Select a cover image
Searching for images...
Saving cover image...
அடி
Adi
- பக்கங்கள்
- 105
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Pathippagam
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789386820082
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார்.அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது.இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகி…
user_15938
★ 3/5சபலத்தின் காரணமாக மனிதப் புத்தி தடுமாற்றம் அடைகிறது. அதற்குத் தண்டனையாக "அடி" மங்களத்திற்கு விழுகிறது.
user_15937
★ 3/5செல்லப்பா-மங்களம், பட்டு-சிவசாமி என்ற இரு ஜோடிகள். செல்லப்பாவும் பட்டுவும் சபலம் கொண்டு கூடிவிடுகிறார்கள். இறுதியில் யார் யாருக்கு என்ன அடி கிடைத்தது என்பதே இந்நாவலின் அடிநாதம்.
user_15936
★ 3/5ஒரு வாரத்திற்கு முன் படித்து முடித்தேன். ஆனால் இன்னும் ஆசிரியரின் கருத்துக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. செல்லப்பாவின் செயல்களை அவர் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லையா? புத்தகம் முழுவதும் பட்டுவின் அழகை மிகைப்படுத்தி, இறுதியில் அது வெறும் காமம் என்றும் இயற்கையின் அழகே உயர்ந்தது என்றும் சொல்லி சமாதானப்படுத்துகிறார். மேலும், சாமியாரின் கதைக்கோடு முழுமையாகப் புரியவில்லை. இருப்பினும், இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு நல்ல பார்வையை இப்புத்தகம் தந்தது.
user_15935
★ 3/5வெறும் 120 பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நாவல். தி.ஜா அவர்களது இறுதி காலத்தில் எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். புத்தகம் முழுவதும் தி.ஜா அவர்களுக்கே உரிய எழுத்து நடை.
செல்லப்பா, தையும்மா, பட்டு, சிவசாமி, மங்களத்தம்மாள் இவர்களைச் சுற்றி நடக்கும் கதை. ராணுவத்தில் வேலை செய்யும் செல்லப்பா, அவரது தூரத்து உறவினர் பட்டுவும் ஒருவர் மீது ஒருவர் சபலம் கொள்கின்றனர். பந்தமும் சபலமும் ஒன்றுதான். திருமணத்திற்குப் பின்பு வரும் பந்தத்தை என்னதான் புனிதம், தெய்வீகம் என்று கூறினாலும் அது சபலமாகவே பார்க்கப்படும் என்ற எதார்த்தத்தை நெத்தி 'அடி'யாகக் கூறுகிறார்.
இறுதியில் செல்லப்பாவை தன் மகனிடம் தான் செய்ததைச் சொல்ல வைக்கும் இடத்தில் தி.ஜா-வின் எழுத்துத் திறன் தெறிக்கும்.
user_15934
★ 4/5தி.ஜா-வின் படைப்புகளில் இருந்து சிறிதும் மாறுபட்டது. சபலத்தில் தொடங்கி சமூக நிர்ப்பந்தத்தில் முடியும் உறவு — உடலும் மனமும் ஒன்று சேர்ந்து கடவுளைக் காரணம் சொல்ல, அதே கடவுள் திருப்பிக் கொடுத்த "அடி".
Genres
Shelves
More like this
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
மோகமுள்
தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடும், கர்நாடக இசையின் ஆன்மாவோடும் பிணைக்கப்பட்ட ஒரு உன்னதமான காவியமாக இந்த நாவல் திகழ்கிறது. மனித மனதின் ஆழமான உணர்வுகளையும், குறிப்பாகக் காதல் ம…
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை…
கிடை
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுக்கிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …
ரிஷி மூலம்
மாயவரம் கிருஷ்ணய்யரின் அறிவாளி மகன் ராஜாராமன், குடும்ப நண்பர் சாம்புவய்யரின் பிள்ளைப்பேறற்ற மனைவி சாரதா மாமியின் அன்பில் வளர்கிறான். ஆனால் விதியின் சதி அவர்களது உறவை ஒரு…
எங் கதெ
இமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறு…
குறத்தி முடுக்கு
‘குறத்தி முடுக்கு’ ஓர் இடமல்ல, ரத்தமும் நிணமும் சீழும் ஓயாமல் கசியும் ஆறாத ரணம். தான் உயிர்தப்ப, பல்லி துறந்த வால். பிறகு அதே பல்லியின் தினவுக்கு வடிகாலான அவலம். மும்பை…
ஆயிஷா
கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நா…
செம்பருத்தி
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சிறு கிராமத்தில், மூன்று சகோதரர்களின் குடும்பத்துடன் வாழும் சட்டநாதன் — இளம் வயதில் களஞ்சிய அறைக்கும் சுவருக்கும் நடுவே மறைந்து புத்தகம் படித்துக்க…
அபூர்வ மனிதர்கள் [Aboorva Manithargal]
கச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கிய கோரிக்கைக்கு ஆற்படாமல் மிகச் சுத…
சிவப்பு ரிக்க்ஷா
கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான் ஆகிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு