// பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்//
// கள்ளுக்கடையில்
சால்னா விற்பவள்
கெட்ட வார்த்தைத் துணையால்
காத்துக் கொள்கிறாள்
கடையையும் கற்பையும் - மனுஷிகள்//
//யாரும் மெனக்கெடாமலே
வருடந்தோறும் உருவாகிறார்கள்
சில அறிவாளிகளும்
முட்டாள்களும் - பள்ளி//
A very short read but heart warming book. His writing style is simple yet elegant that you are entangled to the emotions in the writing, instantly.
He's a genius to be able to transform a very simple emotion into a beautiful writing and also enable the reader to connect to those emotions.
I'm not mentioning it as his emotion because the emotions in his writing transforms into our own once we've read it. He is so gifted and talented!
புத்தகம் : பட்டாம்பூச்சி விற்பவன்
எழுத்தாளர்: நா. முத்துக்குமார்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள் : 62
🔆 மண்ணில் இருந்து பிரிந்தாலும் ந��் மனதில் இருந்து பிரியாத அந்த மகத்தான கலைஞனின் மற்றும் ஒரு படைப்பு.
🔆 ஒவ்வொரு கவிதையும் தனித்துவம். ஒவ்வொரு முறை வீடு மாற்றம் போது எதையாவது மறந்து செல்வது உண்டு. இம்முறை எதையும் மறக்காமல் எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. தினமும் இரவு உணவிற்கு வரும் நாயிடம் யார் தகவல் சொல்வது?
🔆 அப்பாவின் புத்தக அலமாரியை பற்றி சொல்லும் போது, இடப் பற்றாக்குறையால் மூட்டைக்குள் எழுத்தாளர்கள் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள் என வர்ணிக்கிறார்.
🔆 திரைத்துறை ஜாம்பவான்கள் பாரதிராஜா மற்றும் காலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்களின் முன்னுரை புத்தகத்திற்கு கூடுதல் சிறப்பு.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
இந்த கவிதைகளைப் படிக்கும் போது தோன்றும் நாமும் எழுத வேண்டும் ஒரு கவிதை.
"While reading these poems, we too should feel moved to write a poem."
அரை மணி நேரத்தில் வாழ்வின் நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த நா.மு வின் சீரிய சிறுகவிதைத் தொகுப்பு.
என் மனதை பறித்தவன்.. Such a wonderful one..
நா முத்துக்குமாரின் பிரபலமான படைப்பு இது, அடுத்ததாக 'வேடிக்கை பார்ப்பவன்' கவிதைகளை சீக்கிரம் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இதில் சில கவிதைகள் என்னுடன் என்றும் இருக்கும். ♥️
I like him.. So I want to read his Books
இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் அழகானது மற்றும் தனித்துவமானது. நா. முத்துக்குமார் அவர்களின் ஆழமான மற்றும் எளிமையான எழுத்துகளுக்கு என்னை அடிமையாக்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. தூர், அப்பாவின் உலகம்,வெட்கத்தை நிரப்பி ஒரு கடிதம்,இன்றைக்கும் ஆகியவை என் மனதை கவர்ந்த கவிதைகள்.
இறந்து போனதை அறிந்த பிறகு தான் இறக்க வேண்டும் நான்.உள்ளாடை கடைகளில் அளவு குறித்தான பணிப் பெண்களின் கேள்விக்கு தலை குனிகிற ஆணின் செயலுக்கு வெட்கம் என்று பெயர்.ஒரு மூட்டை புத்தகம் கிடைத்தால் என்னையும் விற்று விடுவார்.பூக்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும், விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய கணம் வரை.like the above I liked lot of... etc.,
My first book by Na.Muthu Kumar. I have known him as a lyricist and this is the first time I am reading his books. This collection of poems is beautifully written.His words are addictive to read and I believe every reader will be able to connect easily with the book. Can’t wait to read more books written by him.
அருமையான கவிதைகள்
நா. முத்துகுமாரின் எழுத்தில் "பட்டாம்பூச்சி விற்பவன்"
வாசித்த போது பல மறந்த நினைவுகளை தட்டி எழுப்பும் ஒரு முயற்சி
"தூர், ஒரு கிராமத்து கிரிக்கெட், இன்றைக்கும், பள்ளி, சில கேள்விகள், செல்கள், வெட்கத்தை நிரப்பி ஒரு கடிதம், ஆயத்தம், சுண்டுவிரல் தாத்தாக்கள், அப்பாவின் உலகம்"...
நினைவு படுத்தியவை...
நா. முத்துக்குமார் நமது தலைமுறையின் புது கவிதை ஆசிரியர்களில் தலைசிறந்த சிலரில் ஒருவர். எளிய நடையினுள் பரந்த கருத்துக்களை நம்மைச் சார்ந்து, நம்மால் சம்பந்தம் படுத்திக்கொள்ளமுடியும்படி சிறப்பாக எழுதியுள்ளார். புது கவிதையிற்கேற்ப, கவிதையின் வாளில் குத்துவதும், கவிதையின் பொருளை எஸ்களேட் செய்வதும் இத்தொகுப்பில் அருமையாக அமைந்துள்ளன. ஒரு கிளாஸ் விஸ்கியுடன் இரவு ஓய்வு கொள்ளச் சரியான புத்தகம் இது.
பட்டாம்பூச்சி விற்பவன் நா. முத்துக்குமாரின் முதல் கவிதைத் தொகுப்பு. இந்த நூலில், வாழ்க்கையின் நிகழ்கால அனுபவங்கள், கிராமத்து நினைவுகள், பள்ளிப் பருவ நிகழ்வுகள், குடும்பத்தின் நிலைமை பற்றி எளிமையான மொழியில் எழுதி இருக்கிறார்.
ஒவ்வொரு கவிதையும் மேலோட்டமாக பார்க்க சாதாரணமாக தோன்றினாலும் நம்மை ஆழமாக சிந்திக்க தூண்டும் நேர்த்தி உடையவை. வாழ்க்கையின் வண்ணங்களை மிகவும் எளிதான முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த கவிதைகள் அமைந்துள்ளன. கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை தொகுப்பு.
அடேங்கப்பா ரொம்ப நல்லா சிரித்து படிச்சேன் ஐயா, இந்த ஆல் செத்து போயிட்டாரு ஆனா யப்பா அவர் எழுத்து இன்னும் நின்னு வாழ்துயா.
இந்த புத்தகத்தை பத்தி என்ன சொல்றது ஜாலியா இருந்துச்சு தெரியுமா.
கவிதைனா இப்படி தான் எழுதனும் இல்லாம வித்தியாசம் வித்தியாசம ஏன் முகம் சுழிக்க வைக்காம கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தி கூட எழுதலாம்னு நிறைய கத்துகிட்டேன், ரசித்தன், சிரித்தன், சிந்தித்தன்.....
நிறைய நினைவுகளை அழகாக தூண்டுற மாதிரி எழுதி இருக்கிறார். கேலியோடு கருத்து ஊசி போட்றாரு , நல்ல இருக்கு....
யோவ் படிக்கலான்யா படிங்க......
(4.5 would be perfect)
சில சினிமா பாடல்கள் இன்றும் நம் மனதில் மறையாமல் தங்குவதற்கு காரணம் ஒன்று இசை, மற்றொன்று வரி. அப்படி வரிக்கு சொந்தக்காரர்கள் பலர். அதி முக்கிய படைப்பாளி நா.முத்துக்குமார்.
இவர் எழுதிய கவிதைகள் தொகுப்பே - பட்டாம்பூச்சி விற்பவன். இதை படித்த போது நம் வாழ்கையின் பல வர்ணங்களை எதார்த்தமாக எளிமையாக இணைத்த பார்த்துவிட முடிகிறது.
நாம் வசிக்கும் வாடகை வீடு மாறும் பொழுது, அந்த வீட்டோடு இருந்த உறவின் பிரிவை பற்றிய கவி��ை என்னுள் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவும், "சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை" என்ற வரிகள் இதயத்திற்கு கணம் சேர்க்கிறது
கிரிக்கெட் விளையாட்டு, படித்த பள்ளி, வீட்டின் அடுப்பறையில் அம்மாவின் கரிச்சுவர், நண்பனின் தங்கை திருமணத்தில் நடந்த சம்பவம், பள்ளியில் காதல், அப்பாவின் உலகம் என்று ஒவொரு கவிதையும் அழகு!
முத்துக்குமார் மறைத்தாலும், அவரின் முத்தான வரிகள் என்றும் நம்முடன்.
கவிதை வாசிப்பு, கவன குறைவுக்கு ஒரு சரியான மருந்து எனலாம்.
கவிஞன் அவன் சூழலை ரசித்து, சமூகத்தை வெறுத்து, காதலைக் கரைத்து எழுதியதை, வாசிப்பவர்களின் சிறிய கவனச் சிதறலும் தவறான அர்த்தத்தை கொடுக்கும்.
நான் வாசித்ததில் எனக்கு பிடித்த மீண்டும் மீண்டும் வாசிக்கிற கவிஞர்கள், கலீல் ஜிப்ரானும், இரபீந்திரநாத் தாகூரும், காரணம் இவர்கள் இருவரின் படைப்புகளும், விவிலியத்தின் வாசகங்களும், மகாபாரத கருத்துக்களும் ஒரு சேர ஒலிப்பது போன்ற பிம்பம் கொண்டது (இது என்னுடைய சொந்த கருத்து).
அதுபோல கவிதை நூல்கள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்தங்களை தரவல்லது.,
"பட்டாம்பூச்சி விற்பவன்"
இதில் நா. முத்துக்குமார், தன்னைச் சுற்றி நிகழ்ந்தவைகளையும், நிகழ்பவைகளையும், வண்ணக் கனவுகளையும், விழைவுகளையும், இவை அனைத்தின் அழகியல்களையும் தனது பாங்கில் தந்துள்ளார். மற்றப்படி கவிதைகளின் விமர்சனங்களோ, புத்தகத்தைப் பற்றிய விரிவாக்கமோ தேவை இல்லை எனக் கருதி இதை முடிக்கிறேன்.
காரணம் தெரியவில்லை, மற்ற புத்தகங்களை விட கவிதை புத்தகங்களின் விலை மலிவு.
சற்றே முயலுங்கள்.
its a ten on ten read!
கதை பேச ஆளில்லா கணங்களில்
கபாலத்துக்கும்
காகித கோர்வைக்குமான
கனத்த உரையாடலுக்கு
கச்சிதமாய் பொருந்துமொரு புத்தகம்.
na.muthukumar allways best
34 தலைப்புகளில் கவிதைகள் கொண்ட இப்புத்தகத்தில் என்னைப் பற்றி நா.முத்துக்குமார் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது😜😂(“இதென்ன புது பொரளியால்ல இருக்கு!உன்னப் பத்தி அவ்ளோ பெரிய ஆளு எழுதுனதாவது?!”அதான யோசிக்கிறீங்க😂சொல்றேன் சொல்றேன்😅)
Read more…
நா. முத்துக்குமார் அவர்களின் மூன்றாவது புத்தகம் நான் படிப்பதில். சில வரிகளில் ஓராயிரம் உணர்வுகளை தரக்கூடியவர் இவர்.
ஒரு கிராமத்து கிரிக்கெட், பள்ளி, டென்த் ஏ காயத்ரி, தூர் இவை அனைத்தும் பிடித்தமான கவிதைகள்.
ஒவ்வொரு கவிதையின் முடிவிலும் ஒரு இனம் புரியாத நெகிழ்வு ஏற்படுத்த முடியும் என்றால் அது இவரால் மட்டுமே சாத்தியம்.
பிடித்த வரிகள்
இந்த புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தை பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும்
ஒரு மூட்டை புத்தகம் கிடைத்தால் என்னையே விற்றாலும் விற்றுவிடுவார் என் அப்பா,.. மனதை தொட்ட வரிகள்..
இந்த புத்தகத்தில் இவர் எழுதியிருக்கும் எதாவது ஒரு கவிதை நம் வாழ்வோடு இணைத்து பார்துவிடமுடியும்...
மிக எளிய நடையில் நா. முத்துவின் எழுத்துக்கள்.❤️
நான் படித்த முதல் கவிதையும் கவிஞனும் நீயே..
Book 77 of 2022-பட்டாம்பூச்சி விற்பவன்
Author- நா.முத்துக்குமார்
“இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கிறது-ஐயோ பாவம் என்கிற வார்த்தை.”
Murakami-இன் “Kafka on the shore” படித்து முடித்து சுமார் எட்டு மணி நேரம் கழித்து இந்த புத்தகத்தை படித்தேன். அந்த புத்தகம் ஏற்படுத்திய தீவிர தாக்கம்,குழப்பத்தில் இருந்தும் அந்த மாய உலகில் இருந்து என்னை மீட்டெடுத்ததும் இந்த கவிதை தொகுப்பு தான்.
முன்னுரையில் பாலு மகேந்திரா எழுதிய முதல் இரண்டு வரி படிக்கும் போது வந்த கண்ணீர் தான்,புத்தகம் முடியும் வரை கண்களில் தேங்கியபடியும் அவ்வப்போது எட்டி பார்த்தபடியே இருந்தது-கண்ணீர்துளி,அழுகை என வெவ்வேறு பரிமாணங்களில்.
இது ஒரு கவிதை தொகுப்பு. இயல்பான எதார்த்தமான மொழிநடை என வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களை அழகாய் சொல்லும் ஒரு கவிதை தொகுப்பு.
அக்கா-தங்கை-அண்ணாவை பற்றிய ஒரு கவிதை. அதை படிக்கும் போது அத்தனை அழுகை! அத்தனை வாஞ்சை!
எப்போதாவது வாழ்க்கை உங்களை மிகவும் சோதிப்பது போல் தோன்றலாம்,வாழ்க்கையையே வெறுக்கும் நொடி கூட வரலாம். அப்போது ஒரே ஒரு நா.மு கவிதையை மட்டும் படித்து விடுங்கள். வாழ்க்கையின் துயரங்கள் எல்லாம் தள்ளி நின்று வாழ்க்கையே உங்களை கட்டியணைப்பது போல் தோன்றும். ஒவ்வொரு நா.மு புத்தகம் முடித்த பின்னும் ஏற்படும் மனநிறைவுக்கு நிகர் வேறெதுவுமே இல்லை.
ஒவ்வொரு கவிதையும் ஒரு நியாபக தாலாட்டு.
நா.முத்துக்குமார் அவர்கள் வெளியிட்ட முதல் கவிதை புத்தகம். அவரை அறிமுகம் செய்த 'தூர்' என்ற கவிதையும் இப்புத்தகத்தில் தான் உள்ளது. மிகச் சிறிய புத்தகம் தான். எளிய நடையிலேயே கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.
Brilliant piece of work filled with heart warming, thought provoking, beautiful poems. Leafing through this collection was such a pleasure. I cant believe this book is 20 years old. It is one of the proofs that his words are ever lasting and extraordinary. Works like this make me feel so special for belonging to this eminent language. Looking forward to read more of his poems in future.