மோகமுள்
Mohamul
Select a cover image
Searching for images...
Saving cover image...
மோகமுள்
Mohamul
- பக்கங்கள்
- 686
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9789381969366
- ASIN
- B0DTRP9TBB
தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடும், கர்நாடக இசையின் ஆன்மாவோடும் பிணைக்கப்பட்ட ஒரு உன்னதமான காவியமாக இந்த நாவல் திகழ்கிறது. மனித மனதின் ஆழமான உணர்வுகளையும், குறிப்பாகக் காதல் மற்றும் காமத்திற்கு இடையே உள்ள மெல்லிய கோட்டையும் மிக நுணுக்கமாக இது ஆராய்கிறது. இளமைக்கால ஈர்ப்பும், முதிர்ச்சியற்ற வயதில் ஏற்படும் மனப்போராட்டங்களும் ஒரு இசைக்கலைஞனின் வாழ்வியலோடு இணைந்து இதில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
…Appears in following lists
user_5593
★ 4/5இசை, கதை நகர்வில் ஒரு மாபெரும் பங்கு வகிக்கிறது. தி.ஜா நிச்சயமாக இசை ஞானம் உள்ளவராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இசைக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். ஒவ்வொரு முறை பாபு மனதின் கட்டுப்பாடு இழக்கும்போது இசை அவனை எப்படியோ கரைச்சேர்த்துக் காக்கிறது, உணரவைக்கிறது என்பதை அருமையாக எழுதியிருக்கிறார்.
திருமணங்களில் வயது இடைவெளி என்பது இன்று சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஒருவேளை தி.ஜா இன்று இருந்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பாரோ என்னவோ. ஆனால் அனைவரும் யோசிக்க மறக்கின்ற ஒரு கருவை விட்டுச் சென்றிருக்கிறார் — பாலியல் உணர்வுகள். தி.ஜா இதை மேலும் ஆராய்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அல்லது நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டாரோ. ஒருவேளை அக்காலத்தில் இவ்வளவு எழுதுவதே புரட்சிகரமான ஒன்று.
கதையின் நாயகி யமுனாவின் பாத்திரத்தோடு வெகுவாக ஒப்பிட்டுக்கொள்ள முடிகிறது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்தே ஏதேனும் ஒரு வேலையில் அமர்ந்திருக்கும் பெண்ணாகவோ வியாபாரம் செய்யும் பெண்ணாகவோ இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
user_5592
★ 3/5பாபுவிற்கு தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணிடம் ஒரு மோகம். பொதுவாக ஆசிரியர் ஜானகிராமனுக்கு மனிதனின் மென்னுணர்வுகளை தொட்டுச்செல்லும் கதையமைப்பில் ஆர்வமுண்டு.
ஆசிரியர் இதை 800 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார். இதை அவர் தெரிந்தே செய்கிறார். ஏனென்றால் எந்த இடத்திலும் இக்கதையை காதலோடு பொருத்தவில்லை. மோகத்தை மையமாய் கொண்ட கதை இது. "மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று பாரதி இரண்டு வரிகளில் சொன்னதை 800 பக்கங்களில் சொல்கிறார் ஆசிரியர்.
பெண் பிள்ளை என்றால் கலியாணம் தான் பிறவிப் பயனோ என்றிருக்கும் யமுனா ஒரு மிகைப்படுத்தப்பட்ட கேள்விக்குறியாய் இருக்கிறாள். அப்படியே 40 வயதும் கல்யாணம் ஆகாமலே கழிந்துவிடுகிறது. சூழ்நிலை கைதியாய் இருக்கும் யமுனா, அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்காத பாபு என்று கதை ஒரு சராசரி மனிதனின் சுபாவம் சொட்ட அமைந்துள்ளது.
1930களின் மெட்ராஸ், கும்பகோணம், தஞ்சை நகரைக் கண்முன்னே காட்டும் ஆசிரியர் சில நேரங்களில் பாமர சங்கீத ரசிகர்களை முட்டாள் என முத்திரை குத்தி உண்மையான கர்நாடக சங்கீதத்தை விரிவாக விளக்குகிறார். மொத்தத்தில் பாபுவோடு பயணித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.
user_5591
★ 5/5"உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார ஸ்ருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன."
"என் ஞாபகங்கள், ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாற வேண்டும் என்று விரும்பினேனோ எல்லாமாக சேர்ந்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறேன்" என்று கதையின் பின்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார்.
1950களின் கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், சென்னையை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். 3 இரவில் இதைப் படித்து முடித்தேன், ஆனால் நெடு நாட்கள் இதனோடு பயணித்த ஒரு இணக்கம்.
பாபு தன்னை விட பத்து வயது மூத்தவளான யமுனாவின் மீது மோகம் கொள்கிறான். இதற்கு எதிராக எப்போதும் போல நம் சமுதாயக் கோட்பாடுகள். ஆனால் அது மட்டுமல்ல கதை! காதல்-இசை, தந்தை மகன் உறவு, நட்பு, சகோதர வாஞ்சை, குரு பக்தி, இசைத் தேடல், காமத் தேடல் என பல நுண் கதைகள். இவை எல்லாவற்றையும் மீட்டும் இசையாக மோகம்.
நான் எதிர்பாராத முடிவு தான் — அது காலத்தின் வெற்றியா? யமுனாவின் நேர்மைக்கான வெற்றியா? பாபுவின் மன உறுதிக்கான வெற்றியா? இசையின் வெற்றியா? மோகத்தின் வெற்றியா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இது தி.ஜாவின் வெற்றியே!
"காதல்", "இசை" என்ற இரு ஆழ்கடலில் நம்மை நீந்த விடுகிறார். சமுதாயக் கோட்பாடுகளாக வரும் தடைகளைக் கடந்து கரை சேருமிடத்தில் காதலும் இருக்கும், இசையும் இருக்கும்!
user_5590
★ 5/5இருநூற்றி நாற்பத்தெட்டு எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியில் அந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி எத்தனையோ லட்சம் வார்த்தைகளை உருவாக்கலாம். அத்தனை வார்த்தைகளையும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்தி கோடிக்கணக்கான வாக்கியங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்படும் வாக்கியங்களில் சில கவிதைகளாக, கதைகளாக புத்தகங்களில் இடம்பிடிக்கும், பாடல் வரிகளாக வெள்ளித்திரையில் மின்னும், சில வரிகள் வரலாற்றையே மாற்றும். வாக்கியங்களின் சக்தி என்பது அது அமையும் பொருட்டிலே உள்ளது. அப்படி வாக்கியங்களை அமைக்கும் வித்தையடைந்தவர்கள் சிலரே. அந்த சிலருள் சிறப்பானவர் ஜானகிராமன்.
நாவலைப் படிக்கும் போதே மெல்லிய ராகம் பின்னணியில் கேட்டுக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு நமக்கு இருக்கிறது. மோகமுள் நாவலைப் பொறுத்தவரை அது யாரும் எழுதாத கதையோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உரைநடையோ அல்ல. உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தால் உங்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவனின் கதை அது. அப்படியிருந்தும் இந்த நாவல் இத்தனை அற்புதமாக இருப்பதற்கு காரணம் ஆசிரியரின் வித்தை மட்டும் தான்.
நாவலைத் தர்க்க முறையில் கூட அணுக முடியாது அளவு புனிதமாக இருப்பது மிகவும் ஆச்சரியம். நாவலின் கதாபாத்திரங்கள் எதுவும் இதிகாசத் தன்மையுடன் சமூகத்தில் தனித்தோ உச்சாடனத்தில் இருப்பது போன்றோ இல்லாமல் இருப்பதே ஒரு தனி சிறப்பு. கலையை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான போட்டியோ பொறாமையோ அகங்காரமோ பழிவாங்கலோ இல்லாமல் இருக்கும் நாவல் இது தான்.
இந்தத் தமிழ் நாவலை தமிழ் வாசகனாகிய நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்தால் இழப்பு உங்களுடையதே. இன்னும் ஆயிரம் மடங்கு பேசப்பட வேண்டிய, இன்னும் லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட வேண்டிய, இன்னும் கோடிப்பேரின் கைகளுக்குச் செல்ல வேண்டிய நாவல் இந்த மோகமுள்.
user_5589
★ 5/5உங்கள் வாழ்வில் காணும் "க்ரஷ்" என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் இதுதான்.
Shelves
More like this
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
கள்வனின் காதலி
எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்
அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…
யவன ராணி - இரண்டாம் பாகம்
சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும்…
அடி
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை,மாளாத் தவிப்பை அறியவியலா மர்மங்களையே தி.ஜானகிராமன் தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார்.மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
பொன்னியின் செல்வன், பாகம் 3: கொலை வாள்
வந்தியத்தேவனின் பயணங்கள் பல திடுக்கிடும் திருப்பங்களுடனும், சாகசங்களுடனும் தொடர்கிறது.
சிவகாமியின் சபதம்
ஏழாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உன்னதப் படைப்பு, பல்லவப் பேரரசுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுப் போர்களை மையமாகக்…
சில நேரங்களில் சில மனிதர்கள்
தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…