ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2

Jayakanthan Sirukathaigal, Part 2

4.3/5 · 300+ ratings

தமிழ் இலக்கிய உலகின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும், சமூக முரண்பாடுகளையும் ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த படைப்புகளின் தொகுப்பு இது. 1950-களின் இறுதியிலிருந்து 1970-களின் தொடக்கம் வரை எழுதப்பட்ட இக்கதைகள், மனித மனதின் சிக்கல்களையும் சமூகத்தில் நிலவும் அறம் சார்ந்த கேள்விகளையும் சமரசமின்றி முன்வைக்கின்றன. எளிய மக்களின் யதார்த்தமான மொழியில் எழுதப்பட்டுள்ள இப்படைப்புகள், அன்றைய காலக்கட்டத்தின…

Reviews

user_10635

★ 5/5
Meaningful stories Each of this story has a concept and teaches great lessons for life. Great narration and imparts lessons in a subtle way.

user_10634

★ 5/5
Jeyakanthan -An Immortal Man Fantastic stories. All are soulful ones. He still lives in our hearts. Each character in his stories has its own values.. Great author...

user_10633

★ 5/5
படித்ததில் பிடித்தது: 1. நந்தவனத்தில் ஓர் ஆண்டி 2. அக்கினிப் பிரவேசம் 3. புது செருப்பு கடிக்கும் 4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

user_10632

★ 5/5
Was Not able to keep it down. Each story was unique and interesting. A lot of questions to the readers. A method I believe that is so refreshing.

user_10631

★ 4/5
கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று ஜெயகாந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்ட கோணத்தை இப்பொழுதும் சுட்டிக்காட்டுவதுடன் எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக பிரச்சனைக்கான முற்போக்கு தீர்வையும் தீர்க்கமாக தனது பாணியில் எடுத்துரைத்துள்ளார் எழுத்தச ஜெயகாந்தன்.

user_10630

★ 5/5
Great writing, takes you to the 1960-1970s era and the lifestyle. Some of the stories are mocking and even condemning the practices of the society. These stories prove why Jayakanthan is a highly acclaimed author.

user_10629

★ 5/5
படித்த புத்தக வடிவம்: Amazon Kindle மின்புத்தகம் ஜெயகாந்தனின் 1958 முதல் 1971 வரை எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு. Kindle-ல் உள்ள மேற்கோள் செய்யும் வசதியில் 71 குறிப்புகள் எடுத்துள்ளேன். இன்னும் எடுக்காமல் விட்ட மேற்கோள்கள் இருக்கக் கூடும். இதிலிருந்தே இப்புத்தகத்தின் சிறப்பு புரிகிறது. ஒவ்வொரு கதையின் கருப்பொருளும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாகவே எனக்குப் படுகின்றது. அது அக்கினிப் பிரவேசமாக (1965) இருக்கட்டும், புது செருப்புக் கடிக்குமாக (1971) இருக்கட்டும், அக்ரஹாரத்துப் பூனையாக (1969) இருக்கட்டும் புதிய வார்ப்புகளாக (1965) இருக்கட்டும் , நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையும், ஜெயகாந்தன் எப்படி காலத்தைக் கடந்தவராக இருக்கிறார் என்பதையுமே காட்டுகின்றன. நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையை என்னால் பிதாமகன் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை, அந்தப் பாடலுடன் சேர்த்து. சில கதை மாந்தர்கள் நேரடியாக வாசகர்களுடன் பேசுகிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள், முடிவை நம்மிடமே விட்டு விடுகிறார்கள். எத்தனைக் கருத்தார்ந்த கதையிலும் ஒரு மெல்லிய பகடி, நகைச்சுவையைப் புகுத்தி புன்முறுவலை ஏற்படுத்தத் தவறுவதில்லை ஜேகே. * - பிணக்கு * - நந்தவனத்தில் ஓர் ஆண்டி * - நீ இன்னா ஸார் சொல்றே? * - சுயதரிசனம் * - புதிய வார்ப்புகள் * - அக்கினிப் பிரவேசம் * - புது செருப்புக் கடிக்கும் * - வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது. "ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது! * - டாக்டர் பதில் கூறாமல் தலையைக் குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார். * - நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? * - நான் பேசறதே இல்லே... பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது... ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்... சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான். * - ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன. * - அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை. * - 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'... * - கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது. * - இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு. * - இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை... * - 'மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?'ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, 'மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?'ன்னார்... * - இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே! * - கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே - எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்? * - சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? * - வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது. * - அவன் காலை உயர்த்தியபோது 'சளக்' என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன. * - சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது... * - சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்"னு
Shelves
ஜெயகாந்தன்-3 Short Stories book Jayakanthan

More like this


ஊருக்கு நூறு பேர் [Ooruku Nooru Per]

நம்மவர்க்கு அறிவிலும், இலக்கியத்திலும், கவிதையிலும் மேடையிலும் புரிகிற நெறிகளை வாழ்வில் நடைமுறையாக்க வன்முறை தடுக்கிறது, நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வின் சமதர்ம-மாற்…

4.3/5 · 300+ ratings

Where Are You Going, You Monkeys?

This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…

4.3/5 · 300+ ratings

மௌனி படைப்புகள்

Author: Mowni

நவீனத் தமிழ்ச் சிறுகதையில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல் புதிது; பொருள் புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது. மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரி…

4.3/5 · 300+ ratings

The Tamil Story: Through The Times, Through The Tides

Spanning close to a century, this pioneering anthology deftly traces the evolution of the Tamil short story, a genre that the Tamils have subsumed…

4.3/5 · 300+ ratings

அப்பா என்னும் வில்லன் [ Appa Ennum Villan ]

Bharathi Baskar is a very famous for her speeches and she has written short stories in various magazines.

4.3/5 · 300+ ratings

ஜெயகாந்தன் கதைகள் [Jayakanthan Kathaigal]

ஜெயகாந்தன் - தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜ…

4.3/5 · 300+ ratings

சில நேரங்களில் சில மனிதர்கள்

தமிழ் இலக்கிய உலகின் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நாவல், சமூகத்தின் போலித்தனங்களையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் ஆழமாகப் பேசுகிறது. 'அக்னிப் பிரவேசம்' என்ற சிறுகதையின்…

4.3/5 · 300+ ratings

அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் [Appuvukku Appa Sonna Kathaigal]

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கின்றேன். அதன் மகத்துவத்தைக் காட்டவ…

4.3/5 · 300+ ratings

அக்னிப்பிரவேசம் [Agnipravesam]

His trilogy on human relationships Agnipravesam, Sila Nerangalil sila Manithargal and Gangai Enge Pogiral is still extremely popular and the theme…

4.3/5 · 300+ ratings