Select a cover image
Searching for images...
Saving cover image...
பசித்த மானிடம் [Pasittha Maanidam]
Pasitha Manidam
- பக்கங்கள்
- 272
- வடிவம்
- Paperback
- பதிப்பகம்
- Kalachuvadu Publications
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9788189359102
- ASIN
- 818935910X
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சியை கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாகக் கையாள்கிறது…
user_10187
★ 3/5கணேசன் பள்ளியை விட்டு விலகி ரவுத்துடன் என்ன செய்கிறான் என்று வரும்போது மட்டும், கரிச்சான் குஞ்சுவிலும் ஒரு தி. ஜானகிராமன் இருக்கிறார் என்று உணர முடிந்தது. கரிச்சான் குஞ்சும் தி. ஜா.வும் நண்பர்கள்தானே. மற்றபடி நாவலில் வேகம் எனக்கு வரவே இல்லை.
user_10186
★ 4/5இந்தப் புத்தகத்திற்கு மதிப்பீடு அளிப்பது கடினமான ஒன்று. தேவையற்ற விரிவாக்கம் கொண்ட சில பகுதிகள் இருக்கின்றன, கதை மிகவும் மெதுவாகச் செல்கிறது என்று நினைக்கும்போதே ஆசிரியர் மீண்டும் உங்களை ஈர்த்துவிடுகிறார். மிகவும் சர்ச்சைக்குரிய, நம்பமுடியாத விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகின்றன.
user_10185
அருமையான சித்தரிப்புகள். கதை ஒற்றைப்படையாக இல்லாமல் விரிந்து விரிந்து செல்கிறது. ஓரினச்சேர்க்கைப் பற்றி வருவது மிக அதிர்ச்சியை அளித்தது. இத்தனைக்கும் கதையின் நாயகன் இதில் என்ன மாதிரியான பாத்திரம் என்பது சற்று புரியவில்லை. அவன் ஆணின் கூறுகளைக் கொண்டிருந்தாலும் ஒரு பெண் பாத்திரம் போல் கதை முழுக்க வருகிறான்.
மனிதனின் பசி என்று காமம், பணம், அதிகாரம் மட்டுமா என்று கேள்வியை முன்வைக்கிறது. நாயகனின் ஞானமும் அதன் தேடலும் ஒரு விதமான பசியே — அந்தப் பசியே முன் சொன்ன அனைத்தின் அனுபவத்தின் மூலம்தான் உருவாகும் என்றும் சொல்வதுபோலே பட்டது. கண்டிப்பாக மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய நாவல்.
இரு நாயகர்கள் தோப்பூர் என்ற புள்ளியில் பிரிந்து அவரவர் வாழ்வை வாழ்ந்து மீண்டும் சந்திக்கும்போது தத்தம் அனுபவத்தைப் பகிரும்போது ஆசிரியர் தான் சொல்லவந்ததைச் சொல்லி முடித்து வைக்கிறார்.
பசி ஆண் என்ற ஒற்றைப்படையாக இல்லாமல் பெண் கதாபாத்திரங்களும் அதே நிலையில் இருக்கின்றன. அதை பக்தி என்ற பேரில் மடைமாற்றி அதில் திளைத்தபோதிலும், அது அந்த ஆணின் மனதில் உருவாக்கும் அலை கடைசிவரை இருக்கிறது.
user_10184
★ 4/5அரிதான ரத்தினம் போன்ற நாவல். நடுவில் பிடிக்காமல் போய்விடும் என்று நினைத்தேன், ஆனால் பின்னர் மனித துன்பத்தின் பரந்த அம்சங்களை உள்ளடக்கியது. ஒரு நரம்பைத் தொட்டுவிட்டது. குறைந்தது ஒரு முறையாவது கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நாவல்.
user_10183
★ 4/5பகவத் கீதை = பசித்த மானிடம். அந்த அளவுக்கு ஆழமான, தத்துவமிக்க படைப்பு இது.
Genres
Shelves
More like this
யாருக்காக அழுதான்?
ஜெயகாந்தனின் இரண்டு குறுநாவல்கள் — யாருக்காக அழுதான்? மற்றும் எனக்காக அழு. பணம், நேர்மை, மனித நல்லுணர்வு பற்றிய ஆழமான கதைகள்.
நாளை மற்றுமொரு நாளே
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை எவ்விதப் பூச்சும் இன்றி அப்படியே பிரதிபலிக்கும் தமிழ் நாவல்களில் இது மிக முக்கியமானது. ஒரு சாமானிய மனிதனின் ஒரு நாள் வாழ்க்கையை மைய…
பொன்னியின் செல்வன், பாகம் 5: தியாக சிகரம்
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்றுப் புதினம், சோழப் பேரரசின் உன்னத வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது. மாமன்னர் ராஜராஜ சோழனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட …
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
தண்ணீர் தேசம்
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…
என் இனிய இயந்திரா
'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…
யவன ராணி
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழப் பேரரசின் பொற்காலப் பின்னணியில் அமைந்த ஒரு உன்னதமான வரலாற்றுப் புதினம் இதுவாகும். கரிகால் பெருவளவன் ஆட்சியின் போது, சோழப் பட…
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு, யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.<…
வாடிவாசல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அதன் முழு வீரியத்துடன் கண்முன் நிறுத்தும் ஒரு உன்னதமான படைப்பு இது. ஒரு மாலை நேரத்தில் வாடிவாசலில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பிரிவோம் சந்திப்போம்
'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…