Quotes from நீதிதேவன் மயக்கம்

தண்டிப்பது, தேவப் பிரீதியான காரியம். நியாயம்; தர்மம்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில் அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன், ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத் தவசியைக் கொன்றான்! அவன் அது என் உரிமை என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
ஆளுகையில் இருந்த தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்தில் புகுந்து என் தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
என் கலாச்சாரத்துக்கு விரோதமான காரியத்தைச் செய்து, அதன் மூலம் என் கட்டளையை மீறினதால் நான் யாகங்களை அழித்தேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
ஐம்புலன்களை அடக்கி, ஒடுக்கி, பரமனை வேண்டித் தவம் செய்து வந்த முனிபுங்கவர்களின் யாக யோகாதி காரியங்களை இலங்காதிபன் கெடுத்து நாசமாக்கி வந்தான். இப்பெருங்குற்றத்துக்கு என்ன பதில் கூறுவான்?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
நீதி: ​​வணங்காமுடியான் என்றோர் பெயர் உமக்குண்டா? கம்: ​​"பெயர்' என்று கூறுவதைவிட, "வசைமொழி' என்பது பொருத்தும். இரா: ​​பொருத்தம் பார்ப்பதனால், வணங்காமுடியான் என்று ஓர் பழிச்சொல்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
கம்பர், ஓலைச் சுவடிகளுடன் தயாராக இருக்கிறார். சாட்சிகளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகியுள்ளனர். இராவணன் எப்போதும் போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்பமாகிறது
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இராவ: ​நான் வருகிறேன். என்மீது குற்றம் சுமத்தி, என்னை இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன் என்று கூறினாரே, கம்பர், அவரும், அவரைச் சார்ந்தவர்களும் வருகிறார்கள் அல்லவா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
நீதிதேவா! பூலோகத்தில் புதுக் கருத்துகள் பரவிவிட்டனவாம். பழைய நிகழ்ச்சிகளுக்கு, நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பிவிட்டது. ஆகவே இனிப் பழைய தீர்ப்புகள், செல்லுபடியாகா என்று கூறிவிடுவார்கள் போல் இருக்கிறது. இதை உத்தேசித்துப் புனர் விசாரணை நீதிமன்றம் நியமித்திருக்கிறேன்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரக்கமற்றுப் படுகொலை செய்தவர். நாயனார்- அடியார்- கொலைக்கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர்- தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன்- பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றிக் கைவிடத் துணிந்த விசுவாமித்திரன்- இவர்களெல்லாம் தவசிகள்- ரிஷிசிரேஷ்டர்கள்- பரமன் அருளைப் பெற்றவர்கள்- நீதிதேவா! நான் அரக்கன்- இவர்கள் யார்?-
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'