Quotes from நீதிதேவன் மயக்கம்

ஒரு நாள் சிக்கின சூர்ப்பனகை, எந்த நாளும் எலர் முன்பும் வரமுடியாத நிலையைப் பெற்றாள். என் கைதியாகப் பலநாள் இருந்த சீதை, செனந்தர்யவேதிபாய், சகல செளபாக்கியங்களையும். அயோத்திப்பிலே பிறகு அனுபவித்தாள். ஆனால் தான் அரக்கன்...
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா : மன்னர்கள் பல மனைவியரை மணம் செய்வது முறைதானே? கம் : ஆமாம்! ஆனால் இராமன் ஏக் பத்தினி விரதனாயிற்றே! இரா : அவள் அறியமாட்டானே! ஆகவேதான். தன் ஆசையைத் தெரிவித்தாள். அன்றுவரை அவள் எந்த ஆடவரிடமும் வலிய சென்று காதலை வெளியிடும் வழுக்கி விழுந்தவளல்ல! அன்று ஓர் வடிவழகனைக் கண்டாள்; மன்றாடி நின்றாள். இரக்கம் இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாமே! விரதத்துக்குப் பங்கம் வரக்கூடாதென்பதிலே விசேஷ் அக்கறை கொண்டு, அவளை நிராகரிப்பதானாலும்; இப்ப்டி அலங்கோலப் படுத்தாது இருந்திருக்கலாமே! அவளுடைய நாசியைத் துண்டித்தபோது இராம -இல்ட்சுமணர்கள் இரக்கத்தை எத்தனை யோசனை தூரத்திலே விரட்டினார்கள்? அவர்கள் அரக்கரல்லவா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
ஆஸ்ரமங்களிலே உள்ள மான்தோல் ஆசன்ங்கள், இரக்கத்தின் அடையாளச் சீட்டுகளா? விதவிதமான யாகங்கள், இரக்க லட்சியவாதிகளின் செயலா? எங்கே இரக்கம்? ஏன் இல்லை. அவர்கள் அர்க்கரல்லவா? நான் மட்டும் அரக்கன்?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரக்கம் இல்லாதார் அரக்கர் என்றால் அனைவரும், ஆண்டவன் உட்பட அனைவரும் அரக்கர்தான்..
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
பழம், பால், மது. மாமிசம், மலர் - எதனையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் ஜானகி’ என்று தெரிவித்தார்கள். ‘சரி, புத்தி கூறு: மிரட்டு; கொன்று டோடுவேன் என்று சொல் பிடிவாதம் கூடாது என்று தெரிவி; தேவர்க்கும் மூவர்க்கும் அஞ்சாத இலங்காதிபதி, ஒரு தையலின் கண்ணீருக்கு அஞ்சமாட்டான் என்று ‘சொல்’ என்றுதான்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
உங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில், அவ்ன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தனது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன், ஆரிய் பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அறரியத் தவசியைக் கொன்றான். அவன் அது என் உரிமை என்றான். வின் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா : அது எப்படி குற்றமாகும்? என் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தகண்டிக்கவும் எர்னக்கு அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்ல்மேதயாகத்தையா அழித்தேன்?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா : தவம், ஆரிய முறை. அதை என் இனக் கலாச்சார முறைப்படி நான் ஆதரிக்க முடியாது.’யாகம்' என்பது ஜீவன்களை வதைத்து, பொருளைப் பாழாக்கி, மக்களை ஏய்க்கும் ஆரிய தந்திரம் என்பது, என் இனத்தின் சித்தாந்தம் ஆகவே, என் ஆட்சிக்குட்பட்ட இடங்களிலே, ஆரியர்பிரவேசித்து, என் கலாச்சாரத்துக்கு விரோதமான காரியத்தைச் செய்து, அதன் மூலம் என் கட்டளையை மீறினதால் நான் யாகங்களை அழித்தேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
விளங்கவில்லையே, தங்களின் வாதம்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'