Quotes from சிலுவைராஜ் சரித்திரம்

எப்போதும் போலத் தகப்பனார் பஸ்ஸின் வலதுபக்கம் சன்னலோரமாக உக்காந்தார். அம்மைக்கு விசும்பல் பலமாக வரத் தொடங்கியது. சேலைத் தலைப்பை வாய்க்குள் திணித்து அடக்கினாலும் கண்ணீர் மாலமாலயாகக் கொட்டியது. சிலுவைக்குக்கூட அப்போது அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பஸ் புகையைக் கக்கிவிட்டுப் புறப்பட்டது. பஸ் சிலுவக்கல் திருப்பத்தில் வளைந்து மறையும்வரை தகப்பனார் கர்சிப்பை ஆட்டி டாட்டா கொடுத்துக்கொண்டேயிருந்தார். பஸ்போன தூசிமண்டலம் அடங்குவதற்குள் சிலுவை 'பாம் பாம்' என்று ஆரனடித்துக்கொண்டே ஊரைப் பார்க்க பஸ் ஓட்டியபடி ஓடினான். தகப்பன்மீது அவனுக்குக் கொஞ்சங்கூடப் பாசம் இல்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சியை ஒரு சான்றாக அம்மை அவனுக்குச் சொல்லிக் காட்டுவாள்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
முன்னப்போல பாட்டி அடிக்கடி வீட்டுக்கு வரமாட்டாள். மருமவனைக் கண்டு வெக்கமாக இருக்குமாம்! அவளுடைய வெக்கத்தப் பார்த்துச் சிலுவைக்குச் சிரிப்பாக வரும். ஆளப் பார்த்தால் தன் தகப்பனுக்கே பாட்டி மாதிரிதான் இருப்பாள். இந்த வயசில வெக்கத்தப் பாருன்னு கேலி செய்வான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
எறும்புகளில் எல்லா எறும்புகளும் சிலுவைக்குப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் கருப்பு மழை எறும்புகள் மட்டும்தான் பிடிக்கும். மனுசங்களக் கடிக்காது. கைகால், ஒடம்பு மேலே ஏறி ஓடும்போது கூச்சமா இருக்கும். அதுகளுக்குச் சித்தெறும்புக் கெணக்கா ஒரு வரிசையில் போகத் தெரியாது. ஓடையில் மந்தையாகப் போகிற ஆடுமாடுகளப் போலத்தான் திகிடு முகிடாகப்போகும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
பாட்டியை ஆர்.சி. தெருவில் பேத்தி என்றுதான் கூப்பிடுவார்கள்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ஸ்கூலில் கணக்குப் பாடத்துக்குப் பதிலாக சிந்துபாத் கதையும், சித்திரக்குள்ளன் கதையும் பாடமாக இருந்தால் எப்பிடியிருக்கும்? சிலுவைக்கு இந்தக் கற்பனை ரொம்பப் பிடித்திருந்தது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
இப்பிடிப் பொம்பள வேசங்கட்டி நடித்தால் நாளப்பின்ன கூடப்படிக்கிற பயல்கள் தன்னை உர்ரிக்காட்டுவார்களே என்று சிலுவைக்குச் சங்கடம்தான். 'புறமுதுகிட்டு ஓடினான் என்மகன் என்று உன்மத்தர்கள் உரைத்தது உண்மையானால், அவனுக்குப் பாலூட்டிய என் மார்பை அறுத்தெறிவேன்.' என்ற வசனத்தை மேடையில் முழங்கி விட்டு நாளைக்குப் பயல்களின் கிண்டலிலிருந்து தப்ப முடியுமா? சிலுவை யோசித்தான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
நாடகம் தொடங்கும்போது தெருவில் 'வீட்டுக்கோர் ஆண்மகன் நாட்டைக் காக்கப் புறப்படுக!' என்று அறிவித்துத் தண்டோராப் போடுவதற்கு வேசப் பொருத்தம் பார்த்துக் கொண்டிருந்த கட்டவாத்தியாரின் தேர்வு ரொம்ப இயல்பாகச் சிலுவையாக இருந்தது! தன்னைத் தப்புக்கொட்டி வளசல்காரன் என்று சும்மாதான் கேலி பண்ணுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்த சிலுவைக்குக் கட்டவாத்தியாரின் தேர்வு சுருக்கென்று குத்தியது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அவன் ஜெபம் வாசிக்கிறானா அல்லது அவனை ஜெபம் வாசிக்கிறதா என்று நிதானித்து அறிய முடியாதபடி அப்பிடியொரு வேகத்தில் வாசிப்பான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ஜான் கிறிஸ்துமஸீக்குக் கருப்புச் சட்டை போட்டு வந்தான். அவன் சட்டை போட்டிருக்கிறானா என்பதைத் தொட்டுப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். ஆள் அப்படியொரு கருப்பு.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
எங்க சாமி படத்த ஏன் சார் இப்பிடிக் கிழிச்சீங்க. ஒங்க சாமி படத்தக் கிழிச்சா சும்மா விடுவீங்களா?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'