பந்தயப் புறா [Pandhaya pura]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பந்தயப் புறா [Pandhaya pura]

None

4.08/5 · 95 ratings

பந்தயப் புறா- திருநிறைச் செல்வியா, திருவளர் செல்வியா, அவள் நெஞ்சில் பதிந்து நிறைந்து விட்டாள். பிற்பட்ட வகுப்பு (B.C.) கட்டுப்பாடான குடும்பத்துப் பெண் ஒருத்தி- மற்றவர்களின் வாழ்க்கை முறைகளையும், பறந்து திரிபவர்களையும் பார்த்து தானும்- மேலே மேலே பற பற... எனத் துடிப்பது- மீன் குழம்பும், மிளகு ரசமும் மட்டும் வாழ்க்கை அல்ல எனப் புரிந்து எழுவது? ஓர் அற்புதமான படைப்பு. ஒரு கதாசிரியனின் கதைகளைப் படித்து…

Reviews

user_21098

★ 4/5
Amazing writer Mr.Balakrishnan i got all the collections of your books

user_21097

★ 5/5
Pengal kandippaga padikka vendiya kadhai.. adhai vida aangal padika vidiya kadhai..

user_21096

★ 5/5
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன். பந்தயப் புறா புத்தகம் தான் நான் முதன்முதலில் படித்த நாவல். எனக்கு 12 வயது இருக்கும் போது இந்த புத்தகத்தை படிக்குமாறு என் தாத்தா எனக்கு பரிந்துரை செய்தார். அன்றைய மெட்ராஸ், கட்டுப்பாடான, நடுத்தர குடும்பத்தில் தாய், தந்தை இல்லாமல், அண்ணனின் ஆதரவில் வளரும் செல்வி தான் கதை நாயகி. ஒரு எழுத்தாளரின் கதைகளைப் படித்து முற்போக்கான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு செல்வி எவ்வாறு வாழ்வில் வரும் தடங்கல்களை வெற்றி கொள்கிறாள் என்பதே இக்கதை. 1980களில் வெளி வந்த இந்த கதை, பெண் ஏன் வேலைக்கு செல்லக் கூடாது? ஏன் வண்டி ஓட்டக் கூடாது? போன்ற கேள்விகளைக் கேட்டு சிறைப் பறவையாய் இருந்த பல பெண்களுக்கு சிறகடிக்க கற்றுத் தந்தது. சிறகடிக்க வேண்டும் என ஆசை படும் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கதை. ஆண்களை கதை நாயகர்களாக வைத்து கதை எழுதப் பட்ட கால கட்டத்தில் பெண்ணியம் பேசியவர் பாலகுமாரன்.

user_21095

★ 5/5
Flying colurs

user_21094

★ 5/5
Most excellent novel after reading this I been addicted to Bala writing

user_21093

★ 5/5
Book 11 of 2024- பந்தயப்புறா Author- பாலகுமாரன் “மனிதன் கண்டு பிடித்த ஆயுதங்களில் மிகக் கொடூரமான ஆயுதம் வார்த்தைதான்.” மாதம் ஒரு பாலகுமாரன் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை தொடங்கி போன மாதம் நான் படித்த புத்தகம் தான் இது. செல்வியை பற்றிய கதை இது. அவளுக்கு மூன்று அண்ணன்கள்,சிறு வயதிலே தாய் தந்தை இறந்ததால் அண்ணன்கள் தான் எல்லாம். பெரிய அண்ணன்,அண்ணியோடு தான் செல்வி வளர்கிறாள். அண்ணிக்கு திடீரென உடலில் ஒரு பிரச்னை, குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் அறிவிக்க, அண்ணியின் தவிப்பு செல்வியின் மீது கோவமாய் மாறுகிறது. இது ஒரு புறம்! அவர்களின் எதிர் வீட்டில் அந்த கணவன் மனைவியை அநாகரிகமாய் நடத்தும் விதம்..இப்படியான சூழலில் தான் செல்விக்கு திருமணம் வேண்டாம்,படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவள் ஆசை நிறைவேறியதா என்பது தான் கதை. இதில் எந்த கதாபாத்திரத்தையும் இவர் தான் நல்லவர்,இவர் தான் கெட்டவர் என சொல்லவே முடியாது. சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கிறது.”அகல்யா” புத்தகம் படித்தப்பின் எல்லாருக்குள்ளும் இருக்கும் கேள்வி தான் இந்த புத்தகத்தின் தொடக்கம். “சிவசு” போன்ற ஆண்கள் நிஜத்தில் உண்டா என யோசித்து, தான் சந்திக்கும் எல்லா ஆண்களிலும் சிவசுவைத் தான் தேடுகிறாள். இந்த குடும்பத்தில்,பெண் ஏன் வேலைக்கு செல்லக் கூடாது? ஏன் வண்டி ஓட்டக்கூடாது எனத் தொடங்கி அத்தனை தடைகளையும் தாண்டி, அவள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி பல பெண்களுக்கும் ஊக்கமளிக்கும். கதை விறுவிறுப்பாக நகர்கிறது.இந்த புத்தகம் எழுதப்பட்ட நாளில் இது way ahead of time என்பதில் சந்தேகமில்லை. சாதி,மதம்,இனம்,பால்,சமுதாய வேறுபாடு என எல்லாவற்றையும் ஒரு கதையில் உள்ளடக்கியிருக்கிறார் பாலகுமாரன். இதை படிக்கும் எல்லாருக்குமே சிறகு விரித்து கனவுகளை நோக்கி பறக்க ஆசை எழும்!

user_21092

★ 4/5
பந்தயப் புறா-பாலகுமாரன் "எழுத்து சித்தர்" பாலகுமாரன் அவர்கள் 1980- களில் எழுதிய கதை. அப்போதைய மெட்ராஸ், சாதி கட்டமைப்புகள் உள்ள, நடுத்தர வர்க குடும்பம். தாய்-தந்தை இல்லாமல், மூத்த சகோதரனின் ஆதரவில், உயர்நிலை பள்ளி படிப்புடன் வாழும் வீட்டு சிறைப்பறவை திருவளர் செல்வி. வீட்டு வேலையும், புத்தகம் படிப்பதுமாக பொழுதுகளை கடத்தும் செல்விக்கு, ஒரு எழுத்தாளர் எழுதிய கதைகளினால் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்வை வடிவமைக்க எண்ணுகிறாள். இதனால் வரும் தடங்கல்களையும் அவமானங்களையும் கடந்து அவள் வாழ்வின் படிகளை எவ்வாறு கடக்கிறாள் என்பதே இக்கதை. பாலகுமாரரின் எழுத்துக்கள் என்றும் சமகாலத்திற்கு மட்டுமல்லாது "ahead of his times" என கூறப்படுவது போல் இருக்கும். அவரை இவ்வளவு காலம் கடந்து வாசிக்கிறோமே என்று கூட தோன்றுகிறது. அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது, ஒருவரால் எப்படி இவ்வளவு ஆழ்ந்து சிந்திக்க முடிகிறது? அதை, எப்படி இப்படி நயம் பட எழுத முடிகிறது? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அக்கால செல்வியை மட்டுமல்ல, இக்காலத்திலும் ஏதோ ஓர் சிறையில் அடைப்பட்டு இருக்கும் பல செல்விகளை சிறை உடைத்து, சிறகு விரித்து, வானில் பறக்க வைக்கும் இந்த "பந்தயப்புறா".
Shelves
Balakumaran book

More like this


Kattrukondal Kuttramillai

தியானம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப்…

4.08/5 · 95 ratings

தனிமைத் தவம் [Thanimai Thavam]

'தனிமைத் தவம்' இதில் மகாபாரதத்தை அதன் ஒரு பகுதியை விராட பருவத்தை, தங்கள் மூலம் படித்த நேர்ந்தது. இதில் தவம் பற்றி முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள்.

4.08/5 · 95 ratings

வில்வ மரம் [Vilva Maram]

"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்' அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார். வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அ…

4.08/5 · 95 ratings

மெர்குரிப் பூக்கள் [Mercury Pookkal]

A communalist novel which describes about an assassination occurred during a major tractor production company strike, and briefing through the lif…

4.08/5 · 95 ratings

அப்பம் வடை தயிர்சாதம் [Appam Vadai Thayirsaadham]

புரோகிதம் செய்து வாழ்க்கை நடத்திவந்தது ஒரு பிராமணக் குடும்பத்தின் முதல் தலைமுறை. பின் காலமாற்றத்தில், ரயில்வே ஸ்டேஷனில் உணவு விற்று, தொடர்ந்து ஓட்டல் நடத்தி, பின்னர் வணிகம் …

4.08/5 · 95 ratings

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா [Itharku Thaane Aasai Pattaai Balakumara]

சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின்…

4.08/5 · 95 ratings

Kaathal Siragu

...

4.08/5 · 95 ratings

உள்ளம் கவர் கள்வன் [Ullam Kavar Kalvan]

நந்தினி வீட்டை விட்டுப் படியிறங்கி தோட்டக் கதவைத்திறந்தாள். வெளியேறினாள். திரும்பக் கதவை இழுத்து கொக்கியிட்டாள். நடுவில் சிக்கிக்கொண்ட கொக்கியை சரிசெய்ய இரண்டு முறை கதவை …

4.08/5 · 95 ratings

உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]

கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம் ஆகும். பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குற…

4.08/5 · 95 ratings