யவன ராணி - இரண்டாம் பாகம்
Yavana Rani Part 2
Select a cover image
Searching for images...
Saving cover image...
யவன ராணி - இரண்டாம் பாகம்
Yavana Rani Part 2
- பக்கங்கள்
- 618
- வடிவம்
- Hardcover
- பதிப்பகம்
- வானதி பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- பதிப்பு
- முதற் பதிப்பு
- ASIN
- B0DLT6WLDV
சோழப் பேரரசின் புகழ்மிக்க வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், வாசகர்களைப் பண்டைக்காலத் தமிழகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இளஞ்சேட் சென்னி மற்றும் கரிகால் சோழன் காலத்து அரசியல் சூழலை மையமாகக் கொண்டு, கடற்படை வலிமை மற்றும் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளை இக்கதை விவரிக்கிறது. யவன தேசத்து அரசியுடனான தொடர்பு மற்றும் போர் தந்திரங்களைச் சுற்றி நகரும் இதன் கதைக்களம் விறுவ…
user_9259
கதையின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன்.
user_9258
வரலாற்று நாவல்கள் மிகவும் பிடிக்கும். இந்த வகையான புத்தகங்கள் வாசிக்க எப்போதும் ஆர்வமாக இருக்கிறேன்.
user_9257
★ 5/5சுவாரஸ்யமான வரலாற்று நாவல். கரிகால சோழனின் ஆட்சிக் காலம் குறித்த பல விவரங்களை அறிய முடிகிறது. சாண்டில்யன் அனைத்துக் கதாபாத்திரங்களையும் அழகாகப் படைத்திருக்கிறார். சிறந்த நாவல்.
user_9256
★ 5/5சாண்டில்யனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்புதினத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அவற்றின் பண்புகளும் அருமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
பிரும்மானந்தர், கரிகாலன், பூவழகி, குமரன்சென்னி, அல்லி, நாங்கூர்வேள் எனப் பல கதாபாத்திரங்கள் கொண்ட இந்நாவலின் முக்கிய இரு கதாபாத்திரங்கள் யவன ராணியும் இளஞ்செழியனும். சம்பவங்களும் கலை வர்ணனைகளும் நிறைந்திருக்கின்றன. அந்தக் காலத்தின் வெளிநாட்டுத் தொடர்புகளையும் இப்புதினத்தில் காணலாம். அருமையான புத்தகம்.
user_9255
★ 5/5புகார் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கும் இளஞ்செழியன் காலில் ஏதோ தட்டுபட, கீழே பார்க்கும்போது பேரழகு கொண்ட ஒரு பெண்ணின் உடலைக் காண்பதிலிருந்து தொடங்குகிறது இந்தப் பெரும் நாவல்.
அவள் யார் என்ற கேள்வியில் தொடங்கி, தன் நாட்டிற்கே எதிரி என்றும் ராணியாக முடிசூட வந்தவள் என்றும் அறிந்த பின்னும், அத்தை மகள் பூவழகி இருப்பதை மறந்து மனத்தடுமாற்றம் அடையும் இளஞ்செழியன், இறுதியில் உயிரையும் பணயம் வைத்துப் போரிடுகிறான்.
காற்றை விட வேகமான ரதத்தில் போர் புரியும் மாவீரன் கரிகாலன், சூழ்ச்சியால் தந்தையை இழந்து சிறைப்பட்டு, தளபதி இளஞ்செழியன், மாமன் இரும்பிடர்த்தலையார், ஆசை நாயகி அல்லி ஆகியோருடன் இணைந்து நாட்டை மீட்பதே இந்நாவலின் மையக் கதை.
துறவறம் பூண்ட பிரும்மானந்தரும், சமண அடிகளும், பூவழகியும், இரும்பிடர்தலையாரும் கரிகாலனுக்காகச் செய்யும் தியாகங்கள் நாட்டுப்பற்றை எடுத்துரைக்கின்றன. காதலுக்காக உயிர் ஈந்த யவன ராணியும், குருவையே எதிர்க்கத் துணிந்த அலீமாவும், அசுரனாகச் சித்தரிக்கப்படும் டைபீரியஸும் என்றும் மனதில் நிற்பார்கள்.
கல்லணை கட்டிய மன்னன் என்று மட்டும் அறியப்படும் கரிகாலன் - அவனின் இயற்பெயர், அவன் எவ்வாறு ஆட்சியில் அமர்ந்தான் என்ற வரலாறை இந்நாவல் விரிவாகச் சொல்கிறது.
Shelves
More like this
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
ராஜமுத்திரை
வரலாற்றுப் புனைவு இலக்கியத்தின் பிதாமகர் படைத்துள்ள இந்த நாவல், பாண்டியப் பேரரசின் பின்னணியில் அமைந்த ஒரு விறுவிறுப்பான சாகசப் பயணமாகும். கொற்கை கோட்டை மற்றும் அதனைச் சுற்…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…
கடல் புறா 3
கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத்தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நேரத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக …
கடல் புறா 1
சோழப் பேரரசின் கடல் ஆதிக்கத்தையும், கடற்படை வலிமையையும் கண்முன்னே நிறுத்தும் ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். ஸ்ரீவிஜய நாட்டு இளவரசிக்கு உதவும் நோக்கில் புறப்பட…
கடல் புறா - பாகம் 2
இளையபல்லவன் இருமுறை தளத்தில் உலாவி விட்டு அந்த இருவர் எதிரிலும் நின்றான். “அன்று தீர்மானித்தேன். கலிங்கத்தின் கடற்படைப் பலத்தை என்னால் முடிந்த வரையில் முறிப்பதென்று. முறிப்ப…
கன்னி மாடம்
இருவரும் வந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசத்தைச்சுற்றும்முற்றும் நோக்கினான் அபராஜிதன். பின்னால் வெகு தூரத்திலிருந்தாலும் தன் பயங்கரத்தைச் சிறிதும் குறைத்துக் கொள்ளாத நீலமலை,…
சிவகாமியின் சபதம், பாகம் 3: பிக்ஷுவின் காதல்
அமரர் கல்கியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மூன்றாம் பாகம், பல்லவ மன்னன் மகேந்திர வர்மரின் ராஜதந்திரத்திற்கும், விதியின் வலிமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டத…
உடையார் (பாகம் 3)
உடையார் நாவலின் மூன்றாம் பாகம். பாலகுமாரன் எழுதிய இந்த வரலாற்று நாவல், ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தையும் தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டுமானத்தையும் விவரிக்கிறது. ஆதித்த க…
வேங்கையின் மைந்தன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழனின் பொற்கால ஆட்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கடல்கடந்து வெற்றிவாகை…
உடையார் (பாகம் 5)
ராஜராஜ சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பாலகுமாரனின் உடையார் தொடரின் ஐந்தாம் பாகம். இந்தப் பாகம் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் இடையிலான போரை மையமாகக் கொண்…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …