Reviews for அடி

7 reviews total

user_15938

★ 3/5 Feb 02, 2026

சபலத்தின் காரணமாக மனிதப் புத்தி தடுமாற்றம் அடைகிறது. அதற்குத் தண்டனையாக "அடி" மங்களத்திற்கு விழுகிறது.

user_15937

★ 3/5 Feb 02, 2026

செல்லப்பா-மங்களம், பட்டு-சிவசாமி என்ற இரு ஜோடிகள். செல்லப்பாவும் பட்டுவும் சபலம் கொண்டு கூடிவிடுகிறார்கள். இறுதியில் யார் யாருக்கு என்ன அடி கிடைத்தது என்பதே இந்நாவலின் அடிநாதம்.

user_15936

★ 3/5 Feb 02, 2026

ஒரு வாரத்திற்கு முன் படித்து முடித்தேன். ஆனால் இன்னும் ஆசிரியரின் கருத்துக்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. செல்லப்பாவின் செயல்களை அவர் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லையா? புத்தகம் முழுவதும் பட்டுவின் அழகை மிகைப்படுத்தி, இறுதியில் அது வெறும் காமம் என்றும் இயற்கையின் அழகே உயர்ந்தது என்றும் சொல்லி சமாதானப்படுத்துகிறார். மேலும், சாமியாரின் கதைக்கோடு முழுமையாகப் புரியவில்லை. இருப்பினும், இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு நல்ல பார்வையை இப்புத்தகம் தந்தது.

user_15935

★ 3/5 Feb 02, 2026

வெறும் 120 பக்கங்கள் கொண்ட மிகச்சிறிய நாவல். தி.ஜா அவர்களது இறுதி காலத்தில் எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். புத்தகம் முழுவதும் தி.ஜா அவர்களுக்கே உரிய எழுத்து நடை.

செல்லப்பா, தையும்மா, பட்டு, சிவசாமி, மங்களத்தம்மாள் இவர்களைச் சுற்றி நடக்கும் கதை. ராணுவத்தில் வேலை செய்யும் செல்லப்பா, அவரது தூரத்து உறவினர் பட்டுவும் ஒருவர் மீது ஒருவர் சபலம் கொள்கின்றனர். பந்தமும் சபலமும் ஒன்றுதான். திருமணத்திற்குப் பின்பு வரும் பந்தத்தை என்னதான் புனிதம், தெய்வீகம் என்று கூறினாலும் அது சபலமாகவே பார்க்கப்படும் என்ற எதார்த்தத்தை நெத்தி 'அடி'யாகக் கூறுகிறார்.

இறுதியில் செல்லப்பாவை தன் மகனிடம் தான் செய்ததைச் சொல்ல வைக்கும் இடத்தில் தி.ஜா-வின் எழுத்துத் திறன் தெறிக்கும்.

user_15934

★ 4/5 Feb 02, 2026

தி.ஜா-வின் படைப்புகளில் இருந்து சிறிதும் மாறுபட்டது. சபலத்தில் தொடங்கி சமூக நிர்ப்பந்தத்தில் முடியும் உறவு — உடலும் மனமும் ஒன்று சேர்ந்து கடவுளைக் காரணம் சொல்ல, அதே கடவுள் திருப்பிக் கொடுத்த "அடி".

user_15933

★ 2/5 Feb 02, 2026

அடியின் அடி நாதம் பிடிபடவில்லை.

user_15932

★ 5/5 Feb 02, 2026

20ம் நூற்றாண்டின் மத்திய வாக்கில், மாயவரத்தை ஒட்டிய கிராமத்திலும், டெல்லியிலும் கதைகளம் அமைந்திருப்பதாக இக்குறுநாவல் எழுதப்பட்டிருக்கிறது.

அக்கிராமத்தில் வசிக்கும் தையும்மாள் வீட்டில், அவளது ஒரே மகனான இராணுவத்தில் பணிபுரியும் செல்லப்பா தனது நினைவுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கிறது கதை. செல்லப்பாவின் மனைவி மங்களத்தம்மாள், தையும்மாளின் தூரத்து உறவுப்பெண் பட்டு, அவளது கணவன் சிவசாமி, அம்பைகடாட்சம் போன்றவர்கள் முக்கிய கதைமாந்தர்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்குள் நடக்கும் உணர்வுக்குவியல்களால் ஆன இக்கதையில், நம்மையும் அவர்களுடன் உள்ளிழுத்து, அந்த உணர்ச்சிகளை நமக்குள் கடத்திவிடுகிறது இக்கதையின் போக்கு. செல்லப்பா எனும் 50 வயதினன் பாதை மாறும்போதும், அதை எதிர்கொள்ளும் மங்களம், பட்டு, அதற்கு பரிகாரம் செய்யும் செல்லப்பா — இவர்களின் மனவோட்டங்களையும் நம்முள் கடத்திவிடுகிறார்கள்.

அம்பைகடாட்சம் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் மிகுந்த பக்தி கொண்ட மங்களத்தம்மாள், அவரிடம் வாங்கும் 'அடி', செல்லப்பாவை சுற்றியிருக்கும் அக்குடும்பத்தவர்களுக்கு புரியவில்லை என்றாலும், செல்லப்பாவிற்கும் வாசிக்கும் நமக்கும் நல்லொழுக்கத்தினையும் நல்ல படிப்பினையையும் சம்மட்டி அடியாக புரியவைக்கும்.

இயல்பான நடையில் எழுதுவது தி.ஜானகிராமன் அவர்களின் சிறப்பு. காலங்கடந்து தற்போதும் வாசிக்கும்படியான கதைக்கருவும் எழுத்துநடையும் கொண்ட இக்கதையில் அவரின் முற்போக்கு வீச்சை அறியலாம். குறுநாவல் என்றாலும், நமக்கு ஏற்படுத்தும் கனம் அதிகம்!