Select a cover image
Searching for images...
Saving cover image...
கிடை
Kidai
- பக்கங்கள்
- 64
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- First Edition
- ISBN-13
- 9789386820402
- ASIN
- B09DKBNN8Q
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கல் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இருக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் 'கிடை'தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகர…
user_7748
★ 4/5மிகவும் கிராமத்து கரிசல் நிலத்தை கடந்து செல்லும் உணர்வு ஏற்படும். இதில் வரும் செவனி கதாபாத்திரம் மிகவும் மனதை உலுக்கச் செய்யும். இது ஒரு குறுநாவல், கி.ராவின் படைப்பில் மிகவும் அற்புதமான படைப்பு. படிப்பதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும்.
user_7747
★ 5/5கரிசல் காட்டு வழக்கங்கள் நிறைந்த கதை. சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற கவலை மட்டுமே. நாயக்கர் சமுதாய மக்கள் கிடை போடுவார்கள் என்பதை இதிலிருந்து அறிந்தது மிக ஆச்சரியமாக இருந்தது.
user_7746
★ 4/5இந்த ஆசிரியரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவரின் படைப்பை இப்போதுதான் வாசிக்கிறேன். மொழி, குறிப்பாக வட்டார வழக்கு, வர்ணனைகள், கதைக்களம், உட்கதைகள் மற்றும் அதில் உள்ள நுணுக்கங்கள், விவரங்கள் - எல்லாம் அருமை. ஐந்து நட்சத்திரத் தகுதி. முடிவு மட்டும் சற்று திருப்தியளிக்கவில்லை. தமிழ் இலக்கிய ரசிகர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
user_7745
★ 4/5மேய்ச்சல் வாழ்க்கை நடத்தும் மக்களின் மொழி, பழக்கவழக்கங்களை விவரிக்கிறது. வட்டார மொழியை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருந்தாலும், கி.ராவின் புத்தகங்களை படிக்கும்போது அவரே நம் அருகில் அமர்ந்து தாத்தா போல் கதை சொல்வது போல் இருக்கும். அவரை ஒரு முறையாவது நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
user_7744
★ 5/5ஒரு சுவாரசியமான குறுநாவல். மூடநம்பிக்கையை எதிர்ப்பு காட்டி, அது உருவாகும் காரணத்தையும் பரவும் விதத்தையும் சொல்கிறார் கி.ரா. பேயை சாக்கு சொல்லி கலவாடும் விதம், ஒரு பெண்ணின் நிலை அறியாது அவளுக்கு பேய் ஓட்டும் கொடுமை.
கிடையை மையமாக வைத்து கி.ரா சொல்லும் கருத்துகள் சிறப்பும் இயல்பும் உடையதாய் உள்ளன. கதை முடிவில் செவனிக்கு இழைக்கப்பட்ட அநீதி கண்டு மனம் விம்மும்.
Shelves
More like this
கோபல்லபுரத்து மக்கள்
கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் படைத்த இந்த நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சாதாரண மக்களின் வாழ்வியலை மிக அழகாகப் பதிவு செய்கிறது. 'கோபல்ல கிராமம்'…
Where Are You Going, You Monkeys?
This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1
பதினாறு வயதில் கைம்மை பூண்ட கௌரிப் பாட்டி ஒரு கொளுத்தும் வெயிலில் நடந்து வருவதிலிருந்து தொடங்கும் இந்தத் தொகுப்பு, யுக சந்தியில் நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் மனிதர்களை ஒவ்வ…
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
ரிஷி மூலம்
மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு…
சோற்றுக்கணக்கு
அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…
Pudhumaipithan sirukadhaigal
தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்படும் படைப்பாளியின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். 1930 மற்றும் 40-களில் எழுதப்பட்ட இக்…
ஆயிஷா
கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நா…