிவசங்கரன் இனி இது தொடரும் என கண்டிப்புடன் மனம் Unconsciousஆகவும், Consciousயுடனும் முன்வைக்கிறது. என்னிடம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கேட்டால், " ஆசைகள் ஒரு படியும், ஏக்கங்கள் ஒரு சில படியும், அதீத ரசனை பல படியும், அனுபவங்கள் பல படியாக இருக்க வேண்டும் " என முடித்துவிடுவேன். கண்டிப்பாக படித்துப் பாருங்கள். புது அனுபவமாக இருக்கும், இதற்காகத் தானே எல்லாம்!! இரவு - ஜெயமோகன் தமிழினி பதிப்பகம் விலை : 220ரூபாய் ஆன்லைனில் வாங்க:

user_9099

★ 5/5
Simply mesmerizing...

user_9098

★ 4/5
இரவின் வண்ணங்களை முழுக்க மனிதனே தீர்மானிக்க முடியும் ஆனால் பகல் அப்படி அல்ல பிரம்மாண்டமான வானத்தால் மனிதனை ஒரு பொருட்டாக்காமல் அவன் மீது கொட்டப்படுவது - ஜெயமோகன்

user_9097

★ 4/5
"தனிமையை இரவால் போர்த்திக்கொள்ள முடியும். தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும் தாயின் கனிவோடு உரையாட இருளால் முடியும்."

user_9096

★ 2/5
One of the characters in the novel say that "night life is nothing but a cheap romanticism" Felt the same about the novel too.

user_9095

★ 5/5
மனதின் ஆழத்தை வருடி செல்லும் கதை.

user_9094

★ 5/5
இரவு பற்றிய புது பார்வை வித்தியாசமான வர்ணனைகள்.

user_9093

★ 4/5
ஜெயமோகனின் "இரவு" நாவல்,..இருளும் இருள் சார்ந்த பகுதிகளையும் அழகான வர்ணனைகளோடு கண் முன் நிறுத்தி காட்டுகிறது .இரவு வாழ்க்கையில் சரவணன் கதாபாத்திரம் படும் அலைகளிபுகளில் நமது மனமும் அலைகளிக்கபடுகிறது .இரவு உங்களை வரவேற்கிறது ....இரவுக்கு ஆயிரம் கண்கள்........

user_9092

★ 5/5
#இரவு ஒரு #யானை <3 ஒருவன் தன் வாழ்நாளை சுருக்கி சொன்னால், தான் மூழ்கிய தருணங்களை மட்டும்தான் சொல்வான். நான் ஆழ்ந்து மூழ்கிய தருணம் இது. பொதுவாகவே நிலா விரும்பியாகிய நான் இரவை (இரவு நாவலை) இரவில் மட்டுமே வாசித்தேன்... ஒவ்வொரு இரவிலும், இறுக்கத்தில் தனிமையாக தத்தளித்த என்னை இரக்கம் சூழ்ந்தது... இருப்பை அறிந்துக் கொள்ளவும், இறுமாப்பை அகற்றவும் இரவில் வாழும் மனிதர்களின் கதையை இனிதே அரங்கேற்றி உள்ளார் ஜெயமோகன்... இரவின் இனிமையையும் இரவுலாவிகளின் வாழ்வியலையும் இயற்க்கை எழில் கொஞ்சும் கேரளத்தில் சரவணன் என்னும் தமிழ் பேசும் ஆடிட்டர் மூலமாக இரவின் கதை ஆரம்பமாகிறது.... காயலுக்கு அருகில் இரண்டு தனிமையான வீட்டில் ஆரம்பிக்கும் கதை, அந்த இரண்டு வீடும் காலியாகி முடிகிறது.. இரவில் தான் மனிதன் வாழனும், காட்டில் கூட அனைத்து விலங்குகளும் இரவில் தான் வாழும் எனவும், மென்மையான அடக்கமான அழகுள்ள நிறங்கள் யாவும் இரவில் தான் காண முடியும் எனவும், தேவையான அளவு தேவையான இடத்தில் மட்டும் ஒளியை விழ செய்து அழகை ரசிக்க இரவில் மட்டுமே முடியும் என இரவின் சிறப்புகளின் வாசிப்பில் மனம் மயங்கி இரவில் மூழ்கி கதையில் பயணப்பட்டேன். விஜய் கமலா என்னும் தம்பதிகளின் மூலமாக இரவுலகத்தில் பயணப்படும் சரணவன், இருளில் நெருங்க நெருங்க கண்களுக்கு காட்சிகள் புலப்படுவது போல, வாசிக்க வாசிக்க அதிசயங்களும் ஆச்சிரியங்களும் கிறங்கடிக்கின்றது.. விஜய் கமலாவின் வாழ்க்கையின் ருசியை வாசிப்பில் சுவைக்கும் பொழுது, அவர்களை மாதிரி கடைசி காலத்திலாவது இரவில் மட்டும் வாழ வேண்டும் என்றும், கமலா மாதிரி ஒரு துணை வேண்டும் என்று ஆசையில் அலைந்தது என் எண்ண ஓட்டங்கள். கடைசியில் அவர்களுக்கு இடையில் ஏற்படும் துரோகத்தை எனக்கு ஏற்பட்ட துரோகம் என எண்ணி, என் மனம் உருகி உருகி துயரமே இல்லாத தூய சோகம் ஆட்கொண்டு அழக்கூடாது அழக்கூடாது என என் போதம் தடுக்கத் தடுக்க நான் கண்ணீர் விட்டேன் கட்டுப்பாடு இன்றி.! அந்த நிலவும் அடங்கும் இரவை போன்ற பெண் இங்குண்டோ என்று எண்ணி இருந்தேன், வந்தால் அவள் நீலிமா! <3 “உலகத்திலே எல்லாப் பொண்ணும் ஆம்பிளைங்களை அருவருக்கிறா. எந்த பொண்ணுக்கும் ஆண் உள்ளூர ஒரு பொருட்டே இல்லை” என நீலிமா மனம் திறக்கும் பொழுது என் மனதை பறிக்கொடுத்து விட்டேன்.. நாவல் கற்பனை கதாபாத்திரம் என்பதை தாண்டி நீலிமாவை நிஜமாகவே பார்க்க மனம் ஏங்கியது...கவன சிதறலில் தான் அதீத கவன ஈர்ப்பு உருவாகும் என்ற என் நம்பிக்கை மேலும் வலுப் பெற்றது… எனக்கு உக்கிரம் தேவையானது, அது இல்லாமல் என்னால் இனிமேல் வாழ முடியாது என்பதை போல் ஆனது... இமைக்காத மயக்கும் விழிகள் போல மயங்கினாள் நீலிமா. இரவில் ரகசியம் ஏது? ஒவ்வொரு இரவும் நான் தனியாக இல்லை, இரவு என்னும் நீலிமா என்னுடன் இருந்தாள். அவள் தன் தனிமையை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.... இருட்டு கனத்த கம்பிளி போல உடலை அழுத்தி மூடியது... விழிப்பு நிலையை தாண்டி கனவு நிலையுடன் பேச முடிந்தது அந்த இரவின் அரவணைப்பில்.... ஒரே ஒரு விளக்கொளியில் நடந்துக் கொண்டே புத்தகத்தை படிக்கும் பொழுது, வெளிச்சம் வந்து வந்து போகும். அது போல, இரவு வாழ்க்கை சாத்தியமா என்ற எண்ணம் வந்து வந்து சென்றது வாசிக்கும் பொழுதே.... சரவணனுக்கும் வந்தது, அப்பொழுது அவன் நீலிமாவால் ஆட்கொண்டு இருந்தான் என்னை போல... நல்ல தத்துவ யானி மத்தவங்கள குழப்பிட்டு தான் தெளிவா இருப்பாங்க என்ற மாதிரி ஒரு சாமியார், பாதிரியார் இந்த கதையில் உண்டு.. அவர்கள் இருவரை வைத்து இந்து மதத்தை உசத்தியும், கிறிஸ்துவ மதத்தை மிகவும் பழிப்பதுபோல முதலில் தோன்றி, பின்பு இரண்டிலும் உள்ள நிறை குறைகளை நேர்த்தியாக விமர்சித்திருப்பர் ஆசிரியர்... மேலும், அவர்கள் இருவரும், சரவணன் இரவில் இருந்தும், நீலிமாவை விடுத்து நீங்க நினைக்கும் பொழுது ஒருவருக்கு ஒருவர் முரண்பாடாக சரவணனுக்கு ஆலோசனைகள் கூற, நாமே குழம்பி போவோம்... குறிப்பாக, " உண்மையை அறிந்த பின்பு, பொய்யில் உன்னால் வாழ முடியாது. நீலிமா ஒரு தேவதை", " அதாவது நான் உன்னை தடுத்து இதிலேயே நிறுத்தி வைக்கவேண்டிய தர்க்கங்களை நான் சொல்ல வேண்டும் என ஆசைப்படுகிறாய்?! " கடைசியில், " நீ ஒரு பெண்விரும்பி,, பெண்வெறுப்பு உன் நாளில் ஐந்து நிமிடங்களை எடுத்துக் கொள்ளட்டுமே. அது உன் விருப்பத்தை இன்னமும் உண்மையானதாகவும், தீவிரமானதாகவும் ஆக்கும்" என்பதை போன்ற வரிகளை கேட்கும் பொழுது மனம் நீலிமாவால் நிறைந்திருக்கும்.... மனம் ஒரு ஊஞ்சல் மாதிரி, எந்த அளவுக்கு ஒரு பக்கம் எழுகிறதோ, அதே அளவுக்கு மறுபக்கமும் செல்லும். சென்றாக வேண்டும். காமமும் நிர்வாணமும் இன்னமும் நமக்கு எளிதானவையாக இல்லை. “உடல் அதன் புராதனச் சடங்கைச் செய்ய ஆரம்பித்தது” என்று கலவியை எளிமையாக விவரிக்கும் ஆசிரியர், சில இடங்களில் இந்த ஆட்களுக்கு உண்மை உண்மையாக சொன்ன மட்டும் போதாது. அது அறையனும் அதிர வைக்கணும் என சில இடங்களில் அறைந்தும் அதிரவும் வைத்துள்ளார்... தனிமையின் உக்கிரத்தில் இரவில் மட்டுமே படித்த நாவலின் வாசிப்பு முடிவை எட்ட, சிந்தனைகள் சிக்கலின்றி சிறகடிக்க, உண்மை அகங்காரமாக ஓங்கி அடிக்க, வலியுடன் நம்பிக்கை எழ, கொடுங்கனவிற்கு திரும்பி செல்ல இயலாமையில் தன்னிரக்கம் தழுவிக் கொண்டது.... நான் மிகவும் துயரமானவனாக, மிகப் பிரியத்திற்குரிய ஒன்றை இழந்தவனாக, திரும்ப அது கிடைக்கவே கிடைக்காது என்று அறிந்தவனாக என்னை உணர்கிறேன்... என் இரவையும் நீலிமாவையும்!! <3 #sjk கார்த்திகேயன் <3 #நீலிமா #யட்சி <3

user_9091

★ 4/5
ஜெயமோகனை படிக்க ஆரம்பிப்பவர்கள் இப் புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என ஜெயமோகனே ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். எந்தச் சிக்கலும் இல்லாமல் நேரடியாகவே நகர்ந்துகொண்டு போகின்ற கதையில் இந்த இரவு, நீலிமா எல்லாம் ஏதோவொன்றின் குறியீடுகள் என்பதை உணரும் கணத்தில் நீங்கள் ‘இரவு’ஐ உண்மையாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றீர்கள்.

user_9090

★ 4/5
இரவு. நான் வாசித்த ஜெயமோகனின் இரண்டாவது புத்தகம் இது... பகலில் உறங்கி, இரவில் கண்விழித்து வாழும் ஒரு சமூகத்தின் கதை... கதையில் இரவின் அழகையும் ஆழத்தையும் விவரித்த இவரின் வர்ணனை, மொழிநடை, நம்மை ஒரு கணம் "நாமும் இரவு வாழ்க்கை வாழ்ந்து பார்த்தால் என்ன?" என்னும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது... முற்றிலும் இரவு வாழ்க்கை வாழும் நிஜ மனிதர்களை பற்றிய கதை என்று நினைத்தே இதை தேர்வு செய்ய எண்ணம் ஏற்பட்டது... சில அத்தியாயங்களுக்கு பிறகு இது ஒரு "Romantic drama" genre போல் கதையின் போக்கு சென்றது... சற்றே மாறுபட்ட கதைக்களம் என்று எண்ணிக்கொண்டு வாசித்துக்கொண்டு செல்கையில், பாதி கடந்த பின்பு, மற்ற சாதாரண கதைகள் போலவே ஓட்டம் எடுத்து விட்டதோ என்று தோன்றியது... ஆரம்பத்தில் இரவை பற்றிய பிரமிப்பு ஏற்படுத்தி நம்மை உள்ளிழுத்து சென்ற கதை, முடியும் பொழுது சாதாரண கதைக்களம் போலவே முடிந்தது சற்று வருத்தம் அளித்தது... இரவின் நாம் அறியா வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டிய புத்தகம்❤️

user_9089

★ 3/5
ஒரு அற்புதமான புதினம் என்றா என்னத்தை தந்து சாதாரணமாக நவல்அக முடிகிறது. குறிப்பாக முகர்ஜி,பிரசண்டனந்த கதாபாத்திரங்கள் தேவியாற்றுதாக தோன்றுகிறது, இல்லை அதை புரிந்துகொளும் வயதோ/அனுபவமோ எனக்கில்லை என்று பட்டது. சரவணனின் கதாபாத்திரத்தின் மனமாற்றம் மிக இயல்பான ஒன்று.இரவின் மிது ஒரு புதிய பார்வையை விசசெய்கிறார் ஜெயமோகன்.

user_9088

★ 4/5
This is a typical book of modern tamil lit where there are no limits for anything. There is nothing forbidden in the modern tamil literature. Here 'Iravu' (Night), portrays the story about the people who live only in the night. No it is not about the people who has to live in the night due to their work. The book deals about people who chose to live in the night for philosophical reasons. Te beautiful explanations of the scenaries in the night on the backwaters of Kochi and various other things like the temples, the sea and forest, all are facinating. Jeyamohan one of the reputed contemporary tamil writers and I could understand why. If you know to read tamil, don't miss it.
Genres
Shelves
book Fiction Jeyamohan

More like this


வெள்ளையானை

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

4.05/5 · 300+ ratings

பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]

Author: Jeyamohan

ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவ…

4.05/5 · 300+ ratings

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

One of the greatest books ever written in Tamil by Amarar Kalki - A historical fiction based on the life of Raja Raja Chola - one of the greatest …

4.05/5 · 300+ ratings

பேய் கதைகளும் தேவதை கதைகளும் [Pei Kathaigalum Devathai Kathaigalum]

Author: Jeyamohan

உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது ப…

4.05/5 · 300+ ratings

வெக்கை

Author: Poomani

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

4.05/5 · 300+ ratings

உடையாள் [Udaiyal]

Author: Jeyamohan

இது ஓரளவு அறிவியல் கல்வியும் அறிவியல்கொள்கைகளை அறிந்துகொள்வதில் ஆர்வமும் கொண்ட குழந்தைகளுக்கான ஒரு புனைகதை. அறிவியலின் வழியாக நிகழ்த்திக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை இது. அந்…

4.05/5 · 300+ ratings

ஒரு புளியமரத்தின் கதை

This story captures the complexities experienced by a society in transition. The integral connection between the tamarind tree (protagonist of the…

4.05/5 · 300+ ratings

பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்கு…

4.05/5 · 300+ ratings

குறுப்படைப்பு: யட்சி - சிறுகதை [Yatchi]

Author: Jeyamohan

அருகே ஒரு பெருந்தழல் சட்டென்று எண்ணெய் பட்டு எழுந்தாடி அணைந்ததுபோல அம்மா முகத்தில் ஓர் உக்கிரம் படிந்து மறைந்தது. நான் அவளை அப்போது மிக அஞ்சினேன். அவள்மீது ஒண்டிக்-கொண்டு …

4.05/5 · 300+ ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.05/5 · 300+ ratings

ஆனையில்லா! [Aanaiyillaa!]

Author: Jeyamohan

இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்…

4.05/5 · 300+ ratings

அறம் [Aram]

Author: Jeyamohan

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.05/5 · 300+ ratings