முப்பரிமானம். கவிதையை விட உரைநடையில் மிளிர்கிறார்.
Awesome Na Muthu The GOAT
பழைய கிராமத்து நினைவுகளை அசை போட்ட வைத்த புத்தகம்.
Takes us to the era if you lived in rural places and then get changed to Urban places for job.
This book looks into the author's life mainly and his experiences in both village and City.
Gives a nostalgic feel once you start to read. . . .
கிராமத்தில் பிறந்து, நகரத்தில் பயின்று, மாநகரத்தில் பிழைப்புக்காக தஞ்சம் அடைந்தவர்கள் அனைவர்க்கும் இந்த புத்தகம் "மலரும் நினைவுகளை" தூண்டும்.
அன்றாடம் நடக்கும் சிறு நிகழ்வுகள் அந்தந்த இடத்தில, நேரத்தில் நிகழ்காலமாக இருக்கும் போது பெரிதாக தோன்றாது. காலம் கடந்து, இடம் பெயர்ந்து நினைக்கும் போது, வரும் இனிமையை கவிஞர் அழகாக எழுத்தில் பிடித்துள்ளார்.
பல இடங்களில், முத்துக்குமார் அவசரமாக எழுதி இருப்பது நன்றாக தெரிகிறது.அவரும் கடைசி நாளில் பரீட்சைக்கு படிக்கும் நம்மில் ஒருவர் என்பதில் ஒரு அற்பசந்தோசம்
100th Goodreads book.Amazing.நா.முத்துக்குமாரின் இந்த கட்டுரைத் தொகுப்பு அவர் அனுபவத்தில் ஒவ்வொரு சம்பவங்களையும் கிராம்ம் நகரம் மாநகரத்துள் கொண்டுவந்து அருமையான தமிழ் கட்டுரைகளாக்குகிறார்.மிக சாதாரண விடயங்களை தனது மொழியால் எழிமையாகவும் ,மனதோடு ஒரு லேசான உணர்வை ஏற்படுத்தி எழுதுகிறார்.பாட்டியின் சுருக்குப்பை முதல் ,அழகி காயத்திரி,மாநகரத்தின் கடைசி கடிதம் என ஏதோ ஒரு புதுமையாக கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.தமிழை அதன் இலக்கணத்தை சரியாக ஒரு கட்டுரையில் கொண்டுவந்தால் அழகிய இலக்கியப்படைப்பை (இந்த சின்ன கட்டுரைகள் )கொண்டுவரமுடியும் என்பது புலனாகிறது.
நா.முத்துக்குமாரின் இழப்பு தான் யுவனின் வீழ்ச்சிக்குக் காரணம் 💔🤧😭
ஒரு கவிஞன் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கிறான் அவனுக்கு உயர்திணை, அஃறிணை என்ற வேறுபாடுகள் கிடையாது. ஒரு சைக்கிளை சகோதரன் என்றும் வீட்டிற்கு உயிர் இருக்கிறது என்றும் ஒரு கவிஞனால் மட்டுமே தர்க்கத்தோடு சொல்ல முடியும். ஒரு கட்டத்தில் நாமும் நா.முத்துக்குமாரும் ஒன்றாகிப் போகிறோம் அவருக்கு அறிமுகமான மனிதர்களும் இடங்களும் நாமும் எங்கோ பார்த்தது போல் இருக்கிறது.
அவர் நம்முடன் இல்லாததை நினைத்து மீண்டும் ஓர் வருத்தம்.
மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அனுபவத்தை பரிசளிக்கிறது இந்த வாழ்க்கை. அவை அனைத்தும் அழியாமல் என்றுமே நம் மனதில் உறைந்து கிடப்பவை. அப்படிபட்ட நினைவுகளின், அனுபவங்களின் வார்ப்பே இந்த படைப்பு. இதில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், கதாப்பாத்திரமும் நம் வாழ்வில் நாம் கேட்ட பேசிய பார்த்த உணர்ந்த ஒன்றாக அமைந்து நம்மை நம் கடந்த காலத்திற்கு அலைந்து செல்லுகிறது. ஒரு FEEL GOOD அனுபவம்.
புத்தகத்தில் இருந்து -
"" ஒரு பூ பூக்கிறபோது ஒரு புன்னகை பிறக்கிறது. பூ என்பது செடிகளில் வரையப்பட்ட சின்னஞ்சிறு ஓவியம். வாசனை ஊற்றி எழுதப்பட்ட கவிதைத் தாள். மெல்லிதழ் கண்ணாடியில் நகலெடுத்த குழந்தை முகம். நிறங்களின் மொழிபெயர்ப்பு. சந்தோஷ வடிவில் ஒரு கண்ணீர்த் துளி. பனி தூங்கும் மென் மெத்தை. பிரபஞ்சத்தின் ஆகப் பெரிய ரகசியச் செப்பேடு.
"" கிராமம் சொன்னது, "நான் தாழ்வு மனப்பான்மையையும், தூய அன்பையும் கொண்டு வந்திருக்கிறேன்!"
மாநகரம் சொன்னது, "நான் தன்னம்பிக்கையையும், தேடல்களின் பதற்றத்தையும் கொண்டு வந்திருக்கிறேன்!"
இரண்டும் தோளில் கை போட்டுக்கொண்டு, எதிர்காலத்தை நோக்கி நடந்தன!
புத்தகம் : கிராமம் நகரம் மாநகரம்
எழுத்தாளர் : நா.முத்துக்குமார்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் ஹவுஸ்
பக்கங்கள் : 111
நூலங்காடி :
விலை : 130
🔆தன் பாடல் வரிகளால் பலரின் மனததைக் கட்டிப் போட்ட கலைஞன் தான் நா.முத்துக்குமார் அவர்கள்.
🔆கிராமத்தில் பிறந்து, நகரத்தில் படித்து, சென்னை மாதிரி ஒரு மாநகரத்தில் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தவர்.
🔆இந்த மூன்று நிலப்பரப்பில் அவர் சந்தித்த மனிதர்கள், அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகளே இந்தப் புத்தகம். பல மானுட அறிஞர்களின் கூற்றுப்படி நமது சமூகம் முதலில் தாய் வழிச் சமூகமாக தான் இருந்தது. பின்னாளில் தான் தந்தை வழிச் சமூகமாக மாறியது . இன்னாளில் கூட சிறு தெய்வங்கள் பலவும் பெண் தெய்வங்களாக இருப்பதை நாம் பார்க்கலாம்.
🔆தான் சந்தித்த மார்க்சீய தோழர், யாரைப் பார்த்தாலும் “டீ சாப்பிடுங்கள் தோழர்” என்று தான் தனது உரையாடலை ஆரம்பிபபாராம். அவருக்கு இயக்கத்தின் மீதிருந்த தாக்கமும் , புத்தகத்தின் மீதிருந்த ஈர்ப்பும், கவிஞரைப் பற்றிக் கொண்டன.
🔆என்ன தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது, வாசகர்கள் இருந்துக் கொண்டுத் தான் இருக்கிறார்கள் என்று நாம் சொன்னாலும் --- வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது என்பது தான் உண்மை . எந்தவொரு வீட்டிற்குச் சென்றாலும் அவர்கள் வீட்டில் புத்தக அலமாரி இருக்கிறதா? என்று தான் கண்கள் தேடுகிறது . தொலைக்காட்சி பெட்டிகள் காலம் செல்ல செல்ல பெரியாதாகிக் போகின்றன, புத்தக அலமாரிகள் குறுகிக் கொண்டே போகின்றன .
🔆எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் , அவர்கள் வீட்டில் ஒரு புத்தக அலமாரி இல்லையென்றால் அவர் ஏழையே---- சுதா மூர்த்தி.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
"கிராமம் நகரம் மாநகரம்" - (“நா.முத்துகுமார் கட்டுரைகள்” தொகுப்பு)
கல்கி வாராந்தரியில் 2003க்கு முன்பு வரை, வெளிவந்த 23 கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ஒவ்வொரு கட்டுரையின் வரிகளும் கவிதை வரிகளுக்கு ஒப்பானவை.
திரு நா.முத்துகுமார் தன்னுடைய கிராமத்தில், நகரத்தில், மாநகரத்தில் தான் சந்தத்த மனிதர்கள், அஃறிணைகள், உயர்திணைகள் பற்றிய தனது அனுபவங்களையும், கிராம-நகர-மாநகரதுக்குள்ளான ஏற்ற தாழ்வுகளையும், கவித்துவ கட்டுரைகளாக எழுதியுள்ளார்.,
கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் என்பதை விட, அவரது அனுபவங்களை கவிதைகளாக காட்சிபடுத்தியிருக்கிறார் எனலாம். அதனை வாசிக்கையில், அக்காட்சிகள் சினிமாவின் பாடல் கனவுக் காட்சிகளை போல வண்ணமயமாகவும் இதமாகவும் உணரவைக்கிறது.
இருப்பினும், எப்போதும் போல ஒருவித மென்சோக இழையும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெற்று வருகிறது.
ஒரு சில இடங்களில் எழுதப்பட்டிருக்கும் உண்மைகளையும் உவமைகளையும் வாசிக்கையில், நம்மையறியாமலேயே புன்னகைத்து கொண்டிருப்போம்.
திரு நா.முத்துக்குமார் படைப்பின் வாசிப்பு அனுபவத்தை சிலாகிப்பதைவிட., அவரை வாசிப்பதே வாழ்க்கைக்கான 'பெரும் அனுபவம்' எனலாம்.
நினைவில் காடுகள் என்ற கட்டுரையின் பெயரில் "அம்பை" அவர்களின் முன்னுரையும்
பால்ய நதி என்ற கட்டுரையின் பெயரில் "சி.மோகன்" அவர்களின் முன்னுரையும் புத்தகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்ற கட்டுரைகைளின் பெயர்கள்:
1. நினைவில் காடுகள்
2. பால்ய நதி
3. கன்னிகாபுரம் - காஞ்சிபுரம் - சென்னை
4. நினைவில் காடுள்ள மிருகம்
5. உறைந்து போன நதி
6. விண்மீன்களின் ரகசியம்
7. ஞாயிற்றுக்கிழமை வெள்ளிக்கிழமை
8. நெடுநாள் வடை
9. காட்டுமிராண்டியின் கால்தடம்
10. தேள் விழும் தாழ்வாரம்
11. A B C D
12. ரசம் உதிரும் கண்ணாடிகள்
13. சைக்கிளாற்றுப் படை
14. உயரங்களுடன் சூதாட்டம்
15. சக்கரம் கட்டிய வண்ணத்துப்பூச்சி
16. மழைக்கு ஒதுங்கும் மாடார்
17. சண்முகசுந்தரத்தின் சதுரக் காதல்
18. டீ சாப்பிடுங்க தோழர்
19. மைதானத்தில் விளையாடுபவன்
20. குறிஞ்சிப் பாட்டு
21. சித்தார்த்தன் புத்தனான இரவு
22. பென்சில்கள் கூர்தீட்டப்படுகின்றன
23. ரயிலின் கடைசிப் பெட்டியும் ஐன்ஸடீனின் பியானோவும்
புத்தகத்திலிருந்து....
\
அப்பா பயமில்லாத ஒரே ஒரு மனிதன் ஆதாம் மட்டுமே. நம் பால்யங்கள் நம்மை ஆதாமாக மாறவே தூண்டுகின்றன.
/
\
குகைகளில் வாழ நேர்ந்தபோது தீ நமக்கு கடவுளாக இருந்தது. உணவுக்கும், வெளிச்சத்துக்குமான தீ. சிக்கிமுக்கி கற்களில் உரசி உருவான தீ. மனிதனின் முதல் விஞ்ஞானத் தீ.
இரவுகளில் தீயை பாதுகாக்கவும், மிருகங்களிடமிருந்து தப்பிக்கவும் ஆண் காவல் புரியவேண்டி வந்தது. ஆண் குகை வாசலை பார்த்து அமர்ந்திருக்க, இரவுகள் பூச்சிகளின் சத்தத்துடன், நீண்டுகொண்டே இருந்தன. அந்த குகைவாசலை இன்னமும் யுகங்கள் தாண்டி, ஒவ்வொரு ஆணின் உதிரத்திலும் ஒளிந்தபடி துரத்திக் கொண்டிருக்கிறது.
இன்றும் நான் எந்த உணவகம் அல்லது தடைக்குச் சென்றாலும், வாசல் பார்த்த நாற்காலிகளையே தேர்வு செய்து அமர்கின்றேன் . நான் மட்டுமல்ல, எல்லா ஆண்களின் முதல்தேர்வும் வாசல் பார்த்த நாற்காலிகளே. அது காலியாக இல்லாத பட்சத்தில்தான் மற்ற நாற்காலிகள். பெண்களுக்கு இந்த வாசல்களின் துரத்தல் இல்லை. தன்னிச்சையாக அவர்கள் இருக்கை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
/
\
'ஒரு மனிதனின் முழு வாழ்க்கையும் அவனுக்கு கிடைக்கும் பால்யத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது' என்கிறார் சிக்மண்ட் ப்ராய்ட்.
3 வயது முதல் 15 வயது வரை உள்ள அனுபவங்களும், அலைக்கழிப்புகளும்தான் நம் ஆளுமையை உருவாக்குகின்றன. இன்றைக்கும் உலக இலக்கியங்கள் பல, பால்யத்தில் இருந்துதான் தன் மூலப் பொருளை எடுத்துக்கொள்கின்றன.
/
\
எங்கிருந்துதான் முளைக்கின்றன இந்த பொன்வண்டுகள்? வசீகரிக்கும் வண்ணங்களுடன் எப்படி வந்து முள் மரங்களில் படர்கின்றன?
கொரிகலிக்காய் தழைகளைத் தின்றுவிட்டு பச்சை நிறத்தில் கழிவுகளும், மஞ்சள் நிறத்தில் முட்டைகளுமாய் எவ்விதம் நிறம் கிடைக்கின்றன?
கைகெட்டும் தூரத்தில் கருவண்டுகள் இருந்தாலும் நமது இலக்கு. முதல் நிற வேற்றுமை இங்கு தொடங்குகிறது.
/
\
மார்கழி மாதங்களில் விடியலில், இரவெல்லாம் வானம் சிந்திய பனித்துளிகளைக் கவிதைகளாய் மொழி பெயர்த்து வைத்திருக்கும் பூசணிப் பூக்கள்.
/
\
நகரத்து காதலை பெரும்பாலும் தட்டச்சு பயிலகங்களே முன்மொழிகின்றன. ASDFGF க்குள்ளும், LKJHJ குள்ளும் எத்தனையோ ஆண் பெண் விரல்கள் ஒளிந்திருக்கின்றன . சில விரல்கள் ஒன்று சேர்க்கின்றன. சில விரல்கள் அழிக்க முடியாத ரேகைகளுடன் பிரிகின்றன.
பாம்புகளைப்போல காகிதங்களை சுருட்டிக்கொண்டு தட்டச்சு பயிலங்களில் இருந்து வெளியே வரும் ஆண்களும் பெண்களும் காலத்தின் சுழற்சி எங்குதான் செல்கிறார்கள்?
/
\
மாநகரம் வெற்றிகளின் பாதையில் உறவுகளை பலிகொடுத்தபடி விரைந்துகொண்டிருந்தது.
/
\
வீடுகளுக்கும் உயிர் உண்டு. வெறும் செங்கல்லும், சாந்தும், கூரையும், ஜன்னலும் கதவும் கொண்டு உருவானதல்ல வீடு. வீடுகள் கருவறையின் கதகதப்பை தருபவை. காட்டுக் குகைகளின் பாதுகாப்பை மீட்டுருவாக்கம் செய்பவை. வேட்டையாடி வீடு திரும்புகையில் குளிர்ந்த காற்றால் கேசம் வருடுபவை.
/
\
என் தந்தை தமிழாசிரியர் என்பதால் அவரது சேகரிப்பில் கிட்டத்தட்ட 40,000 புத்தகங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. எங்கள் வீடு முழுக்க புத்தகங்கள். புத்தக மூட்டைகளுக்கு நடுவில்தான் தூங்குவேன். காற்றடிக்கும் மாதங்களும் மழையடிக்கும் வேலைகளும் எங்களைப் பாதுகாப்பதை விட புத்தகங்களை பாதுகாப்பதே எங்கள் கவலையாக இருந்த காலம் அது.
/
\
இன்று பிறந்த பெண் குழந்தை ஒரே நாளில் இளம் பெண்ணாக மாறுவதைப்போல ஒரே நாளில் எப்படி கட்டடம் முளைக்க முடியும்? கடந்த ஆறு மாதங்களாக ஓலைகளால் மூடப்பட்ட சாரங்களுக்கு உள்ளே அந்த கட்டடம் ரகசியமாக வளர்ந்திருக்கிறது. மாநகரத்து தெருக்கள் தோறும் மழைக் காளான்கள் மாதிரி கட்டடங்கள் திடீர் திடீரென்று முளைக்கின்றன. வீட்டை கட்டிப்பார் என்பார்கள். வீடு கட்டுவதை பார்க்கக்கூட அனுமதிக்காமல் மாநகரத்தில் வீடுகள் முளைத்துக்கொண்டிருக்கின்றன.
/
\
" வேர்கள் என்பது
பூமியைத் தொட நினைக்கும்
மரத்தின் கிளைகள்.
கிளைகள் என்பது
வானத்தை தொட முயலும்
மரத்தின் வேர்கள்."
- தாகூர்(' வழி தப்பிய பறவைகள்' தொகுப்பிலிருந்து)
/
\
சிவபெருமானுக்கு அடுத்ததாக நெற்றிக்கண்ணுடன் அலைவது ரயில்வண்டி மட்டுமே. ரயில்வண்டி, நகர்ந்து செல்லும் ஆயிரம் ஜன்னல் வீடு.
/
\
" நாம பொறந்து வளர்ந்த ஊரை நாம முழுமையா தெரிஞ்சிக்கணும் தோழர்...அப்பத்தான் நம்மை நாம புரிஞ்சிக்க முடியும். நம்மை நாம் புரிஞ்சிகி��்டாதான் நம்ம சமுகத்தை புரிஞ்சிக்கமுடியும்."
/
\
ஒரு பூ பூக்கிறபோது ஒரு புன்னகை பிறக்கிறது. பூ என்பது செடிகளில் வரையப்பட்ட சின்ன��்சிறு ஓவியம். வாசனை ஊற்றி எழுதப்பட்ட கவிதைத்தாள். மெல்லிதழ் கண்ணாடியில் நகலெடுத்த குழந்தை முகம். நிறங்களின் மொழிபெயர்ப்பு. சந்தோஷ வடிவில் ஒரு கண்ணீர்த் துளி. பனி தூங்கும் மென்மெத்தை. பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய ரகசிய செப்பேடு.
/
\
மாநகரத்துக்கு குழந்தைகள் பால்யத்தை கடக்கையில் நாய்க்குட்டி வளர்ப்பதும், மீன் தொட்டி அமைப்பதும், வேட்டை சமூகத்தின் காட்டு நிழலன்றி வேறு என்ன?
/
வறண்ட மனதை ஈரமாக்கியது நா. முத்துக்குமாரின் வரிகள் சில இடங்களில் கண்களையும் தான். மனத்தின் கணத்தை குறைக்கும் வரிகளாலும் அழகிய எழுத்துக்களாலும் நிரம்பியுள்ளது நாவல்!!