வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் [Vetkatthai kettaal enna tharuvaai]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் [Vetkatthai kettaal enna tharuvaai]

None

3.85/5 · 89 ratings

N/A

Reviews

user_13278

★ 4/5
என்ன வேதனை... என் இரண்டு இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு முத்தம்தானே தர முடிகிறது

user_13277

★ 5/5
Feel good love poems🥰❤️

user_13276

★ 5/5
Awesome

user_13275

★ 3/5
அன்றொரு நாள் நீ என் கையைப் பிடித்தபோது உடைந்த வளையலை உடைந்த மாதிரியே இன்னும் வைத்திருக்கிறேன் ஆனால் சற்று முன் நீ என்னைக் கட்டிப் பிடித்தபோது கசங்கிய சேலையைக் கசங்கியபடியே வைத்திருக்க முடியவில்லை உன் காதல் பற்றி எதுவும் தெரியாத இந்தச் சேலையை வைத்துக்கொண்டு என்ன செய்வது ~ /// //இரவில் நீ தூங்கிக்கொண்டிருப்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஒரு விளக்கு வாங்கி வந்திருக்கிறேன் என்று ஒரு நாள் விளக்கொன்றை என் கையில் கொடுத்தாய் ச்சீ..அதைப் பிடித்துக்கொண்டிருக்கவே வெட்கமாய் இருந்தது எனக்கு ~ // // உன்னை வட்டமிட்டுக் கொண்டிருக்கிற அழகில் பூக்களாலும் குழந்தைகளாலும் மட்டுமே உன்னைத் தொடமுடிகிறது அவற்றிற்கு மட்டுமே உன்னைத் தொட்ட பிறகும் பழைய மாதிரியே இருக்கத் தெரிகிறது ~ // //என்னை மட்டுமல்ல வாழ்கிறேன் என்கிற பெயரில் இந்த மண்ணின் எல்லா அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய் பிழிந்து போடுபவன் நீ ஆனாலும் எல்லாமே உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன நானும்தான். //

user_13274

★ 5/5
புத்தகம் : வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் கவிஞர் : தபூ சங்கர் பக்கங்கள் :128 பதிப்பகம் :நிறம் பதிப்பகம் எப்போதோ கேள்விப்பட்ட தலைப்பு என்று தோன்ற, அட்டைப்படத்தின் வண்ணங்களில் மயங்கி கோவை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்த கவிதை புத்தகம். கவிதைப் புத்தகங்கள் பல வாசித்து இருக்கிறேன். ஆனால் புத்தகமே கவிதையாக கண்ட புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். "அழகான பொருட்களெல்லாம் உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துகிற எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன" என்று புத்தகத்தை தொடங்கும் கவிஞர், முழு புத்தகத்தின் சாரத்தையும் அந்த முதல் கவிதையிலே கூறிவிட்டதாய் தோன்றுகிறது. கவிதைகள் அத்தனை அழகு.. அத்தனை காதல்... " நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என் தோள்களில் யார் யாரோ தூங்கிச் சாய்கிறார்கள் பேருந்துப் பயணத்தில்!" என்ற ஏக்கத்தில் தான் எத்தனை காதல்!! "என்ன வேதனை என் இரண்டு இதழ்களையும்கொண்டு உனக்கு ஒரு முத்தம்தானே தரமுடிகிறது" என்ற வேதனையிலும் காதல்!! இப்படி காதல் ஒரு பக்கம் வண்ணம் தீட்ட, அதன் அருகில் இருதய வடிவிலே விதவிதமாய் கிறுக்கல்கள், அட இத்தனை விதமாகவும் வரையமுடியுமா? என்று வியப்பு விழிவிரிய வைக்க.. மறுபக்கத்தில் கறுப்பு வெள்ளை வண்ணத்தில் விதவிதமான புகைப்படத்தில் பெண்கள்.. அவர்களும் வண்ணமாய்.. கவிதையாய்!!! "இது வெறும் புத்தகம் அல்ல இதைத் தொடுபவன் காதலனாகிறான் தொடுபவள் காதலியாகிறாள்" என்று கடைசி பக்கம் ஆருடம் சொல்லிய கவிஞர்... இதைத் தொடுபவர்கள் வண்ணமயமாக மாறுவார்கள் என்பதை மட்டும் கூற மறந்துவிட்டதாக தோன்றுகிறது!!

user_13273

★ 3/5
எனக்கு பிடித்த வரிகள் இந்த புத்தகத்தில்.... நான் உன் மடியில் படுத்துக்கொள்கிற நேரங்களை விட..... உன்னை என் மடியில் படுக்க வைத்துக்கொள்கிற நேரங்களுக்காகவே நான் வாழ்கிறேன். நீ இருக்கும்போது சுமைகளற்று இருக்கும் என் மடியும் மார்பும் நீ எழுந்து போனபின் கனமாகி போகிறது.

user_13272

★ 3/5
A series of haiku's that oscillates between lust and love!! சூரியனை ஒரு முறை கூட முழுசாகப் பார்த்ததில்லை. ஆனால் அதுதான் சூரியன் என்பதில் எப்போதும் சந்தேகம் வந்ததில்லை. உன்னை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நீதானா நீ என்கிற சந்தேகம் மட்டும் வந்து கொண்டேதான் இருக்கிறது. <3

user_13271

★ 5/5
அருமையான கவிதைகள் ! நான் மிகவும் ரசித்து வாசித்த கவிதை தொகுப்பு ! அழகான பொருட்களெல்லாம் உன்னைநினைவுபடுத்துகின்றன, உன்னைநினைவுபடுத்துகிற எல்லாமேஅழகாகத்தான் இருக்கின்றன. .

user_13270

★ 5/5
Stress buster :) * நீ சாய்வதற்கென்ற வைத்திருக்கும் தோள்களில் யார்யாரோ தூங்கி சாய்கிறார்கள் பயணங்களில் ! :D ^_^ * புகைப்படத்தில் இருப்பது நீ தானா ? தொடப்போனால் சிணுங்குவதில்லையே ! முத்தம் கேட்டல் வெட்கம் தருவதில்லையே ! கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே ! அருகிலிருந்தும் உன் வாசம் இல்லையே ! வேண்டாம்... நீயே வைத்துக்கொள் ! புகைப்படத்தில் எல்லாம் நீ இருக்க முடியாது. :) Those beautiful poetic conversations ^_^ ஒரு கோப்பை தேநீருடன் இரவில் கைபேசி சிணுங்கலின்றி படிக்க ஏற்ற தொகுப்பு ^_^ !
Genres
Shelves
book Poetry Tabu Shankar

More like this


Indha Pookkal Virpanaikku Alla

Author: Vairamuthu

இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தான் வாழ்ந்த - வாழும் காலத்தின் சமூகப் பதிவுகளாக விசாலப் பார்வையோடும் மனித நேயத்தோடும் ஒலிக்கும் ஒ…

3.85/5 · 89 ratings

பித்தன்

Collection of poems

3.85/5 · 89 ratings

Devathaigalin Devathai

Tamil Poetry

3.85/5 · 89 ratings

Sigarangalai Nokki

Author: Vairamuthu

N/A

3.85/5 · 89 ratings

Thanneer Desam

Author: Vairamuthu

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

3.85/5 · 89 ratings

Villodu Vaa Nilave

Author: Vairamuthu

N/A

3.85/5 · 89 ratings

குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]

காவியச் சூரியோதயங்களும், அண்ட கோள நட்சத்திரப் போர்களும், துரும்பின் மீதும், அரும்பின் மீதும் சுமத்தப்படும் குறியீட்டுத் தூண்களும், கருங்கல் சிற்பத்தின் மீது பூசப்பட்ட சுண்ணாம்பு…

3.85/5 · 89 ratings

Ithanaal Sagalamaanavargalum

Author: Vairamuthu

N/A

3.85/5 · 89 ratings

Konjam Theneer Niraiya Vaanam

Author: Vairamuthu

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்கான. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவ…

3.85/5 · 89 ratings

Songs Of A Coward: Poems Of Exile

A king decrees that all humans be skinned alive. A man runs from words that hound him like a pack of wolves. A legion of white snakes sweeps acros…

3.85/5 · 89 ratings