இதயம் கனத்தது இறுதி பக்கம் முடிந்ததும். இனி கோயில் யானைகளை சாதரணமாக கடந்து போக முடியாமல் இருக்கும், வலிக்கும்!.அனைவரும் படித்து உணர வேண்டிய சிறுகதை!
A magnificent book about a magnificent life! I do wish more people would read this book as it has vital knowledge for all of mankind.Simply written,to the point and yet emotional.
Blog: https://thosebittersweetmemories.blog...
About the Book:
Yaanai Doctor (Elephant Doctor) from writer Jeyamohan is a must read short account of a real-life veteran veterinarian doctor who is an Elephant expert.
The story is narrated by a colleague who works closely with Dr K who gets instantly admired and later trying his best to get the deserved recognition for the Elephant Doctor.
The reader can easily connect with the narrator and visualize the beauty of wildlife and see how inspirational Dr K is. This short read will make you go to nature and communicate with it.
Usually most of the books doesn't make any impact. யானை டாக்டர் made such an impact
இனி எந்த ஒரு கோவில் யானையையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. அருவருப்பில் தொடங்கி காட்டை நேசிக்கவும் மனிதனின் அற்ப செயல்களை அருவரப்படைய செய்யும்.
Short story dha 50 pages dha varum must read.
இனிமேல் கோவில் யானைகளை அவ்வளவு எளிதில் என்னால் கடந்து செல்ல முடியும் என்று எனக்கு தோணவில்லை! காரணம்?
யானைகள் ஒரு நாளில்,
3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
200 கிலோ உணவு உண்ண வேண்டும்.
குறைந்த பட்சம் 50 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.
இதில் எதையாவது நம் கோவில் யானைகள் செய்கிறதா? இல்ல நம்ம மனிதப் பிறவிகள் செய்யத்தான் விடுகிறோமா?
நாம் எல்லாம் என்னப் பிறவிகள் என்ற கேள்வி பல முறை எழும்!
இந்த கதையின் உயிர் Dr K ❤️
Dr K யைப் பற்றி அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது படிக்க வேண்டும்.
Dr K மாதிரி மனிதர்கள் இந்த நாட்டில் இந்த உலகில் இருப்பதால் தான் மழை பெய்கிறது!
Dr K நம் வாழ்வியலையும் நம் நம்பிக்கையையும் பல இடங்களில் சிந்திக்கத் தூண்டுகிறார். ஜெயமோகனின்
இந்த படைப்பை நிச்சயம் வாசியுங்கள்!
Written by Jeyamohan, "Yaanai Doctor" is a Short story based on Doctor Krishnamurthy aka Doctor K whose techniques of treating wild animals mainly Elephants are used by the Indian Forest department. Reading "Yaanai Doctor" was truly a profound experience for me. It just travels like a Conversation between Doctor K and a Forest officer and I was engrossed in it. Doctor K's Principles and his selflessness made me feel in awe. Everytime he blends his even small tea talk about elephants gave me a lot of new things to learn about those lovely creatures. I loved the last part of the story where he condemns the domestication of Elephants by Indian Temples and Royal Services over the cost of a spectacle. Just like the forest officer, every encounter with Doctor K with the forest beings makes us feel small in the grand scheme of things. The setups and pay-offs are so worth it. Especially the end part where the elephant herd calls for Dr.K brimmed my eyes with tears. In a nutshell, "Yaanai Doctor" is truly a soothing and satisfying short story that emphasizes on being harmonious with nature!
பல மனமாற்றங்கள் இக்கதையை வாசித்த பிறகு...
1 நான் "ஸ்கோலிஸிபோபிக்". புழுக்களை நினைத்து விட்டாலே தூக்கம் வராது. வெகு நேரம் பக்கத்தில் இருக்கின்றனவா என்று பைத்தியம் போல் தேடிக்கொண்டே இருப்பேன். கதையில் யானை டாக்டர் அவைகளைக் குழந்தைகள் என்பார். அக்கண்ணோட்டம் எனக்குப் புதிதாக இருக்கிறது. இது என் போபியாவைக் சிறிதளவேனும் குறைக்க வல்லதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
2 யானை டாக்டரின் "வலி" பற்றிய கண்ணோட்டம். வலிகளை கவனிக்கப் பழக வேண்டும். விலங்குகளின் வலி பொறுக்கும் வலிமையைப் படித்து வியந்தேன். யாவற்றிலும் மேன்மையாக இருக்கும் விலங்குகளை மனிதன் எதைக் கொண்டு கீழானவை என்று முடிவெடுத்தான்?
3 யானை பால் முன்பே பெரும் பற்று உண்டு. இன்று அது மரியாதை ஆகிறது. முன்பு அறிந்திராத அதன் ஆற்றல்களை அறிந்து கொண்டேன்.
4 மதுக்குப்பிகளை வீசி எறியும் இனம் என் இனம் என்று வெட்கிறேன். யானைகள் அதனால் படும் அவஸ்த்தையை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. மனம் கனக்கிறது! இவ்வளவு கீழானவர்களா நாம்!
5 காட்டைக் காப்பது நம் கடமை. இவ்வாழ்க்கையில் இயற்கை சார்ந்து வாழ்வதே உன்னதம். வேள் பாரியின் தாக்கத்தை இப்பொழுதும் அறிகிறேன்.
6 கோவில்களில் யானையை கண்டு ஆசிர்வாதம் வாங்க மிக உற்சாகமாக சென்றவள் தான் நானும். கதையில் யானை டாக்டர் கோவில்களில் இருக்கும் யானை வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பார். ஒரே பாராவில் நாம் செய்வது இவ்வளவு பெரிய குற்றம் என்று உணர்த்தி விட்டார். இது எனக்குப் பெரிய கண் திறப்பாக இருக்கிறது.
கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய கதை!
Such a wholesome and short read if you are an animal lover you will love it
Amazing!
JeMo is a wordsmith! Whatey wonderful short story this is! It urges me to read his full stack "Kaadu" novel. A doctor's story - feels so real with JeMo's writing. A fine short tour of forest and a glimpse of elephant and wild life. Sprinkle some philosophy and some hard hitting truth, we have yaanai doctor.
നൂറു സിംഹാസനങ്ങൾ വായിച്ചു കഴിഞ്ഞപ്പോൾ തീരുമാനിച്ചതായിരുന്നു ജയമോഹനെ വീണ്ടും വായിക്കണമെന്ന്. ഉടനെ ഓർഡർ ചെയ്തു ആന ഡോക്ടരും മിണ്ടാ ചെന്നായും. ഫിക്ഷൻ ആണെന്ന ധാരണയിലാണ് ആന ഡോക്ടർ വായിക്കാൻ എടുത്തത്. പുസ്തകത്തിന്റെ പുറംചട്ടയിൽ കൊടുത്തത്തിട്ടുള്ളതും ഫിക്ഷൻ എന്നു തന്നെ. പക്ഷെ വായിച്ചു തുടങ്ങിയപ്പോൾ ആണ് മനസ്സിലായത് ആന ഡോക്ടർ എന്നറിയപ്പെട്ടിരുന്ന ഡോ. വി കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതം ഫിക്ഷൻ പോലെ അവതരിപ്പിച്ചതാണെന്ന്. കാടിന്റെ ആത്മാവ് കണ്ടെത്തിയ ഡോ കെ യുടെ ജീവിതം അദ്ദേഹത്തിന്റെ മരണശേഷം കൂടെ ജോലി ചെയ്തിരുന്ന ഏതാനും പേരൊഴികെ മറ്റാരും അറിയാതെ വിസ്മൃതിൽ ആകേണ്ടതായിരുന്നു. എന്നാലിന്ന് തമിഴ്നാട്ടിലെ പല സ്കൂളുകളിലും ഇന്ന് ഇത് പാഠമാണ്. നൂറു സിംഹാസനങ്ങൾ പോലെത്തന്നെ ജയമോഹൻ കോപ്പി റൈറ്റ് വേണ്ടെന്നു വച്ച മറ്റൊരു കൃതിയാണിത്.
ആനകൾക്ക് വേണ്ടി ജീവിതം മാറ്റി വച്ച വനം വകുപ്പിൽ മൃഗ ഡോക്ടറായ ഡോ കെ മരണപ്പെടുന്ന മൃഗങ്ങൾക്കു പോസ്റ്റുമോർട്ടം നടത്തുന്നതിന് വേണ്ടി പോരാടി വിജയിച്ചു. അദ്ദേഹം ചെയ്ത പോസ്റ്റുമോർട്ടം റിപ്പോർട്ടുകൾ ഞെട്ടിക്കുന്നതായിരുന്നു.
ഹൃദയത്തിൽ സ്പര്ശിക്കുന്ന ഈ കുഞ്ഞു പുസ്തകം എല്ലാവരും വായിക്കേണ്ടതാണ്. കോപ്പി റൈറ്റ് പ്രശ്നം ഇല്ലാത്തതിനാൽ ഓണ്ലൈനിൽ സൗജന്യമായി വായിക്കാം. പുസ്തകമായി പ്രസിദ്ധീകരിച്ചിട്ടുള്ളത് മാതൃഭൂമിയാണ്.
ஜெயமோகனின் masterpiece ❤️❤️❤️
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி வனத்துறையின் மிருக டாக்டர் அவர்கள் பற்றிய சிறுகதை.
ஜெயமோகன் அவர்களின் எழுத்து அபாரம். "அறம்" புத்தகத்தை வாசிக்க தூண்டுகிறது.
இந்த டாக்டர் கே முயற்சியில் தான் இப்போது வரை கோவில் யானைகளின் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது.
கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
"என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலி மதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள்" - இதற்கான பதில் நம்மை காயப்படுத்தி அழ வைக்கும்.
ആനഡോക്ടർ എന്നറിയപ്പെട്ട ഡോക്ടർ വി കൃഷ്ണമൂർത്തി തമിഴ്നാട്ടിലെ പ്രധാന മൃഗ ഡോക്ടറായിരുന്നു.
ആനകൾക്കായി ജീവിതം മാറ്റിവച്ച അദ്ദേഹത്തിന്റെ ഒരു ചെറിയ ജീവചരിത്രമാണ് ജയമോഹന്റെ ഈ കൃതി.
ആനകളെക്കുറിച്ച് ആഴത്തിലുള്ള അറിവും വിവേകവുമുള്ള ഒരു മനുഷ്യനായിരുന്നു Dr.K .
വന്യമൃഗങ്ങൾക്ക് പോസ്റ്റുമോർട്ടം വേണം എന്ന് എഴുതിയും പോരാടിയും വിജയിച്ചു പോസ്റ്റുമോർട്ടം ചെയ്തു തുടങ്ങിയപ്പോഴാണ് തമിഴ്നാട്ടിലും കേരളത്തിലും മരിക്കുന്ന ആനകൾ പകുതിയോളം ആനവേട്ടക്കാരുടെയും വിവേകശൂന്യരായ വിനോദസഞ്ചാരികളുടെയും ഇരകളാണെന്ന് മനസ്സിലായത്.
കാട്ടിൽ വിനോദസഞ്ചാരം എന്ന പേരിൽ എത്തുന്ന ആളുകളുടെ അപക്വമായ പെരുമാറ്റവും വിവരക്കേടുകളും കാരണം കാട്ടിലെ മൃഗങ്ങൾക്കു പലവിധ ദ്രോഹമാണ് ഇവർ ചെയ്യുന്നത്. കാട്ടിൽ കയറി കള്ളുകുടിച്ചും ഒച്ചവെച്ചും കാടിന്റെ ശാന്തത നശിപ്പിക്കുന്നതിനോടൊപ്പം, ഉപേക്ഷിച്ചുപോകുന്ന പ്ലാസ്റ്റിക്കും പൊട്ടിയ ബിയർ കുപ്പികളുടെ അവശിഷ്ടങ്ങളും ആനകൾക് മേൽ ചെന്നെത്തിക്കുന്നത് കൊടുംപാതകമാണ്. ബിയർ കുപ്പികൾ ആനയുടെ കാലിൽ ആഴത്തിലേക്ക് കയറിപ്പോകുകയും,ആനയെ മരണത്തിലേക്ക് നയിക്കുന്ന മുറിവായി മാറുകയും ചെയ്യുന്നു. പുഴുവരിക്കുന്ന അവസ്ഥയിൽ ആനയോടടുക്കുകയും അതിനെ ചികിത്സിക്കുകയും ചെയ്യുന്ന കാര്യങ്ങളൊക്കെ വായിക്കുമ്പോൾ തീർച്ചയായും വായനക്കാരന്റെ കണ്ണ് നനയും.
വന്യജീവികളുടെ ഭംഗിയും കാടിന്റെ സൗന്ദര്യവും ഒരു പരിധിവരെ എഴുത്തുകാരനിലൂടെ കാട്ടിലേക്ക് എത്തിപ്പെടാനും ഈ വായന സഹായിക്കും.
ശെരിക്കും ഇത് വായിക്കേണ്ടത് കപടമായ ആനപ്രേമം നടിക്കുന്ന മനുഷ്യരാണ്. ആന ജീവിക്കേണ്ടത് കാട്ടിലാണ് നാട്ടിലല്ല.
ആനകളുടെ കഷ്ടപ്പാടും അവയെ ദുരിതത്തിലാക്കുന്നു
മനുഷ്യന്റെ വിവേചനരഹിതമായ പ്രവർത്തനങ്ങളും വായിക്കാനും മനസിലാക്കാനുമുള്ള മികച്ച പുസ്തകം .
ഈ പുസ്തകം ഒരു ഫിക്ഷൻ ആയിരിക്കുമെന്ന വിചാരത്തിലാണ് വായിക്കുവാൻ എടുത്തത്. പിന്നീടാണ് ഇത് ഡോ. വി കൃഷ്ണമൂർത്തിയുടെ ചെറിയൊരു ജീവചരിത്രമാണെന്നു മനസിലായത്. ഈ പുസ്തകത്തിലൂടെയാണ് ഞാൻ ഇങ്ങനെയൊരു ഡോക്ടറിനെ കുറിച്ചറിയുന്നത്.
ഇത് കൂടാതെ ജയമോഹന്റെ ഒരു അഭിമുഖവും ഈ പുസ്തകത്തിലുണ്ട്.
"മതാവകാശം എന്നൊക്കെ പറഞ്ഞ് ചിലര് എതിര്ക്കും. അവരാണ് നൂറുകൊല്ലം മുന്പ് ദേവദാസിമാര് ഉണ്ടെങ്കിലേ ദൈവം സുഖിക്കുകയുള്ളൂ എന്നു പറഞ്ഞ് തെരുവിലിറങ്ങിയത്; ഇരുനൂറു കൊല്ലം മുന്പ് ഭര്ത്താവിന്റെ ചിതയില് ഭാര്യയെ എടുത്തിട്ട് കത്തിച്ചത്. ആനയെ മോചിപ്പിച്ചേ പറ്റൂ. ആന കാടിന്റെ രാജാവാണ്. അവനെ പിച്ചക്കാരനാക്കി വെച്ചിരിക്കുന്നത് ഈ രാഷ്ട്രത്തിനുതന്നെ അപമാനമാണ്"
നൂറ്സിംഹാസനങ്ങൾ പോലെ ഇതിനും കോപ്പിറൈറ് ഇല്ല.
If you have Kindle Unlimited-download and read for free!
இந்த சிறுகதை, ஜெயமோகன் நம் காலத்திலேயே வாழ்ந்த ஒரு அசாதாரண மனிதரை மிக அமைதியாகவும், ஆழமாகவும் வாசகருக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர் புகழையோ, வெளிச்சத்தையோ ஒருபோதும் தேடியவர் அல்ல. உலகம் கவனிக்க வேண்டும் என்ற ஆசையும் அவரிடம் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒருவருக்கு, யாருக்கும் எளிதில் கிடைக்க முடியாத மரியாதை, தானாகவே அவரைத் தேடி வந்தது.
அந்த மரியாதை மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல; விலங்குகளிடமிருந்தும், முழுக் காட்டிலிருந்தும் அவருக்கு கிடைத்ததாகக் கதை உணர்த்துகிறது. மனிதர்களின் பாராட்டுகள் கூட சந்தேகத்திற்குரியதாக மாறும் காலத்தில், இயற்கையே ஒரு மனிதனை ஏற்றுக் கொள்வது என்பது மிக உயர்ந்த அங்கீகாரம்.
இந்தச் சிறுகதையின் மூலம் தான் நான் டாக்டர் K பற்றி அறிந்தேன். இத்தனை ஆழமான மனிதரை இதுவரை கவனிக்காமல் போனேனே என்ற வருத்தமும் வாசிப்பின் போது ஏற்பட்டது. அவர் தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது சமூக ஊடகங்களின் வழியாக அல்ல; அவரது வாழ்க்கையும் செயலும் தான் அவரின் உண்மையான அடையாளமாக இருந்தது.
சில மனிதர்களின் மதிப்பு உடனடியாகப் புரிவதில்லை; அதை உணர ஆழமான வாசிப்பும், அமைதியான சிந்தனையும் தேவை. இப்படிப்பட்ட ஆளுமைகளை உலகம் அறிய வேண்டும். அதற்கான சிறந்த வழி, அவர்களை ஒரு நல்ல கதையாக வாசிப்பதுதான். ஏனெனில், ஒரு மனிதனை உண்மையில் மதிப்புக்குரியவனாக்கும் சக்தி, ஒரு சிறந்த சிறுகதைக்கே உண்டு.
Dr. V. Krishnamoorthi (அதிகமாக Dr. K என்று குறிப்பிடப்படுகிறார்)
இந்தியாவின் மிகவும் அரிதான வனவிலங்கு மருத்துவர் (Wildlife Veterinarian).
அவர் குறிப்பாக காட்டு விலங்குகள்—யானைகள், புலிகள், மான் போன்றவை மீது செய்த சேவைகளுக்காக அறியப்படுகிறார்.
அவரின் தனித்தன்மை
• அவர் புகழ், விளம்பரம், பதவி எதையும் தேடியவர் அல்ல
• காடுகளிலேயே வாழ்ந்து, காட்டு விலங்குகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
• பல வருடங்கள் மனிதர்களை விட விலங்குகளிடமிருந்தே அதிக அங்கீகாரத்தைப் பெற்றவர்
• விலங்குகள் அவரை பயப்படாமல் ஏற்றுக் கொண்டது என்பதே அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சான்று
ஏன் அவர் விசேஷமானவர்?
• சாதாரண டாக்டர் அல்ல;
விலங்குகளின் நடத்தை, மனநிலை, இயற்கைச் சமநிலை ஆகியவற்றை ஆழமாகப் பு��ிந்த ஒருவர்
• காடுகளில் பணிபுரிவது என்பது வேலை அல்ல;
அவருக்கு அது ஒரு வாழ்க்கை முறை
• அவர் செய்த சேவைகள்,
சான்றிதழ்கள் அல்லது விருதுகளைக் காட்டிலும், காடே அவரை ஏற்றுக் கொண்டது என்பதாலேயே பெரிதாகின்றன
I read it as part of Aram book. After reading i told to my friend, i haveto join IFS :p . while reading this book, it will take you to topslip.
**யானை டாக்டர்-ஜெயமோகன்**
🍁மண்மீது நானும் நீயும் உயிரினமும் ஒன்றுதான் என அழகாகவும் மிக எளிமையாக colloquial language-ல் எழுதப்பட்ட நூல்தான் இது !!
🍁 அனைத்து வயதினராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல்.
🍁வெறும் 50 பக்கங்கள் கொண்ட சிறிய நூல்.
🍁மனிதனை விட 170 மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை உடைய காட்டின் பேரரசனை மையமாகக் கொண்டு எழுதிய நூல் இது.
🍁மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்படும் இன்னல்களும், மனிதர்களைக் காட்டிலும் விலங்குகள் பல மடங்கு மேல் என்பதையும் ஜெயமோகன் வரிகளின் வழியே செதுக்கியுள்ளார் .
🍁கோவிலில் யானையை வளர்ப்பது தடை பண்ணியாக வேண்டும்,கோயில்கள் யானை வளர்வதற்கு உண்டான இடமே கிடையாது என்பதையும் அதற்கான விளக்கத்தையும் ஜெயமோகன் தெளிவாக கொடுத்தார்.
🍁தேவதுந்துபிகள் முழங்கின ! வான்முரசுகள் இயம்பின ! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானை முக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது...
I love this book for several reasons.
1. The first Tmail book I read in my life.
2. The depth of writing. Jeymohan can move the reader with his writing.
3. I adore elephants, and this book helped me understand a bit about the challenges they face in this heinous human-dominated world.
(longer review coming soon).
மனதை உருக்கிய புத்தகம். சில இடங்களில் கண்ணிர் வரவழைத்தது என்னும் சில இடங்களில் மிருகங்களின் மீது அளவு கடந்த அன்பையும் சில மனிதர்களின் மேல் கோபமும் வரவழைத்தது.
கண்டிப்பாக வசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று.
ഓർമ്മ ശരിയാണെങ്കിൽ മനോരമ വാർഷികപ്പതിപ്പിലാണ് ആന ഡോക്ടർ വായിക്കുന്നത്. ഹൃദയത്തോട് ചേർന്ന് നിൽക്കുന്ന രചന, പ്രകൃതിയോട് അടുപ്പിക്കുന്നു.
சமகாலத்து சரித்திர மணிதன் டாக்டர் கே - பகட்டும் படாடோபமும் இல்லாத ஓர் பேரறிவாளன்.
காந்தியக் கொள்கையில் ஈடுபாடு என்பதில் சிறிய வருத்தம். ஆயினும் டாக்டர் கே. இன் வியாக்கியானம் படித்தபின், "எதைத்தேடிப் பயணிக்கிறோம், இந்த அற்ப வாழ்க்கையிலே?" என தோன்றித் - தான் போனது.
Dr കെ കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതത്തെ കുറിച്ചുള്ള പുസ്തകം. വിവർത്തനം ചെയ്തതിൽ ഒരുപാട് അക്ഷരത്തെറ്റുകളും ആശയചോർച്ചയും ഉണ്ട് എന്നാലും ആനഡോക്ടർ എന്നറിയപ്പെടുന്ന കൃഷ്ണമൂർത്തിയുടെ ജീവിതം നന്നായി പറഞ്ഞുതന്നിരിക്കുന്നു.
(4.5 stars) I really liked the story. Loved the audio version of it. While JeMo is batting for the Gandhian idealism and wildlife conservation, I sensed a tinge of misanthropy and a bit of phobia on tech and economical growth. That really left a bad taste and I couldnt enjoy it fully.
இந்த கதையை படித்த பிறகு புழுவையும் ரசிக்க கற்று கொண்டேன்❤️
நான் வாசித்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முதல் நாவல். இந்தக் கதையில் வரும் அந்த வனத்துறை அதிகாரி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை அணுகுவதற்கு எவ்வளவு தயங்கினாரோ, ஜெயமோகன் அவர்களின் படைப்புகளை வாசிக்க எனக்குள் அப்படி ஒரு தயக்கம். இன்று இருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் நிறைய விமர்சனத்திற்கு ஆளான ஓர் எழுத்தாளர் என்பதே அதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இந்த யானை டாக்டர் கதையில் காட்டு உயிரினங்கள் மேல் அவர் கொண்ட பற்றும், காடுகளையும் அங்கு வாழும் உயிரினங்களை இழிவுபடுத்தும் மனிதர்களின் மேல் அவர் கொண்டுள்ள கோபமும் நிறைந்த எழுத்துக்கள் என்னை மிக வெகுவாக ஈர்த்தது.
இந்தக் கதையில் வரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரம் உண்மையாகவே யானைகளுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வனத்துறை மருத்துவர் என்று தெரிந்தபோது ஒரே பிரமிப்பாக இருந்தது. வனத்துறை அதிகாரியாக வருபவர் கடமைக்கென்று அந்தப் பணியில் சேர்ந்தவராக வருவார். புழுக்களைப் பார்த்து அருவருப்பு கொள்ளும் அவரை, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நட்பு அந்தப் புழுக்களைக் கைக்குழந்தைகள் எனவும், வெண்ணிற தழல்துளிகள் எனவும் அவரை கவிதை பாட வைத்து காட்டின் மீது பற்று கொண்டவராக மாற்றிவிடும்
ஆறு செந்நாய்கள் டாக்டர் கே. அவர்களை சூழ்ந்து கொள்ளும் ஒரு காட்சி. அந்த சூழலை அவர் அணுகிய விதம் வாசிக்கும்போது மெய் சிலிர்த்தது. மனிதர்கள் சில நேரம் அருவருப்பு நிறைந்த ஜீவராசிகளாக இருப்பதை லார்ட். பைரன் அவர்கள் வளர்ப்பு நாயின் கல்லறையின் எழுதிய 'Epitaph to a dog' கவிதை கொண்டு டாக்டர் கே. விவரிப்பார். அதை வாசிக்கும்போது நம்மிடம் ஒரு சிறுமை உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாது.
காடுகள் காக்கப்படவேண்டுமென்றால் அங்குள்ள மிருகங்கள் காக்கப்பட வேண்டும். குறிப்பாகத் தன் சாணத்திற்குள் ஒராயிரம் காடுகளை ஒளித்துவைத்திருக்கும் உன்னதப் பிறவிகளான யானைகள்.
காடுகள் மீதும், நம் சுற்றுச்சூழல் மீதும் அக்கறை இல்லாதவர்களைக் கூட அக்கறை கொள்ள வைக்கும் இந்த இந்த யானை டாக்டர் கதை. ஆகவே இக்கதை பள்ளி புத்தகங்களில் பாடமாக அமைய வேண்டுமென்பது என் ஆசை.
The charm of Tamil+Malayalam in Jayamohan's writing is not as visible as it is in "Mindachennai"here. Still the story and the interview at the end makes it a worthy read. Its amazing how many stories he is able to dig out and how.
ஆழமான, மனதைக் கவரும் சிறுகதை. திரு.ஜெயமோகன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், படைப்புக்காக ஆராய்ச்சி செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தார். அவர் கதையில் வாழ்வதை நம்புகிறார். 'யானை டாக்டர்' மற்றும் 'துணைவன்' ஆகிய இரு கதைகளிலும், அவர் தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் பயண அனுபவத்தின் வளமான அனுபவத்தைப் பயன்படுத்தி இவைகளை பின்னியிருப்பதைக் காண முடிந்தது.
தற்செயலாக, யானைகளைப் பற்றிய ஒரு புத்தகத்தை நான் சமீபத்தில் படித்தேன். Jodi Picoult's 'Leaving time'. அது ஒரு முழு நீள நாவல். காடுகளில் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட ஆப்பிரிக்க /ஆசிய யானைகளின் நடத்தை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிந்தது. யானைகளின் நடத்தையின் அடிப்படையில் இந்த இரண்டு புத்தகங்களையும் என்னால் இணைக்க முடிகிறது.
ஆனா இங்க வந்து தற்செயலா உங்களைச் சந்திக்கிற வரைக்கும் தெரியலையே டாக்டர். நான் பள்ளிக்கூடத்திலயும் காலேஜிலயும் இதையெல்லாம் படிக்கலையே. எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு… என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார். இலட்சியமே இல்லாத தலைமுறை. தியாகம்னே என்னான்னு தெரியாத தலைமுறை… மகத்தான சந்தோஷங்கள் இந்த மண்ணிலே இருக்குங்கிறதே தெரியாத தலைமுறை..
’இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர் வளந்து வர்ரான். . அவன்தான் ஐடி கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேல பாக்கறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான். அதனால தான் பெரிய பிறவி மேதைன்னு நினைச்சுக்கறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம் இருக்கு…அவங்களிலே ஒரு பத்துபர்செண்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்க்குன்னு தெரியட்டுமேன்னு நினைச்சேன்.
தெரியப்படுத்தன ஜெய மோகனுக்கு நன்றிகள்🖤
கொஞ்சம் கொஞ்சமா உடம்பெல்லாம் பரவுற விஷம் போல, படிக்க படிக்க கொஞ்சம் கொஞ்சமா மூளையில் இருக்கும் அத்தனை நியூரான்களையும் இந்தக் கதை தன்வசமாக்கி கொள்வது போல ஒரு மாயை. விவரிக்கப்படமுடியாத, அனுபவிச்சா மட்டுமே புரியுற ஒரு ப்லேதோரா ஆப் தாட்ஸ் மனச சும்மா புரட்டிபோட்டுச்சு. என் வாழ்நாள்ல சத்தியமா இந்த கதையை இன்னும் பல தடவை படிக்க போறேன்னு மட்டும் தெளிவா தெரியுது.
டாப் ஸ்லிப்பில் டாக்டர் கேவோட பார்வையில இருந்து அந்த காட்டையும் அதனுள் வாழும் உறுப்பினர்களையும் பார்க்குற அனுபவம் எனக்கு ஒரு ஐ ஓபன்ர்ன்னு தான் சொல்லணும். இந்த கதையின் நரேட்டரை போலவே நானும் இந்த கதையோடவே வளர்ந்து, முடிவுல ஒரு முற்றிலும் மாறுபட்ட பெர்ஸ்பெக்டிவோட தான் போகிறேன்.
"ச்ச..என்ன கேவலமான பிறவிங்க ல நாமெல்லாம்" ன்னு இறைவி படத்துல ஸ்.ஜே.சூர்யா சொல்லுறாமாதிரி ஒரு புறம் தோனிட்டே இருக்க, டாக்டரை நினைக்கும் போது மனிதநேயம் எங்கேயேயும் போய்விடல ன்னு நரேட்டரை போலவே மனசும் ஒரு புறம் அமைதி கொள்ள- இந்த இரண்டு முரண்பட்ட எண்ணமும் மாறி மாறி வருவது இந்த கதையோட நரேஷனின் பலம்.
இந்த கதையில் என்னை கவர்ந்த சில வசனங்கள்-
"மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…’ டாக்டர் கே முகம் சிவந்தார்."
"அழுக்குச்சட்டையை கழற்றிவீசுவதுபோல என்னை உதறிவிட்டு நான்குகால்களுடன் அந்த அதிதூய பசுமைவெளியில் பாய்ந்துசெல்லவேண்டும். இந்த காற்றும் இந்த வெயிலும் என்னை அன்னியமென ஒதுக்காமல் அணைத்துக்கொள்ளும். அங்கே வலி உண்டு நோய் உண்டு மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒருதுளிகூட கீழ்மை இல்லை. ’உன்னை நன்கறிந்த எவரும் அருவருத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்ததரப் புழுதியே நீ’ நான் விசும்பி அழுதபடி ஜீப்பை நிறுத்திவிட்டேன்."
"எனக்கும் என் தலைமுறைக்கும் கிடைக்கிற லட்சியமெல்லாம் வேலைக்குப்போ, பணம் சம்பாதி, பெரிய மனுஷனா ஆயிக்காட்டுங்கிறது மட்டும்தானே ? என்னைப்பாருங்க பிளஸ்டூ வரை மார்க் வாங்கி ஜெயிச்சு அமெரிக்கா போயிடணும்கிறத மட்டும்தான் நான் நினைச்சிட்டிருந்தேன். அமெரிக்கா போய் சம்பாதிச்சவங்க மட்டும்தான் வாழ்க்கையிலே ஜெயிச்சவங்களா எனக்கு தோணிச்சு…என்னை மாதிரி லட்சக்கணக்கானவங்க வெளியே வளர்ந்துட்டு வர்ராங்க சார்."
"இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானைகாலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்மசமூகத்திலேதான் டாக்டர் வளந்து வர்ரான். அவன்தான் ஐடி கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேல பாக்கறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழகொழன்னு இங்க்லீஷ் பேசறான். அதனால தான் பெரிய பிறவி மேதைன்னு நினைச்சுக்கறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதானே இந்த நாடும் இந்த காடும் எல்லாம் இருக்கு."