நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

4.38/5 · 86 ratings

ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம…

Interested in this book? Check Price on Amazon
Reviews

user_12253

சில எழுத்தாளுமைகளின் எழுத்துக்களை வாசித்திருந்தாலும் அவர்களை தொடர்ந்து வாசித்து எழுத்துக்களை பற்றி ஆழ அறிந்துகொள்ளாமல் இடையிடையே கிடைத்த விமர்சன கட்டுரைகளையும் வாசித்து குரங்குத்தாவல் நிலையில் கிளைவிட்டு கிளை பாய்வதுபோல் பலதரப்பட்ட எழுத்துக்களை வாசிக்கும் மனது இந்நூலில் முன்வைக்கும் வாசிப்பின் படிநிலை கண்டு பதறிப்போக வாய்ப்புண்டு, ஆனால் அப்பகுதியை வாசித்து மெல்ல அசைபோட்டாலே பிடிபட்டுவிடும் வணிக எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி வந்திருக்கிறோம் என்பது. ஒவ்வொருவகை எழுத்தையும் எழுதிய ஆளுமைகளை முன்வைத்து வாசகனோடு உரையாடுகிறார் ஆசிரியர். தமிழ் இலக்கிய வரலாற்றின் போக்கினை நுட்பமாக ஆராயும் எழுத்துப்போக்கும் விமர்சன கோட்பாடுகளை வரிசைப்படுத்துவதும் கற்றலுக்கு உவப்பானது. நவீனத்துவம் பின்நவீனத்தும் போன்றவைகளின் காலக்கணக்கீட்டிலிருந்த குழப்பத்தை தெளிவாக்கி இக்காலகட்டத்தின் வழியே உருவாகிய கோட்பாடுகளான யதார்த்தம், மாயயதார்த்தம் என கருத்தியல்களை அறிமுகப்படுத்துகிறது இவ்வாசிப்பு. இறுதியில் தமிழின் முக்கியமான எழுத்துக்களை வரிசைப்படுத்தியிருப்பது சிறப்பானதாகப்படுகின்றது.

user_12252

★ 4/5
வாசிப்பவரின் கையைப் பிடித்து நவீன இலக்கியம் என்பது என்ன, அதை எப்படி அணுக வேண்டும் வாசிப்பின் நிலைகள் என்ன, ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் அது யாருடைய தவறு, தேர்ந்தெடுத்த வாசகனுடையதா அல்லது எழுத்தாளனுடையதா. அப்படிப் பட்ட படைப்புகளை எவ்வாறு ���ணுக வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள் என்ன என்பதை விளக்குகிறார். நவீன இலக்கியத்தில் புதியதாய் நுழையும் வாசகன் முதல் முதிர்ந்த வாசகன் வரை அனைவராலும் அடிக்கடி இலக்கியத்தை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். புதுமைப்பித்தன் தொடங்கி இன்றைய எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா வரை பல்வேறு தலைமுறை படைப்பாளிகளையும் அவர்களது அற்புதமான படைப்புகளையும், இலக்கிய பங்களிப்புகள் பற்றியும் விவரிக்கிறார். இலக்கிய இயக்கங்கள் என்றால் என்ன என்ற கேள்விக்கு “இலக்கிய அடையாளங்கள் எதுவாயினும் அவை வாசிப்பினால் உருவாகின்றவையே ஒழிய எழுத்தால் அல்ல” என்று கூறி விட்டு அடுத்த 10 பக்கங்களுக்கு 3 வகை இயக்கங்களை பற்றி எழுதிய காரணம் புரியவில்லை. தமிழில் உள்ள அனைத்து இலக்கிய படைப்புகளையும் அதன் படைப்பாளிகளையும் பற்றி தேடி துடிக்கும் வாசகனுக்கு இப்புத்தகம் நல்ல தீனி.

user_12251

★ 5/5
best

user_12250

One of the best book to understand about Tamil literature history. Jemo had explained the need of literature, levels of reading, and approach towards to book reading. Definitely this book would be a starting point for a reader who enters into Tamil literature. Thank you so much JEMO sir for a fabulous book!!!

user_12249

★ 5/5
This is not just a manual for Tamil Literature. Its an in depth research book I would say. The Objective view and Subjective view and their differences in a Story are well explained. The levels in reading and Reader's Capacity is an amazing analysis which helped me understand where I stand. Overall, this book need to be read every year. It has so many details which helps a Reader to read wisely and in a better way. It completely changed the view I looked at Literature. In the end, there are recommendations by the author which is a great collection guiding any new reader.

user_12248

★ 5/5
I always felt small when I started reading Tamil literature because it always sent me back a few times before to equip myself to re-enter to resume again. Again and again I was disappointed on every attempt and knowingly I should give more special attention. After a few years of trying I started reading Tamil literature books and slowly it started allowing me to be her student and also, the acceptance made me to experience immense happiness. This was the time I came across this book about how to approach Tamil literature and it was more like a Bible.. Generally you have to know the line of reading on topics like Pure literature, Modern literature, Novels, Short stories, Poems etc etc.. Where to start and how I will know the hierarchy of each segment are general doubts?. This book stands as a sign board to direct you to answers. We always love writers because they live in a multidimensional world. They can enter at their will as a subject and come out and write to readers as an object. Great salute!

user_12247

★ 5/5
நான் படித்தப் புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் இது. எந்த எழுத்தாளரும் முதல் 20 பக்கங்களில் என்னை இப்படி வியக்க வைத்தது இல்லை. முதல் 70 பக்கங்களை மட்டும் மூன்று முறை படித்தேன். “வாசிப்பின் படிநிலைகள்” என்ற தலைப்பில் இருந்த அத்தியாயம் படித்தபின்னர் நான் முதல் படியில் கூட இல்லை என்று உணர்தேன். சில படைப்புகளைப் படிக்கும்பொழுது இந்தப் படைப்பு நம் வாழ்கையில் நாம் சிலவற்றைப் பார்க்கும் பார்வையை முற்றிலுமாக மாற்றப் போகிறதை உணர்வோம். அப்படியொரு படைப்பு தான் இது எனக்கு. நான் கலை, அறிவியல் மற்றும் இல்லகியத்தைப் பார்க்கும் பார்வை வெகுவாக மாறியதை உணர்தேன். ஒரு இலக்கிய வாசகனுக்கு வாழ்கையில் எழும் எல்லா அய்யங்களுகும் கேள்விகளுக்கும் மிக ஆழமாக விரிவாக விடையளிதிருபார் ஜெயமோகன். அவருடைய ஆழமான கலை புரிதல் வியப்பூட்டுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுக்க வாசிபுக்காகவும் எழுத்துக்காகவும் செலவிட்டால் அடையும் ஒரு ஞானம் ஜெயமோகனிடம் இருப்பதை உணர்த்துகிறது இந்தப் புத்தகம். பொதுவாக இலக்கியம், சமூகம், இலக்கியத்தின் அரசியல், தமிழ் இலக்கியத்தின் வரலாறு போன்றவற்றில் ஆர்வமுள்ள எல்லோரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம் இது.

user_12246

★ 5/5
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன். Naveena Thamizhilakkiya Arimugam(Tamil), Jeyamohan - தொடக்கநிலை வாசகனின் வாசிப்பனுபவம் குறிப்பு: இது வாசிப்பின் மூலமாக நான் கண்டடைந்த கருத்துக்களே ஒழிய புத்தக மதிப்புரை அல்ல, மேலும் இக்கடிதம் ஆங்கிலவழிக்கல்வி மூலமாக பள்ளி பயின்று தமிழிலக்கியத்தினுள் நுழையவிரும்பும் ஆரம்பநிலை வாசகர்களுக்கு உதவும் பொருட்டு எழுதப்பட்டது, ஏற்கனவே ஏதாவது ஒரு வழியில் தமிழிலக்கிய அறிமுகம் உள்ளவர்களுக்கு இக்கருத்துக்கள் பொறுத்தப்படாமல் போகலாம். இலக்கியம் என்றால் என்ன? தமிழிலக்கியத்தில் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அறிவியல், தத்துவம், வரலாறு போன்ற அறிவுத்துறைகளிலிருந்து இலக்கியம் எவ்வாறு வேறுபடுகிறது? கதைக்கும், சிறுகதைக்கும் , கவிதைக்கும், நாவலுக்கும் என்ன வேறுபாடு? இலக்கியத்திற்கும் கலைக்கும் என்ன தொடர்பு? ஒரு கலையை உணர்வதால் ஒருவர் அடையும் புரிதல்கள் எத்தகையது ? பொது வெளியில் நாம் சகஜமாக கேள்விப்படுவதுபோல் போல பாரதியார் கவிதைகள், திருக்குறள், கம்பராமாயணம், புராணக்கதைகள், நீதிபோதனை கதைகள் மட்டும் தான் தமிழிலக்கியமா? நவீனத் தமிழிலக்கியம் என்றால் என்ன? தமிழில் வாசிப்பதற்கு என்ன கிடைக்கும்? தமிழில் யாரெல்லாம் இலக்கியம் எழுதுகிறார்கள்? எங்கிருந்து வாசிக்க தொடங்குவது? தீவிர இலக்கிய சிந்தனைகள் தமிழில் உண்டா? போன்ற கேள்விகளுக்கும் மற்றும் பல ஆழமான தேடல்களுக்கும் இப்புத்தகம் விடை அளித்துள்ளது. தகவல்சுமை அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் கூட இப்புத்தகம் மூலம் கண்டடையும் நவீனத் தமிழிலக்கியம் பற்றிய உண்மைகளை இணையத்தில் எங்குமே கண்டடைடைய முடியாது என்பது இப்புத்தகத்தின் சிறப்பம்சம். தமிழிலக்கியம் என்பது நம் பள்ளிக்கல்வியில் பயின்றதைப்போன்று மனபாடச்செய்யுள், கோவலன் - கண்ணகி கதை, கோப்பெருஞ்சொழன் - பிசிராந்தியர் நட்பு, முல்லை - பாரி தேர், அகத்திணை - புறத்திணை, தேமா - புளிமா, தலைவன் - தலைவி, போர் வீரம் போன்றவற்றைப்பற்றி உரைப்பது (!) போன்ற எண்ணத்தையும், சொல்லப்போனால் பாடபுத்தகத்தையும் தொழில்சார் புத்தகங்களை மட்டுமே வாசித்து இருக்கும் அனைவருக்கும் பொதுவாக தமிழ் இலக்கியத்தின் மீது இருக்கும் ஒரு அபிப்ராயத்தை இப்புத்தகம் நேர்மாறாக மாற்றியமைக்கும். இன்று பள்ளி பயிலும் மாணாக்கர்ககளுக்கு தமிழிலக்கிய அறிமுகம் இருந்தாலும், அது பெரும்பாலும் பண்டைய இலக்கியமாகவே இருக்கிறது. நவீன தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்யவதில்லை. அப்படியே ஒருவர் தொடர்ந்து தமிழ் வாரஇதழ்கள் வாசித்தாலும் அதிலிருந்து கிடைக்கப்பெறுவது பொதுவாக தொடர்கதைகள் அல்லது மக்களுக்கு சுவாரசியம் சேர்க்கும் செய்திகள் மட்டுமே. நவீன இலக்கியம் அறிமுகமாகும் சூழல் இங்கு மிகக்குறைவே போன்ற அத்தியாயங்களும் அளிக்கும் புரிதல்கள் ஆச்சர்யமளிக்கும். இந்த கோணத்திலேயே,இப்புத்தகமும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் மகத்துவம் பெறுகிறது. தமிழில் அச்சிடப்பட்டு எளிதாககிடைக்கப்பெறும் வாரஇதழ்கள், நாளேடுகள் மற்றும் இணையதள வலைப்பதிவுகள் போன்றவற்றில் கேட்காமலே கிடைக்கும் தகவல்களையும், யாரோ முன் பின் தெரியாத ஆசாமி எழுதிவைத்த கட்டுரைகளையும் படித்துவிட்டு இதுதான் தமிழில் கிடைக்கப்பெறும் சிந்தனை / இலக்கிய சூழல் என என்னும் எண்ணம்கொண்ட யாராயினும் இந்தப்புத்தகத்தை நிச்சயமாக வாசிக்க வேண்டும். நம் சமூகத்தில் நன்கு படித்து, நல்ல வேலையில் உள்ள பெரும்பாலானோர் கூட தமிழ் இலக்கிய அறிமுகம் சிறிதும் இல்லாமலிருப்பதின் காரணம் நம் சமுக சூழலில் இலக்கிய அடிப்படைகளை பற்றிய அறிமுகமோ விழிப்புணர்வோ கொஞ்சம் கூட இல்லாமலரிருப்பதுதான். இக்குழப்பத்தின் அடிப்படை ஆணிவேராக இருப்பது இன்று நிலவும் சமூகசூழல் மற்றும் கல்விப்பின்புலம், எந்த ஒரு இலக்கிய அறிமுகப்பயிற்சியும் அளிக்கப்படாமல் தொழில்துறை சார்ந்த தகவல் அறிவை மட்டுமே நாம் சென்றைடைகிறோம் அத்தியாயத்தை வாசித்தாலே தெரிந்துவிடும் நாம் இன்னும் கரையில் நின்றகொண்டு கடலை அறிய முயற்சிசெய்துகொண்டிருக்கின்றோம் என. சென்னை புத்தக திருவிழா, ரயில்/விமான நிலங்களில் உள்ள புத்தக குவியலை பார்க்கும்போதெல்லாம் தமிழில் அதிகமாக கண்ணில் தென்படுபவை அதிக பிரசுரங்களை கொண்டு பெரும்பான்மையான மக்களுக்காக கணிசமாக விற்பனையாகும் புராணங்கள், சமையல் குறிப்பு, வாழ்க்கைக்கு வழிகாட்டி, தத்தும், அரசியல், மதக்கோட்பாடு, சுயமுன்னேற்றம், பிரபல ஆங்கில புத்தகங்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் போன்றவையே. அப்போதெல்லாம் யோசித்ததுண்டு..ஒருவேளை இதுமட்டும்தான் தமிழ் இலக்கியம் போல என்று. ஆனால் இப்புத்தகத்தை வாசித்துமுடித்தவுடன் தான் தெரிந்தது - தமிழில் இதுமட்டுமில்லாது ஆகச்சிறந்த இலக்கிய படைப்பாளிகள் வாழ்ந்திருக்கிறார்கள்…முன்பைவிட இப்பொழுது இன்னும் தீவிரமாக சிந்தித்து எந்த ஒரு விளம்பரமுமின்றி,லாப நோக்கத்தைப்பற்றியெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று. அவர்கள் அனைவருமே வெகுஜனத்தை ஆட்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களுக்கும் வெளியே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், மேலும் அவரவர் தம் இலக்கிய வாசகர் வட்டத்திற்கு வெளியே அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள். இப்புத்தகம் அத்தகைய படைப்பாளிகளை அடையாளம் காட்டி அவர்களது படைப்புகளை அறிமுகப்படுத்திவைக்கிறது. தமிழிலக்கியம் பாரதியின் வருகைக்குப்பின் உரைநடையில் இத்தனை உன்னதமான படைப்புகள் வந்துள்ளன, அவை சிற்றிதழிலிருந்து வளர்ச்சி பெற்று இன்���ு எவ்வளவு முயற்சிகளைக்கடந்து பல கதை வடிவங்களை அடைந்து...நாவல் வடிவம் வரை...பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்று இப்புத்தகம் சிறப்பாக விளக்கிக்காட்டுகிறது. வெறும் தகவல் குவியலாக நிகழ்வுகளை தொகுத்து பாடப் புத்தகம் போல இல்லாமல், நவீனத்த தமிழிலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை அழகாக காட்டுகிறது அணைத்து அத்தியாயங்களும். தமிழில் மட்டுமல்ல எந்த மொழிலியாயினும் வாசிப்பின் தேடுதல் மூலம் மேம்பட நினைக்கும் எவராயினும் குதுகுகாலமாக வந்தடைந்து நம்பிக்கையுடன் தங்களின் வாசிப்பு பயணத்தை தொடங்க வேண்டிய மிக முக்கியமான இடம் - . . 1. முதலில் ஒரு முறை புத்தகத்த்தை முழுமையாக வாசித்துமுடித்துவிடவும்,சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முதல் முறையிலேயே புரிந்துகொள்ள பெரும்பாலும் தொடர் வாசிப்பு பயிற்சி தேவைப்படுகிறது, இல்லையெனில் இரண்டாம் முறை வாசிப்பின் பொழுது கருத்தக்களை எளிதில் புரிந்துகொள்ளாம். 2. சொற்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்க்கைச்சூழலில் புழங்கும் வாய்மொழிச்சொல்லாகவோ, தொலைக்காட்சி, செய்தி, நாளிதழ் சொற்களாகவோ இல்லாமலிருப்பதால் வாசிக்கும்பொழுது கவனமும், கொஞ்சம் முயற்சியும், பயிற்சியும் தேவை 3. சில சொற்கள் இலக்கியத்தின் அவற்றையும் ஆசிரியரே பின்னிணைப்பாக 308 பக்கத்தில் கொடுத்துள்ளார். தேவைப்பட்டால் இச்சொற்களை இணையதளத்திலும் வாசித்துக்கொள்ளலாம். அப்படியும் சில சொற்களை புரிந்துகொள்ளத்தடை இருந்தால் இணையதளத்தில் உள்ள தேடும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் or use google search like this 4.அறிமுகமில்லாத/அர்த்தம்புரியாத பிற தமிழ்ச்சொற்களை என்ற தமிழ் மொழிக் களஞ்சியத்தை உபயோகப்படுத்தி புரிந்துகொள்ளலாம். Please don't use google translate, because sometimes it just transliterates rather than translation, so meanings get misrepresentated and mislead you 5. இப்புத்தகத்துடன் ஜெயமோகன் எழுதியுள்ள என்ற சிறிய அளவிலான மிகக்குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகத்தையும் தொடர்ந்து வாசித்தால் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் சற்று ஆழமாக விளங்கும். 6. இதன் தொடர்ச்சியாக தேவைப்பட்டால் இப்புத்தகம் எழுதப்பட்டது 1995ஆம் ஆண்டுவாக்கில் என்றாலும் கூட , 2011ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்திற்காக மறு-பதிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதில் உள்ள கருத்துகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளது. ISBN :978-81-8493-689-6 (paperback edition). கிழக்கு பதிப்பகத்தின் முதல் பதிப்பு: 2011. மொத்த பக்கங்கள்: 341. விலை: Less than Monthly broadband subscription புத்தகம் வாங்க : (or )

user_12245

★ 4/5
' நவீன தமிழிலக்கிய அறிமுகம் ' - ஒரு அத்தியாவசியம். கட்டுரைத்தொகுப்பான இந்நூலை படித்தது, தமிழிலக்கியத்தில் பலவற்றைத் தெளிவுற காண ஒரு திறவுகோளாக இருக்கிறது. இந்நூலில் ஜெயமோகன், ஒரு புத்தக வாசிப்பின் படிநிலைகள் என்னென்னவென்று விவரிப்பது தொடங்கி இலக்கியத்தின் அடிப்படைகள் மற்றும் அரசியல்கள் தாண்டி தமிழிலக்கிய வரலாற்றினை விரிவாக ஆராய்ந்து வகைப்படுத்தியுள்ளார். இதுமட்டுமின்றி, இலக்கிய இயக்கங்கள் கோட்பாடுகள் என இந்நூலின் கடைசி பாகமும் இலக்கியத்தின் ஆழமான பிரிவுகளை விவரித்துள்ளார். ஆரம்ப நிலை வாசகனான எனக்கு இதில் இணைந்திருக்கும் பல தகவல்கள், அகவொளியாக அமைந்துள்ளதென்று சொன்னால் அது மிகையாகாது. தகவல்களை பரிமாறிவரும் தருணத்தில் அவரது விமர்சனங்களையும் தாண்டி எதிர்ப்படும், ஒரு சில சமூக கருத்துகள் தேவையற்றதாகப் பட்டது. கலைச்சொற்கள், சிறுகதைகள், புதினங்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் பட்டியல்கள் என பக்கங்கள் முழுதும் நிறைந்துள்ள இப்புத்தகம் நிச்சயம் பயனுள்ளதாகவே அமையும். அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் (FAQs) இதிலிருப்பதும் இதன் தனியம்சம். "படைப்பில் நாம் உழைப்பை செலுத்துவதே இல்லை. உண்மையான பிரச்சனை இதுவே." "இலக்கியம் ஒரு கலை." "கலை என்றால் என்ன? குறியீடுகளின் மூலம் உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புபடுத்தும் வழிமுறை. ... மொழிக்குறியீடுகள் இலக்கியம் ஆகிறது. அக்குறியீடுகளை பொருள்கொள்ளும் பயிற்சி நமக்கு தேவை. "
Shelves
ஜெயமோகன் Nonfiction book Jeyamohan

More like this


குகை [Gugai]

மன்னராட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட பலநூறு சுரங்கவழிகள் நம் கால்களுக்கு அடியில் இன்றும் புதைந்துள்ளன. அவை தூர்ந்துவிட்டிருக்கலாம். அல்லது ரகசிய அறைகளாக அங்கே இருந்துகொண்டும் இர…

4.38/5 · 86 ratings
Check Price

அறம்-2

அறம் - ஜெயமோகன் : இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்…

4.38/5 · 86 ratings
Check Price

எழுதுக

"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அ…

4.38/5 · 86 ratings
Check Price

விசும்பு

‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் …

4.38/5 · 86 ratings
Check Price

வெள்ளையானை

எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலம். ஏகாதிபத்தியத்தால் அம்மக்கள் அ…

4.38/5 · 86 ratings
Check Price

Truth About Me: A Hijra Life Story

Author: A. Revathi

The Truth About Me is the unflinchingly courageous and moving autobiography of a Hijra (Eunuch) who fought ridicule, persecution and violence both…

4.38/5 · 86 ratings
Check Price

Karukku

Author: Bama Translator: Lakshmi Holmström

In 1992 when a Dalit woman left the convent and wrote her autobiography, the Tamil publishing industry found her language unacceptable. So Bama Fa…

4.38/5 · 86 ratings
Check Price

இன்றைய காந்தி

இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பா…

4.38/5 · 86 ratings
Check Price

துணையெழுத்து [Thunai Ezhuthu]

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்…

4.38/5 · 86 ratings
Check Price

The Great Hedge of India: The Search for the Living Barrier that Divided a People

Author: Roy Moxham

Remarkable and "astonishing," says Jan Morris of Roy Moxham's account of his search for "one of the least-known wonders of Queen Victoria's India,…

4.38/5 · 86 ratings
Check Price

மனிதனும் மர்மங்களும்

உலகெங்கும் பரவிக் கிடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், மனித அறிவுக்கு எட்டாத மர்மங்களையும் இந்தப் புத்தகம் சுவாரசியமாக விவரிக்கிறது. மோகினிப் பிசாசுகள், குட்டிச் சாத்தான்கள் …

4.38/5 · 86 ratings
Check Price

வனவாசம்-1

தமிழ் இலக்கிய உலகின் வித்தகராகப் போற்றப்படும் ஒரு மாபெரும் படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் மிகத் துணிச்சலுடனும் நேர்மையுடனும் பதிவு செய்கிறது. ஒரு கவிஞராகவும்,…

4.38/5 · 86 ratings
Check Price