Select a cover image
Searching for images...
Saving cover image...
பனி மனிதன்
Panimanithan
- பக்கங்கள்
- 216
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788184933857
இந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தைகளையும் இப்போது என் குழந்தைகளாகவே நினைக்கிறேன். இந்த நாவலை சிறுவர்களுக்கான நடையிலேயே எழுதி இருக்கி…
user_11947
★ 4/5குழந்தைகளுக்கான நாவல்தான், ஆனால் பெரியவர்களும் படிக்கலாம். சிறுவர்மணியில் இந்தக் கதை தொடராக வெளிவந்ததை நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் அது திடீரென நிறுத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன் இந்தப் புத்தகம் கிடைத்தது, முடிவைப் படித்து முடித்தேன்.
இது ஒரு கற்பனை சாகச கதை. பயன்படுத்தப்பட்ட வாக்கியங்களும் சொற்களும் புத்தகம் முழுவதும் எளிமையானவை. குழந்தைகள் இதை ரசிப்பார்கள்.
user_11946
★ 3/5மிகவும் எளிய சொற்களைக் கொண்டு குழந்தைகளுக்காக எழுதிய நாவல். அடிக்குறிப்புகளாகச் சுவாரசியமான பல தகவல்கள் சொல்லிச் செல்கிறார்.
ஆரம்பத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்பட்டாலும் சீக்கிரம் அதைத் தாண்டி சுவாரசியமாகப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது. "என்ன சார்" போன்ற திரும்பத் திரும்ப வரும் வசனங்கள் மட்டும் கொஞ்சம் அயர்ச்சியை அளித்தன.
மற்றபடி கதையின் மையமும் அது கொடுக்கும் தரிசனங்களும் அருமை.
user_11945
★ 4/51998-இல் சிறுவர்மணியில் தொடராக வெளியான நாவல். லடாக்கில் மிக நீளமான பனிமனிதனின் கால்தடம் கிடைக்கிறது. அதைப் பற்றி விசாரிக்க மிலிட்டரி கேப்டன் பாண்டியன், டாக்டர் திவாகர் உதவியை நாடுகிறார். பனிமனிதனால் ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட சிறுவன் கிம் இவர்களுக்கு உதவியாகத் துணை செல்கிறான்.
மூவரும் பனிமனிதன் வாழும் இடத்தை நோக்கிப் பயணம் மேற்கொள்கிறார்கள். பல இன்னல்கள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் முன்னேறிச் செல்கிறார்கள். அடுத்த லாமாவைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் இரண்டு புத்த பிட்சுக்களை வழியில் சந்திக்கிறார்கள். புத்தரின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளும் கிம் வழியாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.
பனிமனிதன் வாழும் இடம் கற்பனை உலகின் பிரம்மாண்டம். சிறுவர்களுக்கான கதைதான் ஆனால் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. அறிவியல், வரலாறு, கற்பனை உலகம், மதம், தத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய நாவல். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் வரும் துணுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள உதவும். புத்தகத்தில் ஓவியங்கள் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். பனிப் பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தியது ஆசிரியரின் எழுத்து. சிறுவர்களுக்கான fantasy கதை படிக்க வேண்டுமானால் இந்த நாவலைக் கண்டிப்பாகப் படியுங்கள்.
user_11944
★ 4/5எங்கும் பனிப்பொழிவு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளைப் போர்வை போர்த்தியது போல இருந்த லடாக்கில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் வித்தியாசமான ஒன்றைக் கண்டனர்.
அது ஒரு மனிதனின் கால்த்தடம். சராசரி மனிதனை விட மூன்று மடங்கு இருந்தது அந்தக் கால்த்தடம். அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு மேஜர் பாண்டியனிடம் வழங்கப்பட்டது. அவர் புறப்பட்டபோது, சிறுவன் கிம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். அவரையும் அழைத்துக் கொண்டு, இந்த மனிதனைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டரைப் பார்க்கச் சென்றார்கள்.
மூவரும் இணைந்து அந்த மனிதரைத் தேடத் தொடங்கினார்கள். அவர்கள் தேடுவது குரங்கு மனிதன் அல்ல, பனிமனிதன் என்றும், ஒரு கூட்டமே அந்தக் காட்டுக்குள் உள்ளது தெரிய வந்தது. வழியில் ஏராளமான தங்கம், வைரம் என இவர்கள் தடுமாற நிறையக் காரணிகள் இருந்தன. புத்த பிக்குகள் தங்களின் அடுத்த லாமாவையும் கண்டுகொண்டனர். அவர்களின் சுதந்திரமான, இனிமையான வாழ்க்கைக்கு எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாது என விரும்பிய டாக்டரும் பாண்டியனும் அவர்களைப் பற்றிய ரகசியத்தை அரசாங்கத்திடம் கூறவில்லை.
user_11943
★ 4/5சிறுவர்கள் மற்றும் இளையவர்களுக்காக ஜெயமோகன் எழுதிய அற்புதமான நாவல். பல சுவாரசியங்கள் கொண்ட சாகசமான நாவல். பதின் பருவத்தில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக இந்த நாவலைப் பரிசளியுங்கள்.
Genres
Shelves
More like this
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
காடு
அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும்…
ஏழாம் உலகம்
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழு…
விஷ்ணுபுரம்
விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகி…
சோற்றுக்கணக்கு
அறுபதுகளின் திருவனந்தபுரம். சாலை பஜாரில் கெத்தேல் சாஹிப் என்ற மனிதர் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்துகிறார். அங்கே கோழிக்குழம்பும் மீன்கறியும் நிறைந்த உணவு பரிமாறப்படும், ஆனா…
இரவு
இரவு ஜெயமோகன் எழுதிய சிறிய நாவல். 2010ல் தமிழினி வெளியீடாக வந்துள்ளது. பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒர…
வெள்ளையானை
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய தாது வருடப் பஞ்சத்தின் கோரப்பிடியை இந்த நாவல் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பெரும் பகு…
முதற்கனல்
மகாபாரதம் நம் பண்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு என்று சொல்லலாம். ஆகவேதான் இது ஐந்தாம்வேதம் என்று முன்னோரால் சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தின் தொன்மையான வரலாற்றின் முழுவடிவம்…
ரப்பர்
ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவ…
உலோகம்
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுட…
வெண்முரசு – 02 – நூல் இரண்டு – மழைப்பாடல்
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம்.…