Quotes from நீதிதேவன் மயக்கம்
அரக்கர் செய்தது மட்டும் என்ன? அவர்களும், ஆரியர் செய்த தவங்களைக் கெடுத்தனரே தவிர, அவர்கள் தவத்தையே வெறுப்பவர் என்றும் கூற முடியாதே. அவர்களில் பலர் தவம் செய்தனர். இராவணனே, பெரிய தவசி! அரக்கர் தலைவர்களெல்லாம் தவம் பல செய்து, வரம் பல பெற்றவர்கள்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
தவம்தான்! ஆனால் நீ செய்வது, தகாது- என் கோபம் தவத்தின்மீது அல்ல- அந்தக் குணம் அரக்கனுக்கு! அவரவர், தத்தம், குலத்துக்கேற்ப நடக்க வேண்டும் என்ற தருமத்தைக் காப்பாற்றவே, நான் இந்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடுகிறது. அரக்கர் போலத் தவங்களைக் கெடுக்கும் துஷ்டனல்லேன் நான்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இருப்போர்: சம்புகன், இராமன், சம்புகன் தாய்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
மூவரும் விட்டிருப்பாரோ? கூறுங்கள்! இரக்கம் இல்லை என்று குற்றம் சாற்றினது அக்கிரமம்! அதற்காக இலங்கையை அழித்தது அநீதி! என் வேலை தீர்ந்தது. இனி நீதியின் வேலை நடக்கட்டும்...
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரக்கத்துக்காக வேண்டி அரக்கர் குல அரசு மங்கையின் அங்கத்தைத் துண்டித்த ஆரியர்களை வதைக்காது விட்டோமானால் அரக்கர் குலத்தையே ஆரிய குலத்தில் அடிமையாக்கி வைக்கும் இழிசெயல் புரிந்தவனாவோம் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் முன் இரக்கம் தலை காட்டவில்லை இரக்கம் காட்டாததற்காக நான் அழிந்துபடுவது! இரக்கமின்றி என் தங்கையைப் பங்கப்படுத்தி, வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன், தெய்வமென்று கொண்டாடப்படுவது தேன் தமிழிலே இந்தக் கம்பனுக்குப் பாட்டுகட்ட தெரிந்ததால் நீதிதேவா! இது சரியா? சீதையை நான் களவாடிச் சிறை வைத்தேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
கிள்ளையொடு பூவையழுத கிளமர்மாடத் துள்ளுறையும் பூசையழுத வுருவறியாப் பிள்ளையழுத பெரியோரை யென்சொல்ல வள்ளல் வனம்புகுவா னென்றுரைத்த மாற்றத்தால்''
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
நீதிதேவா! சாட்சிப் பட்டியிலே தாடகை, சுபாகு, மாரீசன், கரன் முதலிய வதைபட்ட என் மக்களின் பெயர் இருக்கும். அவர்களெல்லாம் துஷ்டர்கள். ஆகவே, தண்டித்தார் என்று கம்பர், பல்லவி பாடுவார். ஆகவே, அவர்களை விட்டுவிடும். கூப்பிடும் கைகேயி அம்மையை.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா:கம்பரே! நான் இருக்கிறேன். தண்டனை தர என் தங்கையின் துர்நடத்தையை எனக்குத் தெரிவிக்கலாமே! ஏதாவது தந்திரம் பேசி, அவளை அனுப்பி விடுவது
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென்பதிலே அக்கறை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும் இப்படி அலங்கோலப்படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்த போது இராம- இலட்சுமணர்கள் இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா: இரக்கம் என்ற ஒரு பொருள்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'