Quotes from நீதிதேவன் மயக்கம்

சூர்ப்பனகை வருகிறாள்
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
ஆக, அறமன்றத்திலே நீர் வீற்றிருக்கும் போதெல்லாம் அரக்கர்தானே?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா:​​தாய் பிடிக்க, தந்தை அறுக்க, சீராளனைக் கறியாக்கும்படி தயாபரன் சோதித்த, இரக்கமென்ற ஒரு பொருள் இல்லாதவர் அரக்கர் என்ற உமது இலக்கணத்தைப் பொய்யாக்கத்தான்! சிறுத் தொண்டன் உமது சிறுமதிக் கோட்பாட்டைப் பெருநெறியெனக் கொண்டிருந்ததால், சிவனாரை நோக்கி, "ஐயனே! பாலகனைக் கொன்று கறி சமைக்கச் சொல்கிறீரே, எப்படி மனம் வரும்? இரக்கம் குறுக்கிடுமே!' என்று கூறியிருப்பார். உமது தொண்டர் புராணமும் வேறு உருவாகி இருக்கும் அல்லவா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
இரா:​​அதாவது... தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற ஆதிக்கம் இருக்க வேண்டும். அந்த ஆதிக்கத்தைக் கண்டு அஞ்சுபவன் ஒருவன் இருக்கிறான். அவனால் ஆதிக்கக்காரனை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. அந்த நிலையிலே அவன் இருக்கும் பரிதாபகரமான, உதவியற்ற நிலைமையைக் கண்டு மனம் உருகுவது, அவனுக்குக் கேடு ஏதும் செய்யாதிருப்பது கூடுமானால் அவனுக்குள்ள கஷ்டத்தைப் போக்குவது- இதுதானே இரக்கம்?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
தாங்கள் கூறினாலும் சரியே! இரக்கம் என்றால் என்ன? இலட்சணம் கூற முடியுமா? இன்ன விதமான நிலைமைக்குத்தான் இரக்கம் என்று பெயர் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா?
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
களத்திலே என் தம்பி மாண்டான்; கதறினர் மக்கள். என் மகன் மாண்டான்; மண்டோதரி மாரடித்து அழுதாள். என் மக்களின் பிணம் மலையாகக் குவிந்தன. எங்கும் இரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும் ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின் கம்பீரமான முழக்கமும் எந்த இலங்கையிலே நித்திய நாதமாக இருந்ததோ, அங்குக் குடலறுந்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல்; பெண்டிரின் பெருங்குரல்; பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின் சிறகொலி இவை நிரம்பின. நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
கொலு மண்டபத்திலே கொட்டி அளந்தான் விபீஷணன்! தம்பீ! உனக்குத் தாசர் புத்தி தலைக்கேறி விட்டதடா! என்று கூறி உட்கார வைத்தேன். இரக்கம் காட்டவில்லை.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
அரசிளங்குமரி சீதையை அசோக வனத்தில் சிறை வைத்தேன்.
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
உடல் சோர விழியில் நீர் வழிய, கூந்தல் சரிய, ஆடை நெகிழ, அலங்கோலமாக இருக்கக் கண்டு! போடா போ என்றேன். போரிடத் துணிந்தான். போக்கினேன். அந்தப் புள்ளின் உயிரை! இரக்கம் காட்டினேனா? இல்லை....
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'
அடே துஷ்டா! அரிபரந்தாமனின் அவதாரமடா இராமன். அவனுடைய தர்ம பத்தினியையா இந்தக் கோலம் செய்கிறாய்?' என்று வயோதிக சடாயு வாய்விட்டு அலறினான்- சீதை உயிர் சோர
சி.என். அண்ணாதுரை (C.N. Annadurai) — 'நீதிதேவன் மயக்கம்'