மலை வாசல் [Malai Vasal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மலை வாசல் [Malai Vasal]

None

3.73/5 · 100+ ratings

Historical Based Fiction Written By Sandilyan

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_21216

★ 5/5
ajithchandran's character is just lovable. the book gives us insight about the happenings during that period.

user_21215

★ 4/5
Diplomacy matters!

user_21214

★ 5/5
Fictional characters take up the main role, yet historical figures, events and facts are intact. The author always provide an interesting plot with imaginative characters to the history with utmost importance, evidence, moral values and captivating writing style.

user_21213

★ 3/5
Disappointed with Chitra Devi character, as described initially about her, thought she will be powerful/vital character to the novel but she did nothing throughout the end😞The book is all about Political Strategy between 2 powerful parties to secure and extend their territories.

user_21212

★ 4/5
இந்த நாவல் சாண்டில்யனின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் காட்டாறு போல் வேகமாய் நகர்கின்றது நாவல்.வர்ணனைகளை அதிகளவு நீட்டாமல் அளவோடு சாண்டில்யன் பாவித்திருப்பதனால் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.அஜித் சந்திரனின் பாத்திரப்படைப்பு சூப்பரோ சூப்பர்.

user_21211

★ 4/5
Super story..the Ajith chandran plan and strategy to save his kingdom is super...sandiliyan always fulfill our expectation... historical lovers just go ahead.

user_21210

★ 4/5
1956 novel ....don’t miss

user_21209

★ 4/5
அஜித் சந்திரனின் பாத்திரப்படைப்பு அருமை, கடல் புறாவில் இளைய பல்லவன் கதாபாத்திரத்தை நியாபகப்படுத்தியது. கதை தொடங்கியதில் இருந்து பல கேள்விகள் எழுந்தாலும் முடிவில் ஒவ்வொன்றிற்கும் அதன் முடிச்சியை அருமையாக அவிழ்த்து உள்ளார் சாண்டில்யன் அவர்கள் ❤️ சாண்டில்யன் கதைகளில் வரும் வர்ணிப்புகள் இதில் குறைவு ஆகையால் கதை எங்கும் தொய்வில்லாமல் சென்றது... கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை படிக்கலாம்

user_21208

★ 5/5
குப்த ராஜியத்தைக் காப்பாற்றுவதற்கும், நிலைப்பதற்கும் கையாண்ட ராஜதந்திரங்கள், தெளிவான அனுகு முறைகள், அஜித் சந்தரனின் புத்திக் கூர்மை, எதிரிகளைக் கையாண்ட விதம், ஆபத்து நேரிடும் காலங்களில் தன்னைக் காக்க ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் எடுத்துக் கொண்ட முயற்சி என்று நிறைய சொல்லிக் கொண்டேப் போகலாம். விருவிருப்பக்குக் குறைவு இல்லை. இந்த நாவலின் இறுதி அத்தியாயம் சற்று லாவமாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை.

user_21207

★ 3/5
A very good (Espionage, war plan) plot! Ajith chandran is a lovable character! The final chapter with full twist is the highlight! It was like Agatha christie novel's twist. My first Sandilyan's read :)

user_21206

★ 4/5
இரண்டு இராஜதந்திரிகளுக்கிடையேயான போராட்டம் திடிர் திடிர் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக இருந்தது. அஜீத் சந்திரன் - துர்காதேவி காதல் வளர்ந்தவிதம், அவர்களின் உணர்வுகள் கண்முன் நடப்பதைப் போல் கூறப்பட்டுள்ளது. துர்காதேவியின் பெயரை என் சரித்த அழகிகள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன்.

user_21205

★ 5/5
ராஜ்ஜிய எல்லையை விஸ்தரிப்பதில் மன்னன் கையாளும் திட்டகளை விட எதிரிகளிடம் தன் எல்லையை விட்டுகொடுக்காமல் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கு மன்னன் தீட்டும் நுணுக்கமான திட்டங்களும் அறிவான சதிகளுமே நாட்டைக் காக்கும் அரணாகிறது. நாடோடிகளான ஹுணர்கள் தன் கொடும் அழிப்புகளின் மூலம் பாரதத்தின் எல்லையில் இருக்கும் மக்களைக் கொன்று அந்நிலத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது குப்த சாம்ராஜியத்தை அழிவின் பாதையில் செலுத்துகிறது. கட்டுப்பாடுகளே இல்லாத ஹுணர்களை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற திட்டத்துடன் குப்த ராஜ்ய சேனாதிபதியான அஜித் சந்திரன் தானே ஹுணர்கள் ஆளும் பகுதியான மலைவாசலில் போரிட்டு தோற்று அடிலனிடம் கைதியாகிறான். அடிமை காலத்தில் அஜித் சந்திரனின் அறிவு அடிலனின் மகளான சித்ராதேவிக்கு அவனை உபாத்தியாயராக்குகிறது.இரண்டு வருடங்கள் அவளுக்கு கல்வியைப் போதித்தவனின் மனதில் அவள் மீது காதலும் எழுவதால் அதுவே அவனைக் கொல்லும் முயற்சிக்குக் காரணமாகிறது. தன் உயிரை காப்பாற்றிய சித்ராதேவியை மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பிறகே சந்திக்கிறான் அஜித் சந்திரன். மலைவாசலில் இருந்து தப்பித்தவன் ஹுணர்களின் மற்றொரு தலைவனான தோரமானாவிடம் உபசேனாதிபதியாகப் பணியாற்றுகிறான். குப்த மன்னனா ஸ்கந்தகுப்தன் நாட்டைக் காக்க தொடர் போரில் ஈடுபட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதுடன் நாட்டின் செல்வமும் குறைந்து போய்ப் படைகளைத் திரட்ட கூடச் செல்வம் இல்லாத நிலையில் தவிப்பதை சரிசெய்யத் தோரமானாவிடம் இருந்து சந்தேகம் வராமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்வங்களைக் குப்த ராஜ்ஜியத்திற்கு அஜித் சந்திரன் அனுப்பி வைக்கிறான். தன் மகனை அரசனாக்க வேண்டும் என்று சிற்றன்னையான ஆனந்த தேவி தீட்டும் திட்டங்களையும் முறியடிக்க வேண்டிய கட்டாயமும் உடல்நலம் குன்றிய ஸ்கந்தகுப்தனுக்கு நேருகிறது. அஜித் சந்திரனை மையமாக்கி அவனைச் சுற்றியே எதிர்காலக் குப்த ராஜ்ஜியம் இருப்பதாக விளையும் சம்பவங்களில் தன் அறிவை துணையாக்கி எதிரிகளிடம் இருந்து கொண்டே அவர்களின் நடவடிக்கைகளைத் தடுத்துக் கொண்டு தன் காதலையும் வளர்த்து கொண்டுவருபவனுக்கு நெருக்கடிகளும் நிகழ்கிறது. ஹுணர்கள் வம்சம் என்றாலும் மற்றவர்களைப் போல் அல்லாமல் மக்களிடம் ஹிந்து தர்மத்தின்படி நடக்கும் தோரமானாவிற்கு அஜித் சந்திரனின் சூழ்ச்சிகள் தெரிய வருகிறது.நேரடியாக அவனைக் கொல்லாமல் சட்டத்தின் முன் அவனைத் துரோகியாகக் காட்ட தன்னிடம் வேலை செய்யும் பல்தேவ்வின் மூலம் காய்களை நகர்த்தினாலும் உபாத்தியாயரின் புத்திசாலிதனமே வென்று தோரமானாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது குப்த ராஜ்ஜியத்திற்குச் சில ஆண்டுகள் ஆசுவாசம் கொள்ள வகை செய்கிறது. முக்கியக் கதாபாத்திரம் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் பின்னும் சூழ்ச்சி வலைகள் அஜித் சந்திரனின் வாளாலே கிழிபட்டுப் போகிறது. சுவாரசியங்களின் தொகுப்பாக மாறிவிடுகிறது மலைவாசல் புதினம்.
Shelves
Sandilyan book சண்டில்யன் Fiction Historical Fiction

More like this


வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…

3.73/5 · 100+ ratings
Check Price

கடல் வேந்தன் [Kadal Vendan]

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

3.73/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்

அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …

3.73/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்

சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …

3.73/5 · 100+ ratings
Check Price

கொலையுதிர் காலம்

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…

3.73/5 · 100+ ratings
Check Price

வெக்கை

சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேரமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி. - சுந்தர ராமசாமி சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக மு…

3.73/5 · 100+ ratings
Check Price

கோபல்ல கிராமம்

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெ…

3.73/5 · 100+ ratings
Check Price

மீண்டும் ஜீனோ-1

முற்றிலும் விஞ்ஞானமயமாக்கப்பட்ட வேறொரு உலகம், அந்த உலகத்தை ஆளும் பொம்மை ராணி நிலா. அவளைப் பின்னாலிருந்து ஆட்டுவிக்கும் ரவி, மனோ இருவர் கையில் ஒட்டுமொத்த அதிகாரமும் இருக்…

3.73/5 · 100+ ratings
Check Price

நீலவல்லி [Neelavalli]

Historical Based Fiction Written By Sandilyan

3.73/5 · 100+ ratings
Check Price

உடையார் - பாகம் 2

தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அளப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில் மிக…

3.73/5 · 100+ ratings
Check Price

பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று

Kalki is very famous for his historical novel Ponniyin Selvan. He has also written many social novels.

3.73/5 · 100+ ratings
Check Price

ஜல மோகினி

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரபிக்கடல் பிராந்தியத்தில் நிலவிய அரசியல் சூழலையும், கடல்வழிப் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டுள்ளது.…

3.73/5 · 100+ ratings
Check Price