படைத்தலைவன் ,யவன ராணி சுற்றி கதை அருமையாக உள்ளது..
good and bad
Brilliant start. Got slow somewhere in between .. looking forward to the second volume though ! Hopefully it does not disappoint !
one of the best from sanlyan. யவன இராணியின் காதல் இன்னும் என்னுள் மறையவில்லை. பெரும் தாக்கம் ஏற்படுத்திய புத்தகம்.
Best novel about Chola dynasty how karikala cholan conquered his kingdom back with the help of Ilancheliyan has described from ilancheliyan point. Interesting story must read one
ஒரு பாகத்தில் முடிக்க வேண்டிய புதினம்.
I don't know how to read this book kindly help me to how to download and read
Wonderful description of the Sangam period and of the Greeks and Romans. Lets read it for the queen😍🙂
It is a good book worth reading.
One of the greatest works of Sandilyan!!
Most captivating story, based on the real history, Sandilyan combines it with his own imagination and narrative skills.
This is perhaps the best of his creations.
Fantastic story much unlike....
Fantastic plot much unlike கடல் புறா but the narration style is typical சாண்டில்யன் expressing the characters expressions & emotions often that go beyond the storyline. However there is no shortage of twists & thrills as the plot thickens.
மிகமோசமான புத்தகம். இதை என் கொண்டாடுகிறார்கள் என்று புரியவில்லை.
சலிப்புத்தட்டும் கதை, சுவாரஸ்யமில்லா எழுத்துநடை. 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் நடக்கும் கதையில், 'பாரதம்' 'இந்து' மதம் எல்லாம் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர்களுக்கு கொஞ்சமேனும் வரலாற்று அறிவும் பொறுப்பும் வேண்டாமா?
Yavana rani written by chandilyan is one of the popular books,it's a historical fiction of queen who seized the chola kingdom when karikala cholan was young..In this first part the story is filled with love,perspicaciousness,guile of villain,and subterfuge of cholasupporters,and expections on next actions...
Going to start reading the next part.
Thank you
The story traces back to Karikala Cholan, one of the greatest kings of the chola dynasty. This story is about the commander of the army, how he saves his country from the clutches of the Greek naval captain, Tiberius.
The book is nice. Recommended for all who have read his other series kadal pura. I'm easy to read the next part
யவனராணி
ஏதோ சோகச்சிந்தனையில் மனம்போன போக்கில் புகார் கடற்கரையில் நடந்து கொண்டிருக்கும் இக்கதையின் நாயகனும் புகார் நகர சோழப்படை உப தலைவனுமான இளஞ்செழியன் காலில் ஏதோ தட்டுபட கீழ் நோக்கிய அவன் கண்களில், நெருப்பில் உருகும் மெழுகே உருகக்கூடிய பேரழகு கொண்ட ஓர் ஏந்திழையின் உடலை காண்பதாக தொடங்குகிறது இப்பெரும் நாவல்...
காலில் இடர்பட்டவள் யார் என்பதில் தொடங்கி அவள் தன் நாட்டிற்கே எதிரி என்றும் தன் நாட்டில் ஆட்சியை பிடித்து ராணியாக முடி சூட வந்தவள் என்றறிந்த பின்னும் அவளை காணும் பொழுதெல்லாம் தனக்கென தன் அத்தை மகள் பூவழகி என்னும் ஓர் அழகிய வஞ்சிக்கொடி உள்ளதையும் மறந்து சற்று மனத்தடுமாற்றம் அடையும் சாதாரண மனிதனாகவே வலம் வரும் இளஞ்செழியன் ஒரு கட்டத்தில் நாட்டை காப்பாற்ற அவன் எதிர்கொள்ளும் அபாயங்களும் அதிலிருந்து மீள்வதும் அவனின் சிந்தனை திறமையை பறைசாற்றுகின்றன தவிர இறுதியில் உயிரையும் பணயம் வைத்து செய்யும் போர் அவனின் விரத்தை பறைசாற்றுகிறது.
இவர்கள் ஒரு புறம் இருக்க...
காற்றை விட வேகமாக ரதத்தில் வந்து போர் புரியும் மாவீரன் என்று பெயர் பெற்ற இளஞ்செட்சென்னியான தன் தந்தையையும் சூழ்ச்சியால் கொன்று, தன்னையும் யாருமறியா சிறை வைத்த தாயாதியிடம் இருந்து எவ்வாறு தப்பி பிழைத்தான் பின் வேளிர்,சேர மற்றும் பாண்டிய மன்னர்களின் கையில் சிக்கிய தன் நாட்டை தளபதி இளஞ்செழியன், மாமன் இரும்பிடர்த்தலையார் மற்றும் ஆசை நாயகி அல்லியுடன் சேர்ந்து எவ்வாறு மீட்டான் நம் சரித்திர நாயகன் திருமாவளவன் என்னும் கரிகாலன் என்பதே யவனராணி எனும் இந்நாவல்...
துறவறம் பூண்டு அடிகளாக நமக்கு அறிமுகமானாலும் தன் நாடு மாற்றார் கைக்கு செல்லாமல் இருக்க அடிகள் பிருமானந்தரும், கருவூர் சமண மடத்தின் சமண அடிகளும்,இளவல் கரிகாலனின் ஆசை நாயகியான அல்லியும்,இரும்பிடர்தலையாரும் செய்யும் ஒவ்வொரு பிரயத்தனங்களும் இளவல் கரிகாலன் மீதான அவர்களின் பேரண்பையும் நாட்டுபற்றையும் எடுத்துரைக்கிறது...
தன் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ ���ேண்டும் என்று வந்து காதல் என்ற ஒன்றிற்காக தன் இன்னுயிர் ஈந்த யவனராணியும், தன் குருவே ஆனாலும் அதனினும் மதிப்புடைய ராணிக்கு எதிரானதால் ���ுருவையே எதிர்க்க துணிந்த அலீமாவும், தன் நாட்டிலிருந்து இங்கு வந்து தன் அரசை நிறுவி முடி சூட வேண்டும் என்ற குறிக்கோளோடு வந்தாலும் வந்த மாத்திரத்தில் இளஞ்செழியனிடம்
மனதை பறிகொடுத்த ராணி தன் நிலையிலிருந்து வழுவினாலும், தான் வந்த நோக்கத்திற்காக எதையும் செய்யும் ஒரு அசுரனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் யவன கடற்படை தளபதியான டைபீரியஸ்சும் என்றும் மனதில் நிற்பார்கள்.
பொதுவாக கரிகாலன் என்றால்... எல்லாருக்கும் தெரிந்தது கல்லணையை கட்டிய மன்னன் ஒருவனே கரிகாலன் என்றும் இன்னும் பலருக்கு இவன் எதனால் கரிகாலன் என்றழைக்கப்படுகிறான் என்ற காரணமும் தெரிந்திருக்க கூடும்...
மேலும் கூறப்போனால் வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ளவர் சிலருக்கு இவர் ஒரு சோழ மன்னன் என்றும் கூட அறிந்திருக்கலாம்...
ஆனால் இவன் இயர் பெயரென்ன இவன் ஆட்சி எத்தகையது, இவன் தந்தை பெயரென்ன மற்றும் இவன் எவ்வாறு ஆட்சியில் அமர்ந்தான் என்னும் வரலாறு இங்கு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
ஆம்..
ஏனெனில் இவ்வுலகிற்கே எடுத்துக்காட்டாய் நீர் மேலாண்மையிலும், நிர்வாக மேலாண்மையிலும், மக்களை போற்றுதலிலும், ஆட்சி அதிகாரத்திலும் சிறந்து விளங்க கூடிய பண்முக திறமை கொண்ட மன்னர்கள் பலர் இத்தமிழகத்தில் இருந்தும் அதை தன் மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் தன் பாட புத்தகத்தில் மௌரியர்களுக்கும், முகலாயர்களுக்கும் இடம் கொடுக்கும் ஒரு திறமையான அரசை வைத்துக்கொண்டு வெறும் பள்ளிப்புத்தகத்தில் கிடைக்கும் வரலாற்றை மட்டுமே படித்திருக்கும் சாமானியர்களை குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்...
ஒவ்வொருக் கதாப்பாத்திரங்களும் சந்திக்கும் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்துவது நன்றாக அமைந்திருந்தது. கடைசிப் பகுதிக்குச் சற்று முன்புள்ள அத்தியாயங்களில் வரும் நகைச்சுவை அருமை. யவன குருமார்கள் சொன்ன விவரங்கள் என்று யவன ராணி பல இடங்களில் கூறியதும், அந்த கனிப்பின் மீதுள்ள நம்பிக்கையும், விதி மீதுள்ள நம்பிக்கையும் கதையை நன்கு சுழல விட்டதென்றே கூறலாம்.
அருமையான வரலாற்று புதினம், பழைய நகரங்கள் கண் முன் வந்து போயின. குந்தவை - வந்தியத்தேவன் போல் இங்கும் ஒரு ஜோடி. 💯 விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
Very Interesting Novel, but the author was highly influenced by cast, when we read his noveles, we can understand.
மற்ற வரலாற்று நாவல்களில் நான் அனுபவித்ததைப் போல இந்த நாவல் எனக்குத் திருப்திகரமாக இல்லை. இந்த நாவல் நிறைய மசாலா மற்றும் வேண்டுமென்றே சஸ்பென்ஸ் கொண்ட திரைப்படம் போன்றது. பகுதி 1 முடிவில், கதையை விளக்க வேண்டுமானால், முக்கியமான காட்சிகளை மட்டும் 15 நிமிடங்களில் சொல்லிவிடலாம். மீதமுள்ள அனைத்தும் வெறும் தேவையற்ற விளக்கங்கள் மற்றுமே. பக்கங்களை நிரப்புவதற்காகவே காதல் காட்சிகள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது போல் உணர்கிறேன். தேவையான காட்சிகளை மட்டும் வைத்து 2ம் பாகம் வேகமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
Always sandilyan book is awesome. Yavana rani is one of them. Writings, words and flow of the story is too good. Eagerly waiting to open second part.
The 1st book was a bit boring.. but the 2nd book was absolutely marvelous. Feeling proud to be a Tamilan..
My first Tamil historical novel of this author impressed me so much to read all his books further. This man is so much gifted.. that his narration takes us to same feel n time period.. you enjoy it so much that it becomes so difficult and unbelievable to separate the imaginary characters from the history.. The characters, their contributions, patriotic feelings, moral values, ways of spying for greater good in those days inspired me remarkably.. especially the strong character Yavana Rani who keeps up her pride n belief till the end. I would definitely read it again n again.. if you also like strong female characters in a story n enjoy the battle of fate n wisdom, you should certainly go for this book. I am sure you will sleep only after finishing both the parts..
Happy reading
Yavana Rani was the first historial fictional work I had ever read in Tamil. At first, I was very much scared that I might not be able to finish it because I hated too much description in any novels and especially after my dad warned me of the same in this book too but I must thank Sandilyan for changing my taste. Ofcourse the book was too much descriptive but every word written was underlined by his extraordinary imagination which made me live at the periods of the Cholas. He was one of the best. And I would never forget Yavana Rani... !!!
She is the best!!!
Let me try to write a review in Tamil :)
கரிகால்சோழரின் வெம்போரை சித்தரிக்கும் இந்நூலுக்கு காவேரி நதியின் சிறப்பையும், தமிழ் கன்னியரின் அழகையும் கல்கி வர்ணிப்பது ஒரு அணிகலனாக அமைகிறது.
ஆடவரின் இதயம் ஒருவருகருக்கு சொந்தம் இல்லை என்பதை போல கட்டும் இளஞ்செழியன்,தமிழ் பெண்டிரின் கற்புநெறியை காட்டும் பூவழகி,விதியை வழுவாது நம்பும் யவன ராணி ஆகிய மூவரும் ஒருங்கே சேர்ந்து கதைக்கு மேலும் உயிர் ஊட்டியுள்ளனர்.
இளஞ்செழியன் மற்றும் பூவழகிக்கு இடையேயான காதல் ஊடல் நகைக்கத்தக்கது.
வீரம் இல்லாத சோழர்களும் இல்லை, தமிழ் காவியமும் இல்லை. இந்த யவன ராணி நூலும் அதற்கு ஒரு விளக்கல்ல.
நல்லதொரு படைப்பு.
படித்ததிலேயே இரு பெண்களிடமும் மயங்கிவிட்டேன். நல்ல வேளை நான் அப்பொழுது பிறக்கவில்லை, இல்லையேல் அந்த இரு பெண்களையே சுத்தி வந்திருப்பேன்