Yet another historic attempt by vairamuthu. The lead characterisation is too positive and it stays with your heart all time. I could remember the story even after 4 years.
Love,History,Revolution--Vairamuthu varigal....Vairamana varigal... வில்லோடு வா நிலவே .Naan unnodu varukiren
Splendid narration which made me travel through the Kingdom of Cheras and War was fought right in front of my eyes...
Historical fiction based on a beautiful and brave love story written in a poetic style. I enjoyed every line of the book. Thank you Vairamuthu sir!!
Amazing Novel. what a hero!!
Asusual vairamuthu rocks!!
History of this ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் , காக்கை பாடினியார் நச்செள்ளையார் nice.
Vairamuthu's poor attempt in writing a historical novel.
His writing is good, but very very predictable.
And written with an agenda to criticise Sastras.
The twist that he has attempted is a joke.
I mean, seriously who was he kidding when he wanted it to be a twist, that a brilliant king could not differentiate between a man and a woman?
Shows that he is less of a storyteller than a poet.
A nice book - with lot of love, poetry and bravery under chera period. The book has lots and lots of metaphors and idioms.
இறந்தகாலம் என்பது மனிதர்களுக்குத்தான்; வரலாற்றுக்கில்லை.
ஒவ்வொரு மனிதனும் இறந்த காலத்தின் தொடர்ச்சிதான்.
First book where I felt our language, Tamil richness through our writer Vairamuthu. Classic love of Cheraladan and Nachalai across cast and class with classic War rules of Tamilans💪...
நல்ல ஒரு வரலாற்று புதினம், வரலாற்றில் முதல் முதலாக வருணாசிரமத்துக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல் தான் கதை.
this book really nice... i love kaviperarasu vairamuthu's books...
urakkam thirudinaal oru naal Rani, uyril ullavinaan pattathu arasan, uyir kuduthan aaruir nanban..
by this i can fell how the girls r brave in tat year.
I want read this book on online and pdf file can u give
வைரமுத்துவிற்கான கவித்துவ நடையில் சரித்திர நாவல். சரித்திர நாவலானாலும் சேர மன்னன் சேரலாதனுக்கும் பெண் புலவர் நச்செள்ளைக்கும் இடையேயான காதல் கதையே பிரதான களமாகவும் சரித்திரமும் சேரப் பேரரசின் மற்ற விடயங்களும் பின்னணியில் போகிற போக்கில் பேசப்படுகின்றது. வருணாசிரம பாகுபாடு சிறிது தூக்கலாக கதையின் ஒரு எதிரியாக விரிகிறது. கதையில் திருப்பங்கள் என்று வரும் பகுதிகள் எல்லாம் யூகிக்க கூடியவையாகவே இருக்கின்றன. அது போதாதென்று தலைப்புகள் அந்தப் பத்தியில் நடக்க இருக்கும் விடயங்களைத் தள்ளாத தெளிவாகக் கூறுகின்றது. கவித்துவ நடைக்காக ஒரு முறை படிக்கலாம். பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களின் வரிசையில் இந்த நாவலை வைத்துப் பார்ப்பது ஐயமே.
இவ்வரலாற்று புதினத்தில் கதையினுள் கவிதையுள்ளதா அல்ல கவிதைக்குள் கதை பொதிந்துள்ளதா என்பதை கண்டறிய சிரமப்பட்டேன்.. சில தருணங்களில் மெய் சிலிர்த்தேன்..
இக்காவியத்தை தமிழ் மொழி கொண்டு செதுக்கிய நுட்பத்தை கண்டு வியந்தேன்...
சேர அரசு பற்றி நான் வாசித்த முதல் சரித்திர புனைவு நாவல் இந்நாவல். சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் பிறந்தவர்கள் சேரன் செங்குட்டுவனும் மற்றும் இளங்கோவும். அவரின் இரண்டாம் மனைவியான வேண்மாளுக்கு பிறந்தவர்கள் களங்காய்க் கன்னி நார்முடி சேரலும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனும் ஆவர். இந்நாவல் நாயகனாக தொண்டி நாட்டை ஆண்ட ஆடு கோட்பாட்டுச் சேரலானதைக் கொண்டுள்ளது. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு எஸ்.கே அய்யங்கார் எழுதிய 'சேரன் வஞ்சி' என்னும் நூலே இந்த நாவலை இயற்றுவதற்கு உத்வேகமாக அமைந்திருக்கிறது. அந்நூலில் காக்கை பாடினியார் நச்செள்ளை எனும் பெண் புலவரை சேரலாதன் தன் பட்டத்து அரசியாகக் கொண்டான் என்ற ஒரு செய்தியை ஒரு நூலாகப் பிடித்து இந்தப் புனைவு நாவல் இயற்றப்பட்டிருக்கிறது. இச்செய்தியின் உண்மை தரவை ஆராய்வதின் அவசியத்தை இப்பதிவின் இறுதியில் பார்க்கலாம். திராவிட நாட்டில் வாழ்ந்த மனிதர்கள் மன்னர் என்ற உயர் பதவியே கொண்டாலும் நால்வருணக் கோட்பாடுகளை எதிர்த்துத் தான் கொண்ட சமத்துவ உணர்விற்காக 'நாட்டு வாழ்க்கை வேண்டாம், காட்டு வாழ்க்கையே மேல்' என்று தன் மன்னர் பதவியைத் துறந்து விடுதலை வேட்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்நாவலின் கரு. இரும்பு அடிக்கும் கொல்லனின் தங்கையாக அழகிலும், அறிவிலும் செழித்து வளர்ந்திருக்கிறர் இக்கதையின் நாயகி நச்செள்ளை. தமிழ் செய்யுளில் மாபெரும் புலமை கொண்ட நச்செள்ளை நாடாளும் மன்னர்களைப் புகழ்ந்து ஒரு பாடல் கூடச் செய்யாது, மாறாக எளிமையான மக்களைப் புகழவே நம் பாடல் வரிகள் அமைய வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்கிறாள். இக்கொள்கைக்கு அவள் வர காரணம் களங்காய்க் கன்னி நார்முடி சேரலிற்குக் காவல் வீரனாக இருந்த அவள் தந்தை களங்காய்க் கன்னியின் கொலை வழக்கில் அவதூறாகப் பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டார் எனும் கதை. அவள் கொண்ட மற்றுமொரு கொள்கை களவு திருமணம் செய்யக்கூடாது என்பது. அழகிலும், அறிவிலும் புலமை வாய்ந்த நச்செள்ளை பற்றி அறிந்த சேரலாதன் தன் மன்னன் என்பதை மறைத்து ஒரு சாதாரண வீரனாக வேடம் பூண்டு நச்செள்ளையின் மனதை வெல்ல, அவளைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள அவள் ஊருக்கே புறப்படுகிறான். நச்செள்ளையின் தந்தை மறைவிற்குத் தன் குடிதான் காரணம் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. நச்செள்ளையும் சேரலாதனிடம் தன் மனதை இழக்கும் வரையிலும் அவன் மன்னன் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. சேரலாதனின் காதலை அறிந்த செங்குட்டுவன் அவையில் ஆலோசகராக இருக்கும் வேதம் படித்த ஆசான் நால்வருணக் கோட்பாட்டிற்கு எதிரான அவர்கள் காதலை முறியடிக்கவேண்டுமென்று இருவரையும் கொல்லவே திட்டமிடுகிறான். ஆகவே அதுவரையிலும் ஒரு கடற்போரைக்கூட மேற்கொள்ளாத சேரலாதனிடம் கடற்கொள்ளையர்களான கடம்பர்களை போர்கொண்டு வீழ்த்துமாறு கட்டளையிடப்படுகிறது. அந்த நிலையில் நச்செள்ளை தற்கொலை செய்துகொண்டாள் என்ற செய்தி சேரலாதன் காதுகளுக்கு எட்டுகிறது. அதே சமயத்தில் இளம் வயது புலவர் ஒருவர் சேரலாதனிடம் இரவலாக அவனுடன் போர்க்களம் சென்று அவன் புகழ் பாடிப் பாடல் இயற்றவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறான். அதுவரையிலும் யாருமே கேட்காத இரவலாக இருந்தாலும் புலவரின் வேண்டுதலை சேரலாதன் ஒப்புக்கொள்கிறான். மீளா துயரில் சேரலாதன் ஆழ்ந்திருந்தாலும் , போர் உத்திகளைத் திறம்பட மேற்கொண்டு கடம்பர்களை வீழ்த்துகிறான். சேரலாதனை கொலை செய்யும் திட்டத்துடன் வந்த இளம் வயது புலவர் அழகான நிலவான நச்செள்ளைதான் என்று வாசிப்பவர்களால் யூகிக்க முடிந்தாலும், அதனைக் காட்சிப்படுத்திய விதம் அருமை. தன் குடும்பம் அழிந்ததற்கு சேரலாதன் வம்சம் காரணம் இல்லை, அது அனைத்தும் ஆசானின் சதி என்பதை நச்செள்ளை தெரிந்துகொள்கிறாள். சேரலாதனும் நச்செள்ளையும் மீண்டும் காதலில் திளைத்து கரம் பற்றுகிறார்கள். கொல்லர் குடும்பத்தை நச்செள்ளை சேர அரசின் பட்டத்தரசி ஆகியிருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஆசான் மறுபடியும் தன் சதித் திட்டத்தைத் தீட்டுகிறான். அதனை சேரலாதன் எப்படி முறியடித்து தன் அரச பதவியைத் துறந்து விடுதலை பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்பதே நாவலின் மீதிக் கதை. கவிஞர் வைரமுத்துவின் இந்த நாவலையும் சுவைப்படக் கவித்துவமாக எழுதியிருப்பது இனிமை. இந்த நாவலிற்காக சங்க இலக்கியங்களான புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு போன்றவற்றில் குறிப்பு எடுத்திருப்பது கவிஞரின் உழைப்பை உணர்த்துகிறது. இருந்தாலும் நச்செள்ளை வரலாற்றில் உண்மையில் யார் என்பதனை அறிந்துகொள்ளக் கொஞ்சம் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கலாம் என்பதைச் சில வரலாற்று அறிஞர்களின் பதிவுகள் மூலம் அறியமுடிந்தது. காக்கை பாடினி என்ற பெயர் கொண்ட புலவரான காக்கை பாடினியார் நச் செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் அரசவையில் ஓர் ஆலோசகராக விளங்கியதால் அவரை சேரலாதன் 'தன் திருவோலக்கத்துச் சான்றோருள் ஒருவராய்த் தன் பக்கத்துக்கொண்டான்' என்று பதிற்றுப்பத்தில் ஒரு பதிகத்தில் பாடப்பட்டிருக்கிறது. அதனைத் தவறாக புரிந்து கொண்டு சேரலாதன் நச்செள்ளை புலவரை மணந்து கொண்டான் என்று எழுவது தவறு என்று சேரமன்னர் வரலாறு நூலின் ஆசிரியரான ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்களின் பதிவு மூலம் அறிய முடிந்தது. இந்நாவலை வாசிக்கும்போது எனக்கு நெருடலாக இருந்த மற்றுமொரு செய்தி: வேளிர் சமூகத்தைத் தீயவர்களாக காட்சிப்படுத்தியிருப்பது. வேள்பாரியை நான் வாசிக்காமல் இருந்திருந்தால் இது ஒரு பெரிய நெருடலாக இருந்திருக்காது.
Historical fiction about the King Cheralathan. Life of Tamilians, war, love is narrated in Vairamuthu s unique style. Worth reading it...
தமிழ் மண்ணாண்ட மன்னனின் காதல் கவிகள் தித்தித்தன..ஆற்றல் மிக்க வீரமும் போர் குணமும் கொண்ட சேரலாதனும் நச்செள்ளையும் இலக்கியத்துடன் மெய்சிலிர்க்க வைத்தனர். நம் தமிழ் மொழிதான் எத்துனை சிறப்புடையது....
this is my favourite book...............
i had opportunity to drink the tamil honey from tis book.......
mudhal mutham, thithitha degangal ect are very sweet rather then real honey.....
mazhaithooli megathai mirumpothu thane boomikku kuda malai.......
this line would be my favourite one........
A little part of Chera dynasty is being narrated here with fine details of love and war. More of cliched plot where you can find all these essential parts of a war story, a character disguised, some war tricks and other such. Predictable plot! Beauty of ageless true love and this ageless language was what drove me through the book. Why should all these historical novels have a common base, why wasn't there something different. Craving to find some out of the ordinary historical fictions in tamil. Leaving this minor disappointment aside, this is one of the most beautiful tamil works to read and get a thrill out of it. When it comes to Vairamuthu, metaphors know no limits!! I enjoyed reading this one as much as I enjoyed songs penned by him. If you scale it as historical fiction, it may not look so great still could be appraised for its tone of narration and charm of the language.