உலோகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உலோகம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Author: Jeyamohan
3.6/5 · 300+ ratings

உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக…

Reviews

user_8461

★ 4/5
தனதென்று தனித்தில்லாமல், எய்பவன் இலக்கையே தனதாக்கிப் பாயும் தோட்டாவின் கதை.

user_8460

★ 4/5
A good view of the normal life an isolated, beaten soul. A novel breaking the stereotypes of the era.

user_8459

★ 4/5
normal thriller...with a new plot.

user_8458

★ 5/5
Jeyamohan just rocked with his narrative and creative writing

user_8457

★ 5/5
அருமையான த்ரில்லர். நம் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாத ஒருவனின் வாழ்க்கை....

user_8456

★ 3/5
A Casual Read. Not the best of Jeyamohan. The pace is lowered by his literary inclination nevertheless unputdownable..

user_8455

★ 4/5
மீள்வாசிப்பு செய்ய வேண்டும் அல்லது செயமோகன் எழுத்துடன் என்னை பழக்கிகொள்ள வேண்டும். காய்ச்சலில் படுத்திருந்த காலங்களில் படித்ததாலோ என்னவோ அவ்வளவாக ஈர்க்கவில்லை கடைசி சில அத்தியாயங்கள்.

user_8454

★ 5/5
A fast paced thriller in tamil, similar to its english books. A very good try and a interesting read. Thought I don't agree with lot of political comments said in this book - since it's a fiction - I'm giving it full rating.

user_8453

★ 4/5
Porul puriyaadha arasiyal vilayaattu! Ilangai thamzhanin unmai pakkathai alasum pakkangal. padikka padikka manam ranamaagum! manam balamaana vaasagargal maatum padiyungal. 'Jeyamohan'-in 'puratchi' idhilum velicham, oorjidham! Idhai paditha pin, vidiyal pudhiyadhaaga irukku, LTTEin meedhu paarvai maarugiradhu!

user_8452

★ 5/5
The protagonist is an assassin sent to kill a politician from Sri Lanka in exile in New Delhi. Jeyamohan gets into the characters and in his inimitable way reveals different slices of the exile's life who leaves home under the threat of violence. I found his characterization of RAW and the political "double-games" played by different parties based on Eezham in India ring very true. Highly recommended !

user_8451

★ 4/5
உலோகம் ❤️ • ஜெயமோகன் பல நாவல்களும் சிறுகதைகளையும் எழுதித்தள்ளும் பிரபல்ய எழுத்தாளர். அவர் படைப்பில் ஒரு நூல் வாசிக்கவேண்டும் என்று பல நாள் நினைத்ததுண்டு. இறுதியில் உலோகம் புத்தகத்தில் தொடக்கம். • அவருடைய புத்தகங்களை பற்றி பார்த்துக்கொண்டு வரும் பொழுது இந்தப்புத்தகம் தன்னை வாசி என்பது போல் என்னை இழுத்தது. காரணம், முதலில் தலைப்பும் அட்டைப்படமும், இரண்டாவது, கதை ஈழப்பின்னணியில் அமைந்தது, அடுத்தது, இது ஒரு த்ரில்லர் கதை. (நான் இதுவரை தமிழில் த்ரில்லர் கதை வாசித்திருக்கவில்லை) • கதையின் முடிவை முதல் அத்தியாயமே சொல்கிறது. பக்கத்திற்கு பக்கம் கதைத்திருப்பங்களும் இல்லை. ஆனாலும் கதை மிகவும் விறுவிறுப்பாக சோர்வில்லாமல் பக்கங்களை புரட்டவைக்கிறது. இயக்கங்கள், துரோகங்கள், எதைப்பற்றியும் தெரியாத கட்டளையை மட்டும் ஏற்று செயல்படுத்தும் அடிமட்ட கருவிகள், என்பவற்றை கருவாக கொண்டு அழகாக களமாடியிருக்கிறார் ஜெயமோகன்.

user_8450

★ 3/5
வாசித்து முடித்து 4 நாள் ஆச்சு. இன்னைக்காவது எழுதிடணும்னு எழுதுறேன்.திரில்லர் தான் என்றாலும் அதில் தனது இலக்கிய நடையையும் இணைத்துஎழுதி இருக்கிறார் ஜெ.மோ . அது சில நேரங்களில்கதையின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டதாக தோன்றுகிறது.ப்ரோஜெக்டிங் வில்லனிசம் ஒன்றும் " ஜெ.மோ " க்கு புதுசில்லை ஆனாலும்.கொஞ்சம் வேகம் குறைகிறது கதையில். ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் "பழிவாங்குவது / கொலை செய்வது தான் என் நோக்கம் , குழந்தைகளை , குடும்பங்களை, கொலை செய்யமாட்டேன். பெண்களை "ரேப்"ங்கலாம் நோ நோ. போன்ற ஓல்ட் கிளாஸ் ஹீரோ வெல்லாம் இல்லை.அவன் ஒரு கொலையாளி அவனை சுற்றியுள்ள கூட்டமும்அத்தனை கேவலமானதே, கொலையாளி சினிமாக்களில், கதைகளில், வருவதை போல் "கும்பல் ஆப்" நல்ல பீப்பில் கில்லிங் எனிமிஸ் பார் நியாயம்லாம் இல்லை. அவனுக்கு பணித்ததை அவன் செய்கிறான் அதற்கான நியாய அநியாயங்களை சீர்தூக்கி பார்க்கும் சில்லி விஷயங்களெல்லாம் "ஜெ .மோ" செய்யவில்லை. உளவாளிகளின் , கொலையாளிகளின் , இயக்கங்களின் மன நிலை , செயல் பாடுகள் குறித்து மிக நுட்பமான விளக்கங்கள் நன்றாக இருக்கிறது.சூழ்நிலை கைதிகள் அவர்களின் நிலை மாற தரும் விலை மட்டமானதாக காடப்படிருந்தாலும் சில இடங்களில் அது உண்மையாகவே (அவர்களை பொறுத்த வரை நியாயமானதாகவும்)படுகிறது. கொலை , துப்பாக்கி , இயக்கம் , ரா , இதுமட்டுமே இணைந்து திரில்லர் ஆவதில்லை இன்னும் சுவாரஸ்யம் கூடும் விதத்தில் நான்றாக இருக்கலாம் (நமக்கு திரில்லர்நாலே "திகு திகு பாஸ்ட் பார்வேர்ட் தான ?)

user_8449

★ 5/5
One of the best books I have read. Felt like I am on mission and I am the Protoginist in this novel.

user_8448

★ 2/5
புரியாத நாவல். திரில்லர் கதை என்று ஆரம்பித்தால், மொத்தமுமாக இலக்கிய நடையில் இருக்கிறது. எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக மனதில் பதியவில்லை. திக் திக் நிமிடங்களில் எப்படி ஒரு மனிதன் ஆழ் மனங்களின் ரகசியங்களை பற்றி ஆராய்வான் என்று புரியவில்லை. ஆனால் கதை முழுவதும் அதுதான் நடக்கிறது.

user_8447

★ 3/5
2.5* ஒரு சிறுகதையாக எழுதியிருக்கவேண்டிய ஒரு கருவைக்கொண்டு ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். நாவலின் பெரும்பகுதியும் எதுவுமே நிகழ்வதில்லை. அவர் எடுத்துக்கொண்ட திரில்லர் அமைப்புக்கு இது பெரும்குறை. அதனால் அவரது வழமையான பாணியிலும் இல்லாமல், த்ரில்லராகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக வந்திருக்கிறது.

user_8446

★ 2/5
ஈழப்போர் பின்னணியில் ஒரு slow thriller. இயக்கத்தைச் சேர்ந்த ரகசிய உளவாளி சார்லஸ் என்கிற சாந்தன் இலங்கையில இருந்து இந்தியா வராரு. இயக்கத்துக்கு துரோகம் செய்த ஒருத்தர கொல்ல சொல்லி உத்தரவு வருது. அந்த கொலையோட தான் கதை ஆரம்பாகுது, அதே கொலையோட தான் முடியவும் செய்யுது. இடைப்பட்ட அவரோட பயணம் தான் இந்த கதை.இயக்கத்தில இருக்கும்போது நடக்குற போர்ல தொடைல ஒரு குண்டு ஊடுருவிப்போய் அங்கேயே இருக்கு. அந்த உலோகத்தினாலான குண்ட குறிப்பிட்டு தான் இந்த தலைப்பு. கதை ரொம்ப ரொம்ப ரொம்ப slow. இயக்கத்தோட தகவல் பரிமாற்றங்கள், தோழமை, பண பரிவர்த்தனைகள் எப்படினு இதுல தெரிஞ்சுக்கலாம். நடுவுல வர ஒரு encounter shot சூப்பரா இருந்துச்சு. சில இடங்கள்ள வர symbolic representations எனக்கு புரியல. இன்னும் கொஞ்சம் fast paced ah இருந்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.

user_8445

★ 1/5
மட்டமான புத்தகம். எந்த ஒரு கதாபாத்திரமும் சரியாக புரிபடவில்லை. என்னை பொறுத்தவரை Rate கொடுக்க கூட தகுதி அற்ற புத்தகம் இது.

user_8444

★ 3/5
Published as a fast paced thriller. Please do not compare with similarly branded/marketed English books. This has the Jeyamohan stamp much more than a fast paced thriller stamp!

user_8443

★ 3/5
ஈழத்துப் பின்னணியில் கதைக்களம். வாழ்க்கையில் சரி தவறுக்குக் கோடே இல்லாத ஓர் கதை. கால் இடறி வழுக்கி விழுந்தவர்களெல்லாம் வரலாற்றில் வல்லவர்களாக சித்தரிக்கப்படும் அவலநிலை இக்கதையிலும் உண்டு. நாவலின் ஆரம்பம் ஆர்வம் ததும்ப வரவேற்று, வெற்றுப் பக்கங்களாக மாறிய உணர்வு. -தமிழினி

user_8442

★ 3/5
ஈழப்போர் பின்னணியில் ஒரு திரில்லர். 'அறம்' புத்தகம் வாசித்ததிலிருந்து ஜெயமோகன் அவர்களின் ரசிகனாகி விட்டேன். ஆயுதம் ஏந்திய எந்தவொரு இயக்கமும், துரோகம் செய்தவர்களை கொன்றுவிடும். புலிகளுக்கு துரோகம் செய்துவிட்டு உயிருக்கு பயந்து 'ரா' அமைப்பில் சரணாகும் ஒருவரை கொல்லவரும் புலிகளின் ரகசிய உளவாளியின் (சார்லஸ்) கதை. திரில்லராக இருப்பினும், கதை யதார்த்தத்தை மீறவில்லை. Slow paced thriller, good read.

user_8441

★ 1/5
ஈழப்போராளி ஒருவரின் உண்மைக் கதையை தழுவிய குறுநாவல் என்று குறிப்பிடப்பட்டாலும் அது ஏனோ மனதோடு ஒன்றவில்லை.இந் நூலின் முன்னுரையில் அகத்தோடு பேசுவது தான் இலக்கியம் என்று குறிப்பிட்டிருப்பார் ஜெமோ.ஆனால் இக்கதையில் எம்மோடு பேசும் அகம் ஜெமோவினுடையது என்பது குறித்த முன்னாள் போராளியின் வார்த்தைகளில் குறிப்பாக வரலாறு தொடர்பான அவனது கருத்துகளில் தெளிவாகவே புலப்படுகின்றது.எட்டுப் பத்து வரிகளிலேயே எம் ஆழ்மனத்துயரங்களையும் உணர்வுகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் மனதோடு ஒட்டாமல் வெறும் கதையாக நகரும் உலோகத்தையும் நோக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது எம்மவர் உணர்வுகளை பிரதிபலிக்க எம்மவர்களால் மட்டும் தான் முடியும்.

user_8440

★ 4/5
makes you think what is right and moral

user_8439

★ 4/5
குண்டு செலுத்தப்பட்ட துப்பாக்கி , சுடப்பட்டவரை நோக்கி எந்த யோசைனையும் இன்றி சுடுவது போல , காலம்காலமாக போராட்ட குழுக்கள் , தங்கள் ஆணைகளை நிறைவேற்ற , எந்த கேள்வியும் கேட்காத , போராளிகளை தயார் செய்கின்றனர். இதில் வரும் சாந்தன் ஒரு துப்பாக்கி தான் , அவனுள்ளும் ஒரு குண்டு உள்ளது . ஒரு போரில் அவன் குண்டடிப்பட்டு அந்த குண்டானது இன்றும் அவனுள் இருப்பது, ஒரு உருவகமாக சொல்லப்பட்டு இருந்தாலும் , அவன் நிஜத்தில் , எந்த கேள்வியும் கேக்காத , திரும்பி பேசாது , சுட வேண்டிய ஒரு துப்பாக்கி தான் . தன் ஆணையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து வந்து , இங்கு அகதியாய் குடியேறி , இங்குள்ள ரா அமைப்பின் ஒரு எதிர் குழுவில் சேர்ந்து , அவன் சேர வேண்டிய இடத்தில் சேர்கிறான். இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை , பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் எரிபொருள் நிரப்ப இடம் கொடுத்தததற்காக , இந்தியா அரசு விடுதலை புலிகளை பயன்படுத்தி , அவர்களை வலிமையாக்கி , இலங்கையில் உள்நாட்டு போர் மூலம் , அரசின் ஸ்திர தன்மையை குலைக்க முயற்சிக்கிறது . இது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாதலின் , ராவின் பங்கு இதில் புரிந்து கொள்ள முடிகின்றது , மற்றபடி இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என தெரிகிறது , இருப்பினும் இதில் உள்ள முக்கிய பாத்திரங்களை நிஜத்தில் யாராக இருக்கும் என கண்டுபிடிக்க முடியவில்லை. இலங்கை முக்கிய பிரமுகர் இங்கு கொல்லப்பட்டது போன்ற தகவலும் திரட்ட முடிவில்லை.

user_8438

★ 4/5
மெதுவாய் நகரும் ஒரு த்ரில்லர் கதை. த்ரில்லரையும் இலக்கிய பாணியில் எழுத முடியும் என்று நிரூபிக்க ஆசைப்பட்டரோ என்னவோ! ஜோர்ஜ், ரெஜினா பாத்திரங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. வைஜெயந்தி என்னை நிறைய குழப்பினாள். த்ரில்லர் போல இப்புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஜெமோ வை படிக்க இப்போது தான் ஆரம்பித்ததால் பொறுமை பலன் அளித்தது.
Tags
சிந்தனைக்கதைகள் நிஜம் ஈழம்
Shelves
Thriller Fiction book Jeyamohan

More like this


பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.6/5 · 300+ ratings

தன்மீட்சி

Author: Jeyamohan

இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிற…

3.6/5 · 300+ ratings

ஜெயமோகன் குறுநாவல்கள்

Author: Jeyamohan

ஒரு பெரிய நாவலுக்குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்களின் அ…

3.6/5 · 300+ ratings

குமரித்துறைவி

Author: Jeyamohan

1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆ…

3.6/5 · 300+ ratings

விசும்பு

Author: Jeyamohan

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

3.6/5 · 300+ ratings

படுகளம் [Padukalam]

Author: Jeyamohan

படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ள…

3.6/5 · 300+ ratings

வெள்ளையானை

Author: Jeyamohan

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

3.6/5 · 300+ ratings

கடல் புறா 2 [Kadal Pura]

Author: Sandilyan

இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…

3.6/5 · 300+ ratings

Ponniyin Selvan - The Pinnacle of Sacrifice, Vol. 1

The first volume of the fifth part in the series Ponniyin Selvan, deals with the life of Prince Arulmozhivarmar who is Ponniyin Selvan and the you…

3.6/5 · 300+ ratings

Thottiyude Makan | തോട്ടിയുടെ മകന്‍

ഇശുക്കുമുത്തുവിന്റെ മകൻ ചുടലമുത്തു. ചുടലമുത്തുവിന്റെ മകൻ മോഹനൻ. സ്വന്തം പാട്ടയും മമ്മട്ടിയും ചുടലമുത്തുവിന് കൊടുത്ത് ഒരു നല്ല തോട്ടിയായിത്തീരാൻ ആശീർവദിച്ചശേഷം ഇശുക്കു…

3.6/5 · 300+ ratings

கொற்றவை [Kotravai]

Author: Jeyamohan

A historical fiction.An interesting perspective and historical imaginations of Lemuria, the lost/forgotten tamil land and its culture that dates b…

3.6/5 · 300+ ratings

படையல் [Padaiyal]

Author: Jeyamohan

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாம…

3.6/5 · 300+ ratings