Quotes from சிலுவைராஜ் சரித்திரம்

வெல்கம். இன்னையிலயிருந்து நீ நம்ம டிபார்ட்மெண்ட்ல டெமோ. போயி அந்த மைக்ராஸ்கோப்ப சரியா ஃபோகஸ் பண்ணு'ன்னு ஆசீர்வாதம் பண்ணுகிற மாதிரி சொன்னார். அன்னையிலிருந்து சிலுவை சுவாலஜி டெமோவானான். ஏற்கனவே அங்க அவங்கூடப் படிச்சு செகண்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிய கிளாஸ்மேட் டெமோவாக இருந்தான். விசாரிச்சுப் பாத்தா அவனும் இந்து சைவவேளாளர்னு தெரிஞ்சது. மேலிடத்துக்கு ரொம்ப வேண்டியவன்னு பெறகு கேள்விப்பட்டான். ஒரு சிபாரிசுமில்லாம தனக்கு எப்பிடி இம்புட்டுச் சுலபமா டெமோ வேல கெடைச்சதுன்னு பெறகுதாஞ் தெரிஞ்சது. அந்த டெமோ வேக்கன்ஸிக்கு லோக்கல் நாடார் கிறிஸ்தவ சமூகத்தாரும், பெர்னாண்டஸ் சமூகத்தாரும் தங்கள் சாதிப் பையனத்தான் போடணும்னு மேலிடம் வரைக்கும் மோதுனாங்களாம். இத எப்பிடிச் சமாளிக்கிறதுன்னு பிரின்சிபால் மண்டயப் போட்டு ஒடச்சுக்கிட்டிருந்த சமயத்துலதாம் நம்ம அப்பிராணி சிலுவைராஜ் வந்து மாட்னாம். ஒனக்குமில்ல, அவனுக்குமில்ல, ஒரு ஹரிஜன் கிறிஸ்டியனுக்குக் கொடுக்கலாம்னு முடிவு செஞ்சாராம். இதனால பிரச்சன தீந்ததாம். இத நெனச்சுப் பாத்த சிலுவைக்கு சிரிப்பா வந்தது. மேல்சாதிக்காரங்களுக்குள்ள பிரச்சனய சமாளிக்க ஹரிஜன் தேவைப்பட்டிருக்கிறான்! நாடார்களும் பெர்னாண்டஸ்ஸீகளும் வாழ்க என்று சிலுவை வாழ்த்தினான்!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
மைக்கேல் ஸார் பி.எஸ்.ஸி. பி.எட் படித்து முடித்துவிட்டுக் கலைஞர் ஆட்சியில் அரிசி கொள்முதல் செய்கிற துறையில் அரிசி தரம் பார்க்கும் ஏதோ இன்ஸ்பெக்டராக ஒரு வருசம் வேலை பார்த்ததாகச் சொல்வார். வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தற்காலிகமாக இந்த வேலை கொடுத்தார்களாம். அந்த சமயத்துலதாம் திமுக மந்திரிகள், அரசாங்க அதிகாரிகள் பத்தி நேரடியாகவும், மத்தவங்க சொல்லியும் மைக்கேல் ஸார் நெறைய விசயங்களத் தெரிஞ்சுக்கிட்டாராம். அவர் கதகதயாச் சொன்னத வச்சுப் பாத்தா அப்பயிருந்த கருணாநிதி ஆட்சி ஒரு கொள்ளக்கார ஆட்சியோன்னு யாருக்கும் சந்தேகம் வரும். சிலுவைக்கி அத நம்பக் கஷ்டமாயிருக்கும். அறிஞர் அண்ணாவுக்குப் பெறகு வந்த திமுக ஆட்சிக் காலம் தமிழகத்தின் இருண்ட காலம்னு மைக்கேல் ஸார் சொல்லுவார். சோவுக்கு மைக்கேல் பரம ரசிகர். அதுனாலதாம் இப்பிடிச் சொல்லுதாரோன்னு கூடச் சிலுவைக்கிச் சந்தேகம் வரும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
நீதி, நேர்மை, பாவம், புண்ணியம்னு பேசுறது கையாலாகாதவம் பேச்சு. நகமும் பல்லும் போன வயசான புலி பேசுற பேச்சு. மத்தவனத் தாக்க முடியாதவம் பேசுற பேச்சு. பலமுள்ள மனுசன் என்னத்துக்கு நீதி, பாவம், புண்ணியம் பத்திப் பேசப்போறான்?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
படிக்கிற காலத்துல எதெல்லாம் கூடாது, தப்புன்னு படிக்கிறமோ அதெல்லாம் பெரியவங்க ரொம்பச் சாதுரியமாச் செய்யிறாங்க.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
மனுசங்ககிட்ட இன்னொரு பக்கம் இருக்கும், அதுதாம் நெஜம். அத மூடி மறைக்கக் கத்துக்கிட்டவந்தான், ஏமாத்தத் தெரிஞ்சவந்தாம் பெரிய மனுசன், நல்ல மனுசன், மனிதாபிமானிங்கிற பேரெடுக்கிறாம்
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
சிலுவை மாதிரி பெயகளுக்குப் படிப்பு ஒரு வரப்பிரசாதம்தான். மத்தவங்களுக்குச் சரிசமமா ஆகுறதுக்கு இதவிட்டா வேற எதுவும் இல்ல. மானமா, கௌரவமா, மரியாதயாப் பொழைக்கணும்னா படிப்புத்தான் ஒரே வழி. சிலுவைக்கி இந்த புத்தி காலேஜ் வாழ்க்கையிலேயே வந்துவிட்டது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அந்தக் காலத்தில் பிளஸ்டூ எல்லாம் கிடையாது. பிளஸ்டூவுக்கு அப்ப பி.யு.சின்னு பேரு. புகுமுக வகுப்பு என்று தனித்தமிழ்ல சொல்வாங்க. அது காலேஜ்ல இருந்தது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
வீடுகள்ல களவாங்கிறதவிட காடுகரைகள்ல, களத்துல களவாங்குறதுல ஆபத்தில்லையாம். அறுவடைக்குத் தயாரா இருக்குற வயக்காடுகள்ல போயி ராத்திரியோட ராத்திரியா நெல் கதிர அறுத்துக்கிட்டு வந்திருவாங்களாம். பெருமாபாறையில காயப்போட்ட கடலய மூடமூடயாக் கட்டிக் கொண்ணாந்திருவாங்களாம். காவலுக்குப் படுத்திருக்கிற ஆளுக்கு வந்திருக்கிறது விசுவாசம் பார்ட்டின்னு தெரிஞ்சா அப்பிடியே தூங்கிற மாதிரி படுத்துக்கிருவானாம். ஏம்னா ஒருத்தன் கடலய அள்ளி மூடயாக் கட்டிக்கிட்டிருக்கிறபோது, மத்தவன் ஒரு பெரிய கல்லத் தூக்கிகிட்டு காவங்காரங்கிட்ட நிப்பானாம். காவக்காரம் முழிச்சுப் பாத்தா ஒரே போடுதானாம். ரெண்டு மூடக் கடலைக்காக எதுக்கு உசிர உடணும்? பஞ்சாயத்துல ஊர்க்காவல் காடுகாவல்னு ஆளுகளப் போட்டாலும்கூட வெள்ளாம களவுபோறது போயிக்கிட்டுத்தாம் இருந்திச்சு. ஆர்.சி.தெருக்காரங்க களவு ஒரு மாதிரின்னா வத்ராப்பு தேவமார் களவு ஒரு தினுசா இருக்கும். அவங்க ராத்திரி வண்டி கட்டிப் போயி வெள்ளாமய அறுத்துக்கிட்டு வருவாங்களாம். ஏதோ சொந்த வயல்ல அறுவடை பண்றமாதிரிதானாம். மேற்க சீவநேரி கொளத்துப் பாசனம் வரைக்கும் போவாங்களாம். அங்க நாய்க்கமாரு வயல் ஜாஸ்தி உண்டாம். வத்ராப்பு தேவமார்ல ரொம்பப் பேரு கம்யூனிஸ்டுக் கட்சியில சேந்தாப் பெறகு நிலவுடமை நாய்க்கமாரு வயல்கள்ல ராத்திரி அறுவடை செய்யிறது வர்க்கப் போராட்டத்தின் ஒரு தந்திரோமயமாகக் கொள்கை விளக்கம் தரப்பட்டது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டியதற்குப் பதிலடியாக நாய்க்கமார் குலக்குகளின் வயல்களைச் சூறையாடுவது சரி என்று காம்ரேடுகள் விளக்கம் கொடுத்தார்கள். காம்ரேடுகளின் இந்தப் புதுவிதமான தாக்குதல்களிலிருந்து தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக சீவனேரிப்பக்கம் வயல்களின் விவசாயம் பண்ணிய நாய்க்கமார்களில் சிலர் கூண்டோடு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து காம்ரேடுகளானார்கள். அதற்குப் பிறகு நாய்க்கமார் காம்ரேடுகளின் வயல்களை விட்டுவிட்டு மற்றவர்களுடைய வயல்களில் தேவமார் காம்ரேடுகள் அறுவடை பண்ணினார்கள். அதோடு மட்டுமின்றி இன்னும் காம்ரேடுகளாக மாறாத தேவமார்களிடமிருந்து, நாய்க்கமார் காம்ரேடுகளின் வயல்களைப் பாதுகாக்கும் பாட்டாளி வர்க்கக் கடமையும் வந்துசேர்ந்தது!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அந்தப் படத்துல எம்.ஜியாரு நம்பியார்கிட்ட சவுக்கடி வாங்குனது அருவசமாயிருந்துச்சு. ஆனா பெறகு வீர எம்ஜிஆர்கிட்ட நம்பியார் அதே சவுக்கால அடி வாங்கும்போது பெயகளுக்கு ஒக்கார முடியல. நம்பியாரவிட எம்ஜிஆர் சவுக்கால அடிச்சது எண்ணிக்கையில அதிகமா இருந்துச்சு. எண்ணிக்கிட்டே வந்த பெயகளுக்கு அது ரொம்ப ஆறுதலா இருந்தது!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அது சாவான பாவமாகச் சொல்லப்பட்டாலும் அந்தப் பாவத்தைச் செஞ்சுதான் பிரமச்சரியத்தக் காப்பாத்த வேண்டியதாப் போச்சு.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'