நியூட்டனின் மூன்றாம் விதி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நியூட்டனின் மூன்றாம் விதி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.2/5 · 100+ ratings

N/A

Reviews

user_11758

★ 4/5
Sariyaga vilakapattathu Newtonin moondram vidhi...

user_11757

★ 3/5
அடைகாத்து வைத்திருக்கும் புத்தக மூட்டைகளை பேப்பர்காரனிடன் போட்டால்தான் நான் உருப்படுவேன்.✨

user_11756

★ 4/5
Wonderful book for tamil beginners,Consists of small poems ✨️ 😊

user_11755

★ 3/5
பொதுவாகவே நா.முத்துக்குமாரின் கவிதைகளில் எளிய மனிதர்கள் அதிகம் உலாவுவார்கள்; பால்ய காலத்தின் மீதான மீள்வாசிப்பு இவரின் கவிதைகளில் அதிகம் தென்படும். முதியவர்களை அல்லது குழந்தைகளை,மிக நெரிசலான வேளையில், கைபிடித்து சாலையை கடக்க உதவும் மென்தன்மையும் பொறுப்புணர்வும் போன்றதுதான் நாமுவின் கவிதைகள் என்று நம்புகிறேன். இதனை 'இன்று செய்த சமூக சேவைகள்' என்ற கவிதையில் அதிகம் உணர முடிகிறது.

user_11754

★ 4/5
சொற்கள், ஒரு மயக்கத்தை முன்வைத்து ஒன்று கூடும் போது கவிதையாகிறது. நா. முத்துக்குமாரின் கவிதைகள் ஒவ்வொன்றும் மயக்கத்தை தர கூடியது. இவரிடம் எனக்கு பிடித்த ஒன்று கற்பனையான உலகில் உவமைகளை கொண்டு அழகை வர்ணிப்பது என்றில்லாமல். தன் வீடு, வீட்டிலிருக்கும் மனிதர்கள், அக்கா, அம்மா,தம்பி, வீதி, மாடி வீட்டுக்காரன், கோவில்கோபுரம் என இவர் வாழ்ந்த வாழ்க்கையை எதார்த்த கவிதையாய் எழுதுவதே. பெண்கள் குறித்தும், குழந்தைகள் குறித்தும் இந்த புத்தகத்தில் இரக்கமும் அவலமுமாய் நிறைய எழுதி இருக்கிறார். நியூட்டனின் மூன்றாம் விதி, அக்காவின் கடிதம், களவு, ஐந்து கட்டளைகள் இவை இந்த தொகுப்பில் எனக்கு பிடித்தவை.

user_11753

★ 3/5
“தன் காயங்களைக் காட்டி,கவிதை என்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.காயங்கள் யாரிடம் இல்லை?வாசகர்கள் கவிஞர்களிடம் வேண்டிவது காயங்களை அல்ல,மருந்துகளை.”நா.முத்துக்குமாரின் 23 கவிதைகள் கொண்ட இக்கவிதை தொகுப்பில்,தபூ சங்கரின் இந்த முன்னுரை வரிகள் என் மனதில் பதிந்தது. Read more…

user_11752

★ 3/5
கவிதைகளின் எளிமையான மொழிநடையும் ஆங்காங்கே இழையோடுகின்ற மெல்லிய நகைச்சுவையும், மெல்லிய சோகமும் ரசிக்க வைத்தன. ஆனால் கவிதைகளின் கருக்களும் அவை சொல்ல வரும் விடயங்களும் ஏற்கனவே பல கவிதைகளில் நாம் வாசித்தவையே.

user_11751

★ 4/5
இன்னும் பிற கவிதைகளை வாசிக்க தூண்டுகிறது நா. முத்துக்குமார் அவர்களின் எழுத்து. முதல் முறையாக கவிதை புத்தகத்தை படிக்கநேர்ந்தது. கவிதைகள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து ஒதுங்கியிருந்தேன் அதன் காரணமாக பல நல்ல கவிதை தொகுப்புகளை படிக்காமல் விட்டுவிட்டேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

user_11750

★ 4/5
புத்தகம் : நியூட்டனின் மூன்றாம் விதி கவிஞர் : நா. முத்துக்குமார் பக்கங்கள் :64 பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் இது நா. முத்துக்குமார் அவர்களின் படைப்புகளில் நான் வாசிக்கும் மூன்றாம் படைப்பு, இரண்டாவது கவிதை தொகுப்பு. அவர் எழுத்துநடையில் அதிகம் என்னை ஈர்த்தது எதார்த்தம் தான். ஏதோ ப��ந்து விரிந்த ஒரு பெரிய கருத்தை புரியாத பாஷையில் எழுதி கவிதை என்று நம்மை தலையை சொரிய வைக்காமல், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து வந்த, திரும்பி பார்க்கும் இயல்பு கணங்களை அழகு தமிழில் வார்த்தைகள் கோர்த்து கவிதை செய்திருக்கிறார். "முன்புக்கு முன்பு, நேற்றுக்கும் நேற்று" போன்ற வார்த்தைகள் தான் எத்தனை அழகு!! கிராமத்து வாழ்க்கையும், பின் நகர வாழ்வுக்கு இடம் பெயர்ந்த மாற்றமும், ஏக்கமும் அவர் எழுத்துகளில் நன்றாக புலப்படுகின்றன. எல்லா கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் ஈர்த்ததிருந்தாலும், கடைசி கவிதையின் கடைசி வரிகள் மட்டும் மனம் விட்டு நீங்க மறுக்கின்றது. "அடைகாத்து வைத்திருக்கும் புத்தக மூட்டைகளை பேப்பர்காரனிடம் போட்டால்தான் நான் உருப்படுவேன்!!!" இப்படி மாறுபட்ட எண்ண ஓட்டங்களின் தொகுப்பே இந்த நியூட்டனின் மூன்றாம் விதி!!!

user_11749

★ 5/5
"நியூட்டனின் மூன்றாம் விதி" நா . முத்துக்குமார் ------------------------------------------- திரு நா. முத்துக்குமாரின் கவிதைகள் வாசிக்கும்போது நம்மையறியாமல் ஒரு வறட்சி புன்னகை மலர்ந்து மறைவதை தடுப்பதற்கில்லை. அப்படியான சிறுகவிதைகளின் தொகுப்பு இப்புத்தகம் . நமது கிராமங்கள் ஊடேயும், தெருக்கள் ஊடேயும், வீடுகளுக்குள்ளும் புகுந்து, யதார்த்தமான வாழ்க்கையை அழைத்துவந்து அதன் சாரத்தையும் விசாரத்தையும் கைநிறைய அள்ளிக் கொட்டிவிட்டுப் போகிறது. நகைச்சுவையும் வலியும் ஒருங்கே தரவல்ல ஆழமான கருத்தியல்களை கவிதைகளாக கொண்டுள்ளது . சில கவிதைகளின் வரிகள் ஆழமானது அழுத்தமாக மனதில் பதியக்கூடியது. புன்னகைக்கவும் துயரப்படவும் ஆழ்ந்துபோகவும் ஏராளம் உள்ளன இக்கவிதைகளில். சில கவிதைகளின் தலைப்புக்களும், அதை பற்றிய சிறு குறிப்புகளும்: "நியூட்டனின் மூன்றாம் விதி" - மாடியில் குடியிருப்பவன் தன் தரைதளம் மூலம் கீழ்த்தளத்தில் இருப்பவனுக்கு தரும் சப்தங்கள். அதற்கு கவித்துவுமாய் கீழ்தளக்காரன் ஆற்றும் எதிர்வினை. "வெண்டைக்காயில் ஒளிந்தவர்கள்" - பதின்ம சிறுவனின் பார்வையில் வெண்டைக்காயுடன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் உண்டான தொடர்பை சொல்கிறது. "அனுமதி இலவசம்"* - இருபது வருடங்களுக்கு முன்பு வரை, இறப்பையும் அதை ஒட்டிய இறப்பு வீட்டு நிகழ்வையும் வீடியோ காட்சிப் பதிவு செய்வது வழக்கம். வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் பார்ப்பதற்காகவாம். கல்யாண வீடியோ காசெட்டுகளை சாவகாசமாய் ஒரு மாலையில் பார்ப்பதை போல இறப்பு நிகழ்வையும் பார்க்க அனுமதி இலவசம் என்கிறது. "நூறு வருடப் பொறுமை" * - ஒல்லியானவன் ஊதிப் பெருக்க எண்ணும் ஏக்க புலம்பல். "மலையாளம் கலர்(பகல் காட்சி மட்டும்) "* - 18+திரைப்படத்தைத் திரையில் பார்த்தவனின் மனவோட்டம். "கெட்டாலும் மேன்மக்கள்" - கிராமத்தில் ஈசல் சமைத்து உண்டவன், நகர வாழ்க்கையில் அது வாய்க்காது போனதின் உள்ளக்கிடக்கையை சொல்கிறது. "அஃறிணையாளர் சங்கத்திலிருந்து ஒரு வேண்டுகோள்"* - திருவாளர் ஒயின்ஷாப் வாடிக்கையாளாரின் மிக்ஸிங் அளவிற்கு, (துடைப்ப குச்சிக்காக) ஒயின்ஷாப்பின் துடைப்பங்கள் மெலிகிறது என அஃறிணையாளர் சங்கத்திலிருந்து புகாராக ஒரு அறிக்கை. "வெளிநடப்பு"* - வயிறுவலிக்கு காவி நிறமா?, கம்யூனிஸ்ட் நிறமா? எந்த நிற மருந்து என குழம்பி சென்ற கடவுளின் வெளிநடப்பை பற்றி. "ஐந்து கட்டளைகள்" - ஐந்து ஆசைகள், கட்டளைகளாக(1. குடிகார தகப்பனின் மகன் தோள்வலிமை பெற , 2. ஆடு மேய்ப்பவன், தான் தொடரமுடியாத கல்வி ஞாபகத்திற்கு வராமலிருக்க, 3. பறக்கும் பட்டங்கள் மின்கம்பிகளில் சிக்காமலிருக்க, 4. பனங்காட்டு பழம் எடுக்க பாம்புகள் மடிந்திருக்க, 5. கணவனிடம் கோபித்து தாய் வீடு செல்லும் மனைவிகளின் கையிலுள்ள குழந்தைகள் தங்கள் எதிர்காலம் குறித்து பயப்படாமல் இருக்க. "களவு" - மாடு களவானதா? அல்லது தானே தொலைந்ததா? என தேடும் படலம் "குழந்தை மாமாக்கள்"* - மாமாக்களின் காதல் தூதாகும் குழந்தைகள். கடிதம் கொடுக்கப்பட்ட அக்காகளை விட மாமக்களே குழந்தைகளின் பிரியமானவர்கள். காதல் தோல்வி குறித்தும் கடைசி வரி(லி)களில். "உறுப்பு நலன் அறிதல்" - காலைக்கடன் கழிக்க வந்தவர்களின் உறுப்புகள் கண்டு அதிர்ந்து குழம்பும் குளமும் நீர்கோழியும். " செய்முறை" - சாக்லேட் உறைகளில் உருவாக்கப்படும் பொம்மைகள் பற்றியும் பெண்ணாய் பிறந்தவளின் புலம்பல் பற்றியும். "காந்தி ரோடு"* - எல்லா ஊரிலும் உள்ள இப்படி ஒரு ரோடில் நடக்கும் கீழ்ப்படிநிலை சமூக சம்பவங்கள். "அக்காவின் கடிதம்"* - திருமணமான அக்கா தனது கையறுநிலை வாழ்க்கை குறித்து எழுதும் கடிதம்., வலியுடையதாய் இருப்பினும் நலமாய் இருக்கிறேன் என்று முடிக்கிறாள். "இன்று செய்த சமூக சேவைகள்" - தான் செய்த சிறு உதவிகளுடன் தான் எழுதிய புத்தகத்தை வெளியிடாததையும் சேவையாக சொல்கிறது. "உனக்கும் எனக்கும் புரியாத கவிதை" - புரியாத புதிர் கவிதை கடவுளை வைத்து. "கிராமந்தோறும் விஞ்ஞானம்"* - திருவிழாவில் தெருக்கூத்துக்கள் அருகி வருவதை வலியுடன் பகிர்கிறது. "காதல் 2000"*- தோழியிடம் தன் அவல நிலையை கூறி , காதலனை வந்து அழைத்து சொல்லும்படியான, காதலியின் வலிகளை சொல்கிறது. "இடம் சுட்டி பொருள் விளக்கம்"* - கரும்பு லாரியை பற்றிய உருவகம். "பிறழ்வு" - அன்னையை அண்ணி என விளிக்கும் கூட்டு குடும்ப பழக்கங்கள். "இப்படிக்கு உறவுகள்"* - தன்னுடைய மடத்தனத்தை நொந்துகொண்டவனின் புலம்பல். * - நம்மை வெகுவாக கவர்ந்த கவிதைகள்.

user_11748

★ 5/5
நியூட்டனின் மூன்றாம் விதி❤️ நா. முத்துகுமார் அவர்களின் எழுத்துக்கள் யாருக்கு தான் பிடிப்பதில்லை? மனம் துவண்டு போகும் போதெல்லாம் நான் வாசிப்பிற்காக தேர்ந்தெடுப்பது இவரைதான், இவரின் எழுத்துக்கள் தான். இது ஒரு கவிதை தொகுப்பு புத்தகம், ஒரு கவிதை வாசிக்கும் போது, "எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதோ" என்று நம்மை வாய் பிளக்க செய்து, சிந்திக்க வைப்பது தானே கவிதைகளின் அழகு. அவ்வகையில் முத்து அண்ணனின் கவிதைகள் எப்பொழுதும் மனம் வருடுபவையாக, சிரிக்க, சிந்திக்க வைப்பவைகளாக தான் இருக்கிறது! புத்தகத்தின் வாசிப்பு எனக்கு ஒரு "Quick bite" ஆக அமைந்தது🦋

user_11747

★ 4/5
புத்தகம்: நியூட்டனின் மூன்றாம் விதி எழுத்தாளர்: நா. முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள்: 64 நூலங்காடி: Bookwards விலை: 80 💫 மண்ணை விட்டு பிரிந்தாலும் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள கவிஞர் நா. முத்துக்குமாரின் கவிதை புத்தகத்தோடு இந்த ஆண்டின் வாசிப்பு ஆரம்பமாகிறது. 💫 எனக்கு மிகவும் பிடித்த கவிதை : குழந்தை மாமாக்கள் மற்றும் அக்காவின் கடிதம். எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் நம் சமூகத்தில் பெரிதும் கொண்டாடப்படும் உறவு - தாய் மாமா. திருமணமாகி புகுந்த வீடு சென்ற அக்கா, பிறந்த வீட்டிற்கு எழுதும் கடிதம். தன் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களையும் பிறந்த வீட்டை நினைத்து ஏங்குவதையும் பார்க்க முடியும். 💫 "அடைகாத்து வைத்திருக்கும் புத்தக மூட்டைகளை பேப்பர்காரனிடம் போட்டால் தான் நான் உருப்படுவேன்! 💫 ஆதவன் முத்துக்குமாரின் அறிமுக கவிதை புத்தகத்திற்கு கூடுதல் சிறப்பு. புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி வாசிப்பை நேசிப்போம்
Genres
Shelves
book Poetry Na. Muthukumar

More like this


The Four Hundred Songs of War and Wisdom

Translator: George L. Hart III Translator: Hank Heifetz

Two prominent translators present the first complete English-language edition of one of India's greatest works of classical the Purananuru. This a…

4.2/5 · 100+ ratings

அணிலாடும் முன்றில்

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

4.2/5 · 100+ ratings

குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்பு…

4.2/5 · 100+ ratings

கண்பேசும் வார்த்தைகள்

காதலும் காற்றும் கதவைத் தட்டி அனுமதி கேட்டுவிட்டு உள்ளே வருவதில்லை. காற்று நுழையாத இடத்தில்கூட காதல் நுழைந்துவிடும். ஒரு வழிப்போக்கன்போல் வரும் காதல், உரிமையாளன்போல் வீட்…

4.2/5 · 100+ ratings

வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …

4.2/5 · 100+ ratings

Devathaigalin Devathai

Tamil Poetry

4.2/5 · 100+ ratings

தாகங்கொண்ட மீனொன்று

பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது. ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் …

4.2/5 · 100+ ratings

Thiruthi Ezhuthiya Theerpugal

Author: Vairamuthu

Puthukavithaiyin aatral...

4.2/5 · 100+ ratings

மழைப் பேச்சு [Mazhai Pechtu]

வாழ்வின் இன்பமான தருணங்களை இளமைக்குள் ஊடுருவி, இந்த நூலை உயிர்ப்போடு தருவித்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. பழுத்த முனிவர்போல் தேகங்களின் விளையாட்டுகளை கலை நயத்தோடு கடல…

4.2/5 · 100+ ratings

The Book of Desire

'I invite you, dear reader, to enter this beautiful world. I invite you to fall in love.' The Book of Desire is the award-winning writer Me…

4.2/5 · 100+ ratings