Select a cover image
Searching for images...
Saving cover image...
காடு
Kaadu
- Pages
- 474
- Format
- Hardcover
- Publisher
- தமிழினி
- Language
- தமிழ் (Tamil)
- Edition
- First Edition
- ASIN
- 9390958725
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்…
Appears in following lists
user_6041
★ 5/5காடு - ஓர் இலக்கிய அனுபவம்! ஜெயமோகனின் இந்த நாவல் வெறும் புத்தகமல்ல, காட்டின் ஆன்மாவை நேரடியாக உணரவைக்கும் ஒரு தனித்துவமான படைப்பு.
user_6040
★ 5/5முதல் சில பக்கங்களைப் படிக்கும்போது சலிப்பாக இருக்கும் என நினைத்தேன்... ஆனால் நான் தவறாக நினைத்தேன். நீண்ட காலம் நினைவில் நிற்கும் புத்தகம் இது. நகரவாசிகளான நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவம். காடும், நீலியும், குட்டப்பனும் கிரிக்கு கிடைத்த வரம்.
user_6039
★ 4/5ஒரு கிளாசிக் நாவல். கிரி, குட்டப்பன், நீலி ஆகியோரின் கதைப்போக்கு அருமை.
கிரியும் நீலியும் முதல் முறை சந்திக்கும் காட்சி, கிரி முதல் முறை காட்டை ஆராயும் அனுபவம், கடைசியாக காட்டுக்குச் செல்லும் தருணம் - இவை மறக்க முடியாத காட்சிகள். காதலும் காமமும் வெவ்வேறு பாதையில் பயணிக்கின்றன என்பதை முடிவில் உணர்த்துகிறது.
user_6038
★ 4/5நீலியை ஒரு மனுஷியாக என்னால் பார்க்க முடியவில்லை. நீலியையும் காடாகவே பார்க்கிறேன். நீலியின் மீது கிரி கொண்ட காதல் காட்டின் மீது ஏற்பட்டதன் இன்னொரு வெளிப்பாடாகவே பார்க்கிறேன். நீலியையும் காட்டையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
இறுதியில் மனித உணர்ச்சிகளின் புரிந்துகொள்ள முடியாத தன்மையை புதிர்போல சொல்லி முடித்தது மிகவும் சிறப்பாக இருந்தது.
user_6037
★ 5/5காடு - ஆன்மாவைக் கிழிக்கும் ஒரு நாவல். உள்ளத்தைப் பிடித்து மறைந்துபோன மனிதத்தை கடத்திச் செல்லும் ஒரு சக்தி.
ஜெயமோகன் காட்டைப் பற்றி எழுதவில்லை, காடே நம் முன் வந்து நிற்கிறது. அதன் நிசப்தம், அதன் கொடுமை, அதன் சுத்தமான அன்பு என எதையும் அலங்கரித்து மிகைப்படுத்தாமல், நம் உள்ளத்தில் அச்சமூட்டும் அழகாய் பதிகிறது.
பாத்திரங்கள் பேசுவதில்லை, அவற்றின் காயங்கள் தான் கதையைச் சொல்கின்றன. இந்த நாவல் காட்டைப் பற்றி அல்ல, காடாகிவிட்ட மனித இதயத்தைப் பற்றி.
படித்துவிட்டால், சில புத்தகங்கள் மறந்து விடும். ஆனால் சில, ஒரு நிழலாய் ஒரு வாழ்நாளே தங்கும். நீலி, வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருப்பாள்!
Genres
Shelves
More like this
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
சோலைமலை இளவரசி
இருவேறு காலகட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஆழமான காதலையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதி…
சேரமான் காதலி
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞரால் படைக்கப்பட்ட இந்தச் வரலாற்று நாவல், சேர மன்னர்களின் வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சாகித்திய அகாதமி விருது பெற்ற…
அபிதா
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்ற…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
ரப்பர்
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…
கன்னியாகுமரி
இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தைய…
பொன்னியின் செல்வன், பாகம் 2: சுழற்காற்று
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த இரண்டாம் பாகம், சோழப் பேரரசின் வாரிசான அருள்மொழி வர்மனை மையப்படுத்தி நகர்கிறது. இளவரசி குந்தவையின் தூதுவனாக வந்தியத்தேவன் கடல் க…