Quotes from நீதிதேவன் மயக்கம்

கடமை தவம், தொழில் வாழ்க்கைச் சிக்கல் முதலிய பல கொள்ளவேண்டியது போது, இரக்கம் காட்ட முடிவதில்லை, முடியாது, கூடாது- இதற்கு ஆதாரங்கள் ஏராளம்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
என் பரம்பரைப் பண்புக்கும் பர்ணசாலைப் பண்புக்கும் வித்தியாசம் உண்டு.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரக்கம் இருந்ததா? துளி பெண்கள் அழுதபோது பால் வடியும் முகமுடைய சிக கதறியபோது? - இருந்ததா - இரக்கம் காட்டப்பட்டதா கோட்புலியாரே, இரக்கம் காட்டினிரார் இரக்கமற்றுப் படுகொலை செய்தவர் நாயனார் - அடியார் - கொலைக் கஞ்சாக் கோட்புலி! கட்டை விரலை காணிக்கையாகப் பெற்ற துரோணர் - தாயின் தலையை வெட்டிய தரும சொரூபி பரசுராமன் - பெற்றெடுத்த குழந்தையையும் பிரியத்தை அர்ப்பணித்த காதலியையும் இரக்கமின்றி கைவிடத் துணிந்த விசுவாமித்திரன் - இவர்களெல்லாம் தவசிகள் - ரிஷிரேஷ்டர்கள் - பரமன் அருளைப் பெற்றவர்கள் – நீதிதேவா! நான் அரக்கன் - இவர்கள் யார்!
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா : சிவபக்தர், சீற்றம் தணியாதவராய் இச்சிசு, அதன் தாய்ப்பாலைக் குடித்திருக்குமன்றோ - அந்தப் பாலிலே சிவசொத்து கலந்திருந்ததன்றோ - ஆகவே சிசுவும் கொல்லப்படத்தான் வேண்டுமென்று கூறி, சிசுவைத் தூக்கி மேலுக்கு எறிந்து, கீழே விழும்போது, இடையில் வாளை ஏவி, குழந்தையை இரண்டு துண்டு ஆக்கினார். இரக்கமற்று. இறைவனின் நற்தொண்டன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, இரக்கமற்ற இவர் அரக்கரள்: - கம்பரே! நான் அரக்கன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
நீதி : முனியுங்கவரே! என் மீது என்ன தவறு? பரசுராமர், தன் தாயின் தலையை லெட்டியது. ஜமதக்னி கட்டளையால், இலங்கேசன், பரசுராமருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டினான். என் மீது மாசு இல்லையே!
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா : உமக்கு மன மயக்கம் ஏற்படலாமா? யாக குண்டத்தருகே அமர்ந்திருந்த ரிஷி பத்தினிகளிடம் ஏற்பட்டதே மன மயக்கம் - கண்டித்தனரா - தண்டித்தனரா - தேவ பதவியை இழந்தீரா? - இல்லையே - காமந்தகார ரேட்டை புரிந்தீர் - புரிந்தும், அக்னி தேவனாக்வே கொலு வீற்றிருக்கிறீர் - என்னையோ, இந்தக் கம்பர் அரக்கனாக்கினார் - என் ராஜ்யம் அழிந்தது தர்ம சம்மதம் என்று வாதாடுகிறார். நான் அரக்கன்! ஆனால் நான் செய்ததில்லை, தாங்கள் செய்யத் துணிந்த, அக்கிரமத்தை…
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
யாகம் காணச் சென்றீர், மோகம் கொண்டு விட்டீர் - யாகத்தில் ஈடுபட்டிருந்த சப்தரிஷிகள் மனைவிமார் மீது. இதிரியங்களை அடக்கியதால் இந்தத் தேவ பதவி பெற்றீர்-உம்மை வணங்கி வரம் கேட்டனர் தவசிகள் - நீரோ, காமம் கக்கும் கண்களுடன் ரிஷி பத்திணிகளைப் பார்த்தபடி நின்றீர். - - அவர்களைக் கற்பழிக்கத் திட்டமிட்டீர். உண்டா? இல்லையா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
வால் : நீர் கூறுவது உண்மையானால், கர்ப்பவதியான ஜானகியை காட்டிற்கு அனுப்பினானே சந்தேகப்பட்டு. அதிலே களங்கம் இல்லையர், கம்பரே! துரோ : அதோடு விட்டாரா! கூரையு நதிக்கரையில் இறந்த கிடந்த இராமச்சந்திரன், மீண்டும் அயோத்திக்கு வந்து, ஜானகி சமேதராய் பட்ட பிஷேகம் செய்து கொண்டதாக வல்லவோ எழுதிவிட்டார். பட்டுப்பேர்ன இராமச்சந்திரனுக்குப் பட்டாபிஷேகமாம் என்ன விந்தை!
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
சம்: யோயொமல் பொய் பேசுகிறாய் – இராமா! கூசாது பேசுகிறாய் உன் ஆட்சியிலே, சிலருக்குத்தவம் செய்தால், ஆதரவும், என் போலச் சிலருக்குத் தலைபோகும் நிலையும் இருக்கிறது. இதை நீ நீதி என்கிறாய்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா: (கைகேயியைப் பார்த்து) ஏண்ம்மா கைகேயி! இராமன் காடு போகிறான் என்பதைக் கேட்டு பூனையும், யானையும், குதிரையும், குழந்தையும், பூவும், காவும், கினியும், நாகணவாய்ப் பட்சியும் மனம் உருகி அழதனவாமே! அந்த நேரத்திலும் தங்கள் மனம் இனகவில்லையோ?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'